Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:57:55 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8770
#KOTW8770
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுலை 23, 2012
ரமழான் 1433: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி இஃப்தார் காட்சிகள்! எஞ்சிய 10 தினங்களுக்கு நோன்புக் கஞ்சி செலவுக்கு அனுசரணை எதிர்பார்ப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3293 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டத்தில் அமைந்துள்ளது கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி.



இப்பள்ளியில் தினமும் நடத்தப்படும் ஐவேளைத் தொழுகை தவிர, தினமும் காலை - மாலையில், அப்பகுதியைச் சேர்ந்த மீனவ முஸ்லிம் குடும்பத்து பள்ளி மாணவ-மாணவியருக்கு திருமறை குர்ஆனை ஓத பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

வாரந்தோறும் பள்ளி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையன்று காலை முதல் நண்பகல் வரை இஸ்லாமிய மார்க்க அடிப்படைக் கல்வியும் அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் ஹஜ் பெருநாளையடுத்த 3 தினங்களில் உள்ஹிய்யா கொடுக்கப்பட்டு, இறைச்சிகள் அனைத்து இல்லங்களுக்கும் பங்கிட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் பள்ளிக்கூடங்களில் புதிய கல்வியாண்டு துவங்கும் ஜூன் மாதத்தில், இப்பள்ளிவாசலில் மார்க்கக் கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கு பாடக்குறிப்பேடுகள், பள்ளிப் பை, எழுது பொருட்கள் என பலவும் அன்பளிப்பாக வழங்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் ரமழான் 30 தினங்களில் ஏதேனும் ஒரு நாளில் நகரப் பிரமுகர்கள் - பொதுமக்களை வரவழைத்து, இப்பள்ளி வளாகத்தில் - பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழமை. இந்நிகழ்ச்சியின்போது இப்பள்ளியில் மார்க்கக் கல்வி பயிலும் சிறுவர் - சிறுமியரின் திருமறை குர்ஆன் ஓதல், கலந்துரையாடல் என பல்வேறு சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் அக்குழந்தைகள் ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

ஆண்டுதோறும் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ் பெருநாட்களின்போது இப்பள்ளியில் மார்க்கக் கல்வி பயிலும் சுமார் 55 மாணவ-மாணவியருக்கு, நகரப் பிரமுகர்கள் - தொழிலதிபர்களின் அனுசரணையுடன் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பெருநாள் புத்தாடைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டு வருகிறது.

இப்பள்ளியின் தலைவராக - காயல்பட்டினம் ஜுவெல் ஜங்ஷன் நகைக்கடை அதிபர் கே.அப்துர்ரஹ்மான், செயலாளராக - காயல்பட்டினம் டேக் அன் வாக் பாதணிக் கடை அதிபர் “முத்துச்சுடர்” ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை, பொருளாளராக கோமான் மீரான் ஆகியோரும், துணை நிர்வாகிகளாகவும், செயற்குழு உறுப்பினர்களாகவும் பலரும் சேவையாற்றி வருகின்றனர்.

இப்பள்ளியைச் சுற்றி வசிக்கும் மீனவ முஸ்லிம் மக்கள் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள். மார்க்கக் கடமைகள் விஷயத்தில் போதிய கல்வியறிவற்ற இம்மக்களுக்கு தினமும் ஐவேளைத் தொழுகையை முறைப்படி கடைப்பிடிக்கவும், பெண்கள் பர்தா பேணிக்கையுடன் வாழவும், பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் அவர்கள்தம் பெற்றோர் ரமழான் காலங்களில் ஆர்வத்துடன் நோன்பு நோற்கவும் இப்பள்ளி நிர்வாகிகள் பல்வேறு செயல்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, அதிக நோன்புகள் நோற்கும் சிறுவர் - சிறுமியருக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படுவதாக இவ்வாண்டு முதல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பள்ளியில் ஐவேளை தொழுகை நடத்துவதற்கும், சிறுவர் - சிறுமியருக்கு மார்க்கக் கல்வியை போதிப்பதற்கும் என மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஹாஃபிழ் ரஹ்மத்துல்லாஹ் என்ற மார்க்கம் கற்ற அறிஞர் ஒருவர் இமாமாகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். இமாம் - பிலால் - ஆசிரியர் என மூவர் செய்யும் வேலைகளை இவர் ஒருவரே சிரமேற்று செய்து வருகிறார். இவருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ரூபாய் 8,000 மாத ஊதியமும், தினசரி உணவு வகைக்காக மாதந்தோறும் ரூபாய் இரண்டாயிரமும் செலவழிக்கப்பட்டு வருகிறது.

இப்பள்ளிக்கென வருவாய் தரும் சொத்துக்கள் எதுவும் கிடையாது. பள்ளியைச் சுற்றி வாழ்வோரில் ஒருவர் கூட வசதியானவர் இல்லை. எனவே, இங்கு செய்யப்படும் அனைத்து நலத்திட்டப் பணிகளுக்கும் காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களையே இப்பள்ளி நிர்வாகம் பெரிதும் எதிர்பார்த்திருப்பதாக பள்ளி தலைவர் கே.அப்துர்ரஹ்மான், செயலாளர் முத்துச்சுடர் இஸ்ஹாக் லெப்பை ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

நடப்பாண்டு ரமழான் நோன்புக் கஞ்சி வகைக்காக நேரிலும், தொலைபேசியிலும், இணையதளம் வாயிலாகவும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இதுவரை 20 தினங்களுக்கு அனுசரணை பெறப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 10 தினங்களுக்கு அனுசரணை எதிர்பார்க்கப்படுவதாகவும் பள்ளி நிர்வாகிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

அனுசரணையளிக்க விரும்புவோர்,
கே.அப்துர்ரஹ்மான் - தலைவர்
(கைபேசி எண்: 0091 97901 35272)

ஹாஜி ‘முத்துச்சுடர்‘ என்.டி.இஸ்ஹாக் லெப்பை - செயலர்
(கைபேசி எண்: 0091 99653 34687)

கோமான் மீரான் - பொருளர்
(கைபேசி எண்: 0091 97903 09149)

ஆகிய பள்ளி நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு தமது அனுசரணைகளை வழங்கியுதவுமாறு பள்ளி நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இப்பள்ளியில் ரமழான் காலங்களில் தினமும் தயாரிக்கப்படும் நோன்புக் கஞ்சியை, சுற்றுவட்டாரத்திலுள்ள அனைத்து இல்லங்களுக்கும் பள்ளி நிர்வாகத்தினர் பகிர்ந்தளித்து வருகின்றனர். சுற்றுவட்டாரத்திலுள்ள கிறிஸ்துவ குடும்பத்தினர் பலரும் கூட இக்கஞ்சியை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

நோன்பு நோற்கும் சிறுவர் - சிறுமியர் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு, பள்ளி நிர்வாகிகள் அவர்களுடன் இணைந்தமர்ந்து நோன்பு துறந்து வருகின்றனர்.

நேற்று மாலையில் சிறுவர் - சிறுமியருடன் பள்ளி நிர்வாகிகள் நோன்பு துறந்த காட்சி:-





நோன்பு நோற்ற வரை சோர்ந்திருந்த சிறார், நோன்பு துறந்த பின்னர் மஃரிப் தொழுகை நிறைவுற்றதும், பள்ளியின் வெளிப்புற மணற்பரப்பில் உற்சாகத்துடன் ஓடியாடி விளையாடி மகிழ்ந்தனர்.



இப்பள்ளி குறித்த மேலதிக விபரங்களைப் பார்வையிட இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ரமழான் 1433: கடற்கரை முஹ்...
posted by mackie noohuthambi (kayalpatnam) [23 July 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20143

நோன்பு காஞ்சி வழங்குவதில் உள்ள நன்மைகள் பற்றி அறிந்த நம் முன்னோர்கள் அதை எல்லா பள்ளிகளிலும் அமுலுக்கு கொண்டுவந்தார்கள். பகலெல்லாம் நோன்பு நோற்று இருந்தவர்களுக்கு வாய்வு தொல்லைகள் ஏற்படாமல் இருக்க வெந்தயம் வெள்ளைபூடு கலந்த கஞ்சியை வழங்கி வந்தார்கள். நாளடைவில் அது presitige கஞ்சியாக மாறி கறி கஞ்சி போட்டால்தான் போடுகிறவர்களுக்கு மதிப்பு என்று மாறிவிட்டது. நன்மை கருதி செய்யப்பட ஒரு அமல் பெருமைக்காக செய்யும் அமலாக மாறிவிட்டது. இப்போது சாதா காஞ்சி போட்டால் அதை பார்த்து ஏளனம் பேசுபவர்களும் இருக்கிறார்கள்.

எனவே இந்த பள்ளிவாசலின் ஜமாத்தார்கள் ஏழைகள் அவர்களுக்கும் கஞ்சிபோட சந்தர்ப்பம் கொடுக்கலாம் பல வீட்டு மக்களும் 100 200 என்று கொடுத்து அந்த நன்மையை அடைய ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்குமாறு நிர்வாகத்தை வேண்டிக்கொள்கிறேன்.

கொழும்பில் இப்படி ஒரு நடைமுறை உள்ளது. தனியார் பங்களிப்பு இல்லாமல் எல்லா மக்களும் சேர்ந்து பிறை 25 இல் கஞ்சிபோட சந்தர்ப்பம் அளிக்கிறார்கள்,நான் சார்ந்துள்ள வெள்ளவத்தை பள்ளியில் இது நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் அந்த முஹல்லாவில் உள்ள எல்லோருக்கும் இதில் நன்மை பெற்றுக்கொண்டோம் என்ற மன சந்தோஷம் ஏற்படுகிறது.

இன்ஷா அல்லாஹ் மீதி பாத்து நாட்களுக்கு உள்ள கஞ்சி போடுவதற்கு சிலதினங்களில் போட்டி போட்டுக்கொண்டு ஆட்கள் வருவதை அப்போது இந்த நிர்வாகம் கண்கூடாக கண்டுகொள்ளும்.,அல்லாஹ் உங்கள் முயற்சிகளுக்கு நல்ல பலனை தருவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ரமழான் 1433: கடற்கரை முஹ்...
posted by T,M,RAHMATHHULLAH (73)yr (KAYALPATNAM 04639 280852) [24 July 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20152

அஸ்ஸலாமு அலைக்கும்.!

தம்பி மக்கி நூகுத் தம்பி அவர்கள் கூறியது நூற்றுக்கு நூறும் சரியே ! நன்றி!! கமண்ஸ் ஐ.டீ 1433===நியூஸ் ஐ.டீ 8770 ==23-7-2012

மக்கள் தெரியாத்தனமாகவோ அல்லது பெருமைக்காகவோ வெள்ளைக்கஞ்சியை மாற்றி மஞ்ச (இறைச்சி)க்கஞ்சி யாக போட்டு உடல் நலத்தையும் கெடுத்து தவாபிலும் குறை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

நாயகம் (ஸல் )அவர்கள் ஓரிரு வேளை “ஹறீஸா “ எனும் இறச்சி கலந்த கஞ்சியை இஃப்தாறின் போது குடித்தார்கள் என மற்ஹூம் சாவன்னா ஆலிம் அவர்கள் ஒரு ஆதாரக்கித்தாபோடு வாசித்து எனக்குச் சொன்னர்கள். (அல்லாஹும்மங்ஃபிற்லஹூ வற்ஹம்ஹூ)

எனினும், 10-20 வருடங்களுக்கு முன் எல்லாப்பள்ளிகளிலும் சாதா வெள்ளைக் கஞ்சி, மிளகு வெள்ளை கஞ்சி, காய்கறிக் கஞ்சி, பிரியானிக் கஞ்சி, என்று பிறை 6, 12,27 என விசேஷ தினங்களை மக்களுக்கு ஞாபக தினங்களாக அறிய மட்டும்தான் போடுவார்கள். இம்மாதிரி இஃப்தார் வேளைகளில் கஞ்சி கட்டாயமாக கஞ்சி குடிக்கும் வழக்கம் நமது காயலர்கள் உலகில் எங்கெல்லாம் கால் வைத்தார்களோ அங்கெல்லாம் இம்முறைகளை அனுபவப்படுத்தி வருவதும் கண்கூடு, உதாரணமாக இலங்கை. சிங்கை, ஹாங்காங், பேங்க்காக் மற்றும் சில நாடுகளைக் கூறலாம். 1975ல் கெய்ரோவில் ஒரு பள்ளியிலும் கஞ்சியுடன் கூடிய இஃப்தாரில் கலந்து கொண்ட சந்தர்ப்பமும் எனக்குண்டு. அல்ஹம்துலில்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved