Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:30:06 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6338
#KOTW6338
Increase Font Size Decrease Font Size
திங்கள், மே 30, 2011
அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த பொன்மொழிகள் அதிரடி அகற்றம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3768 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (18) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சரின் பொன்மொழிகள் அதிரடியாக அகற்றப்பட்டுள்ளது.

1996இல் திமுக ஆட்சி அமைந்தபோது தமிழகத்தின் தென் பகுதிகளில் ஜாதிக்கலவரம் தீவிரமாக இருந்தது. இதனால் தென் மாவட்டங்களில் போலீஸ் அதிகாரிகள் பலர் குறிப்பிட்ட சில ஜாதியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி வடமாவட்டங்களுக்கு மாறுதல் செய்யப்பட்டனர். மேலும் மாவட்டம் மற்றும் அரசு பஸ் போக்குவரத்துக் கழகத்திலும் தலைவர்களின் பெயர் நீக்கப்பட்டு மாவட்டத் தலைநகர் பெயரிலேயே மாவட்டங்களும், அரசு போக்குவரத்து என பஸ்களும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி கூறியதாவது, நீ என்று சொன்னால் உதடுகள் கூட ஒட்டாது. நாம் என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஒட்டும் என்ற வாசகங்கள் அரசு பஸ் முழுவதும் எழுதப்பட்டது.

2001ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் ஒரே நாளில் அனைத்து வசனங்களும் அழிக்கப்பட்டது. மீண்டும் 2006இல் திமுக ஆட்சி வந்ததும் அழிக்கப்பட்ட முதலமைச்சரின் வசனங்கள் முதல்வரின் பொன்மொழி என ஸ்டிக்கரில் எழுதி அனைத்து பஸ்களிலும் ஒட்டப்பட்டது. மீண்டும் ஆட்சி மாற்றமும் அதனால் காட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது.

அரசு பஸ்களில் உள்ள முன்னாள் முதல்வரின் அனைத்து பொன்மொழிகளும் அதிரடியாக கிழித்து அகற்றப்பட்டுள்ளது. இதுவும் ஒருமேல் சபை தீர்மானம் போல மாறி மாறி நடக்கிறது என பஸ் பயணிகள் வேடிக்கையுடன் பேசிக்கொண்டனர்.

நன்றி:
தினமலர் (29.05.2011)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பொன்மொழிகள்!!!
posted by Moosa Sahib (Sharjah) [30 May 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4861

அம்மா என்று சொன்னாலே உதடுகள் ஒட்டும். கலைஞர் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது.

This comment, i look in some web site..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. பேஸ் பேஸ்
posted by Ibrahim (Chennai) [30 May 2011]
IP: 58.*.*.* India | Comment Reference Number: 4862

பேஸ் பேஸ்.. நன்னா இருக்கே!

அடி சரசு..
இது சும்மா வா?
இல்லேனா!
இது அம்மா னா..
அடி சரசு.. மதராசபட்டினத்தில் மேம்பாலம் லாம் கருணா போடிருகரோனா. அப்போ அதெல்லாம் இடிசுருவாங்கலோனா இல்லையோ. தெரியலையேனா.

நேக்கு ஒன்னும் புரியலை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. சபாஹ் சரியானபோட்டி...?
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [30 May 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 4863

சின்னபுள்ளதனமா இருக்கு.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. கூத்தாடிகள் ??
posted by M.S. ABDULAZEEZ (Guangzhou,China) [30 May 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 4865

ஊரு இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கோண்டாடம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. பல கோடி நஷ்டம்
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [30 May 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4866

முன்னாள் இந்நாள் முதல்வர்களின் மோதல்களுக்கிடையே சீரழிவது மக்கள் வரி பணம்......

புதிய சட்டமன்ற கட்டிடம் - பல கோடி நஷ்டம்.

சமச்சீர் கல்வி கிடப்பில் போட்டதால் - பல கோடி நஷ்டம்.

இப்போ - பொன்மொழிகள் அதிரடி அகற்றம் - மீண்டும் நஷ்டம் மக்களுக்கே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல.....
posted by s.s.md meera sahib (riyadh) [30 May 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4872

நாட்டிற்கு செய்ய நல்லவைகள் இருக்க..... இந்தமாதிரியான விசயத்தில் அதிரடி காட்டுவது என்பது தலைமைக்கு உகந்தது அல்ல. பொன் மொழிகள் யார் சொன்னது என்பதை பார்பதை விட என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என்பதை பார்ப்பதே நன்று.

Moderator:Dear S.S.Md Meera Sahib, pls provide your own email ID to approve your comments in future.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. பொன்மொழிகள்
posted by SEYED ALI (ABUDHABI) [30 May 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4873

மக்கள் வரிப்பணம் பாழாவது இப்போ மட்டும்தான் தெரிகிறதா 1967இல் அல்லவோ தெரிந்திருக்கவேண்டும்.

ஒழுக்கமான அரசியல் எங்களுக்கு வேண்டாம் கழிசடை அரசியல்தான் வேண்டும் என்று அன்று எத்தனை வேகமாக கக்கன் பூவராகவன் மஜீத் போன்றவர்களையெல்லாம் போக்கிவிட்டு திராவிடத்தை ஆடைக்குள் பார்த்தால் தெரியும் என்று ஆபாசங்களை கலை என்றும் மேதாவிலாசம் என்றும் போற்றி அரியாசனத்தில் ஏற்றினோம் இன்றும் என்றும் அதற்க்கு விலை கொடுத்துத்தான் ஆகவேண்டும்.

ஆனால் விலை மிக அதிகம் இருக்கும் மொத்த தமிழகமே விலை போனாலும் ஆச்சரியப்படுவதர்க்கில்லை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. விட்டு கொடுத்தல் நல்லது
posted by sulaiman lebbai - riyadh (RIYADH - S.ARABIA) [30 May 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4876

ஒரு மாற்றம் வேண்டும் என்று தான் ஜெயாவை மக்கள் தேர்ந்து எடுத்தார்கள். ஜெயா, தான் மட்டும் இன்னும் மாறவில்லை என்பது மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதால்தான் இதை எல்லாம் செய்கிரரோ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. சுயநலவாதி!
posted by KAVIMAGAN (DUBAI) [30 May 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4877

உலக அரசியலின் ஒப்பற்ற சுயநலவாதி, சூதும், வாதும் நிறைந்த கெடுமதியாளன்,
தமிழர்களின் அவமானச்சின்னம், ஒரு குடும்பத்திற்காகவே வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற வஞ்சகத்தின் முழு உருவம்,
தமிழக மக்களால் வெறுத்து, ஒதுக்கப்பட்ட ஒருவரின் புலம்பல்களை பொன்மொழி என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

இப்படி ஒருவர் வாழ்ந்தார் என்பது, வருங்கால தலைமுறைக்கு தெரியாமல் இருப்பதே, தமிழுக்கும், தமிழர்களுக்கும் நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. சுதந்திர தாகம்
posted by Syed (DxB) [30 May 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4878

ஏதோ வெளி நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பின் நடந்த சம்பவங்களை (கூத்துகளை)ப் பற்றி செய்தியில் படித்து அதற்கு கருத்துரையும் எழுதுவது போலல்லவா இருக்கிறது, நாம் படிக்கும் இந்த செய்திகளும் COMMENTSம்.

நம் சொந்த மண்ணில் நம்மால் ஆட்சியில் அமர்த்தப்பட்டவர்கள் தான் இது போன்று பொறுப்பற்ற முறையில் தமது EGO காரணமாக மக்கள் பணத்தை வெட்டித்தனமாக வீண் விரையம் செய்கிறார்கள் என்ற உண்மை நிலையை என்னும் போது நிச்சயமாக வேதனையும், (இப்படிப்பட்டவர்களை தேர்ந்தெடுத்ததற்காக) வெட்கமும் பட வேண்டியுள்ளது.

துரோகியை விட விரோதி பரவாயில்லை என்று தேர்தல் நேரங்களில் ஆட்சி மாற்றத்திற்கு நம் மக்கள் சொன்ன சப்பைக்கெட்டு நினைவில் வருகிறது.

எத்தனை காலத்திற்குத்தான் நாம் மற்றவர்களை/எதிரிகளை மாற்றி மாற்றி அரியணை அமரவைத்துப் பார்ப்பதாக உத்தேசம்?

நமக்கென்று ஒரு கட்சி ஒரே கட்சி, ஒரே சின்னம், இஸ்லாமியர்கள் அனைவருக்கும் (பாகுப்பாடின்றி) உழைக்கும் உயர்ந்த நோக்கத்தில் சுதந்திரமாக இயங்கும் "சுய கவுரவம்" கொண்ட அமைப்பு உருவாகும் காலம் என்றுதான் வருமோ?

இறைவன் எல்லாவற்றுக்கும் போதுமானவன். وبه نستعيــن

Moderator:Dear Syed, pls provide your full name to avoid rejecting your comments in future.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. பொன்மொழிகள் யார்
posted by vsm ali (Kangxi , Jiangmen , China) [31 May 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 4886

பொன்மொழிகள் யார் சொன்னார் என்பதைவிட என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை பார்ப்பதே மேல். இது அ தி மு க கட்சிக்காரர்களுக்கே தெரியும். EGO பிரச்சினைதான் காரணம். தலைமையின் கட்டளையால் "ஆமாம்" போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

"சமச்சீர் கல்வி" தடை செய்யப்பட்டதும் EGO பிரச்சினைதான். இப்போதுள்ள கல்வியால், பத்தாம் வகுப்பு வரை CBSE, Metricஇல் படித்தவர்கள், அடுத்த இரண்டு வருடம் state board syllabusஇல் படித்து அதிக பதிப்பெண் பெற்று, மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் சுலபமாக சேர்ந்து விடுகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது, ஆரம்பம் முதலே state board syllabusஇல் படிக்கும் மாணவர்கள்.

இனிமேல் பேரூந்துகளில் பொன்மொழிகளை போக்கிவிட்டு அம்மாவின் "அருள்மொழிகள்" இடம்பெறலாம். மொத்தத்தில் சீரழிவது நம்முடைய வரிப்பணம்.

Moderator:Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. ஒரு அமைச்சராவது உண்டா?
posted by Lebbai (Riyadh) [31 May 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4892

இந்த ஆட்சியில் நம் சமுதாயத்துக்கு ஒரு அமைச்சராவது உண்டா ? மரியம் பிச்சை அவர்கள் மரணத்துக்கு பின் நம் சமுதாயத்துக்கு ஒரு பிரதிநித்துவம் கிடைக்கவில்லையே? பொறுத்திருந்து பார்ப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. ஓரளவு நன்மை
posted by Lebbai (Riyadh) [31 May 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4896

இங்கே மேலும் ஒன்றை சுட்டிக்காட்ட விழைகிறேன். கடந்த ஆட்சியில் இடஒதுக்கீட்டால் நம் சமுதாயம் ஓரளவு நன்மை பெற்றது என்பது தெளிவு. நான் அறிய நம் சகோதர சகோதரிகள் மருத்துவ துறைக்கே இடஒதுக்கீட்டால் இலகுவாக இடம் கிடைத்தது நினைவிருக்கிறது. அதுபோல் இந்த ஆட்சியில் சமுதாயம் பயன் பெற்றால் நல்லதுதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. கீழே..... ஓடுற நரியில ஒரு நரி குள்ளநரி..!!!
posted by zubair (riyadh) [31 May 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4897

எந்த ஒரு தமிழ் கவிஞனும் கருணாநிதியை கவி விசயத்தில் குறை கூற மாட்டார். ஏன்......... ஜெ விடம் பத்திரிக்கையாளர்கள் உங்களுக்கு கருணாநிதியிடம் பிடித்தது என்ன? என்று வினவிய பொது அவரின் கவிதை, கட்டுரை என்றார்.

இப்படி இருக்க நம் கவிமகன்....... எழுதி இருப்பது வருத்தத்தை தருகிறது.

Moderator:Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. நீதியில் 60% மே தேர்ச்சி.....
posted by zubair (riyadh) [31 May 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4903

அஸ்ஸலாமு அலைக்கும். தாங்கள் என்னுடையதை பிரசுரித்ததில் சந்தோசம். ஆனால் முழு திருப்தி இல்லை. என்னுடையதை பிரசுரித்ததைவிட கவிமகனின் குறிப்புகளை நீக்கி இருக்கலாம். தமாசாக எழுதுவது வேறு, இவர் புழுதி வாரி தெளித்து இருப்பது வேறு. என்னுடையதை எடிட் பண்ணும் நீங்கள் எப்படி அதை அனுமதித்தீர்கள் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. நான் கடைசியில் சேர்த்த வாசகம்..... இவர் பதிப்பில் வேதனை படுபவர்களுக்கு ஆறுதலாக இருக்கும் என்பதால் மட்டுமே. "பட்டால் தானே புத்திவரும்" என்று நீங்கள் விட்டு இருக்கலாம். இனி உங்கள் விருப்பம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. அன்பு சகோதரர் ஜுபைர்!
posted by kavimagan m.s.abdul kader (dubai) [31 May 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4907

அன்பு நண்பர் ஜுபைர் அவர்களுக்கு!

எனது கருத்துக்கள் தங்களது மனதை புன்படுத்தி இருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன். ஆனால் எனது கருத்துக்கு பதிலுரைக்கும் வேகத்தில், தனிப்பட்ட முறையில் என்னைத் தாக்கி குள்ளநரி என்று தலைப்பு தந்தபோது உள்ளபடியே ரசித்தேன். சிரித்தேன்.

பல்வேறு ஊடகங்களில் எழுதிவரும் நான், என்றைக்கும் புழுதி வாரித் தூற்றியது இல்லை. நீங்கள் அனுமதி அளித்தால், எனது கருத்துக்கள் அனைத்துமே சரியானது என்பதை நிரூபிக்கும் பல நூறு ஆதாரங்களை தங்களது மின்னஞ்சலுக்கு நான் அனுப்பித்தர தயாராக இருக்கிறேன்.

கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள். அதே நேரத்தில் நான் உங்கள் சகோதரன், உங்களுள் ஒருவன் என்பதை மறந்து விடாதீர்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. யாருக்கு இலாபம்?
posted by muhammed umar , Muhammed Irshath (Jeddah, Saudi Arabia) [01 June 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4912

இப்படி மாற்றுவதால் யாருக்கு என்ன லாபம்?
அட போங்கப்பா!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. விட்டு கொடுத்தல் நல்லது
posted by SATNI .S.A.K.SEYEDMEERAN (JEDDAH) [01 June 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4914

ஜெயலலிதா வெற்றி பெற நேர்த்திக்கடன்: நாக்கை அறுத்த பெண்ணுக்கு சத்துணவு உதவியாளர் வேலை; ஜெயலலிதா வழங்கினார்.

அ.தி.மு.க. வெற்றிபெற்றதால் சேலத்தில் விரலை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பெண்

தன்னை அறிதலும் தக்கபடி வாழ்தலும்
தேடலில் எல்லாம் தலை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved