Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:01:20 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6690
#KOTW6690
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுலை 11, 2011
புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்து முதலமைச்சர் அறிக்கை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4085 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற பின் - அ.தி.மு.க. அரசு நிறுத்தி வைத்த முந்தைய ஆட்சியின் திட்டங்களில் ஒன்று கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டம். இத்திட்டத்தை மாற்றி அமைத்து, புதிய வடிவில் அமல்படுத்த இருப்பதாக தமிழக முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஏழை, எளிய மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, அவர்களின் குடும்பங்களில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் பல திட்டங்களை எனது அரசு செயல்படுத்தி வருகிறது. அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியினால் மட்டுமே வறுமையை முழுமையாக ஒழிக்க முடியும் என்ற உண்மையை எனது அரசு நன்கு உணர்ந்துள்ளது. இதனை நிறைவேற்றும் முகத்தான், ஏழை, எளிய குடும்பங்களில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் திட்டங்களைச் செயல்படுத்தி, அந்தக் குடும்பங்கள் வறுமையின் பிடியிலிருந்து விடுபடுவதற்கான நடவடிக்கைகளை எனது அரசு எடுத்து வருகிறது.

ஏழை, எளிய மக்கள், தங்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்காக அளிக்கப்படும் சலுகைகளை மட்டும் சார்ந்து இருக்காமல், தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் பொருளாதார வளர்ச்சியை பெற வேண்டும் என்ற திடமான குறிக்கோளை எனது அரசு கொண்டுள்ளது.

ஏழை, எளிய மக்களுக்கு பயன் தரக்கூடிய மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே நேரத்தில், தமிழகத்தில் பெருமளவில் முதலீடு செய்யும்வகையில், தொழில் முனைவர்களை ஈர்ப்பதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான திட்டங்களை எனது அரசு செயல்படுத்தி தமிழகத்தை மீண்டும் வளமான வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும்.

21 ஆம் நூற்றாண்டு அறிவுசார் மனிதவளத்தை நம்பியே உள்ளதால், எனது அரசு மனிதவள மேம்பாட்டிற்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. மனிதவள மேம்பாட்டில் முக்கியக் காரணிகளாக விளங்குவது தரமான கல்வி மற்றும் சுகாதாரம் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அடிப்படையில், மாநிலத்தில் சுகாதாரமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் எனில், அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கப்பட வேண்டும். ஆனால் தற்போதுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மக்களின் சுகாதாரத் தேவைகளை முழுமையாக நிறைவு செய்யத்தக்க வகையில் இல்லை. மேலும், இந்த காப்பீட்டுத் திட்டம், தனியார் காப்பீட்டு நிறுவனங்களும், தனியார் மருத்துவமனைகளும் வளர்ச்சி அடையவே வழிவகுத்தது. எனவே தான், அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக்கூடிய வகையில் ஒரு புதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்தி அனைவரும் மருத்துவ வசதி பெறுவதை உறுதி செய்யும் என்று 2011-12 ஆம் ஆண்டுக்கான மேதகு ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் முழுமையான புதிய காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த நான் ஆணையிட்டுள்ளேன். தற்போதைய காப்பீட்டுத் திட்டம் 2011, ஜுலை மாதம் 5 ஆம் நாள் உடன் முடிவடைந்தது. எனது அரசால் புதிதாக தொடங்கப்பட இருக்கும் காப்பீட்டுத் திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் வரவேற்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புதிய காப்பீட்டுத் திட்டம் பின்வருவனவற்றை உள்ளடக்கியதாக அமையும் :-

1. முந்தைய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு லட்சம் வீதம் வழங்கப்பட்டு வந்த அதிகபட்ச மருத்துவச் செலவு, இந்த புதியத் திட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும் மற்றும் குறிப்பிட்ட சில 1.50 லட்சம் ரூபாய் ரூபாய் வரை வரையிலும் அனுமதிக்கப்படும். அதாவது, நான்கு வருடங்களில் ஒரு குடும்பம் அதிகப்பட்சமாக 4 லட்சம் ரூபாய்க்கான மருத்துவ செலவினை பெற இயலும்.

2. முந்தைய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டிருந்த 642 வகையான சிகிச்சை முறைகள் மாற்றி அமைக்கப்பட்டு, தற்போது மருத்துவ மேலாண்மை மற்றும் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகளையும் சேர்த்து, இந்த புதிய காப்பீட்டு திட்டத்தின் கீழ் 950 வகையான சிகிச்சை முறைகள் அனுமதிக்கப்படும்.

3. சிகிச்சை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளும் காப்பீட்டுக்காக வரையறுக்கப்பட்ட தொகையில் அடங்கும். மேலும் அரசு மருத்துவமனைகளின் மூலமாகவோ, மருத்துவ முகாம்களின் மூலமாகவோ பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு பரிசோதனைக்காக செலவிடப்பட்ட தொகை, அறுவை சிகிச்சை தேவைப்படாத பட்சத்திலும் காப்பீட்டுத் தொகையில் அடங்கும் வகையில் வழிவகை செய்யப்படும். இவ்வாறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளாத இனங்களில், ஏற்கெனவே இருந்த காப்பீட்டுத் திட்டத்தில், பரிசோதனைச் செலவு வழங்குவதற்கு வழிவகை செய்யப்படவில்லை.

4. நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் நாளில் இருந்து ஐந்து நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைக் கட்டணம் மற்றும் இதர செலவினங்களுக்கான தொகையும் இத்திட்டத்தில் வழங்கப்படும். இந்த வகையிலான கட்டணங்களை பெறுவதற்கு முந்தைய காப்பீட்டுத் திட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை.

5. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தொடர் சிகிச்சை தேவைப்படும் சில வகை நோய்களுக்கு, வரையறுக்கப்பட்ட தொகை தனியாக நிர்ணயித்து வழங்கப்படும். இதுவும் முந்தைய திட்டத்தில் வழிவகை செய்யப்படாத ஒன்றாகும்.

6. அரசு மருத்துவமனைகள் மற்றும் அதன் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், தற்போதுள்ள முறைகளை மாற்றி, சிகிச்சைக்காக வரையறுக்கப்பட்ட தொகையை தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுவது போல் அரசு மருத்துவமனைகளுக்கும் முழுமையாக வழங்கப்படும். மேலும், சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே அனுமதிக்கப்படும்.

7. இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படும் அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்திற்கென அனைத்து வசதிகளுடன் கூடிய தனி / சிறப்புப் பகுதிகள் அமைக்கப்படும். இதனால் இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளை அதிக அளவில் நாடி வருவதற்குரிய சூழ்நிலை உருவாகும்.

இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் புதிய காப்பீட்டுத் திட்டம் தொடங்குவதற்கு முன் இடைப்பட்ட காலத்தில் உடனடியாக உயிர் காப்பதற்கான சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு தற்போதுள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ள மருத்துவச் செலவில் சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்படும். இவ்வாறு அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கான மருத்துவக் கட்டணத்தை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு அரசே நேரடியாக வழங்கும்.

இவ்வாறு, இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் தமிழக மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி கிடைப்பதை எனது அரசு உறுதி செய்யும்.

ஜெ ஜெயலலிதா
தமிழக முதலமைச்சர்


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
தமிழக அரசு செய்தி துறை


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. புதிய குத்தி കുത്തി....... பழைய சரக்கு.....!
posted by zubair (riyadh) [11 July 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5915

புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள மருத்துவ காப்பீட்டு திட்டம்........ கலைஞர் காப்பீட்டு திட்டம் தான்...... பழைய சரக்கில் கொஞ்சம் வீரியம் சேர்த்து புதிய பாட்டலில் அடைக்க முயற்ச்சி. என்றாலும் அதை அம்மா... தொடர்ந்ததுக்கு வாழ்த்துக்கள்.

ஆனால் ஒரு விஷயம்..... இப்படி கண்டமாதிரி சலுகைகள் வழங்கியதால்தான். கலைஞர் ஆட்சி 2G என்ற கல்லால கைவைக்க வேண்டியது போல் உள்ள நிலை. வரவு எட்டணா.... செலவு பத்தணாவாக ஆகிவிட கூடாது.

அம்மா.......! உங்களுக்கு என்ன திட்டம்.....? 3G யை கைப்பற்ற திட்டம் இல்லையே.......?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. முறையான,முழுமையான காப்பீட்டுத்திட்டம்....
posted by kavimagan (dubai) [12 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5925

முதலில் பதிவு செய்ய வேண்டிய விஷயம், இஷ்டம் போல சலுகைகளை அறிவித்துவிட்டு 2G யிலும், 3G யிலும் கைவைக்க ஜெயலலிதா ஒன்றும்,கருனாநிதியைப்போல நிர்வாகத்திறன் அற்றவர் அல்ல.கடந்த இரண்டுமுறை ஆட்சியைவிட்டு அகற்றப்படும்போது, அரசுகஜானாவில் கொஞ்சமேனும் பணத்தை மிச்சம் வைத்துவிட்டு சென்றவர் ஜெயலலிதா.ஆனால்,இரண்டுமுறை ஆட்சியை இழந்தபோது பல லட்சம் கோடிகளுக்கு தமிழக மக்களை கடனாளியாக்கி சென்றவர் கருணாநிதி.

ஏற்கனவே இருந்த கலைஞர் காப்பீட்டுத்திட்டம் கருணாவிற்கு வேண்டிய தனியார் மருத்துவமனைகள் வளம்பெறுவதற்காக திட்டமிடப்பட்ட சதி.தற்போதைய திட்டமோ,அரசு மருத்துவ மனைகள் மேம்பாடு அடைவதோடு,பச்சிளம்குழந்தை முதல் முதியவர்கள் மற்றும் கிராமப்புற மக்கள்வரை அனைவரும் பயன்பெற ஏதுவாக அமைக்கப்பட்ட மக்கள்நலத் திட்டம்.

இதன் முழுவிவரமும் அனைத்து பத்திரிகைகளிலும் இன்று வெளியாகி இருக்கிறது.இந்தக்கருத்து விவாதம் ஒருவேளை தொடருமேயானால், இன்னும் ஆழமாகச்சென்று, விளக்கமாக எழுத வேண்டியது வரும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல.....
posted by zubair (riyadh`) [12 July 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5931

அறிஞர் அண்ணாதுரையின் திறமையையும், புத்தியையும், தந்தை பெரியாரின் உழைப்பையையும், கொள்கை பிடிப்பையும் எந்த ஒரு தமிழனாலும் மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மைகளாகும். இப்படி பட்ட இவர்களால்.... போற்றப்பட்ட, புகழப்பட்ட, அவர்களின் மனதை (தன் புத்தியின் திறமையால், எழுத்தாற்றலின் திறமையால், கவிதையின் திறமையால், நல்லொழுக்கத்தின் தன்மையால்) தன் செயல்பாட்டால் கொள்ளை கொண்டு தமிழினத்துக்கு இந்த தம்பியால் மட்டும் தான் (நிர்வாகம்) நிர்வகிக்க முடியும் என்று...... இருவராலும் சுட்டிக்காட்டபட்ட ஒரே ஒரு தமிழின தலைவன் தான் இந்த மு. கருணாநிதி. பல,பல கல்விமான்களாலும், கவிஞர்களாலும் புகழப்பட்டவரும் இவரே....

இப்படி பட்ட தலைவனுக்கு, திறமைசாலிக்கு, நிர்வாக திறமை இல்லை என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல..... உள்ளது. கண்ணுக்கு மையழகு..... கவிதைக்கு பொய்யழகு என்பது நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். பொய்யையே...... மெய்யாக்க நடக்கும் நம் கவிஞனை நம் சைட்டில் தான் பார்க்கிறேன்.

அம்மாக்கு அறிக்கை விடவே தெரியாததும், பத்து நாளைக்கு முன் தயாரித்து வைத்ததை அப்படியே.... ஈ அடிதான் காப்பிபோல அறிக்கை வெளியிடுவதையும் தமிழக மக்கள் அறிந்த உண்மைகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நிர்வாக திறமை என்பது என்ன ? நிர்வாகதில் கொள்ளை அடிப்பது தான் நிர்வாக திறமை
posted by MUTHU ISMAIL (KAYALPATNAM) [12 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5935

நிர்வாக திறமை இல்லை என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல..... உள்ளது என்று நண்பர் சுபைர் அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார் - நிர்வாக திறமை இருந்திருந்தால் பாவம் மகள் கனிமொழி கட்சிகாரர் ராசா இவர்கள் டெல்லி திகார் ஜெயிலில் கம்பி எண்ணி இருக்க மாட்டார்களே.... நிர்வாக திறமை இல்லை என்பதே என் வாதம் (நிர்வாக திறமை என்பது என்ன? நிர்வாகதில் கொள்ளை அடிப்பதுதான் நிர்வாக திறமை)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. உள்ளே..... உள்ள அத்தன பேரும் குற்றவாளி இல்லீங்க....
posted by zubair (riyadh) [12 July 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5936

முத்து இஸ்மாயீல் அவர்களே...... கோவை குண்டுவெடிப்பில் நம் மக்கள் விசாரணை கைதியா உள்ளே இருந்தார்களே...... அப்பம் அவர்கள் எல்லாவரும் குற்றவாளிகளா?

Administrator: Message edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. சிங்கத்தம்பி!...
posted by kavimagan (dubai) [12 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5937

சிலிர்த்து எழுந்திருக்கும் சிங்கத்தம்பியே! ஆட்சியை விட்டு போகும்போதெல்லாம் தமிழக மக்களை கடனாளி ஆக்கிவிட்டு போய்விடுகிறார் கருணாநிதி என்ற பகிரங்கக் குற்றச்சாட்டிற்கு,அவராலேயே பதில் சொல்ல முடியாத போது,நீங்கள் ஏன் பெரியாரின் தம்பி,அண்ணாவின் தும்பி என்று வக்காலத்து வாங்குகின்றீர்கள்? ஒரு விஷயத்தை எழுதினால் அதில் எதாவது செய்தி இருக்க வேண்டும். அதை விடுத்து, சம்பந்த சம்பந்தமே இல்லாமல், படிக்க படிக்க ஒன்றுமே இல்லை. உரிக்க உரிக்க ஒன்றுமே இல்லாமல் போவதைப்போல! இதைத்தான் பெரியார் வெங்காயம் என்றார்.

விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் கில்லாடி கருணாநிதி என்று சர்க்காரியா உலகறிய எடுத்து சொன்னதை நண்பர் முத்து இஸ்மாயில் அறிந்திருக்க வில்லையா?

காவேரி,முல்லைபெரியார்,கிருஷ்ணா,ஒக்கேனக்கல் முதல் கச்சத்தீவுவரை இவரின் நிர்வாகச்சிறப்பு, சிரிப்பாய் சிரிக்கிறதே! கவிதைக்கு பொய்யழகு! தம்பி ஜுபைருக்கு கருணாநிதி என்ற பொய்யன் மட்டுமே அழகு!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:புதிதாக அறிமுகப்படுத்தப்ப...
posted by Cnash (Makkah ) [12 July 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5941

Br. Zubair, ஊரறிய கொள்ளை அடிச்சி உள்ளே போய் இருக்கும் ஒரு குடும்பத்தையும், செய்யாத குற்றத்திற்காக உள்ளே போய் 15 வருஷமா நொந்து கொண்டும், அடுத்த வேலை சாப்பாடிற்கு வழி இல்லாம பிள்ளை குட்டியோட நடு தெருவுக்கு வந்து இருக்காரே அந்த கோயம்புதூர் மக்களையும் தயவு செஞ்சி உங்கள் கருணாநிதி, கழக பக்தியால் ஒன்று படுத்தியோ compare பண்ணியோ பேச வேண்டாம் ப்ளீஸ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. காக்கை குளித்தால் கொக்காவாது.
posted by zubair (riyadh) [12 July 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5942

தம்பி..... வெங்காயம். ............ ன்டு. பெரியார் சொன்னது என்னைப்போல் உள்ளவர்களை அல்ல. உங்களைப்போல் உள்ளவர்களைத்தான். திராவிடனின் முதுகில் பார்ப்பன சக்திகள் சவாரி செய்துக்கொண்டு இருப்பதை தெரிந்தும் மூளையை கழற்றி வைத்துவிட்டு திராவிடன் சொரணை இல்லாமல் இருப்பதால்....... தான் சொன்னார். இப்பம் புரியுதா? நீங்கள் உண்மையை பொய்யாக்க முயற்ச்சி பண்ணுகிறீர்கள் என்பது. உங்களை எல்லாம் ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாதுண்டு விவேக் டயலாக் ஞாபகம் வருகிறது. நான் சொன்னால் கத்தரி போடுகிறார்கள்.

கருணாநிதியை பத்தியும், பார்ப்பனத்தின் முழு உருவம் அம்மாவை பத்தியும் நீனும், நானும் சொல்லி எல்லோருக்கும் தெரியனும்டு அவசியம் இல்லை. இதுக்கு - அவர் எவ்வளவோ நன்று.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:புதிதாக அறிமுகப்படுத்தப்ப...
posted by SEYED ALI (ABUDHABI) [14 July 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5993

பொறுங்கள் பொறுங்கள் அவசரம் வேண்டாம்.கருணாநிதி கொள்ளை அவர் குடும்பம் கொள்ளை,சிறை நிர்வாகத்திறமை இல்லாமை,இதெல்லாம் முகவிற்கு கவலை இல்லை.தமிழக மக்களில் பலர் அவ்வையார் சொன்ன மாதிரி ஆறுவது சினம் மாறுவது மனம் படைத்தவர்கள் என அவருக்கு தெரியாதா என்ன?அடுத்த தேர்தலில் அவர் வருவார் இப்போ நடப்பதெல்லாம் அவர் மாற்றுவார்.மீண்டும் கலைஞர் காப்பிப்பீடு ஒரு ஆயிரம் நோய்களுக்கு நிவாரணமென பெரும் விளம்பரத்தோடு அது வரும்.வேறென்ன இவர்கள் இருவரையும் விட்டால் நமக்கேது வேறு கதி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved