Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:40:08 PM
சனி | 4 மே 2024 | துல்ஹஜ் 1738, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்02:45
மறைவு18:28மறைவு15:00
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4705:1305:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:41
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6108
#KOTW6108
Increase Font Size Decrease Font Size
சனி, மே 7, 2011
உண்டியல் நன்கொடையாக ஒன்றரை லட்சம் வசூல்! சிங்கை செயற்குழுக் கூட்டத்தில் அறிவிப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2748 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நகர்நலப் பணிகளுக்காக மன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட உண்டியல்கள் மூலம் இந்திய ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் தொகை திரட்டப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு தெரிவித்துள்ளது.

கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் 06.05.2011 வெள்ளிக்கிழமையன்று இரவு 07.30 மணிக்கு மன்றத்தின் பதிவு அலுவலகத்தில் நடைபெற்றது. ஹாஜி கே.எம்.முஹம்மத் ஸலீம் தலைமை தாங்கினார். ஜனாப் முஹ்யித்தீன் ஸாஹிப் முன்னிலை வகித்தார்.

மன்றப் பணிகளுக்கு சிறப்பு விருந்தினர் பாராட்டு:

துவக்கமாக, மன்றத் தலைவர் ரஷீத் ஜமான் அனைவரையும் வரவேற்று சிற்றுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, சிங்கை காயல் நல மன்றம் குறித்த தனது பார்வை குறித்து சிறப்பு விருந்தினர் ஹாஜி கே.எம்.முஹம்மத் ஸலீம் விவரித்துப் பேசினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் சிங்கை காயல் நல மன்றம் அனைவருக்கும் முன்னுதாரணமாய்த் திகழ்வதாக அப்போது அவர் தெரிவித்தார்.



செயலர் உரை:

பின்னர், கடந்த கூட்ட நிகழ்வுகள், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அவை செயல்படுத்த விதம் குறித்து மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் கூட்டத்தில் விளக்கிப் பேசியதோடு, மன்றத்தின் நடப்பு வரவு-செலவு கணக்கு குறித்த விபரங்களைத் தெரிவித்தார். கூட்டம் அதனை ஒருமனதாக அங்கீகரித்தது.

விண்ணப்பங்கள் பரிசீலனை:

பின்னர், காயல்பட்டினம் நகரின் ஏழை-எளிய பொதுமக்களிடமிருந்து பல்வேறு தேவைகளுக்காக உதவித்தொகை கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களை,
ரஷீத் ஜமான்,
ஏ.எம்.உதுமான்,
எம்.எம்.மொகுதூம் முஹம்மத்,
கே.எம்.என்.ரிஃபாஈ
ஆகியோரடங்கிய பரிசீலனைக்குழு பரிசீலித்தது.

உண்டியல் திறப்பு:

பின்னர், நகர்நலப் பணிகளை அதிகளவில் செய்திடுவதற்காக தேவையான நிதியாதாரத்தைத் திரட்டிடும் பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்ட உறுப்பினர் உண்டியல் நிதி வசூல் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட உண்டியல்கள் கூட்டத்தில் திறக்கப்பட்டது. இம்முறை இந்திய ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் தொகை வசூலாகியுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.



இதுகுறித்து கருத்து தெரிவித்த மன்ற வழிநடத்தி ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், நகர்நலப் பணிகளுக்காக நம் உறுப்பினர்கள் ஆர்வத்தோடு உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி வருவது பெரிதும் மகிழ்வூட்டுவதாகவும், அதே நேரத்தில் ஒரு சில உண்டியல்களின் எடை குறைவாகவும், வெற்றிடம் கூடுதலாகவும் இருந்தது என்றும், உண்டியலில் உறுப்பினர்கள் எவ்வளவு தொகை தருகின்றனர் என்பது குறித்த தனிப்பட்ட விபரங்கள் எதுவும் வெளியிடப்படாது என்பதால், உறுப்பினர்கள் தமது நிதியுதவிகளை தாராளமாக வழங்கிடுமாறும் கேட்டுக்கொண்டார்.



இலச்சினை தேர்வு:

பின்னர், மன்றத்திற்காக பி.எம்.ஹுஸைன் நூருத்தீன் அவர்களால் உருவாக்கப்பட்ட இலச்சினை மன்றத்தின் இலச்சினையாக அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டது.

வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் மீது மேல்நடவடிக்கை:

சிங்கையில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக இதுவரை பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனத்தாரிடம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த மேல் நடவடிக்கைகளை மன்ற வழிநடத்தி ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் பொறுப்பேற்று செயல்படுத்த கூட்டம் அனுமதியளித்தது.

அடுத்த பொதுக்குழு:

மன்றத்தின் அடுத்த பொதுக்குழுவை 25.06.2011 அன்று சிங்கை செந்தோஸா பாலவன் கடற்கரையில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இக்ராஃவுக்கான பங்களிப்புகள்:

இக்ராஃவின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், “ஒருவர் ஒருவருக்கு கல்வி அளித்தல்“ என்ற நம் மன்ற முழக்கத்தின் படி நடப்பு அனுசரணைத் தொகை, வரும் வருடங்களுக்கான தொகை மற்றும் இக்ராஃ உறுப்பினர் சந்தா தொகை உள்ளிட்ட அனைத்தும் நிலுவையின்றி செலுத்தப்பட்டுவிட்டதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வகைக்கு நிறைவான ஒத்துழைப்புகளை நல்கியமைக்காக இக்ராஃவின் நடப்பு தலைவரும், சிங்கை மன்றத்தின் வழிநடத்தியுமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் உறுப்பினர்களனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். இவ்வம்சத்தில் முழுமுனைப்புடன் செயலாற்றிய மன்ற உறுப்பினர் டபிள்யு.கே.எம்.முஹம்மத் ஹரீஸ் அவர்களுக்கு அவர் குறிப்பாக நன்றி தெரிவித்துக்கொண்டார்.

வீடு புனர்நிர்மாணத்திற்கு உதவி:

குடியிருக்கும் வீடு புனர்நிர்மாணப் பணிக்காக மன்றத்தின் சார்பில் ரூபாய் ஐம்பதாயிரம் தொகை ஒதுக்கீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது.

CFFC அறிக்கையை இந்திய தூதரிடம் சமர்ப்பித்தல்:

காயல்பட்டினம் நகரில் புற்றுநோய் காரணிகளைக் கண்டறியும் குழுவினரான Cancer Fact Finding Committee – CFFC சார்பில் அனுப்பித் தரப்பட்டுள்ள அறிக்கையை சிங்கப்பூருக்கான இந்திய தூதரிடம் சமர்ப்பிப்பதற்காக தேதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மலர் வெளியீடு:

மன்றத்தின் சார்பில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ள சிறப்பு மலர் பணிகளை 15.05.2011 முதல் துவக்குவதென தீர்மானிக்கப்பட்டது.

விவாதிக்க வேறு அம்சங்கள் எதுவுமில்லாத நிலையில், ஹாஃபிழ் அஹ்மத் துஆவுடன் இரவு 09.30 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தகவல்:
மொகுதூம் முஹம்மத்,
செயலாளர்,
காயல் நல மன்றம், சிங்கப்பூர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. உளமார்ந்த வாழ்த்துக்கள்
posted by கவிமகன் காதர் (கவிமகன் காதர்) [07 May 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4251

திறந்தது வெறும்
உண்டியல் அல்ல
உள்ளங்கள்!
சிந்துவது வெறும்
சில்லறை அல்ல
ஏழைகள் சிந்தும்
கண்ணீர்க்கு கல்லறை!

ஒருவர்,ஒருவருக்கு
கல்விதரும்
உன்னதத்திட்டம்!
ஒரு மெழுகுவர்த்தி
ஓராயிரம் வர்த்திகளுக்கு
உயிர்கொடுக்கும்
அற்புதம்!!

வேலை வாய்ப்புத்திட்டம்
படித்தவர் வயிற்றுள்
பாலை வார்க்கும் திட்டம்!

தேர்வான இலச்சினையும்
சோர்வில்லா லட்சியமும்
வார்க்கட்டும்
வறுமையற்ற காயலை!!

வரவிருக்கும் மலருக்கும்
உங்கள் நல் மனதிற்கும்
உளமார்ந்த வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வாழ்த்தும் துவாஉம்.........
posted by T.M.Rahmathullah(72) (Kayalpatnam 280852) [07 May 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4257

அஸ்ஸலாமு அலைக்கும்!

அல்ஹம்து லில்லாஹ்! ஒன்றுக்கு பத்து நன்மைகள் தரும இந்தவிதமான உலகாதாயமான விசயங்களுக்கு முயற்சிகள் பண்ணுவதுபோல் ஒன்றுக்கு ஏழு லட்சம் வரை இம்மை மறுமைகளில் நன்மைகளை ஜிஹாது போன்ற நன்மைகளை அள்ளி,அள்ளி தரும். சன்மார்க்க கல்விகளுக்கும், உழைக்கும் மாணவர, முதர்ரிசுமார், மோஜின்மார் இமாம்கள் ஆகியவர்களுக்காக சங்கங்கள் அமைத்து உதவிக்கரம் நீட்டிட நம் காயலர்களுக்கு மனதில் ஊசாட்டங்களாவது தருவாயாக! ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. புதுக்குறள்....?
posted by M.N.L.முஹம்மது ரஃபீக் (ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.) [08 May 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4264

புதுக்குறள்:
“சிறுதுளி சிதறாமல் சேர்போர்தம் செயலாக்கம்-ஆங்கே
பெருவெள்ளப் பயன்தருமாம் மகர்க்கு.’’

“சிங்கை நலமன்றம் சீர்தூக்கிச் செயலாற்றின்,
சங்கைப்பதிகாயல் பஞ்சம் இலர்.”

குசும்பு:
கவிமகன் காதர் என்னை மன்னிப்பாராக! சும்மா ஒரு இதுக்கு(!) குறள் போலெ... ட்ரை பண்ணிப்பார்த்தேன்! அவ்ளோ தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved