Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:39:22 AM
வெள்ளி | 3 மே 2024 | துல்ஹஜ் 1737, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:59
மறைவு18:27மறைவு14:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7765
#KOTW7765
Increase Font Size Decrease Font Size
சனி, டிசம்பர் 24, 2011
“உயிர் பிழைக்கக் கருதி வலைகளை கடலிலேயே வீசிவிட்டோம்...!” படகு விபத்திலிருந்து மீண்ட மீனவர்கள் தெரிவிப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3821 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

“எப்படியேனும் உயிர் பிழைத்து விட வேண்டும் என்று கருதி, மீன்பிடி வலைகள் உள்ளிட்ட எங்கள் பொருட்களை கடலிலேயே வீசியெறிந்துவிட்டோம்...” என, படகு விபத்திலிருந்து மீண்ட காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

காயல்பட்டினம் கற்புடையார்பள்ளி வட்டம் பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் மகன் ஜாஹிர் (35). இவரும், சாகுல் ஹமீத், ஷேக் ஃபரீத், யாசின் மற்றும் சீலன் ஆகிய ஐவரும் பைபர் படகு ஒன்றில், 16.12.2011 வெள்ளிக்கிழமையன்று காலை மீன் பிடிக்க சென்றனர்.

மணப்பாடு அருகில் மதியம் 02.00 மணியளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது பைபர் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. உடனடியாக தம் பகுதியைச் சார்ந்த உறவினர்களுக்கு அவர்கள் தகவல் தெரிவித்ததையடுத்து விரைந்து சென்ற உறவினர்கள், படகு விபத்தால் கடலில் தத்தளித்த இவ்வைவரையும் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

இதுகுறித்து, உயிர் பிழைத்த மீனவர்கள் காயல்பட்டணம்.காம் வலைதளத்திற்கு அளித்த நேர்காணல் பின்வருமாறு:-



ஜாஹிர் ஹுஸைன், ஷாஹுல் ஹமீத், ஷேக் ஃபரீத், சீலன், யாசின் ஆகிய நாங்கள் ஐவரும் மீன் பிடிப்பதற்காக 16.12.2011 வெள்ளிக்கிழமை காலையில் கடலுக்குச் சென்றோம்... மதியம் 02.30 மணியளவில் காற்று திடீரென பலமாக வீசியது... சில மணித்துளிகளில் எங்கள் ஃபைபர் படகிற்குள் தண்ணீர் மெல்ல மெல்ல நுழைந்து, படகு சரியத் துவங்கியது...

விளையப்போகும் ஆபத்தை விரைவாக உணர்ந்துகொண்ட நாங்கள், உடனடியாக எங்கள் உறவினர்களுக்கு கைபேசி மூலம் தகவல் தெரிவிக்கவே, எங்களைக் காப்பாற்ற அவர்கள் விரைந்து வந்தனர்...

அவர்கள் வருவதற்குள், படகிற்குள் தண்ணீர் கூடுதலாக உள்ளே நுழைந்துகொண்டிருந்தது... நீர் மட்டம் ஏற ஏற, எங்கள் படகின் யமஹா இஞ்சின் பழுதடைந்து, முற்றிலும் செயலற்றுப் போனது... படகு கொஞ்சங்கொஞ்சமாக கடலுக்குள் மூழ்கத் துவங்கியது...

இனியும் தாமதித்துப் பயனில்லை என்று கருதிய நாங்கள், எங்கள் படகிற்குள் இருந்த மீன் வலைகள் உள்ளிட்ட கனமான பொருட்கள் அனைத்தையும் கடலுக்குள் வீசியெறிந்துவிட்டோம்... படகில் தண்ணீர் நிறையாத மறுமுனையில் நாங்கள் அனைவரும் ஒன்றாக நின்றுகொண்டோம்...

இஞ்சின் செயலற்றுப் போனதால், விரைவாக பாய்மரத்தை நிறுவி, கரைக்கு வர கடும் முயற்சிகள் மேற்கொண்டோம்... சில மணி நேர தவிப்பிற்குப் பின்னர், எமது உறவினர்கள் மற்றொரு படகில் எங்களைக் காப்பாற்றி அழைத்துச் சென்றனர்...

கடலில் மிக ஆழமான பகுதியில் விபத்தைச் சந்தித்த நாங்கள், உயிரைக் காப்பாற்றுவதற்காக எங்கள் வலைகள் உள்ளிட்ட கனமான பொருட்களை கடலில் வீசியெறிந்துவிட்டதால், இப்போது தொழிலுக்கு வழியின்றி தவித்துக்கொண்டிருக்கிறோம்...

எனினும், எங்களைக் காப்பாற்றிய இறைவனுக்கே எல்லாப்புகழும்!


இவ்வாறு படகு விபத்தில் உயிர் பிழைத்த மீனவர்கள் தெரிவித்தனர். காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, அவரது கணவர் ஷேக் அப்துல் காதிர் ஆகியோர் இச்சந்திப்பின்போது உடனிருந்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:“உயிர் பிழைக்கக் கருதி வல...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [24 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15017

மீனவர்களின் துயரவாழ்வு எப்போதுமே கேள்விக்குரியது. "தரை மேல் பிறக்கவைத்தான். எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான். கரைமேல் இருக்கவைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்கவைத்தான்" என்று புரட்சித்தலைவர் அன்றே பாடினார்.

இயற்க்கை சீற்றங்கள் மட்டுமில்லாமல் இலங்கை கடற்படையினரின் அட்டகாசங்கள் போன்ற அரசியல் ரீதியான காரணங்களாலும் இன்று மீனவர்களின் வாழ்வு பெரும் சோகத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதுவுமல்லாமல் மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த "கடல் மேலாண்மை சட்டம்" போன்ற மீனவர்களின் உயிர்வாழ்க்கையை ஒடுக்கும் கொடிய சட்டங்கள் அவர்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்குகின்றன.

கடலிலும் அவர்களது உயிர் வாழ்க்கைக்கு உத்திரவாதமில்லை. கரையிலும் அவர்களை நிம்மதியாக வாழவிடுவதில்லை.

மிக கடின உழைப்பாளிகளான அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இனியாவது இறைவனின் அச்சத்தோடு 5 வேலை தொழுகை மற்றும் புனித ஜும்மா இவைகளை நிறைவு செய்து விட்டு தொழிலை செய்யுங்கள்...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [24 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15018

எனினும், எங்களைக் காப்பாற்றிய இறைவனுக்கே எல்லாப்புகழும் என்று சொல்லும் நமது சகோதர்கள் இவர்கள் வெள்ளிக்கிழமை புனித ஜும்மா தொழுகை நாள் அன்று இறைவனுக்கு சிரம் பணியாமல் தனது தொழிலும் அதன் வருமானமும் தான் முக்கியம் என நினைத்து சென்ற நமது சகோதரர்கள் நடு கடலில் சோதனைகள் வந்த பின் இறைவனை நினைகிறார்கள் -

விபத்துக்கள் ஏற்ப்படுவது அல்லாஹுவின் நாட்டம். அந்த அல்லாஹுவே இவர்களை பாதுகாத்தும் விட்டான். அல்ஹம்துலில்லாஹ்.

இனியாவது இறைவனின் அச்சத்தோடு 5 வேலை தொழுகை மற்றும் புனித ஜும்மா இவைகளை நிறைவு செய்து விட்டு தொழிலை செய்யுங்கள்... அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டுவானாக ஆமின்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:“உயிர் பிழைக்கக் கருதி வல...
posted by Muzammil (Dubai) [25 December 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15033

வல்ல அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். இனியாவது இந்த சகோதரர்கள் தொழுகையின் அவசியத்தை புரிந்து அமல் செய்ய ம் அவர்களுக்கு வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:“உயிர் பிழைக்கக் கருதி வல...
posted by Seyed Md (KSA) [25 December 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15041

இறை வணக்க தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இனி இன்ஷா அல்லாஹ் இதுபோல் நடைபெறமால் இருக்கணும். மொபைல் கருவியால் பல தொந்தரவு இருந்தாலும், இந்த கைபேசி கையில் இருந்ததால் உதவியா இருந்த்தது. தக்க சமயத்தில் இறைவன் காப்பாற்றினான்.

அல்லாஹுக்கு நன்றி செய்து நற்காரியங்கள் செய்யுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:“உயிர் பிழைக்கக் கருதி வல...
posted by Zainul Abdeen (Dubai) [25 December 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15042

வெள்ளிகிழமை காலை அதுவும் புனித ஜும்மா நேரம் மீனவர்கள் விபத்தில் சிக்கி மீண்ட செய்தியை படித்ததும் இது மாற்று மத சகோதரர்களாகதான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இந்த செய்தியை படிக்க தொடங்கினதும் இது நம்மவர்கள் என்று தெரிந்து வருத்தப்பட்டேன் (ஜும்மா தொழாமல் கடலுக்கு போனது பற்றி).

எது எப்படியோ வல்லோன் அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் மறுவாழ்வு தந்தான். இனியாவது அவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஐவேளை தொழுகையும், ஜூமா தொழுகையும் இடைவிடாது தொடர்ந்து நிறைவேற்றி வாருங்கள் அல்லாஹ் நம் யாவருக்கும் thawfeek செய்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:“உயிர் பிழைக்கக் கருதி வல...
posted by jamal (kayalpatnam) [26 December 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 15101

இனியாவது ஐந்து வேளை தொழ வேண்டும் என்றும் சில நண்பர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்கள் வசிக்கும் பகுதியில் ஒரு பள்ளிவாசல் இருக்கிறது. அவர்கள் ஐவேளை தொழவில்லை என்று யார் சொன்னது? நீங்கள் சென்று பார்த்தீர்களா?

இவ்வாறு தேவையில்லாமல் ஒரு முஃமின் மீது கெட்ட எண்ணம் வைப்பதுதான் இஸ்லாமா? சரியாகுமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. என்ன சொல்லுவது என்றே புரியவில்லை..
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [27 December 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15121

இந்த விசயமும் கொஞ்சம் விரிவாக அலசவேண்டிய பிரச்சனைதான்.

குறிப்பாக, ஞாயிறு அன்று கடலுக்கு யாரும் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள்.(பத்து௦ நாட்கள், ஒரு மாதம் என்று பெரிய படகுகளில் செல்பவர்கள் தனி). கடலிலும், கடற்கரையிலும் ஒரு ஈ, காக்கா இருக்காது. வியாபாரிகளும் வரமாட்டார்கள். இவர்கள் மட்டும் ஞாயிறு அன்று மீன் பிடிக்க செல்லுவது, அறிவுப்பூர்வமான செயல் அல்ல.

சரி, எல்லோரும் சொல்லுவது போல வெள்ளிக்கிழமை ஜும்மாஹ் தொழுகையை விட்டுவிட்டு ஏன் மீன் பிடிக்க சென்றார்கள் என்று. இந்த கிழமையும் விட்டு விடுவோம். மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.

அப்புறம், சனிக்கிழமை.. வல்ல ரஹ்மான் கூறுகிறான்

" உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி “சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று கூறினோம் " - ( அல்குர்ஆன் 2:65 ).

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் அவர்கள் கடலுக்கு செல்ல முடியாது.

என்ன சொல்லுவது என்றே புரியவில்லை..

இதற்க்கு ஒரே விடிவு, மார்க்க வல்லுனர்களிடம் கருத்து கேட்டு நடப்பது தான். அதற்க்கு முயற்சி செய்யுங்க சகோதரர்களே.

வல்ல ரஹ்மான் அனைவர்களுக்கும் நல்ல வழியை காட்டுவானாக..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. யூதர்களுக்கு சனிக்கிழமை மீன் பிடிக்க தடை!
posted by Salai.Mohamed Mohideen (USA) [27 December 2011]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 15166

நம் மீனவர்கள் படகு விபத்திலிருந்து மீட்பு தொடர்பான செய்தியில் ஒரு சிலர் அன்பர்கள் அல்குர்ஆன் 2:65 அத்தியாயத்தை கருத்தாக பதிந்திருந்தார்கள் இருந்தார்கள். அதை படித்தவுடன் இவர்கள், முஸ்லிம்களுக்கும் அல்லாஹ் சனிக்கிழமை மீன் பிடிப்பதை தடையாக்கிருக்கிறான் என்று சொல்ல வருகிறார்களா அல்லது முஸ்லிம் மீனவர்கள் வெள்ளி கிழமை ஜும்மா தொழுகையை விட்டுவிட்டு மீன் பிடிக்க சென்றால் யூதர்களை அல்லாஹ் தண்டித்ததை (2 :65) மேற்க்கோள் காட்டி இருக்கிறார்களா என எனக்குள் ஒரே குழப்பம். ஒரு வேளை இந்த அத்தியாயம் மூலம் முஸ்லிம்களுக்கும் சனிக்கிழமை மீன் பிடிக்க தடை எதாவது இருக்கிறதா என்று தேடி பார்த்தேன்.

நான் அறிந்த வரையில், யூதர்கள் இப்ராகிம் நபியின் வழிக்கு மாற்றமாக அல்லாஹ்வுக்கு இணை வைத்ததட்க்கு தண்டனையாக இறைவன் அவர்களுக்கு சனிக்கிழமை (rest day ) மீன் பிடிப்பதை தடை விதித்திருந்தான். ஆனால் அவர்கள் அக்கட்டளையை மீறினார்கள். வரம்பு மீறியவர்களை நோக்கி “சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று அல்குர்ஆன் 2:65 கூறுகிறது.

மேலும் சனிக்கிழமை மீன் பிடிக்க தடை விதித்திருந்தது யூதர்களுக்குத்தான். முஸ்லிம் களுக்கும் (உம்மி நபியின் உம்மத்துகளுக்கும்) சனிக்கிழமை மீன் பிடிப்பது தடை என்று நான் தேடிய வரையில் எங்கும் காணவில்லை.

மீனவர்கள் மற்றும் மீன்பிடித்தல் சம்பந்தமான செய்தியாக இருப்பதால் (2 :65) வசனம் பயன்படுத்த பட்டுள்ளது என்று நினைக்கிறேன். ஜும்மா உடைய தொழுகை விட்டால் (யாராக இருந்தாலும்) ஏற்படும் தீமைக்கு, அல்குர்ஆன்(2 :65) மேற்கோள் விட்டதற்கும் சம்பந்தம் இருப்பதாக எனக்கு தோணவில்லை.

ஜும்மா உடைய நாளில் தொழுகைக்கான நேரத்தில் பள்ளிக்கு விரைந்து செல்வது நம் எல்லோருக்கும் (மீனவர்கள் உட்பட) இறைவன் பின்வரும் வசனம் மூலம் கூறுகிறான்.

ஈமான் கொண்டவர்களே! ஜும்மா உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும் (62 :9)

பின்னர், (ஜும்மா ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள், அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள் (62 :10)

மற்ற படி "வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் அவர்கள் கடலுக்கு செல்ல முடியாது" அல்லது முஸ்லிம் களுக்கும் சனிக்கிழமை மீன் பிடிப்பது தடை என்றெல்லாம் இருப்பதாக எனக்கு தெரிய வில்லை. ஒரு வேளை விபரம் அறிந்த அன்பர்கள் நம் எல்லோருக்கும் தெரியபடுத்தலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
தல கால் புரியல... (?!)  (27/12/2011) [Views - 7110; Comments - 27]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved