Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:37:21 PM
திங்கள் | 29 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1733, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:24
மறைவு18:27மறைவு10:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8713
#KOTW8713
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுலை 12, 2012
“என்னெ விட்டுறுங்க........... சத்தியமா இனி வர மாட்டேங்க..........” (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4540 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில், நகராட்சி மன்ற வளாகம் உள்ளிட்ட பொது இடங்களிலும், அனைத்துத் தெருக்களிலும் தெரு நாய்கள் நாளுக்கு நாள் பெருக்கமடைந்து, இரவு நேரங்களில் வீதிகளைக் கடந்து செல்வோருக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது.



விளைவை உணர்ந்த பொதுமக்கள் அவரவர் பகுதி நகர்மன்ற உறுப்பினர்களிடம் முறையிட்டதையடுத்து, பல நகர்மன்றக் கூட்டங்களில் இதுகுறித்த கோரிக்கை முன்வைக்கப்படட்து. தெரு நாய்களைக் கொல்ல அனுமதியில்லை எனினும், அவற்றுக்கு கருத்தடை செய்து இனப்பெருக்கத்தைத் தடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு, நாய்களுக்கு கருத்தடை செய்ய நகராட்சியில் தீர்மானிக்கப்பட்டது.

துவக்கமாக நகரில் அநாதையாகத் திரியும் 300 தெரு நாய்களைப் பிடித்து, கருத்தடை செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 28.06.2012 வியாழக்கிழமையன்று மதியம் 02.00 மணியளவில், காயல்பட்டினம் நகராட்சி மன்ற வளாகத்தின் வடகிழக்குப் பகுதியிலமைந்துள்ள கொட்டகையில், காயல்பட்டினம் நகராட்சி - ராஜேஸ்வரி கோசாலா ட்ரஸ்ட் இணைந்து நடத்தும் தெரு நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய் தடுப்பூசி மருத்துவ முகாம் நடைபெற்றது.









இம்முகாமில், நகரில் அநாதையாக சுற்றித் திரிந்த 20 நாய்கள் வாகனங்களில் துவக்கமாக பிடித்து வரப்பட்டு கருத்தடை செய்யப்பட்டது.





படிப்படியாக 300 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படவுள்ளதாகவும் ராஜேஸ்வரி கோசாலா ட்ரஸ்ட் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:“என்னெ விட்டுறுங்க..........
posted by OMER ANAS (DOHA QATAR.) [12 July 2012]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 19971

ஒரு வழியா லொள்லாக்களின் இனவிருத்தியை தடுத்தாகிவிட்டது! இருந்தாலும்,வாலை வெட்டிய நாய் மிகவும் கோபமாக இருக்கும் என்பார்களே!!! இதுகளுக்கோ மெயின் சுச்சியிலேயே வெட்டு போட்டு இருக்கே!!!

எதுக்கும் கொஞ்சம் நாலு ஊர் தள்ளி கொண்டுபோய் விடச்சொல்லுங்கோ! முசிவத்து அதுக்கு இல்லேண்டு நமக்கு இல்லாம ஆக்கிர போவுது!

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:“என்னெ விட்டுறுங்க..........
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [12 July 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19976

எங்கள் பகுதியில் எங்களை பயமுறுத்திய, எங்கள் மாமியின் காலை பதம் பார்த்த, ஒரு வீராப்பு நாயை பிடித்து போனார்கள். மகிழ்வாக இருந்தது.. எவ்வளவு நாட்கள் என்னிடம் தப்பிச்சென்றது.. ங்..ங்...கொய்யாலே...

நகராட்சிக்கு சென்று பார்த்தேன். மிகவும் அமைதியாகவும், அவர்கள் கொக்கியை வண்டிக்குள் விட்டதும் பயத்துடன், கால்கள் வெட.. வெட. என ஆடி, காலை தூக்காமலே உச்சா அடித்து, சுருண்டு விட்டது. அப்புறம் என்ன.. அறுப்பு தான்.

(அனைத்தையும் மொபைலில் பதிவு செய்து, இந்த நாயால் கடிபட்டு, ஊசிகள் பல போட்டு, நொந்து போன என் மாமியிடம் காட்டியதும், அவர்கள் சொன்னது..

" பாவம் இப்படியா வாய் இல்லா ஜீவனை கஷ்டப்படுதுறாங்க...!! " ,

எனக்கு தலை சுற்றாத குறைதான்..!!)

** ப்ளூ கிராஸ் காரர்களின் தயவால், இந்த நாய்கள் உயிருடன் இருக்கின்றன. இல்லை என்றால் அனைத்துக்கும் சில நொடிகளில் சங்கு தான்.

*** நல்லதா போய்விட்டது, இந்த ப்ளூ கிராஸ் காரர்கள் மன்னர் காலத்தில் இல்லாமல் போனார்கள். இருந்திருந்தால் குதிரைப்படை, யானைப்படை இருந்திருக்குமா, ஒரு போராவது நடந்து இருக்குமா அட்லீஸ்ட் மன்னராவது யானையில் நகர் வலம் வரமுடியுமா..?

சரிங்க.. பல தடவைகள் நான் கவனித்ததில், பிடிபட்ட அனைத்து நாய்களும் ஆணாகவே இருக்கின்றதே..!! பெண் நாய்களை பிடிக்கவே மாட்டீர்களா? பெண் நாய்க்கு கருத்தடை செய்வது அவ்வளவு கஷ்டமா? அல்லது ஆட்சி அம்மாவுடைய ஆட்சியா!!

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நகராட்சி என்ன? விட்டா நம்ம பெட்ரூமுக்குள்ளேயும் வரும்...! லொள்ளாக்களால் தொல்லை தான்!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [13 July 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19982

நல்ல காரியம் பண்ணியிருக்காங்க! நாய்த் தொல்லை சாளையாரின் மாமியைக் கூட விட்டு வைக்கவில்லை! ஜியாவுத்தீன் அவர்கள் விபரீததைக்கூட தனக்கே உரித்தான பானியில் வேடிக்கையாக விவரித்திருக்கின்றார்.

இது போன்ற தெரு நாய்களில் வெறிநோய்க்கு ஆளான அதிபயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் வெறி நாய்களும் இருக்கத்தான் செய்யும். அதன் பாதகங்களையும், நாடி நரம்புகளைச் சிலிர்க்க வைக்கும் ஆபத்துக்களையும் நம் மக்களுக்கு உணர்த்தும் வகையில், இந்த இணைய தளத்தின் எழுத்து மேடைப் பகுதியில் “நாய்கள் ஜாக்கிரதை” எனும் தலைப்பில் ஓர் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. படிக்கத் தவறியவர்கள் படித்து பயன் பெற வேண்டுகிறேன். அக் கட்டுரையைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை சொடுக்கவும்.

http://kayalpatnam.com/columns.asp?id=35

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:“என்னெ விட்டுறுங்க..........
posted by hasbullah mackie (dubai) [13 July 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19985

கருத்தடை மருத்துவம் செய்தால் யாரையும் கடிக்கதோ என்னவோ ? என்ன ஒரு தத்துவம்? நாய் கடிக்காது என்பதற்கு உத்தரவாதம் உண்டோ ?

முன்பெல்லாம் இத்தைகைய அளவிற்கு பூனையை பார்க்க முடியும், ஆனால் இப்பொழுது நாய் தான் அதிகம்.

எல்லா வீடுகளிலும் பிள்ளைகளை திட்டும் பொழுது 'நாய் என்றே அதிகம் உபயோகிப்பார்கள்.' அது நாய்க்கு விளங்கி விட்டது போலும் 'என்னை அன்போடு தான் அழைக்கிறார்களோ' என்றெண்ணி .. நம்ம ஊர் கல்யாண சாப்பாடு ருசியும் கூடுதலல்லவா.. அழையா விருந்தாளிகள்... இனி அதற்கும் அடாப்பு போடணுமோ என்னவோ?

வீட்டை விட்டு வெளியே செல்லும் பொது ஆயத்துல் குர்சி யை ஓதிக்கொள்ளுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:“என்னெ விட்டுறுங்க..........
posted by A.M. Syed Ahmed (RIYADH) [13 July 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19990

நான் சொல்லும் இதை கேளுங்கள், இது கதை அல்ல நிஜம்..

எனது சின்ன அப்பாவீட்டு மாமாவை சிறிய வயதில் (15 வயதில்) மாட்டு குளத்தில் விளையாடும் போது நாய் அவரது தொடையை கடித்து அவரை விடவில்லையாம், மாமா எவ்வளவோ அழுதும், கத்தியும் நாய் அவரை விடுவதாக தெரியவில்லை, மாமாக்கு வலி தாங்க முடியவில்லை, கடைசியில்

மாமா வேறு வழி இல்லாமல் உடனே நாயை திருப்பி கடித்துவிட்டார்கள் வாயை எடுக்கவில்லை, பிறகு நாய் வலி தாங்காமல் வாயை பிளந்து மாமாவை விட்டுவிட்டு ஓடிவிட்டதாம்.

நாய் கடித்தது என்று நாயை கடித்தவன் என்பார்கள்..... இது அவரது சிறிய வயது முரட்டுதனத்தின் ஒரு EXAMPLE... அவரை GUESS பண்ணி கொள்ளலாம்.. ஆனால் உண்மை..

BY : S.A Ayesa Hannan - Riyadh


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இக் கடிக்கு அக் கடி மருந்து...!
posted by M.N.L.முஹம்மது ரபீக், (புனித மக்கா.) [14 July 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19992

Comment Reference Number: 19990

ஹா...ஹா.... விசித்திரமான சம்பவம்! பாவம் கடி பட்ட அவர் எப்படி துடித்திருப்பார்? வேறு வழியில்லாமெ அதைக் கடித்திருக்கின்றார். கடசியிலே ஊசி போட்டது மாமாவுக்கா? அந்த லொள்ளாவுக்கா?

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:“என்னெ விட்டுறுங்க..........
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [14 July 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19995

கடித்த நாயை திரும்பவும் கடித்த சம்பவம் நகைச்சுவையாக இருந்தது. ஆக, பழமொழி எல்லாம் தவறாக ஆகிவிட்டன..

" நாய் கடித்தால் அதை திரும்பவும் கடிப்பியா " என்று சொல்லும் வழக்கு மொழி இனி எடுபடாது போல.

இனி சொல்லி வையுங்க, எதவாது சம்பவம் இது மாதிரி நடந்ததால், உடனே கண்ணை குத்திவிட்டால் போதும். அனைத்து பிடிமானத்தையும் விட்டுவிட்டு ஓடிவிடும்.

** கபடி போட்டிகளில் இந்த ஐடியாவை பயன்படுத்திய அனுபவம்தான்.. **

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
“குடி” மக்களின் கூடாரம்!  (12/7/2012) [Views - 3482; Comments - 6]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved