Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:05:09 PM
ஞாயிறு | 5 மே 2024 | துல்ஹஜ் 1739, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4612:2003:3606:3307:46
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:00Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்03:30
மறைவு18:28மறைவு15:55
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4705:1305:38
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5019:1519:41
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6355
#KOTW6355
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுன் 1, 2011
ஆஸாத் கோப்பை கால்பந்து 2011: இறுதிப் போட்டி பரிசளிப்பு விழா நிகழ்வுகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3893 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவாக காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் (USC) மைதானத்தில் ஆண்டுதோறும் அகில இந்திய அளவில் கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

46ஆம் ஆண்டு அகில இந்திய கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் கடந்த 09.05.2011 அன்று துவங்கி, 29.05.2011 அன்று இறுதிப்போட்டியுடன் நிறைவுற்றது. இறுதிப்போட்டியில் தமிழ்நாடு மாநில காவல்துறை - சென்னை அணியை எதிர்த்து பெங்களூரு சாய் அணி களம் கண்டது. ஆட்டத்தின் இறுதியில் 5-0 என்ற கோல் சென்னை அணி வென்றது.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு, ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை தலைமை தாங்கினார். எம்.எஸ்.சதக்கத்துல்லாஹ் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார்.

ஹாஃபிழ் ஸல்மான் கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார். கலாமீ யாஸர் அரஃபாத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

இவ்விழாவில், திருச்செந்தூர் தொகுதி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.டி.கே.ஜெயசீலன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.



அவரைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற - வெற்றிக்கு முனைந்த அணிகளின் பயிற்சியாளர்கள், நடுவர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். சாதாரணமாக மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியை தொடர்ந்து நடத்துவதே பெரும் சிரமமிக்கது என்றிருக்க, ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகிகள் தொடர்ந்து 46ஆவது ஆண்டாக அகில இந்திய அளவில் கால்பந்துப் போட்டியை திறம்பட நடத்தி வருவது மிகவும் பாராட்டத்தக்கது என்றும், இத்தனை சிறப்பு மிக்க இந்த மைதானத்தை புல்தரை மைதானமாக்க வேண்டுமெனவும், இங்கிருந்து அகில இந்திய அளவில் விளையாட்டு வீரர்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று மேடையில் பேசியவர்கள் தெரிவித்தனர்.



அதற்கு விளக்கமளித்துப் பேசிய ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர், முறையான ஒத்துழைப்புகளைப் பெற்று மைதானத்தை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், இந்த மைதானத்தில் தொடர்பயிற்சி பெற்ற காழி அலாவுத்தீன் என்ற வீரர் இன்று அகில இந்திய அளவில் போட்டிகளில் விளையாடி வருவதன் மூலம் ஐக்கிய விளையாட்டு சங்கத்திற்கு பெருமை தேடித் தந்துகொண்டிருப்பதாகவும், இன்னும் பல வீரர்கள் மாநில அணிகளிலும் விளையாடி வருவதாகவும் தெரிவித்து, வீரர் காழி அலாவுத்தீனை அவர்களுக்கு அறிமுகம் செய்தார்.



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஷ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வதாக இருந்தது. பணி நிமிர்த்தம் அவர் வர இயலாமற்போனதையடுத்து மாவட்ட ஆட்சியரின் சார்பில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் (பொறுப்பு) எஸ்.சேதுராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதோடு, வெற்றி பெற்ற சென்னை அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ரூபாய் இருபத்தைந்தாயிரம் பணப்பரிசை வழங்கினார்.









இரண்டாமிடம் பெற்ற பெங்களூர் சாய் அணிக்கு ரூபாய் இருபதாயிரம் பணப்பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. அத்துடன், இரு அணி வீரர்களுக்கான தனிப்பரிசுகள், பால் பாய்ஸ் பரிசுகள் உள்ளிட்ட பரிசுகளும் மேடையில் வழங்கப்பட்டன.







ஐக்கிய விளையாட்டு சங்க செயலாளர் அஹ்மத் முஸ்தஃபா, பொருளாளர் எம்.எல்.ஹாரூண் ரஷீத், துணைத்தலைவர் பீர் முஹம்மத் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்துல் காதர் நெய்னா நன்றி கூறினார்.



விழாவில் நகரின் விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். பரிசளிப்பு விழா நிறைவுற்றதும் பலவண்ண பட்டாசுள் மூலம் வானவேடிக்கை நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஒரு சிறு மனக்குறை தான்.
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [01 June 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4919

நேரடியாக பார்த்த உணர்வு. நன்றிகள் பல.

இறுதி ஆட்டத்தின் போது எங்களுக்கு இங்கு டூட்டி இருந்ததால் சரியாக லைவ் பார்க்க இயலவில்லை. இருந்தாலும் எங்களின் நினைவுகள் USC மைதானத்தை சுற்றியே இருந்தது.

அப்புறம், " அகில இந்திய அளவில் போட்டிகளில் விளையாடி வருவதன் மூலம் ஐக்கிய விளையாட்டு சங்கத்திற்கு பெருமை தேடித் தரும் சகோ. காழி அலாவுத்தீன் அவர்களை அறிமுகம் செய்தார்" என்று தான் உள்ளதே தவிர, அவருக்கு ஒரு பரிசு கொடுத்தோ அல்லது ஒரு சிறு துண்டோ போத்தி கவுரவித்து இருக்கலாம் அல்லவா..

சும்மா பட்டாசு மற்றும் கொளுத்தினால் போதுமா.. என்னவோ போங்க...இதுவும் ஒரு சிறு மனக்குறை தான்.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் மற்றும்
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [01 June 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4921

46வது அகில இந்திய கால்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்த எமது ஐக்கிய விளையாட்டு சங்கம் மற்றும் அதன் நிர்வாகிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் வெற்றி பெற்ற,வெற்றிக்கு முனைந்த இரு அணி வீரர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

இப்போட்டியில் முன்னால் கால்பந்தாட்ட வீரர் மற்றும் திருச்செந்தூர் தொகுதி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஏ.டி.கே.ஜெயசீலன் அவர்களை சிறப்பு அழைப்பாளராக அழைத்தது ஒரு சிறப்பம்சம்.வழக்கமா நம்ம அண்ணாச்சிதான் வருவாங்க இப்பம் அவருக்கு என்னாச்சுனு தெரியலே..?

அடுத்து , ஜியாவுதீன் காக்கா சொன்ன மாதிரி தன் கால் பந்து ஆட்டத்தால் காயலுக்கே பெருமை சேர்த்த என் நண்பர் காயல் ரியல் ஹீரோ காழி அலாவுதீனை இன்னும் நலல முறையில் குறைந்தது ஒரு குற்றால டவலாவது போட்டு கவுரவித்திருக்கலாம்.பராவாயில்லை அவர் பல பாரட்டுக்களை பார்த்தவர்.

அடுத்து காழி புகைபடத்துக்கு அருகில் இருக்கும் புகைபடத்தில் அறிமுகப்படுத்தப்படும் நபரை பற்றி தங்கள் செய்தியில் எதுவும் இல்லை, இதோ அவர் பற்றிய சிறிய தகவல், அவர் பெயர் நெய்னா, இந்த சிறிய வயதிலயே அவர் சாய் ஸ்போர்ட்ஸ் க்ளப் அணியின் நட்சத்திர கோல் கீப்பராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இன்னும் மெம்மேலும் அவர் பல சாதனைகள் படைக்க என்னுடைய வாழ்த்துக்கள்.

இன்ஷா அல்லாஹ் வருகிற 47வது கால்பந்தாட்ட போட்டியில் நமது ஐக்கிய விளையாட்டு சங்க அணிக்காக சென்ட்ரல் எக்சஸ் அணிக்காக ஆடிவரும் காழி,சாய் ஸ்போர்ட்ஸ்க்காக ஆடிவரும் நெய்னா, இந்தியன் போஸ்டல் அணிக்காக ஆடிவரும் கரீம், ஸ்டேட் பாங்க் அணிக்காக் ஆடிவரும் பாயிஸ் மற்றும் சேக் போனறவர்கள் நமதணிக்காக ஆடினால் நமதூர் கோப்பையை வெல்வது நிச்சயம் அப்படியே என்னையும் பெஞ்சுல உக்கார வச்சுங்கப்பா...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நுனைவு கட்டணம் இலவசமாக கூட இருக்கலாம்
posted by MUTHU ISMAIL (KAYALPATNAM) [01 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4923

முன்பு போல் அகில இந்திய கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் சுறுசுறுப்பு (ரசிப்பு) இல்லை வெறிச்சோடி காணப்பட்டது. நம் ஊர் மக்கள் முன்பு போல் கால்பந்தாட்ட போட்டியை கண்டு ரசிக்க விருப்பம் குறைந்து விட்டது. வெளியூர் மக்களும் கால்பந்தாட்ட போட்டியை கண்டு ரசிக்க வரவில்லை. வரகூடிய வருடத்தில் நுனைவு கட்டணம் இலவசமாக கூட இருக்கலாம் என்று எண்ணுகிறேன். மக்கள் மத்தியல் கால்பந்தாட்ட (ஆர்வம்) விழிப்புணர்வு பிரச்சாரம் தேவை. கால்பந்தாட்ட போட்டியை நடத்துபவர்கள் இதில் அக்கறை எடுத்துகொள்ள வேண்டும்.. எடுத்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்...... நட்புடன்.. தமிழர். முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. காயலும் - கால்பந்தாட்டமும் இரட்டை கிளவிகள்....
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [01 June 2011]
IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4926

காயல் மக்களிடையே கால்பந்தாட்ட ஆர்வம் குறையவில்லை.

சகோ. முத்து வாப்பா கூறியது போல்
"சென்ட்ரல் எக்சஸ் அணிக்காக ஆடிவரும் காழி,
சாய் ஸ்போர்ட்ஸ்க்காக ஆடிவரும் நெய்னா,
இந்தியன் போஸ்டல் அணிக்காக ஆடிவரும் கரீம்,
ஸ்டேட் பாங்க் அணிக்காக் ஆடிவரும் பாயிஸ் மற்றும் சேக்"
போனறவர்கள் இதற்க்கு ஒரு எடுத்துகாட்டு.

KPL - விறுவிறுப்பாக தானே நடைபெறுகிறது.
பிரபல இந்திய அணிகளுக்கு விளையாடும் அளவுக்கு நம் கால்பந்தாட்ட வீரர்கள் உயர்ந்து உள்ளார்களே!!!

காயலும் - கால்பந்தாட்டமும் இரட்டை கிளவிகள்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. waalthukkal
posted by M.M.M.Fauz (AlAin. UAE) [01 June 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4927

நான் அங்கு இல்லாவிட்டாலும் என் மனம் usc யே சுற்றி சுற்றி வந்தது. என் வாப்பா, பெரியாப்பா தலைவராக இருந்த காலத்தையும், இப்போது உள்ள தலைவர், மற்றும் அங்கத்தவர்கள் அனைவர்களையும் நினைத்து பார்த்து என் மனம் மகிழ்ந்தது.

குறிப்பாக என்னை போல் நேரில் பார்க்க அதிச்டமிள்ளதவர்களுக்கு விளையாட்டு போட்டிகளை & ரசிகர்களை போட்டோ பிடித்து அங்கிருப்பது போலவே காட்டிய அன்பு தம்பி சாலி இக்கு என் மனமார்ந்த நன்றி. சலம். Fauz .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. காயலின் பெருமை!
posted by kavimagan m.s.abdul kader (dubai) [01 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4928

காயலும் கால்பந்தும் இரட்டைக்கிளவிகள் அல்ல.இரண்டறக் கலந்தவை.காரணம் இரட்டைக்கிளவியை பிரித்தால் பொருள் தராது.பின்னர்,நண்பர்கள் குறைபடுவது போல காயல் நகர மக்களிடையே கால்பந்து ஆர்வம் குறைந்திருப்பதாக நான் நினைக்கவில்லை.அந்தந்த வயதுக்கேற்ற ஆர்வத்தோடு, ரசனை தொடர்கிறது.ஒருவேளை,கடும்கோடை காலத்தால் ஏற்படும் எரிச்சலாக இருக்குமோ? இங்கேயும் ஒரு மோர்பந்தல் வைத்தால் நன்றாக இருக்கும்.தம்பிமார்களே! உதையுங்கள் கால்பந்தை! உயர்த்துங்கள் காயலின் பெருமையை!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. கால்பந்தில் நம்மவர்கள் ஜோலிக்கின்றனர்.
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [01 June 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4931

கவிமகன் அவர்களுக்கு, பிரித்தால் பொருள் தராது என்பதற்காக தான் இரட்டை கிளவி என்று குறிப்பிட்டேன். ஏன் என்றால் காயலையும் கால்பந்தையும் பிரித்து பார்க்க முடியாது. பிரித்தாளும் அதில் அர்த்தமில்லையே?

"கட்ட காகா" முதல் "காழி" வரை கால்பந்தில் நம்மவர்கள் ஜோலிக்கின்றனர்.

(கவிமகனிடம் தமிழில் சொற்போர் புரியும் அளவுக்கு நமக்கு ஞானம் இல்லை!!!)

எதோ நம்முக்கு தெரிஞ்ச நடைல கமெண்ட்ஸ் பண்ணுனேன்.... வடிவேலு ஸ்டைலுல சொல்லனும்னா "ஒரு flow -ல போய் கொண்டிருக்கும் போது disturb பண்ணாதிங்க"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. @ முத்து இஸ்மாயில் காக்கா ..
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [06 June 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5075

அகில இந்திய கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் சுறுசுறுப்பு (ரசிப்பு) இல்லை வெறிச்சோடி காணப்பட்டது. நம் ஊர் மக்கள் முன்பு போல் கால்பந்தாட்ட போட்டியை கண்டு ரசிக்க விருப்பம் குறைந்துவிட்டது. வெளியூர் மக்களும் கால்பந்தாட்ட போட்டியை கண்டு ரசிக்க வரவில்லை. வரகூடிய வருடத்தில் நுனைவு கட்டணம் இலவசமாக கூட இருக்கலாம் என்று எண்ணுகிறேன். என்று முத்து இஸ்மாயில் காக்கா அவர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

அவர் கூறியதை பார்த்தால் இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் மொத்த பாஸையும் அவங்களே வாங்கி எல்லாரையும் இலவசமாக விடுவாங்கனு நினைக்குறேன் அது மட்டுமல்லாமல் போட்டி இன்னும் சிறப்பா நடக்கம் குறைந்து 6 லட்சமாவது நன்கொடையா குடுப்பாங்கன்னு நம்புறேன். அப்புறம் உங்களுக்கு என்ன ஜாலிதான் அடுத்த வருசம் தலைவலி வராது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved