Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:53:20 PM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7550
#KOTW7550
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, நவம்பர் 11, 2011
‘மெகா‘ நடத்திய “காயல்பட்டினம் நகர்மன்றம் அடுத்த 5 ஆண்டுகளில்” விழிப்புணர்வு பொதுக்கூட்டம்! பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5563 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 8)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பில், காயல்பட்டினம் நகர பொதுமக்களுக்கு, நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, “காயல்பட்டினம் நகர்மன்றம் அடுத்த 5 ஆண்டுகளில்...” என்ற தலைப்பில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் 10.11.2011 வியாழக்கிழமையன்று இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, ‘மெகா‘ செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பில், காயல்பட்டினம் நகர பொதுமக்களுக்கு, நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, “காயல்பட்டினம் நகர்மன்றம் அடுத்த 5 ஆண்டுகளில்...” என்ற தலைப்பில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் 10.11.2011 வியாழக்கிழமையன்று இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டம், ஆண்களுக்கு தனி மேடை, பெண்களுக்கு தனி மேடை என இரண்டு மேடைகள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டது.



ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். வரவேற்புரையைத் தொடர்ந்து, மெகா செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர், “மெகா செய்தது - செய்வது - செய்யவிருப்பது” என்ற தலைப்பில் உரையாற்றினார்.



அதனைத் தொடர்ந்து, நகர்மன்றத்தின் அன்றாட நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய பல தகவல்களை உள்ளடக்கி, மெகாவின் உள்ளூர் செயற்குழு உறுப்பினர் ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் சிறப்புரையாற்றினார்.





பின்னர், அண்மையில் நடைபெற்று முடிந்த நகர்மன்றத் தேர்தலையொட்டி மெகா சார்பில் நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் மூவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அப்பரிசுகளை, ஆண்களுக்கு ஆண்கள் பகுதி மேடையிலிருந்து மெகாவின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் “மண்ணின் மைந்தன்” சாளை நவாஸ் வழங்கினார்.



பெண்களுக்கு, இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியின் இயக்குனருமான ஆபிதா, பெண்கள் பகுதி மேடையிலிருந்தவாறு வழங்கியதோடு சிறப்புரையாற்றினார்.



அவரது உரை அசைபட உருப்பெருக்கி மூலம், ஆண்கள் பகுதியில் விரிதிரையில் காண்பிக்கப்பட்டது.





நிறைவாக, ஹாஃபிழ் எம்.ஏ.சி.ஈஸா ஷஃபீக் நன்றி கூற, ஹாஜி காழீ நூஹ் துஆவுக்குப் பின், துஆ - ஸலவாத் - கஃப்ஃபாராவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. நிகழ்ச்சிகளை ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் நெறிப்படுத்தினார்.



இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து, பெருநாளன்று மாலையில் காயல்பட்டினம் கடற்கரைக்கு வந்த பொதுமக்களுக்கும், தெருக்களில் வீடு வீடாகவும் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டிருந்தது.

நகரின் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநல அமைப்புகளுக்கு உறைகளில் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. காயல்பட்டினம் நகர்மன்றத் துணைத்தலைவர் உள்ளிட்ட 18 வார்டுகளின் நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் சிறப்பு அழைப்பு உறைகளில் வைத்து கொடுக்கப்பட்டிருந்தது.

அழைப்பை ஏற்று,
01ஆவது வார்டு உறுப்பினர் ஹாஜி ஏ.லுக்மான்,
04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா,
07ஆவது வார்டு உறுப்பினர் அந்தோணி,
08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய்,
09ஆவது வார்டு உறுப்பினர் ஹைரிய்யா,

10ஆவது வார்டு உறுப்பினர் பத்ருல் ஹக்,
13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன்,
14ஆவது வார்டு உறுப்பினர் பாக்கியஷீலா
ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பார்வையாளர் பகுதியில் முதல் வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.





அதுபோல, நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். துவக்கம் முதல் இறுதி வரை முழு அமைதியுடன் அவர்கள் பேச்சுக்களை அவதானித்தமை குறிப்பிடத்தக்கது.



























நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ‘மெகா‘ செய்யித் இப்றாஹீம், கும்பாரி ஸலீம் உள்ளிட்ட ஏற்பாட்டுக் குழுவினர் செய்திருந்தனர்.


இவ்வாறு, ‘மெகா‘ செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.

படங்கள்:
‘மெகா‘ செய்யித் இப்றாஹீம்,
சொளுக்கார் தெரு, காயல்பட்டினம்.


கூட்டத்தில் ஆற்றப்பட்ட விழிப்புணர்வுரைகளின் எழுத்து மற்றும் அசைபட தொகுப்புகள் விரைவில் வெளியிடப்படும்.

செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. (11.11..2011 - 23:05hrs)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:‘மெகா‘ நடத்திய “காயல்பட்ட...
posted by Seyed Abdur Rahman (BENGALURE) [11 November 2011]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 13242

இது மெகா வா அல்லது குருவித்துறை பள்ளி முஹல்லாவாண்டு doubta இருக்கு

மேடையில் 75 % குருவித்துறை முஹல்லாவாசிகளாதான் இருக்கு. சந்தோசமே....... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:‘மெகா‘ நடத்திவைத்த (ஜேஜே) வி உ பொ கூட்டம்!..
posted by OMER ANAS (DOHA QATAR.) [11 November 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 13243

அபாரமாக் நடைபெற்றது பொதுக்கூட்டம்.! மக்கள் கூட்டம் இன்றி! ஆக்ரோசமான பேச்சு! மக்கள் அமைதியான தூக்கம்! வெற்றிடங்கள் இருக்கைகளில் மட்டும் இன்றி மக்கள் மனங்களிலும்!

கேட்டால்தான் கிடைககும் பரிசு! நாங்கள் கேட்காமலேயே கிடைக்கும் அறிவுரை!

உண்மையினை சொல்லுங்கள் வீராப்போடு சொல்லுங்கள் குடாக்& விளக்கு S M A ! ஆனாலும் ஜால்ராக்களுக்கு விளக்கம் சொல்லாதீர்கள்! ஐந்து வருடம் இல்லை ஆயுள் முழுக்க MEGA வரட்டும்! வாழ்த்துவோம்! ஆனாலும், K V A T ஹபீப் அவர்கள் சொன்ன மாதிரி நல்ல செய்திக்காக இன்னும் ஐந்து வருடம் காத்திருப்போம் நல்ல செய்தி வரும் என்று!

வரும் ஆனா வராது!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:‘மெகா‘ நடத்திய “காயல்பட்ட...
posted by mackie noohuthambi (kayalpatnam) [11 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13244

நமது நகர்மன்றதுக்கு இவ்வளவு வருமானமா?
நம்மவர்கள் கொடுக்கவேண்டிய தண்ணீர் வரி இவ்வளவா?

அரசுக்கு செலுத்தவேண்டிய பணத்தை செலுத்தாமல் தண்ணீர் குடித்தால் அது மார்க்கப்படி ஏற்றுக்கொள்ளக்கூடியதா? அதுதான் அடிப்படை குற்றம். இப்படியானால் இரண்டாவது லைன் எப்படி கிடைக்கும்.

அல்லாஹ்வுக்கும் அவனது ரசூலுக்கும் கட்டுப்படுங்கள், ஆட்சியிலுள்ள அதிகாரிகளுக்கும் கட்டுப்படுங்கள் என்பதை நாம் காற்றில் பறக்கவிட்டதால் ஆட்சியாளர்கள் நம்மை பராக்கு காட்டுகிறார்கள்.

நகர்மன்றதது ஊழல்கள், ஒரு வருடத்துக்கு நம் மன்றத்துக்கு கிடைக்கும் மத்திய மாநில அரசு உதவிகள்... ரிபாயிக்கு இவ்வளவு செய்திகள் எங்கிருந்து கிடைத்தது. முன்னாள் நகரமன்ற உறுப்பினர் திருதுவராஜ் கூட இவ்வளவு வேட்டைகள்பற்றி சொல்லவில்லையே? தயவு செய்து உங்கள் பேச்சை மட்டும் ஆடியோ Casette ஆகவும் CD ஆகவும் பதிவு செய்து மலிவு விலையில் மக்களுக்கு கிடைக்க செய்யுங்கள்.

இந்த குழம்பிய குட்டையில் சகோதரி ஆபிதா எப்படி கரை எறுவார்களோ? மங்கை சூதகமானால் கங்கையில் நீராடலாம், கங்கை சூதகமானால் எங்கே நீராடுவது? வேலிகளே பயிரை மேய்ந்தால்? 18 உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் மாற்றங்கள் சாத்தியமாகும் அல்லது இந்த மெகா போன்ற விழிப்புணர்வு இயக்கங்கள் தொடர்ந்து கண்காணிதுக்கொண்டு அவ்வப்போது கூட்டம் போட்டு மக்களுக்கு ஊசி போட்டுக் கொண்டிருகவேண்டும்?

அதற்கு நிர்வாக செலவுக்கு பணம் வேண்டும். இப்போதுள்ள மக்கள் எழுச்சியில் நீங்கள் அதை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும். நல்ல முயற்சிகளுக்கு அல்லாஹ் துணைநிர்பான். யாரையும் பகைதுக்கொள்ள தேவை இல்லை, யாரையும் உயர்த்தி பேசதேவை இல்லை. ஆனாலும் பெரியவர்கள் அனுபவசாலிகள் ஆலோசனைகளை உதாசீனம் செய்யாதீர்கள். வாழ்த்துக்கள்.

மக்கி நூஹுதம்பி

பெரியாரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே என்று சங்கத்தமிழ் சொல்கிறது. தொழில் அதிபர் பற்றி பேசினீர்கள், ஆதாரம் இல்லை என்றும் சொல்கிறீர்கள். அப்படியானால் அந்த விவாதத்தை தவிர்த்திருக்கலாம். ஆனால் பயனுள்ள செய்திகள் நிறைய கிடைத்தது. தொடர்ந்து இப்படி கூட்டங்கள் நடத்துங்கள்.

தனியொரு மனிதனாக இருந்து சாதித்தவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். அவர்கள் மூலதனம் சத்தியம் ஒன்றே. நீங்கள் அந்த வழியில் நடை போட்டால் வெற்றி நிச்சயம். NASRUM MINALLAAHI VA FATHUN QAREEB என்ற இறைவசனம் சத்தியவான்களுக்கே. உண்மையான மூமின்களுக்கே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அவரின் நிர்வாகம் சிறந்து விளங்கி நமது ஊர் மக்கள் நல்ல பல பயன்களை பெற வாழ்த்துக்கள்...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [11 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13245

ஊரில் மிக பெரிய ஒரு விழிப்புணர்வுவை இந்த மெகாவின் பொதுக்கூட்டம் வாய்லாக ஏற்படுத்தி விட்டார்கள்..

நமது நகர்மன்றத்தில் நான் இது வரை அறிந்திராத ஹராமான காரியங்கள் செயல்களை (நமது வரி பணத்தை அங்குள்ள ஊழியர்கள் வட்டிக்கு விடுவது இன்னும் பல முறைகேடுகள்) மேடையில் வெளிச்சம் போட்டு விழிப்புணர்வு செய்தார்கள்...

இந்த விழிப்புணர்வு மூலம் பல ஆயிரம் நபர்கள் நமது நகரமன்ற தவறுகளை அறிய முடிந்தது..

இப்போது புதியதாக பதவி வகிக்கும் நகரமன்ற தலைவர் சகோதரி ஆபிதா அவர்களுக்கு அங்குள்ள பல தவறுகளை சுட்டி காட்டி அதை உங்கள் கவனத்தில் எடுத்து சரி செய்யும்படி மெகா பொதுகூட்டத்தில் வெளிபடையாக கேட்டுகொண்டது அனைவர்களின் பாராட்டுக்குரியது...

பின்பு நகரமன்ற தலைவர் சகோதரி ஆபிதா அவர்கள் தனது நிர்வாகம் வெளிப்படையாகவே இருக்கும் என பகிரங்கமாக மெகா பொதுகூட்டத்தில் அறிவித்தார்...

தலைவரை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்

அவரின் நிர்வாகம் சிறந்து விளங்கி நமது ஊர் மக்களின் வரி பணம் நல்ல பல பயன்களை பெற வாழ்த்துக்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:‘மெகா‘ நடத்திய “காயல்பட்ட...
posted by suaidiya buhari (chennai) [11 November 2011]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 13247

assalamualikam

அருமையான நிகழ்ச்சி. முதலில் இதை organize பண்ணிய மெகா groupகு நன்றி தெரிவித்து கொள்கின்றேன். வார்டு மெம்பெர் அனைவரும் வரவில்லையா?

meeting ill என்ன சொன்னார்கள் என்பதை தெளிவாக எழுதவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:‘மெகா‘ நடத்திய “காயல்பட்ட...
posted by mohmedyounus (Trivandram) [11 November 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 13248

"மெகா" கூட்டம் மிகச்சிறப்பாக நடந்ததாக கேள்விப்பட்டோம். போட்டாவை பார்த்தால் ஒரு பெரிய அரசியல்வாதிக்கு வருகின்ற கூட்டத்தின் அளவு உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

"மெகா" பணி இதோடு நின்று விடாமல் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுகிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:‘மெகா‘ நடத்திய “காயல்பட்ட...
posted by ABU HURAIRA (ABU DHABI) [11 November 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13251

மெகா நடத்திய கூட்டம் நமது இணைய தலத்தில் (video)வெளிஇட்டால், நாங்களும் நகராட்சிள் நடந்தது என்ன என்று தெரிந்து கொள்ளலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:‘மெகா‘ நடத்திய “காயல்பட்ட...
posted by k.seyed ismail presidential flight (abu dhabi) [11 November 2011]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13254

அஸ்ஸலாமு அழைக்கும் மாசாஹ் அல்லாஹ் மெகா க்கு பாராட்டுகள்

நல்லுள்ளம் கொண்ட பொதுமக்கள் நல்லுள்ளம் கொண்ட சில வார்ட் உறுப்பினர் எங்களது பாராட்டுகள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:‘மெகா‘ நடத்திய “காயல்பட்ட...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [12 November 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13261

MEGA நடத்திய இந்த விழிப்புணர்வு பொதுக்கூட்டம் மிகவும் சிறப்பாக நடந்தமைக்கு வல்ல ரஹ்மானுக்கும், மற்றும் இதற்காக உழைத்த அன்பு நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.

இவ்வளவு அதிகமான மக்கள் இந்த கூட்டத்திற்கு வந்த காரணம்,

- நட்சதிர பேச்சாளர்கள் யாரும் கலந்துகொண்டார்களா?
- பெரிய அரசியல் கட்சி நடத்திய கூட்டமா?
- எந்த பிரபலமான ஆட்களும் கலந்துகொண்டார்களா?
- காசு கொடுத்து அழைத்து வரப்பட்டவர்களா?

இல்லையே. அப்போ வேலை வெட்டி இல்லாமால் வெட்டியானுடன் கதை பேச வந்த கூட்டமா..

ஏதோ, ஒரு சில நல்ல விஷயங்கள் சொல்லுவார்கள், நமக்கு தெரியாத ஒரு சில நல்ல செய்திகளை கேட்கலாம், இதனால் நமக்கு ஒரு பிரயோசனம் கிடைத்தால் கூட போதும் என்று தான் இவ்வளவு மக்களும் பங்கேற்று, இரவு பத்து அரை மணி வரை கலந்துகொண்டார்கள். மக்கள் என்னமோ விவரமாக தான் இருக்கின்றார்கள்.

- கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

- பரிசு பெற்ற ஆறு பெண்களில், ஐந்து பெண்களுடைய பெயர் "பாத்திமா"...என்ன ஒற்றுமை.

(நான் பல பெண்களுக்கான போட்டிகளை அவதானித்ததில், பரிசு பெறுபவர்களில் அதிகமானவர்கள் "பாத்திமா" என்ற பெயரை கொண்டவர்கள் தான்).

- பரிசு பெற்றவர்களில் நான்கு நபர்கள், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். (எங்க குடும்பம் தான்..,அய்யய்யோ ..நான் ஒன்னும் எழுதி கொடுக்கவில்லைங்க..)

யாராவது ஊருக்கு ஒரு நன்மை செய்தாலும், அவர்களை பாராட்டுவதில் நான் முதலிடம் இருக்கவே விரும்புவேன். அது மாதிரி தான் இந்த MEGA வின் சேவைகளை பாராட்டுவதில் நான் பெருமைபடுகிறேன்.

தொடரட்டும் உங்களின் சேவைகள்.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:‘மெகா‘ நடத்திய “காயல்பட்ட...
posted by SMS, NOOHU (tanzania) [12 November 2011]
IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 13264

மெகா‘ நடத்திய பொதுக்கூட்டதை பார்த்ததில் மிக சந்தோசம், இது போன்ற கூட்டம் 3 மாததிற்கு ஒரு முறை நடத்தினால் நன்றாக இருக்கும், ஆனைத்து மக்களுக்கும் ஊரில் என்ன நடக்குது என்று அறிய நன்றாக இருக்கும், மெகாவை சார்ந்த அனைவர்க்கும் அன்பான நன்றி,

குறிப்பாக; மெகாவில் உள்ள எனது நண்பர்களுக்கு பாராட்டுகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:‘மெகா‘ நடத்திய “காயல்பட்ட...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATINAM) [12 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13274

"மெகா" நடத்திய கூட்டம் மிக சிறப்பாக இருந்தது. நல்ல பல கருத்துக்கள் அலசப்பட்டன. நமது நகராட்சியின் இன்றைய நிலை என்ன? எனபது குறித்து பேசிய சகோ. ஹாமீத் ரிபாயி சொன்ன புள்ளி விவரங்கள் எல்லாமே புதிதாக இருந்தது.

கவிமகன் காதர் அரசியல் பேசியதை தவிர்த்து இருக்கலாம். "ஒரு மாபெரும் ஆன்மா மனித குலத்தை ஒன்றுக்கு எதிராக ஓன்று என இரண்டாக பிரிக்குமானால் நான் எப்போதும் மக்களுடனே இருப்பேன் " என மாபெரும் புரட்சியாளன் சேகுவேரா சொன்னதைப்போல நீங்களும் என்றைக்கும் மக்கள் பக்கம் இருங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. நிர்வாகத்தினரின் அலட்சியப் போக்கே! :
posted by N.S.E. மஹ்மூது (KAYALPATNAM ) [12 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13279

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, நடைபெற்ற கூட்டம் நன்றாகவே இருந்தது - அதை ஏற்பாடு செய்த மெகா சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.

தேவையற்ற சில பேச்சுக்களை தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் - இன்ஷா அல்லாஹ்! வருங்காலங்களில் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

கூட்ட செயல்பாடுகளில் இளைஞர்களுக்கும் - முதியவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை காண முடிந்தது.
------------------------------------------
செயல்கள் யாவும் எண்ணம் படியே! :

விழிப்புணர்வு பெறவேண்டும் என்று விரும்பியவர்களுக்கு இந்த கூட்டத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்திக்கொள்ள வழியும் - வாய்ப்பும் கிடைத்து பயனளித்திருக்கும்.

விமர்சனம் மட்டுமே செய்வோம் என்று விரும்புபவர்களுக்கு ஏதாவது விமர்சன வாசகங்கள் மட்டுமே எட்டியிருக்கும் அது அவர்களுடைய எண்ணத்தின் விளைவாகும்.

மொத்தத்தில் எந்த எண்ணத்தில் இந்த கூட்டத்திற்கு சென்றார்களோ / பார்த்தார்களோ அதை அவர்கள் நிச்சயமாக பெற்றுக் கொண்டார்கள் - செயல்கள் யாவும் அவர்கள் எண்ணம் படியே!.
------------------------------------------
தவறுகளை... இல்லை... இல்லை... தப்புகளை :

நமது நகராட்சியின் தற்போதைய நடவடிக்கையை படம் பிடித்துக்காட்டினார்கள் வார்த்தைகளால் - அவர்கள் சொல்ல வேண்டியது எவ்வளவோ இருக்க ஒரு சிறு பகுதியை மட்டுமே வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இன்னும் நிறைய குறைகள் உண்டென்றாலும் புதியவர்கள் கலக்கமின்றி அவர்கள் பணியை தொடரட்டுமே என்ற எண்ணத்திலே இப்போதைக்கு விட்டு வைத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

நிர்வாகத்திலே உள்ளவர்கள் அவர்களாகவே திருந்தி பழைய தவறுகளை........... இல்லை......... இல்லை......... தப்புகளை செய்யாதிருந்தால் அது அவர்களுக்கும் நல்லது நமது நகர் மன்றத்திற்கும் நல்லது.
--------------------------------------------
நிர்வாகத்தினரின் அலட்சியப் போக்கே! :

குடிநீர் விநியோகப் பற்றாக்குறைக்கு காரணங்கள் கூறப்பட்டன
..................
தெரு விளக்குகள் எரியாததற்கு காரணங்கள் கூறப்பட்டன
...................
குப்பைகள் முழுமையும் அள்ள முடியாததற்கு காரணங்கள் கூறப்பட்டன ..............

இவைகளுக்கு கூறப்பட்ட காரணங்களில் ஏதாவது மத்திய அரசையோ, மாநில அரசையோ நாடி செய்யவேண்டியதாக உள்ளதா?

இல்லை ஏதாவது அரசு துறைகளிடம் போய் அவைகளுக்காக ஸ்பெஷல் அனுமதியை நாட வேண்டியது இருந்ததா ? அப்படி ஒன்றும் இல்லையே!

எல்லாத்திற்கும் முக்கிய காரணம் முந்திய நகர்மன்ற நிர்வாகத்தினரின் அலட்சியப் போக்கே!

இலஞ்சம் வாங்குவதிலேயே குறியாக இருந்த அங்கத்தினர்களும், அலுவலர்களுமே முழுக்காரணம்!!

மற்றபடி நம்மிடம் பணம் இல்லாமல் இல்லை - பணம் வேண்டியமட்டும் இருக்கின்றது அதை முறையாக செலுத்தி குடிநீரை விநியோகிக்க - மின் விளக்குகளை எரியவிட - குப்பைகள் முழுவதையும் அள்ளி - நிர்வாகத்தை சீராக நடத்த நேரமில்லை.

உண்மையாக உழைப்பவர்களுக்குதான் நேரம் நிறைய இருக்கும் - இலஞ்சத்தையே தொழிலாக கொண்டவர்களுக்கு ஏது நேரம் ???
-------------------------------------------------
கவனக்குறைவான செயல்பாடுகளே! ஊழல்களே!! :

பணியாளர்களாக வேலைக்கு சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வேலைக்கு வராமல் சம்பளம் மட்டும் வாங்குவதும் - சிலர் வெளியிலே வாகனம் ஓட்டுனர்களாக பணி செய்து கொண்டு நகர் மன்றத்திலே சம்பளம் வாங்குவதாகவும் புள்ளி விவரத்துடன் கூறப்பட்டது.

இந்த மாதிரி செய்வது யாருக்கும் தெரியாமல் நடக்குமா? அதுவும் அவர்களுக்கு மேற்பார்வையாளராக உள்ளவருக்கு நிச்சயமாக தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

ஏதோ ஓரிருநாள் என்றால் தெரியாமல் போக வாய்ப்புண்டு! ஆனால் இது நடப்பதோ மாத கணக்கில்! வருட கணக்கில் அல்லவா ? எங்கனம் தெரியாமல் போகும்.

மேலும் தினமும் வசூலாகும் பணத்தை வங்கியில் அன்றைய தினமே செலுத்தாமல் அந்த பணத்தை வைத்து சம்பந்தப்பட்டவர்கள் தொழில் செய்வதும் அம்பலமாகி இருக்கிறது - இதுவும் ஓரிரு நாள் நடந்த சம்பவமல்ல.

இவைகளுக்கெல்லாம் காரணம் நமது நகர்மன்ற அங்கத்தினர்களின் கவனக்குறைவான செயல்பாடுகளே! ஊழல்களே!!
----------------------------------------------
மக்களே!

" தகவல் அறியும் உரிமை சட்டம் " பற்றியும் மேலும் விழிப்புணர்வு ஏற்படக்கூடிய பல விசயங்களையும் கூட்டத்திலே பகிர்ந்துக்கொண்டார்கள் - உண்மையிலேயே அவைகள் எல்லாம் நம் மக்களுக்கு பயனளிக்க கூடியவைகளே.

நம் நகர் மன்றம் நீதியாக , நேர்மையாக நடைபெற வேண்டுமானால் நம் நகர் மன்ற அங்கத்தினர்கள் நேர்மையானவர்களாக இருந்தால் மட்டும் போதாது நாமும் நேர்மையானவர்களாக நடந்து காட்டுவதுடன் அவர்களுக்கு, எல்லா நல்ல விசயங்களிலும் ஒத்துழைக்க வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் நகர் மன்றம் சிறப்புடன் இயங்க நம் மக்கள் அனைவரும் அவர்களுடன் நல்ல விசயங்களில் ஒத்துழைக்க கிருபை செய்வானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:‘மெகா‘ நடத்திய “காயல்பட்ட...
posted by P.S.ABDUL KADER (jeddah) [13 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13296

அஸ்ஸலாமு அழைக்கும்

மெகா சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்

நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை நமதூரில் 6 மாததிற்கு ஒரு முறை நடத்தினால் நன்றாக இருக்கும், நமது ஊரில் எல்லா மக்களுக்கும் காயல் பஞ்சயேட்தில் என்ன நடக்குது என்று உணர்வர்.

உறுப்பினர் அனுஹுமுறை நடத்தைகளும் அறியலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. “மெகா” ஓர் சின்னஞ் சிறிய அடைகல்.
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா.) [13 November 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13323

“மெகா” ஓர் சின்னஞ் சிறிய அடைகல்.இந்த அடைகல்தான் நெம்புகோலுக்குத் துனையாய் இருந்து ஒர் மிகப் பெரிய பாறாங்கல்லைத் தூக்கி நகர்த்தியது.மூர்த்தி சிறுசா இருந்தாலும் கீர்த்தி பெருசு,கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது,வண்டி ஓட சிறிய அச்சாணி தான் தேவை,எப்படி வேணாலும் வெச்சுக்கலாங்க...!!!ஆக மொத்தத்துலெ மெகா,ஒரு மஹா வேலையை செஞ்சு முடிச்சிருக்கு! வாழ்த்துக்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. மெகா வாங்காது ஜகா
posted by சாளை நவாஸ் (singapore) [17 November 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 13455

விழிப்புணர்வு பொதுக்கூட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள் சில, துஆக்கள் பல. பள்ளிவாயில்கள், ரோட்டோரங்கள், கடற்கரை என்று நான் போன இடங்களில் எல்லாம் பெரியவர்கள் என்னை கூப்பிட்டு பாராட்டினார்கள், இன்னும் இதை போன்று பல பொதுக்கூட்டம் நடத்தும்மாறு அறிவுறிதினார்கள். ஒரு பெரியவர் என் கையை பிடித்து ஆனந்த மிகுதியால் கண்ணீர் விட்டு சொன்னதை வாழ்நாள் சாதனையாக மெகா உக்கு அர்பணிக்கின்றேன்.

மெகா அணியின் நட்சத்திர பேச்சாளர் ஹாஜி ஹமீத் ரிபாய் அவர்களே பெருமளவில் பாராட்டு பெற்றார். சென்னை வந்த போதும் கூட இரயில் நிலையத்தில் கூட ஒருவர் கூப்பிட்டு சொன்னார்.

பொதுகூட்டத்தில் பிடித்த இரண்டு விஷயங்கள்:

1 . கூட்டம் நடக்க சில நிமிடங்கள் முன்பு 13 ஆம் வார்ட் உறுப்பினர் ஜனாப் சம்சுதீன் காக்கா அவர்கள் தன் சொந்த செலவில் ஆட்களை வைத்து குப்பைகளை அள்ளிக்கொண்டு இருந்தார். (நாங்கள் அதை செய்ய மறந்துவிட்டோம்).

2 . கூட்டம் முழுவதும் ஒன்றாம் வார்டு உறுப்பினர் ஜனாப் லுக்மான் காக்கா குறிப்பு எடுத்துக்கொண்டே இருந்தார். இவர்களை மாதிரி நன் மக்களை இந்த நகர்மன்றம் எதிர்பார்க்கிறது.

மெகா காயல்பட்டினம் வரலாற்றில் ஒரு மைல் கல் .

- மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved