Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:10:01 PM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8317
#KOTW8317
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 16, 2012
காயல்பட்டினம் - the City of lights?! (பாகம் 5)
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3849 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5

உலகின் பல நகரங்களுக்கு City of lights என்ற பெயர் உண்டு. பிரதானமாக பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் - City of lights என பலரால் அழைக்கப்படுகிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் காயல்பட்டினம் நகராட்சியின் - தெருவிளக்குகளுக்கான மின்பொருட்கள் வகை செலவினை பார்க்கும் போது - தென்னகத்தின் City of lights என்ற பெயர் காயல்பட்டினத்திற்கு வழங்கப்படவேண்டும். உண்மை நிலை என்னவெனில் நகரின் பல பகுதிகளை பல ஆண்டுகாலமாக இருளும் , திட்டமிட்டு நிறுவப்படாத விளக்குகளும் தான் அலங்கரித்து கொண்டிருக்கிறது.

முதல் பார்வையில் (Prima Facie) காயல்பட்டினம் நகராட்சியில் கடந்த சில ஆண்டுகளாக மின்பொருட்கள் கொள்முதலில் முறைக்கேடுகள் நடந்திருக்கிறது என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. முன்னாள் உறுப்பினரின் கூற்றும் இதனை ஊர்ஜிதம் செய்கிறது.

இதனை கருத்தில் கொண்டு - தற்போதைய நகர்மன்றம் - தமிழக அரசினை - காயல்பட்டினம் நகரமன்றத்தின் கடந்த கால மின்பொருட்கள் கொள்முதல் முறையினை - ஆழமாக விசாரிக்க குழு ஒன்றினை அமைக்க தீர்மானம் நிறைவேற்றி கோரவேண்டும். அந்த குழுவின் அறிக்கை - முறைக்கேடுகள் நடந்ததாக ஊர்ஜிதம் செய்யும் பட்சத்தில் - தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்.

விசாரணை குழுவினை அமைக்க காயல்பட்டினம் நகர்மன்றம் அரசிடம் கோர மறுக்கும் பட்சத்தில் - சமூக ஆர்வலர்கள், நீதிமன்றத்தில் - குழு அமைக்க கோரி - வழக்கு தொடரலாம்.

உண்மையாக தவறு நடந்திருக்கும் பட்சத்தில் - குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் தான் - வருங்காலங்களில் நிர்வாகத்திறமை அற்றவர்களும், நகர்மன்றத்தை தங்கள் வாழ்வாதாரமாக ஆக்கி கொள்ள நினைப்பவர்களும் - காயல்பட்டினம் நகராட்சியின் உறுப்பினர்களாக ஆக தயங்குவார்கள். மேலும் - காயல்பட்டினம் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் ஊழியர்களும் - மக்கள் சொத்தை கொள்ளை அடிக்க சிந்திக்கமாட்டார்கள்.

இந்தத் துணிவு, மாற்றம் - காயல்பட்டினம் மக்களுக்கு வராத வரை - எத்தனை மின்விளக்குகள் நகரில் நிறுவப்பட்டாலும், காயல்பட்டினம் - City of lights ஆக முடியாது. இருளில் மூழ்கிய நகராகவே (City of darkness) தொடரும்.

பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5

[முற்றும்]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நமது வரி பணம் இப்படி வீண் போவதா...? இந்த பூனைக்கு யார் மணி கட்டுவது...?
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல்) [16 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18271

விசாரணை குழுவினை அமைக்க காயல்பட்டினம் நகர்மன்றம் அரசிடம் கோர மறுக்கும் பட்சத்தில் - சமூக ஆர்வலர்கள், நீதிமன்றத்தில் - குழு அமைக்க கோரி - வழக்கு தொடரலாம்.

இதில் சமூக ஆர்வலர்கள் இந்த விசியத்தை கையாளுவதை விட பொது நல அமைப்பு நீதிமன்றத்தில் - குழு அமைக்க கோரி - வழக்கு தொடரலாம். சமூக ஆர்வலர்களில் சிலருக்கு இந்த வழக்கு தொடர்பாக பொருளாதார பின்னடைவு இருக்கலாம்...! சமூக ஆர்வலர்கள் மூலம் பொது நல அமைப்பே இந்த வழக்கு போடும் விசியத்தில் இறங்க வேண்டும்... என்பது எனது தாழ்மையான கருத்து..

நமது வரி பணம் இப்படி வீண் போவதா...? இந்த பூனைக்கு யார் மணி கட்டுவது...? ஊரின் பல பொது நல அமைப்புகளில் ஒரு அமைப்பு இதற்க்கு முன் வர வேண்டும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:காயல்பட்டினம் - the City ...
posted by Kader K.M (Dubai) [16 April 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18276

இச் செய்தியை வெளியிட்டு தன் தைரியத்தை வெளிப்படுத்தி உள்ளது kayalpatnam.காம். பாராட்டுக்கள் !

திருடனாய் (திரு திருடர்களாய்) பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.அல்லது தண்டனை கடுமை ஆனாலும் திருட்டை ஒழிக்கலாம்!

திருடர்களை மட்டும் குற்றம் கூறி பயன் இல்லை!அவர்கள் திருடர்களாக மாறக் காரணமாய் இருந்த நம்மையும் தான் குற்றம் சொல்ல வேண்டும்.

நம்மலுடைய கையாலாகா தனத்தினால்தான் மற்றவன் திருடனாகி தவறு செய்கின்றான். இனியாவது விழித்துக்கொள் என் சகோதரனே!! ஒன்றுபடுவோம் ! குற்றவாளிகளை இனம் கண்டு தண்டிப்போம்! பாடம் புகட்டுவோம் !

நமக்கு ஏன் இந்த வம்பு ? எங்கோ ஒரு குரல் கேக்கிறது ! சகோதரனே நம்மை நாம் மாற்றிக்கொள்ளாத வரை அல்லாஹ் நம்மை மாற்றுவதில்லை ! சிந்திப்போம் !செயல்படுவோம்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:காயல்பட்டினம் - the City ...
posted by SEYED ALI (ABUDHABI) [16 April 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18279

திருத்துவ ராஜ் மாதிரி நேர்மையானவர்களே நகராட்சி நிர்வாகத்தில் தொடர்ந்து இடம் பெற வேண்டும்.அவர் வெளியிட்டுள்ள உண்மைகளை பார்த்தால் நம்மடவன் மாற்றான் என்ற வித்தியாசமில்லாமல் ஒற்றுமையாகவே மக்கள் பணத்தை கொள்ளை அடித்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு திட்டங்களுக்கும் தேவைக்கு அதிகமாக நிதி ஒதுக்கி திட்டங்கள் நிறைவேறுகிறதோ இல்லையோ இவர்கள் பக்கெட் மட்டும் நிறைந்துவிடும் ஊழல் விஞ்ஞானத்தை எந்த விஞ்ஞானியிடமிருந்து கற்றார்களோ.இப்போது இந்த விஞ்ஞானம் தான் ஊர் உலகம் என்று நிறைந்து கிடக்கிறது.அட்லீஸ்ட் நம் ஊரிலிருந்தாவது இதை துடைத்து எறிவதை ஆரம்பிப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:காயல்பட்டினம் - the City ...
posted by mackie noohuthambi (colombo) [16 April 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 18280

காயல்பட்டினம் மின்திருட்டு பற்றி தெளிவாக விளக்கம் தந்துள்ள காயல்பட்டினம் இணையத்தளம் தன பல்லை குத்தி நாற்றம்பாற்கும் செயல் என்று இதை சொல்வதா, விழிப்புணர்வு ஏற்படுத்து மக்கள் முன் வைத்துள்ள துணிச்சலான செயல் என்று எடுத்துக்கொள்வதா.

எது எப்படியோ நமக்கு எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம், நான் உட்பட குற்ற்வாளிக்கூண்டிலேயே எல்லோரும் நின்று பதில் சொல்லவேண்டிய ஒரு விஷயம்.

நமது வீட்டு திருமணங்களில் compressor motor வைத்து ஒளிவிளக்குகள் பொருத்துகிறோம். அந்த உரிமையாளர் தெருவில் போகும் போஸ்டிலிருந்து கரண்ட் எடுத்து அவரது உபகரணங்களில் பொருத்தி வெளிச்சம் தருகிறார். இது சர்வ சாதாரணமாக நமதூரில் மின் அலுவலக அதிகாரிகளுக்கு தெரிந்தோ தெரியாமலோ வாடிக்கையாக நடந்து வருகிறது.

மே மாதம் நமதூரில் நிறைய திருமணங்கள் நடைபெறவிருக்கின்றன. தயவு செய்து தன்னார்வ தொண்டு நிறுவன இளைஞர்கள் ஒரு பறக்கும் படை அமைத்து இதை தடுக்க முயற்சி செய்யுங்கள். தொடர்ந்து நாடு முழுவதும் இததகைய தேடுதல் வேட்டை நடந்தால் மின் திருட்டு தானாகவே குறையும்.

ஆங்கிலத்திலே, TEMPTING - ATTEMPTING என்று இரண்டு விஷயங்கள் சொல்வார்கள். முன்னது எவ்வித முயற்சியும் பயமும் இல்லாமல் செய்ய வாய்ப்புள்ளது. பின்னையது, சற்று யோசித்து, முன் பின் பார்த்து தயங்கி தயங்கி செய்ய தூண்டுவது, சில சமயம் அதை செய்ய முடியாமலும் போய்விடும். எனவே நாம் தவறு செய்வதை மற்றவர்கள் கண்காணிக்கிறார்கள் என்று நினைக்கும்போதே தவறு செய்வதற்கு மனம் முன் வராது.

இந்த விஷயத்தில் மருமகன் சாலிஹு சிறந்த பணியாற்ற முடியும் உங்களுக்கு ஊடக செல்வாக்கும் உள்ளது.கூடவே சொல்லாற்றல் செயலாற்றல், தவறுகளை சுட்டிக்காட்டும் ஆற்றல் எல்லாமே உங்களுக்கு அல்லாஹ் தந்துள்ள செல்வங்கள். அதை சமுதாயத்தின் நலனுக்காக பயன்படுத்துங்கள்.வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:காயல்பட்டினம் - the City ...
posted by masood (calicut) [16 April 2012]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 18284

டிசம்பர் மாதம் ஒரு திருமண நிகழ்சியில் நடந்த உண்மை சம்பவம். அலங்கார பணியில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு நபர் மின்சார திருட்டு வேலையில் ஈடு பட்டு கொண்டிறந்தார். இதனை கண்ட நான் ஏன் இது மாதிரி செயல்களை செய்கிறிர்கள் என்று கண்டித்தேன். எதற்கு அவர் கூறிய பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. என்ன காகா, கோவில் திருவிளாக்களில் பல நாட்களுக்கு அவர்கள் இது போன்ற திருட்டு செயல்களில் ஈடு படுகிறார்கள், ஆனால் நாம் ஒரு நாளைக்கு மட்டும் தான் செய்கிறோம், ஆதலால் இதை கண்டுகொள்ளதீர்கள் என்றார் இஸ்லாமிய அறிவு அவருக்கு இறுகுமானால் இவ்வாறு கூற மாட்டார். ஆனால் இது போன்ற விஷயங்களில் வீட்டு உரிமையாளர்கள் கவனம் செலுத்தி ஹராமை விட்டும் பாதுகாத்து கொள்வது நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:காயல்பட்டினம் - the City ...
posted by Administrator (Chennai) [16 April 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 18287

இச்செய்தியில் குறிப்பிடப்பட்ட தொகைகளில் - காயல்பட்டினம் நகராட்சி மின்சார வாரியத்திற்கு கட்டும் தொகை (EB Bill) சேர்க்கப்படவில்லை. ஒரு சிலரின் கருத்துபதிவுகளில் - நகராட்சியின் மின்சார திருட்டும் குறிப்பிடப்படுவதால் - இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. KPM - City of corruption ???
posted by Salai. Mohamed Mohideen (USA) [16 April 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 18292

இதட்க்கென்று நேரம் செலவழித்து நல்லதொரு தகவல்களை தந்துள்ள நமது KOTW - க்கு நன்றிகள் பல. இங்கே கருத்து பதிந்துள்ள சிலர் இக்கட்டுரையை 'மின்திருட்டு' என்று தவறாக புரிந்து கொண்டது போல் தெரிகின்றது.

பாகம் ஒன்றில், ஸ்ரீ கங்கா எலக்ட்ரிக்கல்ஸ் மதிப்பீட்டு தொகையை விட '0.52% குறைவு' என்பது அச்சு பிழை (?) '0.52% கூடுதல்' என்பதே சரி. ஒருவர் மதிப்பீட்டு தொகையை விட 0.52% கூடுதலாகவும் இன்னொருவர் 213.30% கூடுதலாகவும்... இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் (௦.5 to 200 % variance) மதிப்பீடு (quote ) கொடுத்திருப்பது சற்று வியப்பாக உள்ளது.

2007 - 2008 - ல் 17.6 லட்சமும், 2009 - ல் 19.3 லட்சமும், 2010 - ல் 27 லட்சமும் 2011 - ல் 31 லட்சம் என்று "பரக்கத்தாக" அனுமதி வழங்கிய (செலவு செய்த ) நமது நகராட்சி மன்றம்...அதென்ன 2011 - 2012 நிதியாண்டில் மட்டும் அதுவும் "கடுமையாக எதிர்த்து" வெறும் 4 லட்சம் ரூபாய்க்கு மட்டும் தெருவிளக்கு பொருட்களை வாங்க அனுமதி வழங்கியுள்ளது....ஒன்று உண்மையிலேயே ஒரு நிதியாண்டில் இதற்கான செலவு 4 லட்சம் அல்லது 17.6 முதல் 31 வரை லட்சமாக இருக்கவேண்டும். இதில் எது சரி???? ஒரு வேளை 2011 , ஐந்து வருட நகராட்சியின் இறுதி வருடம் என்பதினால் நமக்கு பின்னால் வருபவர்கள் மூலம் எங்கே 'குட்டு' வெளிப்பட்டு விடுமோ என்று உசாராக, அவ்வருடம் மட்டும் சரியான அல்லது சற்று குறைவான மதிப்பிட்கு தெருவிளக்கு பொருட்கள் வாங்க பட்டிருக்கலாம். எது உண்மை என்பது முறையான விசாரணைகள் நடத்தப்படும்போது தெரியவரும்.

நமது இணைய தளத்தில், நீங்கள் கூறியிருக்கும் இத்தகவல்களை, நகர் மன்ற தலைவரோ / உறுப்பினர்களோ / அலுவலர்களோ என்று ஒருவர் கூடவா இதை படிக்காமலா இருந்திருப்பார்கள் / இருக்கபோகின்றார்கள். இதன் உண்மை நிலையை கண்டறிய... இம்மாதத்தில் (?) நடை பெரும் அடுத்த நகர் மன்ற கூட்டத்தில் 'இதை' விவாத பொருளாக சேர்த்துக் கொள்ள கூறும் சமுக அக்கறையும், ஒரு வேளை இத்தகவல் உண்மையாயிருப்பின்... தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்று எண்ணி, அரசிடம் இதற்க்கான விசாரணை குழுவினை அமைக்க கூற வேண்டும் என்ற "துணிவும்"...முதலில் இவர்களில் எவருக்கு / எத்தனை பேருக்கு இருக்கிறதென்று பார்போம் / காத்திருப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:காயல்பட்டினம் - the City ...
posted by மு.அ. பஷீர் மரைக்கார். (காயல்பட்டனம்.) [17 April 2012]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 18293

அட்மின் அவர்களே.

2007 - 2012 தெருவிளக்கு மின்உதிரி பாகங்கள் வாங்கியதில் முறைகேடு ஏற்பட்டுள்ளது என தாங்கள் வைக்கும் குற்றச்சாற்றிற்கு முன்னாள் நகர்மன்ற தலைவர் ஹாஜி வாவு SAR அவர்களிடம் இக்குற்றச்சாற்று குறித்து விளக்கம் கேட்டு பெற்று அதனையும் பாகம் 6 ஆக வெளியிட்டு இருக்கவேண்டும். ஆவனை செய்யப்படுமா?

மு.அ. பஷீர் மரைக்கார்.
காயல்பட்டனம்.

Administrator: நகர்மன்ற மின் உதிரிபாகங்கள் கொள்முதல் குறித்த கேள்விகள் புதியது அல்ல. முன்னாள் உறுப்பினர் உட்பட பலரால் கடந்த காலங்களில் இது எழுப்பப்பட்டுள்ளது. இந்த செய்தி - அது குறித்து - தற்போது பெறப்பட்டுள்ள கூடுதல் தகவல்கள் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:காயல்பட்டினம் - the City ...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [17 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18326

நிறைய ஆய்வுகளுக்கு பிறகு மிக முயற்சி எடுத்து புள்ளிவிவரங்களை திரட்டி இந்த கட்டுரையை வெளியிட்டு இருக்கிறீர்கள் பாராட்டுக்கள் இதைத்தான் Investigative Journalism என்பார்கள்.

City of lights ஒரு பழைய புகழ்பெற்ற ஆங்கில படத்தின் பெயர் .தவிர்க்க முடியாமல் ஒரு பழைய தமிழ் திரை படத்தின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது இதோ....

ஊருக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகரசபையிலே இது அந்தக்கால மெட்ராஸ் மாநகராட்சியை குறித்து வந்த பாடல். ஏனோ நமது நகராட்சிக்கும் இப்போது பொருந்தி வருகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. சகோ. திருதுவராஜின் உரையிலிருந்து ...
posted by Firdous (Colombo) [18 April 2012]
IP: 203.*.*.* Sri Lanka | Comment Reference Number: 18354

IIM யில் நகராட்சி தேர்தலுக்கு முன் நடந்த ஊழலற்ற உறுபினர்களை கவுரவிக்கும் நிகழ்வில் நானும் கலந்து கொள்ள வாய்ப்பு கிட்டியது. அதில் அவர் அழுத்தி குறிப்பிட்டதை நான் இங்கு நினைவு கூற விரும்புகிறேன்.

"ஹாஜியார் (முன்னால் நகர தந்தை) அவர்கள் வாரத்திற்கு இருமுறை நகர்மன்றதிற்கு விஜயம் செய்திருந்தால் நிறைய ஊழலை தடுத்திருக்கலாம்" என்று கூறியிருந்தார்.

மற்றவர்களின் கருத்துப்படி விசாரணை கமிசன் வைத்து ஊழலை கண்டுப்பிடிக்க பொது அமைப்புகள் தங்களுக்குள்ள காழ்புணர்வை மறந்து ஓர் அணியில் திரளவேண்டும் என்பது என்னை போன்றவர்களின் தாழ்மையான வேண்டுக்கோள்.

KOTW வாவிற்கு அன்பு வேண்டுக்கோள்: தாங்கள் இது போன்று மற்ற விசயங்களையும் வெளிக்கொண்டு வரவேண்டும். இதை பிரசுரமாக ஊரில் விநியோகித்தால் பெருபன்மையோரை சென்றடையும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் இதமழை!  (15/4/2012) [Views - 2384; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved