Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:18:20 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8424
#KOTW8424
Increase Font Size Decrease Font Size
வியாழன், மே 10, 2012
டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசு ஒழிப்பு மருந்தடிப்பு குறித்து காயல்பட்டினம் நகராட்சியின் முக்கிய அறிவிப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2764 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்கான மருந்தடிப்பு குறித்து, பொதுமக்கள் கவனத்திற்காக காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் முக்கிய அறிவிப்பு ஒன்றை பின்வருமாறு வெளியிட்டுள்ளார்:-



1939ஆம் வருட தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு சட்டப்பிரிவுகள் 83 (1), (அ), (ஆ), 84 (1), 2 (1), 85 மற்றும் 134 ஆகியவைகளின்படி வழங்கப்படும் அறிவிப்பு!

டெங்கு வைரஸ் கிருமிகளை பரப்பும் 'ஏடிஸ்' வகை கொசுப்புழுக்கள் நல்ல தண்ணீரில்தான் உற்பத்தியாகும் என்பதால் அதனை தடுக்க பொதுமக்கள் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

* பொதுமக்கள் தங்களது வீடுகளில் தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள் மற்றும் தொட்டிகளில் கொசுக்கள் உட்புகாவண்ணம் நன்கு இறுக மூடி வைக்க வேண்டும்.

* பொதுமக்கள் தங்களது வீடுகளில் தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், தொட்டிகளில் நகராட்சி பணியாளர்கள் கொசுப்புழுக்கொல்லி மருந்தினை ஊற்ற வரும்போது எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் பணியாளர்களே நேரடியாக கொசுப்புழுக் கொல்லி மருந்தினை ஊற்றிட அனுமதிக்க வேண்டும்.

* வீடுகளின் சுற்றுப்புறங்களிலும், மொட்டை மாடிகளிலும் உபயோகமற்ற மழைநீர் தேங்குவதற்கு ஏதுவாக கிடக்கும் டயர்கள், ஆட்டுரல்கள், தேங்காய் கூந்தல்கள், சிரட்டைகள், பால் கவர்கள், பாட்டில் மூடிகள், கண்ணாடி பாட்டில்கள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள், பிளாஸ்டிக் டீ கப்புகள் போன்ற பொருள்களை பொதுமக்கள் அப்புறப்படுத்தி கொசுப்புழு உற்பத்தியை தடுத்திட வேண்டும்.

* பொதுமக்களுக்கு காய்ச்சல் அல்லது காய்ச்சல் அல்லது காய்ச்சலுக்கான அறிகுறி ஏதும் தென்படின் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

* பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளை நன்கு காற்று புகாது வைக்க வேண்டும்.

* வீடுகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளின் பின்பகுதியில் தேங்கும் தண்ணீரை அவ்வப்போது துடைத்து உலர வைக்க வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் டெங்கு காய்ச்ல் வரும் முன்னர் காக்க ஓத்துழைப்பு கொடுக்குமாறு கேடடுக்கொள்கிறோம்.


இவ்வாறு, காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தகவல்:
M.ஜஹாங்கீர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:டெங்கு காய்ச்சலைப் பரப்பு...
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [10 May 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18769

நமதூரில் தெருவோர சாக்கடை, பாதாள சாக்கடை, பன்றிக் கூட்டங்கள் இல்லை! இதையும் மீறி டெங்கு ஃபீவர் நம் மக்களை நோண்டி நொங்கெடுத்து விட்டுப் போகின்றது.

சில நாட்களுக்கு முன் இந்நோய் பரப்பும் கொசுக்களை ஒழிக்க மாவட்ட சுகாதார ஆய்வாளர் நம் நகராட்சிக்கு வருகை தந்து அபேட் எனும் மருந்தை வீட்டு வெளிப் பயன்பாட்டிற்கு சேமித்து வைத்திருக்கும் தண்ணீர் மற்றும் தொட்டிகள், கிணறுகள் ஆகியவற்றில் தெளிப்பது குறித்த பயிற்சியை நகராட்சி ஊழியர்களுக்கு வழங்கினார்.

ஆனால், நம்ம கமெண்ட் ஹீரோக்கள் இதற்கும் கமெண்ட் பாஸாக்கினார்கள். இப்ப நம்ம ஊருலெ கிணறுகளே இல்லையே? மருந்தை எங்கே கொண்டு தெளிப்பாங்க? என்று, தற்கால வீடுகளில் கிணறுகள் பெரும்பாலும் வீட்டிற்குளேயே எடுக்கப்பட்டுகின்றது. அதற்கு இரும்பு மூடியும் போட்டு விடுகின்றனர். இதை குடிநீருக்கு பயன்படுத்தாத பட்சத்தில் இம் மருந்தை இது போன்ற கிணறுகளில் தெளிக்கலாம்.

கொசுக்களை ஒழிப்பதற்காக அரசாங்கம் என்ன என்னலாமோ செய்து வருகின்றது. இனப்பெருக்கத்தை தடுக்க கொசு முட்டைகளில் மருந்தை புரட்டி புதிய வகை கொசுக்களை உருவாக்கி அதை பெண் கொசுவோடு இணை சேர்த்து அந்த இனமே அழிந்தொழிய பல வகையான ஆராய்ச்சிகளும், பயிற்சிகளும் மேற்கொண்டு வருகின்றது. இதப் பற்றி ஒரு கட்டுரையே எழுதிவிடலாம். நாம ஈஸியா கமெண்ட்ஸை தட்டி விடுகிறோம். மக்களோடு மக்களாக அவர்களும் படாத பாடு பட்டே வருகின்றனர் என்பது தான் உண்மை!

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:டெங்கு காய்ச்சலைப் பரப்பு...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [10 May 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18770

முதலில் உங்களின் துரித நடவடிக்கைக்கு மற்றும் தகவல்களுக்கு நன்றிகள்.

எல்லாம் சரிதான் அதிகாரி அவர்களே, எங்கள் பகுதியான மஹ்லரா நகரில் (பலருக்கு இந்த மாதிரியான இடங்கள் எல்லாம் தெரிய வாய்ப்பு இல்லைதான்- நகராட்சி மன்றத்திற்கு மேற்கு பகுதியில் உள்ளது), ஒரு சிறு அழுக்கு தண்ணீர் தேங்கிய குட்டை உள்ளது.

அங்கு தான் பால் பண்ணை.. சாரி.. கொசுப் பண்ணையே உள்ளது. இந்த பண்ணையில் இருந்துதான் ஊருக்கே கொசு சப்லை ஆகின்றது. முதலில் இந்த உற்பத்தியை தடுத்து நிறுத்துங்க, ஐயா...!

சிலருக்கு ஒரு சந்தேகம் வரலாம், இங்கு உற்பத்தி ஆகும் கொசுக்கள் எப்படி தொலைவில் உள்ள எங்கள் வீட்டிற்கு வரும் என்று. இது ஒன்னரை கிலோ மீட்டர் தூரம் கூட பறந்து..து..து வருமாம். அப்புறம் என்ன, உங்கள் வீட்டில் கடிக்கும் கொசு எங்கள் பகுதியில் உற்பத்தி ஆனதுங்க.. எவ்வளவு பெருமை எங்களுக்கு.

இன்னும் ஒரு அதிசயம் தெரியுமா, சோ.. என்று கொட்டும் மழையில் கூட இந்த கொசு சர்வ சாதாரணமாக சிறகுகள் நனையாமல் சூப்பராக பயணம் செய்யுமாம்..!

இறைவன் படைத்த படைப்புகள் ஒவ்வொன்றிலும் அதிசயமும், படிப்பினையும் நமக்கு உண்டு.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:டெங்கு காய்ச்சலைப் பரப்பு...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [11 May 2012]
IP: 37.*.*.* | Comment Reference Number: 18786

அஸ்ஸலாமு அலைக்கும்.

நம் ஊர் மாநகராட்சியின் அறிவிப்பு அருமையானது தான் .ஆனால் மாநகராட்சி இத்தோடு நிற்று விடாமல்.நம் பொது மக்களுக்கு நேரடியாக சென்று வரும் விதமாக.மக்களுக்கு நேரடி விளப்பரம் செய்ய வேண்டியது. NO.1. துண்டு பிரசுரம் / 2 கேபிள் T.V./ 3.நம் ஊர் பள்ளிகள் மைக் மூலம் அலோன்ஸ் பண்ணுவது ./ 4. நம் ஊர் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பொது போடு வைப்பது. 5. முக்கியமான சங்ககளில் உள்ள நோட்டிஸ் போடில் மாநகராட்சி அறிவிப்பை ஓட்டுவது. இது ரொம்ப சிறந்தது.

பொதுவாக நம் ஊர் மக்களும் நம் மாநகராட்சியுடன் சேர்ந்து முழு ஒத்துழைப்பு கொடுத்தால் தான் நாம் இந்த டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுவை ஓழிக்க முடியும்.

நம் அருமை சகோதரர் ( எங்கள் DAMMAM KAYAL நற்பணி மன்ற துணை தலைவர் ) அவர்கள் சொன்னது போன்று எங்கள் மகலரா நகர் பகுதில் தான் இந்த டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசு மச்சான் அவர்கள் குடும்பமாக இருந்து செயல் பட்டு வருகிறார்கள் போல் தெரிகிறது. அருமை சகோதரர் அவர்கள் கூறியது.போன்று மாநகராட்சி உடனே செயல் படுவது நல்லது. + எங்கள் மகலரா நகர் பகுதியில் தெரு விளக்கு வசதி சரியாக இல்லை / ரோடு வசதி சுத்தமாக இல்லை இதுகளை மாநகராட்சி உடனே சரி செய்தாலே நியாயமான டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசு மச்சான் அவர்கள் குடும்பத்தை ஓழித்து விடலாம்.

நாங்களும் எங்கள் தொகுதி ஐயா சாமி அவர்களிடம் பல முறை முறையிட்டு யுள்ளோம். கவனிப்பார்கள் என்று முழுமையாக நம்புகிறோம்.

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved