Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:28:06 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6284
#KOTW6284
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மே 24, 2011
ப்ளஸ் 2 சாதனையாளர்களுக்கு ஹாங்காங்கிலுள்ள காயல் மாணவர் நல மன்றம் (கஸ்வா) சார்பில் பாராட்டு! மாவட்ட முதன்மாணவருக்கு ரூ.5,000 பணப்பரிசு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3425 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் காயல் மாணவர் நல மன்றம் கஸ்வா சார்பில், நடப்பாண்டு ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ், நகரளவில் இரண்டாம், மூன்றாமிடங்களைப் பெற்ற மாணவர் எஸ்.டி.முஹம்மத் அஃப்ரஸ், சொளுக்கு எம்.ஏ.சி.உம்மு ஸரீஹா ஆகியோருக்கும், உளவியல் பாடத்தில் உளவியல் பாடத்தில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ள மாணவி ஆர்.முத்துமாரிக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவ்வமைப்பின் செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

நடப்பாண்டு ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ், நகரளவில் இரண்டாம், மூன்றாமிடங்களைப் பெற்ற மாணவர் எஸ்.டி.முஹம்மத் அஃப்ரஸ், சொளுக்கு எம்.ஏ.சி.உம்மு ஸரீஹா ஆகியோரையும், உளவியல் பாடத்தில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ள மாணவி ஆர்.முத்துமாரியையும் எமதமைப்பின் சார்பில் மனதாரப் பாராட்டுகிறோம்.

அத்துடன், எமதமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் ப்ளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வில் காயல்பட்டினம் நகர பள்ளிக்கூடங்களில் பயின்று முதலிடம் பெறும் மாணவருக்கு வழமைபோல மர்ஹூம் கத்தீப் ஹாமித் நினைவாக வழங்கப்பட்டு வரும் ரூபாய் ஐந்தாயிரம் பணப்பரிசு இவ்வாண்டு மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ்வுக்கு இன்ஷாஅல்லாஹ் விரைவில் வழங்கப்படவுள்ளது.

சிறப்புத் தேர்ச்சி (மெரிட்) மூலம் professional / technical படிப்புகளுக்கு சேர்க்கை பெற்று, குடும்ப பொருளாதார நலிவு காரணமாக படிப்பில் சேரத் தயங்கும் காயல்பட்டினத்திலுள்ள முஸ்லிம் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் 1998ஆம் ஆண்டு துவக்கப்பட்ட காயல் மாணவர் நல மன்றம் - கஸ்வா அமைப்பின் ஏற்பாட்டில்,
ஒரு எம்.இ. பொறியியல் பட்டதாரி,
பி.இ. பொறியியல் பட்டதாரிகள் 15 பேர்,
பல் மருத்துவர் - பி.டி.எஸ். ஒருவர்,
பி.ஃபார்ம் படிப்பில் ஒருவர்
என இதுவரை 19 மாணவர்களுக்கு அவர்களின் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம், விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம் என அவர்கள் படிக்கும் அனைத்து ஆண்டுகளுக்கும் தேவைப்படும் முழுச் செலவுகளுக்கும் கஸ்வா சார்பில் முழுப் பொறுப்பும் ஏற்கப்பட்டு, இறையருளால் அவர்கள் இன்று தமது கல்விக்காலத்தை தங்குதடையின்றி பூர்த்தி செய்து, தமது குடும்பத்தைக் காப்பாற்றி வருகின்றனர்.

தற்சமயம்,
எம்.பி.பி.எஸ். படிப்பில் ஒரு மாணவர்,
எம்.டெக். படிப்பில் ஒரு மாணவர்,
பொறியியல் படிப்பில் ஐந்து மாணவர்கள்,
பி.டெக். படிப்பில் ஒரு மாணவர்
என மொத்தம் 8 மாணவர்கள் கஸ்வாவின் முழு அனுசரணையில் கல்வி கற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Professional Courses கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு: நடப்பாண்டில் ப்ளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று, professional courses படிப்பில் சேர மெரிட் மூலம் சேர்க்கை பெற்றுள்ள, காயல்பட்டினத்தைச் சார்ந்த - பொருளாராத்த்தில் நலிவுற்றுள்ள மாணவர்கள் தமது கல்வி உதவித்தொகைக்காக கஸ்வாவிடம் விண்ணப்பிக்கலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.


இவ்வாறு கஸ்வா செயற்குழு உறுப்பினர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
கஸ்வா அமைப்பின் சார்பாக,
செய்யித் மஹ்மூத்,
கவ்லூன், ஹாங்காங்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வெறும் பாராட்டை வைத்து என்ன செய்வது
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபர்) [24 May 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4678

மாஷாஹ் அல்லாஹ்..

கஸ்வாவின் சேவைகளை அறிந்து மகிழ்ச்சியும், பிரமிப்பும் வருகிறது. இப்படி கல்வி கொடுத்து ஒரு குடும்பத்தை தூக்கி விட்டால், அவர் அந்த குடும்பத்தையும், அவர் சுற்றத்தையும் முதலில் கைதூக்கி விடுவார். பாராட்டுக்கள்.

முதல் மாணவனுக்கு வெறும் பாராட்டு மட்டும் செய்யாமல், பரிசும் கொடுத்தது, மிக்க நன்று.

பாராட்டு கண்டிப்பாக தேவைதான், அதை மட்டும் வைத்து என்ன செய்வது, இதுமாதிரி கொஞ்சம் பரிசும் கொடுங்கங்க.... வெல்டன்.

நன்றாக தொடரட்டும் தங்களின் மக்கள் சேவைகள்.. வல்ல அல்லாஹ் துணை இருப்பான்.இன்ஷாஹ் அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Reuter
posted by Ibrahim (Chennai) [25 May 2011]
IP: 58.*.*.* India | Comment Reference Number: 4692

I would be happy If Mr. Salaiyar will be Reuter's news employee for his unbeatable comments ever hitting and flooding our site.

ட்ரை பண்ணலாமே! உங்களுக்கு நிறைய திறமைகள் இருக்கு ஜர்னலிஸ்ட் ஆகுவதற்கு. நான் இன்னும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. முஸ்லிமின்ம்நோக்கம்
posted by T.M.RAHMATHULLAH (72) (kayalpatnam TEL. 043692808526) [25 May 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4695

இன்னா லிலலாஹி....... ராஜிஊன்

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பர்களே! காயலர்களே ஒரூ முஸ்லிமின் நோக்கம் சொர்கத்தை அடைவதாகவே இருக்கவேண்டும்,அதற்க்கு துன்யாவில்தான் முயற்ச்சி செய்தாகவேண்டும். ஆனால் முஸ்லிம்களாகிய நாம் அழிந்து போகும் துன்யாவிற்கு மட்டும் முயற்சி செய்தால் சொர்க்கத்திற்கு முயற்சி எங்கே தேடுவீர்கள்? எப்படி முயற்சி செய்கிறீர்கள்?

இது விசயமாக் பற்பல காயலர் மன்றரரகளை ஹாங்காங் சவூதி, துபாய் போன்ற காயல் நல மன்றர்களுக்கு சுமார் 10, 15 வருடங்கள்ளாக, நேரிலும், web மூலமும் எடுத்து கூறியும் யாருக்கும் இதைப்பற்றிய ஆரம்ப சிந்தனையும் எழவில்லை. அழுகைதான் வருகிறது.

சொல்வதில் தவறு என்றால் நம்மூர் மதரசாக்களை அணுகி பாருங்கள். வூருக்கு வரும்போதாவது கால்மணி நேரம் சென்றுபாருங்கள் காயலார்களே. எத்தனை உள்ளூர் மாணவர்கள் ஓதுகிறார்கள், படிக்குறார்கள்? ஜும்ரா பாடத்தில் 2, 3 உள்ளூர் மாணவர்களே ஒதுகிரர்ர்கள்? ஏன்? நாம் உலக கல்விக்கு மட்டும் வூக்கம் அளிப்பதும் ஒருகாரணம்.

எனவே தவ்பா செய்து இதற்கும் ஊக்கம் அளிக்க முன்வாருங்கள். அல்லாஹ உங்களுக்கும் ஹிதாயத் தருவானாக. ஆமீன்.

இவ்வருடம், ஆலிம், ஆலிமா, ஹாபிழ், ஹாபிழாக்களையாவது கணக்கெடுத்து +2, பத்தாம் வகுப்பு மாணவகளை விட கூடுதல் வூக்கம் கொடுத்து உதவியும் செய்து, அல்லாஹ, ரசூல் மர்ர்கம் பேணியவர்களாக மாறுவோமாக!

இதற்கென முறைப்படி மஷூரா செயுங்கள்!

இங்கனம்
அரூசுல்ஜன்னாஹ் மத்ரச்துன் நிசுவானுக்காக,
T,M.Rahmthullah,
FOUNDER,AROOSULJANNAH MADHRASATHUN NISWAAN.
Kayalpatnam
VISIT . web.www,aroosuljannah.8m.com.
jazaakumullaah kharan jazeelah.
25-5-2011 wed 21=6=1432.hijri.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இது கொடுமை இல்லையா.
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [25 May 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4698

அஸ்ஸலாமு அலைக்கும்..

சகோ. ரஹ்மதுல்லாஹ் காக்கா அவர்களின் கருத்தை படிக்க ஆரம்பித்த உடன் (இன்னா லிலலாஹி....... ராஜிஊன்- என்பதை ), தவறுதலாக கருத்தை இங்கு பதித்து விட்டார்களோ என்று தொடர்ந்தால், அவர்கள் சரியான ரூட்டில்தான் சென்றுள்ளார்கள் என்று தெரிகின்றது. அவர்கள் கூற்று முற்றிலும் உண்மை.

கொஞ்சம் மதரசாக்களில் பார்த்தால் புரியும், நம் பிள்ளைகள் எத்தனை பேர் ஹாபிழ், ஆலிம் ஆக பயலுகிறார்கள் என்று.

சாதரணமாக வழமை போல குரான் ஓத பள்ளிக்கு அனுப்புவதில் எத்தனை பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

டியூஷன்க்கு நேரம் ஆகிவிட்டது, சார் சப்தம் போடுவார், நாளைக்கு பள்ளிக்கு ஓத போகலாம் என்ற வசனத்தை அடிக்கடி வீடுகளில் கேட்கலாம். மாற்றி கேட்டது உண்டா? பள்ளிக்கு ஓத நேரம் ஆகிவிட்டது, பள்ளிக்கு போ, நாளை டியூஷன்க்கு செல்லலாம், என்று.

இன்னும் ஒன்றை சிந்தித்து பாருங்கள், ஜும்மாவிற்க்கு ஜும்மாஹ் நடத்த நம் ஆலிம் வரவில்லை என்றால், வேறு ஊரில் இருந்துதான் ஆலிமை கொண்டு வர வேண்டியது உள்ளது. இவ்வளவு பெரிய ஊரில் ஆலிமுக்கு பஞ்சம்.. இது கொடுமை இல்லையா.

சிந்திப்பவர்கள் சிந்தியுங்கள், என்னையும் கூடதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved