Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:24:30 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8587
#KOTW8587
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுன் 8, 2012
ஆடு-மாடு அறுப்புத் தொட்டி குத்தகைதாரர் - இறைச்சி வணிகர்களிடையே கருத்து வேறுபாடு! நகர்மன்ற தலையீட்டில் சமரசம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3895 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (20) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 9)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியில் பல்வேறு பொருட்கள் - 29.05.2012 அன்று பொது ஏலம் விடப்படும் என நகராட்சி ஆணையரால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு அடங்கிய பிரசுரம், நகர் முழுவதும் ஏலம் நடைபெறும் தினத்திற்கு 15 தினங்களுக்கு முன் காயல்பட்டினம் நகராட்சியால் வினியோகிக்கப்பட்டது.

அந்த அடிப்படையில், 29.05.2012 அன்று, காயல்பட்டினம் நகராட்சியில் பொது ஏலம் நடைபெற்றது. காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட ஆடு-மாடு அறுப்புத் தொட்டி - டிப்போ (Slaughter House)க்கான ஏலத்தை,
எம்.எச்.அப்துல் வாஹித் - ரூ. 1,26,999 தொகைக்கும்,
கே.எம்.காதர் முஹ்யித்தீன் - ரூ.1,45,000 தொகைக்கும்,
ஏ.செல்வம் - ரூ.1,50,000 தொகைக்கும்,
எஸ்.விஜயன் - ரூ.1,81,700 தொகைக்கும்
மூடி முத்திரையிடப்பட்ட ஏலம் கேட்டிருந்தனர். இந்நால்வரில், கூடுதல் தொகைக்கு ஏலம் கேட்டிருந்த எஸ்.விஜயனுக்கு - 01.06.2012 முதல் 31.03.2013 வரையிலான பருவத்திற்கு (10 மாத காலத்திற்கு) குத்தகை வழங்கப்பட்டது. அடுத்த சில தினங்களில் அவர் காயல்பட்டினம் நகராட்சியில் முழு தொகையையும் செலுத்தி முறைப்படி ஏல குத்தகையைப் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், 06.06.2012 அன்று குத்தகைக்காரர் டிப்போவில் வசூலுக்குச் சென்றபோது, அறுக்கப்பட்ட கிடாயின் மண்ணீரலை (சுவரொட்டி / பல்குத்தி) கேட்டதாகவும், இறைச்சி வணிகர்கள் அதனைத் தர மறுத்ததாகவும், இதனால் இரு தரப்பினருக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. அதன்பிறகு, ஆறுமுகநேரி காவல்துறையினர் தலையிட்டு பிரச்சினையை தற்காலிகமாக தீர்த்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், அன்று மதியம் 03.00 மணியளவில் காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்திற்கு வந்த இறைச்சி வணிகர்கள், நகர்மன்றத் தலைவரிடம் காலையில் நடந்த நிகழ்வை விவரித்தனர். அனைத்தையும் கேட்டறிந்த நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், குத்தகைக்காரரை அழைத்துப் பேசினார்.

அறுக்கப்படும் கிடாயின் மண்ணீரல் - குத்தகைதாரருக்கே என்ற வழமையை மனதிற்கொண்டே தான் இவ்வளவு தொகைக்கு ஏலம் எடுத்ததாக குத்தகைதாரர் தெரிவித்தார். ஆனால், மண்ணீரல் இறைச்சி வணிகருக்கே சொந்தம் எனவும், கிடா அறுப்புக்கு ரூ.5 தொகையும், மாடு அறுப்புக்கு ரூ.6 தொகையும் மட்டுமே குத்தகைக்காரருக்குத் தர இயலும் என்றும் இறைச்சி வணிகர்கள் தெரிவித்தனர்.





இரு தரப்பினரும், ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் ஒத்துழைக்குமாறு அவர்களிடம் நகர்மன்றத் தலைவர் கேட்டுக்கொண்டார்.

மண்ணீரல் தரப்படாவிடில் தனக்கு நஷ்டமே ஏற்படும் என்றும், எனவே ஏலத்தை தொடர்ந்து எடுத்து நடத்த இயலாத நிலையில் உள்ளதாகவும் குத்தகைதாரர் தெரிவித்தார்.



அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே தனித்தனியே தீவிர கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது. இறுதியில், மறுஏலம் விடப்படும் பட்சத்தில், அதே குத்தகைத் தொகை அல்லது அதற்கு மேலுள்ள தொகைக்கு தாங்களே ஏலம் எடுக்க நகர இறைச்சி வணிகர்கள் சம்மதம் தெரிவித்ததன் அடிப்படையில், எஸ்.விஜயன் என்பவருக்கு வழங்கப்பட்ட குத்தகை ரத்து செய்யப்பட்டது. விரைவில் ஆடு-மாடு அறுப்புத் தொட்டி மறு ஏலம் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஆடு-மாடு அறுப்புத் தொட்டி...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227) [08 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19213

அதே குத்தகைத் தொகை அல்லது அதற்கு மேலுள்ள தொகைக்கு தாங்களே ஏலம் எடுக்க நகர இறைச்சி வணிகர்கள் சம்மதம் தெரிவித்ததன் அடிப்படையில், எஸ்.விஜயன் என்பவருக்கு வழங்கப்பட்ட குத்தகை ரத்து செய்யப்பட்டது. இது முடிவின் வாசகம்...

ஏலத்தின் அணைத்து நிபந்தனைக்கும் கட்டுப்பட்டு எழுத்து பூர்வமாக அறிந்து முதலில் ஏலம் விடப்பட்டு ஒருவர் எடுத்து பின்பு லாபம் இல்லாத காரணத்தால் அந்த ஏலத்தை வேறொருவர் எடுபதற்க்காக ரத்து செய்ய படுவது சட்டத்தில் இடம் இருக்கிறதா...? அதை நன்கு ஆராய்ந்த பின் மறு ஏலம் செய்ய படுவது எதிர்கால சிக்கலை தவிக்கலாம்...

நகராட்சி மூலம் தண்ணீர் கிணறு, வணிக கடைகள், தினசரி மார்க்கெட், சைக்கிள் நிறுத்தம், புதிய பேருந்து நிலையம், இப்படி பல ஏலங்கள் விடப்பட்டு உள்ளது எதிர்காலத்தில் மேல குறிப்பிட்ட ஒன்றில் அதை ஏலம் எடுத்தவர் தனக்கு லாபம் இல்லை ஆகையால் ஒருபிரச்சனையை தானே உருவாக்கி பிறகு மறு ஏலம் என்ற இன்றைய கதையை நாளை உருவாக்கலாம்... அதில் இது ஓன்று ஆரம்பமாக இருக்கலாம்...

நகராட்சி நிர்வாகமே...! சரியான சட்ட திட்டங்கள் ஆராய்ந்து இதில் செயல் படவும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஆடு-மாடு அறுப்புத் தொட்டி...
posted by vilack sma (guangzhou 00) [08 June 2012]
IP: 117.*.*.* China | Comment Reference Number: 19214

இதில் நகராட்சியின் டெண்டர் அறிவிப்பில்தான் தவறு உள்ளது . டெண்டர் அறிவிக்கும்போதே உரிமையாளருக்கு என்னென்ன கூலி மற்றும் பொருட்கள். கிடைக்கும் என்பதை சொல்லியிருக்கவேண்டும் . இதற்குததான் அனுபவம்வாய்ந்த தலைமை அல்லது. அனுபவம் உள்ள. பெரியவர்களிடம் ஆலோசனை கேட்கும் தலைமை வேண்டும் என்பது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இதய பயம் வேண்டும்.
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (kayalpatnam) [08 June 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 19215

இதுவரை எந்த முறை பின்பற்றபட்டதோ அதே முறையை மேற்கொண்டு செயல்படுவதுதான் நேர்மையான நடுநிலை தீர்ப்பாக அமையும்.இதில் எள்ளளவு இடரினாலும் இறைவனுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

எத்தரப்பினர் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்பதைவிட, எல்லாவற்றையும் இறைவன் பார்த்துகொண்டிருக்கிறான் என்பது தான் நம் இதய பயமாக இருக்க வேண்டும்! அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. காயல் நகர்மன்றம் பஞ்சாயத்தாய் மாறியது.!!!
posted by s.s.md meerasahib. (riyadh) [08 June 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19216

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு காயல் நண்பர்களே............ ஒவ்வொரு விசயமும் இந்த காலகட்டத்தில் முன்னொட்டு சென்று கொண்டு இருக்கும் நிலையில் நம் நகர்மன்றம் பழைய பஞ்சாயத்தை நடத்திக்கொண்டு இருக்கிறது. எல்லா விசயத்திலும் நகர்மன்றத்தில் பஞ்சாயத்து நடப்பதால்...... அனுபவக்குறைவு என்பது வெட்ட வெளிச்சம்.

பத்துமாத உடன்படிக்கை போடத்தெரிந்த நகரமன்ற தலைவருக்கு......... குத்தகை காரரின் உரிமை என்ன என்பதை சுட்டிக்காட்டும்.... உடன்படிக்கை போடாத்தது வியக்கத்தக்கதும்...... அணுபவகுறைவையே காட்டுகிறது. வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ஆடு-மாடு அறுப்புத் தொட்டி...
posted by Husain Noorudeen (Abu Dhabi) [09 June 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19218

சகோதரர் முத்து இஸ்மாயீலின் கருத்து மிகவும் சரியானது. அதிகாரிகள் நடைமுறையை சரி பார்த்து வேண்டியதை செய்யவும். இந்த ஒரு விஷயத்தில் சிக்கல் வருகிறது என்பதற்காக தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தவேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. நல்லோருக்கு வல்லோன் துனை...!
posted by ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [09 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19221

ஆமா...ஆமா...அனுபவமுள்ள பெரியவங்க ஆபிதாவிடம் எப்படி நடந்துக்கிட்டாங்கன்னு எங்களுக்கும் தெரியும்! ஆலோசனை போகட்டும் ஆளை கவுக்காமெ இருந்தால் சரி.

சதி செய்வோர் தம் மதி வியக்கும் வண்ணம் புதியதோர் விதி படைப்பாள் இக்குலமகள். கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள் புலப்படும்.

தனி மரம் தோப்பாகாது ஆனால் அது கனிவான நிழல் தரும் என்பதை எவராலும் மறுக்க இயலாது. காயலருக்கு அந்த நிழலாவது கிடைத்துவிட்டுப் போகட்டுமே...?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:ஆடு-மாடு அறுப்புத் தொட்டி...
posted by Salai S Nawas (singapore) [09 June 2012]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 19222

யாரு எப்போ தப்பு செய்ய மாட்டார்கள் என்பதை ஒரு கூட்டம் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றி தேடிகொண்டிருக்கிறது. நன்மை செய்யும் பொது பாராட்டாத மனம் இப்போது மட்டும் கொக்கரிக்கிறது.

அங்கே பொய் பழைய வரலாற்றை திருப்பி பாருங்கள், தப்பையே தப்பாக செய்திருப்பர். தவறு செய்யாதவர் மனிதர்கள் இல்லை. திருத்தி கொள்வோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:ஆடு-மாடு அறுப்புத் தொட்டி...
posted by S.K.Salih (Kayalpatnam) [09 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19223

ஆடு, மாடு தொட்டி ஏலம் - முந்தைய காலங்கள் போல் - மூடுமந்திரமாக விடப்படவில்லை. நகரில் அனைவரும் அறியும் வகையில் - துண்டுப் பிரசுரங்கள் - பல தினங்களுக்கு முன்னர் - பல வழிகளில் விநியோகிக்கப்பட்டே (ஜும்மாக்களில், பத்திரிக்கை, இணையதளம்) இந்த ஏலம் நடத்தப்பட்டது.

“எனக்கு ஏலம் விட்டது தெரியாதே...? தெரிந்திருந்தால் நானும் பங்கிற்றிருப்பேனே...??” என யாரும் கூற இயலாது. -இது முதலாவது அம்சம்.

இந்த ஏலத்தில் பங்கேற்ற நால்வரில் - அதிக தொகையை வழங்க முன்வந்த எஸ்.விஜயன் ஏலத்தை எடுத்தார். இந்த ஏலம் மூலம் ஆட்டுக்கு 5 ரூபாய் என்றும், மாட்டுக்கு 6 ரூபாய் என்றும் போக, மண்ணீரல் (பல்குத்தி)யும் கிடைக்கும் என்றும் அவர் நினைத்திருந்தார். அவர் மட்டுமல்ல! அந்த ஏலத்தில் பங்கேற்ற மீதி மூன்று பேர்களும்தான்!!

ஆகவே இந்த ஏலத்தை எடுத்தால் என்ன கிடைக்கும் என்று யாருக்கும் தெரியாது என்று கூறவும் இயலாது. -இது இரண்டாவது அம்சம்.

ஏலம் விடும்போது - விதிகளையும் போட்டிருக்கவேண்டும் என்று கருத்து கூறப்படுகிறது. நூற்றாண்டு கண்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியில் எந்தக் காலத்திலும் - நகராட்சி நேரடியாக - ஆட்டுக்கு இவ்வளவு, மாட்டுக்கு இவ்வளவு என்று நிர்ணயித்தது இல்லை. முந்தைய நகர்மன்றமும் - இந்த விஷயத்தில் தலையிடவில்லை. கட்டணம் என்பது - குத்தகை எடுத்தவருக்கும், வணிகர்களுக்கும் உள்ள முடிவாகவே இருந்து வந்தது. -இது மூன்றாவது அம்சம்.

காயல்பட்டினம் நகராட்சியில் இதற்கு முன்னர் 2007/08இல்தான் இது குறித்த ஏலம் விடப்பட்டது. அப்போது ஏலம் எடுத்த நபர் - ஆண்டுக்கு 180,000 என்ற தொகைக்கு எடுத்திருந்தார். எடுத்த நபர் தொகையை சரியாக செலுத்தாதால் - தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஆடு-மாடு அறுப்புத் தொட்டி - நகராட்சியால் ஏலம் விடப்படவில்லை. அவ்வாறு கட்டணத்தை செலுத்தத் தவறியவர் மீதும் முந்தைய நகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் நகராட்சிக்கு நஷ்டமே.

அறுப்புக் கட்டணத்தை, கடை உரிமையாளர்கள் நேரடியாக நகராட்சியிடமே கட்டி வந்துள்ளனர். அதன் மூலம் பெறப்பட்ட தொகை மிகவும் சொற்பம்.. இந்தப் பின்னணியால்தான் புதிய நகர்மன்றம் - அறுப்பு தொட்டிக்கான ஏலத்தை தற்போது விட்டுள்ளது. -இது நான்காவது அம்சம்.

ஏலத்தை எடுத்தவர் - தனக்கு வழமை போல் பல்குத்தி, முடியாவிட்டால் கிடா ஒன்றுக்கு 50 ரூபாய் தரவேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் இறைச்சிக் கடை உரிமையாளர்கள் - கூடுதலாக ஒரு ரூபாய் மட்டும்தான் தரமுடியம் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் நகராட்சி தலையிடாமல் - குத்தகைதாராரும், உரிமையாளர்களும் பேசி முடிவெடுக்கட்டும் என விட்டிருக்கலாம். இதுதான் தமிழகத்தில் பல நகராட்சிகளில் நடக்கிறது (உதாரணம் - கீழக்கரை).

ஆனால் - ஏலத்தை எடுத்தவர் முஸ்லிமல்லாதவர் என்பதால் - பிரச்சனை - விஷமிகளால் திசை திருப்பபடக் கூடும் என்ற காரணத்திற்காகத்தான் நகர்மன்றம் தலையிட்டு - இரு தரப்பினரையும் அழைத்துப் பேசியுள்ளது.

ஏழு மணிநேரம் தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தை - மறுநாளும் தொடர்ந்தது. அதன் இறுதியில் - ஏலம் எடுத்தவர் - தனது உரிமத்தை ரத்து செய்ய சம்மதம் கூறியுள்ளார். அவ்வாறு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் விடப்படும் ஏலத்தில் - இறைச்சிக் கடை உரிமையாளர்கள், தாங்களே பங்கேற்பதாக இதற்கு ஒரு நாள் முன்னரே வாக்களித்துள்ளனர்.

இதற்கு மாற்றுத் தீர்வாக, குத்தகைதாரர் நிர்ணயிக்கும் தொகைத்தான் இறைச்சிக்கடை வணிகர்கள் அனைவரும் கட்ட வேண்டும் என விட்டிருக்கலாம். கடைக்காரர்கள் சம்மதம் இல்லாமல், இதனால் பிரச்சனை பெரிதாகத்தான் வளர்ந்திருக்கும்.

அல்லது நகர்மன்றமே தலையிட்டு ஒரு தொகையை நிர்ணைத்திருக்கலாம். ஆனால் அத்தொகையை, இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் தீர்வு கிட்டியிருக்காது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இதில், நகர்மன்றத் தலைமையின் அனுபவின்மையைக் காண்பிக்கிறது என்று ஒரு சிலர் கூறியுள்ளனர். சிக்கலான ஒரு சூழ்நிலையிலும் - திறம்பட நகர்மன்றம் செயல்புரிந்ததையே காண முடிந்தது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:ஆடு-மாடு அறுப்புத் தொட்டி...
posted by Cnash (Makkah ) [09 June 2012]
IP: 62.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19228

அனுபவம் நிறைந்த புண்ணியவான்கள் பழைய ஆண்டுகளின் டெண்டர் விட்ட தொகை எவ்வளவு?

ஒரு வருடத்தில் 200 % - 500% வரை கூடுதல் தொகைக்கு ஏலம் போக என்ன காரணம் .. .அனுபவம் நிறைந்தவர்களின் கவன குறைவா? இல்லை அனுபவத்தை அதிகாரம் வென்றதால் முன்னர் குறைந்த தொகைக்கு ஏலம் போனதா என்பதை இங்கே எதற்கெடுத்தாலும் தலைமை சரி இல்லை என்று பல்லவி படுவபர்கள் விளக்கமும் சேர்த்து சொன்னால் நல்லா இருக்கும்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. அது வேற அனுபவம் சார்..
posted by M Sajith (DUBAI) [09 June 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19231

எதுக்கு உணர்ச்சிவப்படுறீங்க அவர் சொல்லவந்தது,

காதும் காதும் வச்சமாதிரி எப்படி கதைய முடிக்கிறதுங்கிற அனுபவம் சார்...

சைலன்டா செக் மோசடி உட்பட பல விசயத்த கண்டுக்காம இருந்தாங்களே அந்த அனுபவம்.

கொம்புத்துறைக்கும் சிங்கித்துறைக்கும் எல்லா ஜமாத்தரிடமும் புத்திசாலித்தனமாக மேடையில் அங்கீகாரம் வழங்கிய அனுபவம்...

வீடுவரை சென்றாலும் வாழ்த்த மணம் வராத அனுபவம் இது போல இன்னும் எத்தனை அனுபவங்களைச் சொல்ல..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:ஆடு-மாடு அறுப்புத் தொட்டி...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [09 June 2012]
IP: 37.*.*.* | Comment Reference Number: 19235

அஸ்ஸலாமு அலைக்கும்.

நம் நகராட்ச்சிக்கு ஏன் இவ்வளவு குளறுபடி? குத்தகை விடும்போது பல தடவை படித்து பார்த்து தானே. டெண்டர் விடனும். பாவம் தற்போது எடுத்த குத்தகைதாரரின் நெலமை தான் என்ன ? குத்தகை எடுத்தவருக்கு நம் நகர்மன்ற தலைவி அவர்கள் தான். குத்தகை காரருக்கு நல்லதோர் முடிவு ஏற்படுத்தி குடுக்கணும்.

பழைய டெண்டரில் கால காலமாக இந்த பல்குத்தி / கல் ஈரல் எல்லாம் யாருக்கு சம்பந்தபட்டதாம்?

அடுத்த டெண்டர் இன்னும் கூடுதல் தொகைக்கு தானே போகும் >>>>. பொதுவாக இந்த குளறு படிக்கு முழு காரணம் என்ன ? மேலைக்கு இது போன்ற குளறு படிகள் வராமல் நம் நகராட்ச்சி முழு கவனம் செலுத்த வேண்டும். இது போன்ற பிரச்சனைகள் மற்ற டெண்டரில் ஏற்படாமல் நம் நகராட்ச்சி கவனமாக செயல் படனும். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. பல்குத்தி விவகாரத்தில் பல்லைக் குத்த வேண்டாம்...!
posted by ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [10 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19239

ஆரம்பிச்சுட்டாங்கய்யா... ஆரம்பிச்சுட்டாங்க.... வந்துடுடான்(ங்க)ய்யா... சாஜித் வந்துட்டா(ங்க)ய்யா. உள்ளாட்சிச் தேர்தலில் தொடுக்கப்பட்ட கருத்துப் போர் நினைவுக்கு வருகின்றது.

பல்குத்தி விவகாரத்தில் இனி நம்ம பல்லைக்குத்தி நாற வேண்டுமா? இது என்ன மாந்தோப்பா? குத்துகைக்கு எடுத்த பின் விளைச்சல் சரியில்லேன்னு தலையில் துண்டைப் போட்டுக்கிட்டுப் போறதுக்கு? வருமானம்ய்யா...நீங்க பாட்டுக்கு பல்குத்தி தரமாட்டேன்னா அறுக்கும் கூலி அஞ்சுக்கும் பத்துக்கும் குத்துகைக்காரர் சரின்னா அப்புறம் ஐம்பது வருஷமானாலும் அவரால் அதை ஈடுகட்ட முடியாது.

ஆதம் சுல்தான் காக்கா சொன்னது போல வழக்கத்தில் எப்படியுள்ளதோ? அப்படியே செய்வதுதானே முறை. அதை விட்டுப்போட்டு நகர்மன்றத் தலைவரின் அனுகுமுறை சரியில்லை, அனுபவம் போதாதுன்னு அடம்பிடிக்கிறது எவ்விதத்தில் நியாயம்?

எஸ்.கே.சாலிஹ் அவர்களின் கருத்துப் பதிவை ஒன்றுக்கு இரண்டு முறை நிதானமாகப் படித்துப் பார்த்தால் நகர்மன்றத் தலைவர் ஆபிதாவின் ஆளுமை மற்றும் அனுமுறை தெளிவாக விளங்கும்.

Moderator: செய்திக்குத் தொடர்பற்ற வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. ..வம்புக்கு இழுப்பது நம்மில் சிலருக்கு ஒரு வகை பொழுதுபோக்கு போல் தெரிகின்றது,
posted by சட்னி ,செய்யது மீரான் (ஜித்தா ,சவுதி அரேபியா ) [10 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19242

அஸ்ஸலாமு அலைக்கும்.

அனைத்தையும் கேட்டறிந்த நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், குத்தகைக்காரரை அழைத்துப் பேசினார். மறு ஏலம் விட சம்மதம் தெரிவித்தார். முன்னர் ஏலம் எடுத்தவர் பத்து மாதத்தில் போட்ட முதலையும். இதற்காக வேண்டி அனு தினம் உழைத்த உழைப்பும் வீண் போகி விடும் என்று அச்சத்தில் எதையோ கூறி பின் வாங்கி விட்டார் உஷாரான நபர் தான். இது போல் எத்தனை பேர் பின் வாங்க உள்ளார்களோ?? ஆயினும் மன்ற உறுப்பினர்களில் பலரும் உள்ளார்கள் இதற்க்கு அவர்கள் ஏதும் பேசவில்லையா?????????/

அன்பு சகோதரர்கள் முத்து இஸ்மாயில், பொறியாளர் பி.எம்.ஹுசைன் நூருதீன் இவர்களின் கருத்தும் முற்றும் உண்மையே .நம்மை சிந்திக்க வைக்கின்றது பாராட்டுக்கள்....

அனுபவம் வாய்ந்த பெரியோர்கள்,அதிகாரத்தில் இருந்த முன்னவர்கள்,மற்றும் தேர்தல் சமயம் கச்சை கட்டி மோதல் போக்கோடு இருந்த இரு தரப்பாரும் எல்லாவற்றையும் மறந்து விட்டு அவரவர் காரியங்களில் இருக்கும் பொழுது வீணாக நாம் வம்புக்கு இழுப்பது நம்மில் சிலருக்கு ஒரு வகை பொழுதுபோக்கு போல் தெரிகின்றது,

என்றும் அன்புடன்
சட்னி ,செய்யது மீரான்..
ஜித்தா ,சவுதி அரேபியா

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:ஆடு-மாடு அறுப்புத் தொட்டி...
posted by MOHAMMED LEBBAI MS (dxb) [10 June 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19243

ஏம்பா ஊருலே இடி விழுந்தாலும் நகராச்சி தலைமை சரியில்லை அனுபவம் போதாது என்று சொல்லுவீங்க போலிருக்கே???

அனுபவம் காணாது என்று கருத்து சொன்ன அன்பின் சகோதர்களே,,, இதற்க்கு முன் நடந்த விஷயங்கள் தங்களுக்கு தெரியுமா??? டெண்டர் எப்படி நடந்தது ????????? டெண்டர் எடுத்தவங்க ஒழுங்கா செலுத்தினார்களா?????????

நடந்த ஒரு சண்டையே ,,,, எப்படி போனால் நமக்கென்ன என்றில்லாமல்,,, கூப்பிட்டு பேசி ஒரு முடிவு எடுத்ததற்கு கொடுத்த சான்றிதல்??????????? அனுபவமின்மை??????????? கருத்து பதிவு செய்த சகோதர் ஒருவர் சொன்ன மாதிரி கண்ணுல விளக்கென்னேயே ஊத்திக்கிட்டு அலைகிற மாதிரில தெரியுது??????????/


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. கவனத்தோடு வீறுநடைபோடுங்கள்.
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (kayalpatnam) [10 June 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 19247

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்ற முதுமொழிக்கேற்ப தீர விசாரத்ததில் திரட்டிய தெளிவான உண்மையின் சாராம்சம்.

"தப்பு" நடக்கவில்லை ஆனால் தவறு நடந்திருக்கிறது."குறைகள்" நடக்கவில்லை ஆனால் கவனக்குறைவான சம்பவத்தால் சறுக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே தவறுகள் திருத்தப்படலாம்,குறைகள் களையப்படலாம். ஒரு பெரிய நிர்வாகத்தில் இது ஒரு பின்னடைவுதான்.அதை நாம் ஒப்புகொள்ளதான் வேண்டும். இன்ஷா அல்லாஹ் எதிர் காலத்தில் இன்னும், இன்னும் கவனமாகவே இருக்கவேண்டும் மாநகராட்சி நிர்வாகமும் அதன் தலைமையும்.

மேற்கண்ட நிர்வாக சறுக்கலை சாக்காக வைத்துகொண்டு சகட்டுமேனிக்கு சாடுவதுதென்பது ஒரு நிர்வாகத்திற்கு நாம் சொல்லும் யோசனை உதவியாக இருக்கமுடியாது . எப்படா இடறுவார் ஏறி மிதிக்கலாம் என்ற இழிவான சிந்தனையை தவிர வேறு ஒன்றும் இல்லை.

கால்கள் பின்னினாலும் கவனத்தோடு சீரிய, நேரிய பாதையில் வீறுநடை போடுங்கள். வழி வெளிச்சத்தை எங்களால் இயன்ற வரைக்கும் உங்களுக்கு கட்டுவோம் தலைவி அவர்களே! அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:ஆடு-மாடு அறுப்புத் தொட்டி...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [11 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19264

தம்பி எஸ்.கே சாலிஹின் கருத்து சரியானது. நான் கேள்விப்பட்ட வரையில் பல்குத்தி எனபது கிடாய் அறுக்கும் லெப்பைக்கே சொந்தம் என்பதும் ,லெப்பைக்கு அதற்க்கு பகரமாக பணம் கொடுத்து விட்டு வியாபாரிகள் அதை வாங்கி வந்து விற்பனை செய்தார்கள் என்பதும்தான் உண்மை. சென்ற முறை டிப்போ ஏலம் எடுத்தவர் இந்த பல்குத்தி விவகாரத்தை கண்டு கொள்ளாததால் பல்குத்தியை வியாபாரிகள் வாங்கிவந்து விற்பனை செய்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

எனினும் விட்ட ஏலத்தை ரத்து செய்வது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். இதை தவிர்த்திருக்கலாம். சகோதரி ஆபிதா அவர்கள் தனது சக்திக்கு உட்பட்ட வகையில் இதில் செயலாற்றினார். "அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் "என்ற மனப்பான்மையில் இருக்கும் சில சகோதரர்கள் உடனேயே தங்களது சாட்டையை சொடுக்கியுள்ளனர். முன்பு இருந்த எந்த தலைவர்களை காட்டிலும் சகோதரி ஆபிதா சிறப்பாகவே செயல்படுகிறார்.

சரி..ஆட்டுத்தொட்டி எந்த காலத்தில் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போனது..?அதை முதலில் சொல்லுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:ஆடு-மாடு அறுப்புத் தொட்டி...
posted by Vilack SMA (Guangzhou) [12 June 2012]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 19277

சலாம் K S Shuhaib மச்சான். நாளுக்குநாள் உயரும் விலைவாசியில் டெண்டர் தொகையும் உயரத்தான் செய்யும் . இதில் யாரையும் பாராட்டுவதற்கு இல்லை. நீங்கள்கூடத்தான் சிறுவயதில் தெருவில் குச்சிகம்பு விளையாடிய வயதில் , ஒருகிலோ கறி இரண்டு ரூபாய்க்கு வாங்கினீர்கள் . இன்று அதன் விலை 400 ரூபாய்க்கு மேல். அதற்காக , நல்ல விலைக்கு விற்கிறான் என்று கறி கடை காரனை மெச்சுவதா ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:ஆடு-மாடு அறுப்புத் தொட்டி...
posted by Cnash (Makkah ) [12 June 2012]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19287

விலைவாசி ஏற்றம் ஒரு வருடத்தில் அப்படியா ஏறி இருக்கிறது!! போன வருஷம் RS . 300 ரூபாய்க்கு போன மீன்பிடி ஓடை எப்போ RS 25,000 ரூபாய்க்கும்.. நகராட்சி கிணற்றில் தண்ணீர் எடுப்பது RS 9,000இல் இருந்து இப்போ ஒரு லட்சம் ரூபாய்க்கும் ஏலம் போய் இருகிறதே. .. போன வருஷம் உப்பு தண்ணியும் , இந்த வருஷம் ஜம்ஜம் தண்ணியுமா சுரக்குது!! என்ன விளக்கமோ.. விலையேற்றமோ!! ஒன்னும் புரியலை?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:ஆடு-மாடு அறுப்புத் தொட்டி...
posted by farook (Jeddah) [12 June 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19293

ஒருவருக்கு பதில் கொடுக்கணுமு நினச்சு, மார்க்க சம்பந்தம் விஷயம் தேவைல்லாம ஏன் இழுக்கிறார்? ஜம்ஜம் தண்ணி கிணதிலா சுரகிறத்து என்று இதில் என்ன கிண்டல்? இப்படி அறியாமைல கேகாதீர்? நம் மார்கத்தை நம் கிண்டல் பண்ண கூடாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:ஆடு-மாடு அறுப்புத் தொட்டி...
posted by Cnash (Makkah ) [13 June 2012]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19302

ஏதோ பெரிய கண்டுபிடிப்பு கண்டது போல நண்பர் சொல்லி இருக்கிறார்...

ஜம்ஜம் தண்ணி கிணறா என்று கேட்டது பெரிய மார்க்க குற்றமா? அப்டினா நம்ம எந்த ஒரு பழைய பொருளை கண்டாலும் மூசா நபி காலத்து உள்ளது என்று சொல்லுவோம்,

சும்மா ஒருத்தனை திட்டுவதாக இருந்தால் கூட குர்பான் கொடுத்து விடுவேன் என்று சொல்லுவதும், ஏன் அதிகமா தண்ணி குடிச்ச கூட சாலிஹு நபி ஒட்டகம் போல குடிக்கிறான் என்றும், உயரமா உள்ள ஒருத்தனை தஜ்ஜால் மாறி இருக்கிறான் என்றும், இது போல 100 உவமைகள் மார்க்க சம்பந்த பட்ட விஷயத்தை கொண்டும் பேசுகிறோமே? அப்போதெல்லாம் உங்கள் ஞானம் எங்கே போனது?

சும்மா எதுக்கு எடுத்தாலும் தேவை இல்லாமல் மார்க்க முடிச்சி போட்டு. . காட்டவேணாம் ப்ளீஸ்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved