Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:01:39 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6570
#KOTW6570
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுன் 25, 2011
கேஸ் சிலிண்டர் ரூ.50 உயர்வு; டீசல் லிட்டருக்கு ரூ.3 உயர்வு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2453 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

டீசல், எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, டீசல் லிட்டருக்கு ரூ.3 உயர்கிறது. எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.50 விலை உயர்த்தப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்துள்ளது.

இதுகுறித்து நேற்று (ஜுன் 24) செய்தியாளர்களிடம் ஜெய்பால் ரெட்டி தெரிவித்தார். விலை உயர்வு இருந்தபோதும், சுங்க வரியில் விலக்கு அளித்து எண்ணெய் நிறுவனங்கள் அடையும் நஷ்டத்தைக் குறைத்து, விலைக் குறைவுக்கு வழிவகுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

டீசல், எரிவாயு, மண்ணெண்ணெய் விலை உயர்வு குறித்து விவாதிக்க நேற்று கூடிய அமைச்சர்கள் கூட்டத்தில் இந்த விலை உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தகவல்:
www.chennaionline.com


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. எங்களை மாதிரி நடுத்தர மக்கள் தான் பாவம்
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [25 June 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5602

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக விலையை உயர்த்துவதற்கு பதிலாக மொத்தமாக பெட்ரோலுக்கு 200, டீசலுக்கு 150, கேஸ் சிலிண்டர்க்கு 700 என்று ஏற்றி விடலாம். இப்படி வருடத்திற்கு 300 தடவை எல்லாம் ஏற்றி கொடுமை படுத்தாதீர்கள்.

ஏத்தனை தடவைதான் நாங்களும் எங்களின் மாதப்படியை அதிகரித்து அதிகரித்து மனைவிக்கு அனுப்புவது.

விடியற்காலையிலேயே ஆத்துக்கார அம்மாவிடம் இருந்து மூன்று மிஸ்டு கால் வந்து விட்டது, என்ன என்று கேட்டதில்

" என்னங்க ...கேஸ் சிலிண்டர் ரூ.50 உயர்வு என்று நியூஸ் போட்டு உள்ளார்களே"

" சரி அதுக்கு என்னம்மா"

"ஒன்னும் இல்லை.. வழமையாக அனுப்புவது தொட்டுக்க தொடைத்துக்க... என்று தான் உள்ளது.. அதான் சும்மா சொன்னேன்"

இது தான் மத்தியவர்க்கத்தின் நிலைமை. விலை உயர்வோ 50 மட்டும்தான், மாதம் இரண்டு சிலிண்டர் என்றால் 100 ரூபாய் அதிகம். நாம் வெறும் நூறு மட்டும் அதிகம் அனுப்ப முடியுமா.. குறைந்தது இரண்டு ஆயிரம் அதிகம் அனுப்பனும்.

பணக்காரர்கள் - பரவாஇல்லை. விலை உயர்வு அதிகம் இல்லை அவர்களுக்கு.

ஏழைகளும் சமாளித்து விடுவார்கள். அம்மா அவர்கள் இலவசமாக ஆடும், மாடும் கொடுக்கிறார்கள். அதில் வரும் சாணத்தைக் கொண்டு 'வரட்டி' செய்து அடுப்பை எரித்துக்கொள்வார்கள்.

எங்களை மாதிரி நடுத்தர மக்கள்தான் பாவம்.

இப்படி உயர்த்தியும் எண்ணெய் கம்பெனிக்கு கடன் சுமை ரூ. 21 ஆயிரம் கோடியாம்.. திகார் சிறையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் அடித்தவன், நிம்மதியாக A கிளாசில் பாதுகாப்போடு இருக்கிறான். அவனிடம் இருந்து பிடுங்கி கொடுக்க வேண்டியது தானே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. சூரிய ஒளி மாற்று வழி
posted by சாளை நவாஸ் (singapore) [26 June 2011]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 5605

இனிமேல காஸ் சிலிண்டர் ஏறி கொண்டே தான் போகுமே ஒழிய இறங்குவதற்கு வாய்ப்பே இல்லை. விலை கூட பரவ இல்லை, சிலிண்டர் கிடைப்பதே ரொம்ப கஷ்டமாகி விடும். இதற்கு மாற்று வழி சூரிய ஒளியில் இயங்கும் அடுப்பு. விலை ரொம்ப மலிவு, காஸ் அடுப்பைவிட மிகவும் பாதுகாப்பனது. நம்ம ஊரில் யாரவது விற்பனையாளர்கள் முன்வருவார்கள? அருமையான தொழில் வாய்ப்பு.

சென்னையில் கீழே உள்ள முகவர்களை அணுகுங்கள்

A S Solar Water Heating Systems - Gopalapuram
S P Solar Technologies - Korattur
Sun FLO - Ambattur


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஏன்தான் இப்படி ஏத்தி தொலைக்கிறாங்களோ...
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [26 June 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5606

காலங்காத்தால பல வீட்டு அடுப்பங்கரையில அடுப்புகள் மெதுவாகத்தான் எரிந்திருக்கும். ஆனால் வயிறு மட்டும் வேகமாக பற்றி எரிந்திருக்கும்..

நம்ம ஊரு பெண்கள் இன்னைக்கு ஒருவருக்கொருவர் பேசிக் கொண்ட தலைப்பு செய்தி இதுதான்! கியாஸ் விலை ரூ.50 ஏத்திப்புட்டாங்களாமே...”

ஏன்தான் இப்படி ஏத்தி தொலைக்கிறாங்களோ... நம்ம மாதிரி நடுத்தர ஜன்மங்க இனி வாழவே முடியாது... ம்ம் என்ன செய்றது...? என்று புலம்பி தவித்த பெண்கள் ஏராளம்.

வாழ்க்கை ஒரு போராட்டம் என்பார்கள். விலைவாசி உயர்வு, மருத்துவச் செலவு, பிள்ளைகளின் கல்விக்கட்டணம் என்று பல செலவுகள் கழுத்தை நெரிக்கிறது. ஒவ்வொரு மாதமும் பட்ஜெட்டில் துண்டு விழுவதால் மாத கடைசியில் கடனுக்கு கையேந்துகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கியாஸ் விலை திடீரென்று சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தியது எல்லார் வயிற்றில் நெருப்பை அள்ளி கொட்டியது போல் உள்ளது.

நம்ம ஊர்ல இதுவரை சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.370 ஆக இருந்தது. தற்போது ரூ.420 ஆக உயர்ந்துள்ளது. இப்படியே போயிட்டு இருந்தா..

படிப்பு, ஓதுவது என்று இருக்கும் நம்ம ஊரு பெண்கள் அடுப்பு, ஊதுவது என்று ஆகிவிடும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. demands back
posted by syedahmed (GZ) [26 June 2011]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 5608

Central government must get back this price hike immediately, otherwise all political parties will be take decision against the central government which may cause lose power in forth coming elections.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Bite the bullet
posted by A.W.S. (Kayalpatnam) [26 June 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 5609

Certainly it will cause extra burden on both middle class and poor family. In this regard government has three options. 1) Pass the burden on general public 2) Take it on itself. 3) Reduce the Taxes.

The second option means government can not go on take the burden on itself. At some point in time it has to relieve itself by passing the buck. Literally it has to pass the burden again on public. Therefore it is lose lose situation for public. The best thing government can do is to reduce the taxes.

Public has to bite the bullet.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved