Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:35:02 AM
வெள்ளி | 10 மே 2024 | துல்ஹஜ் 1744, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4312:2003:3806:3307:47
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:59Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்07:43
மறைவு18:28மறைவு20:50
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4505:1105:37
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5019:1619:42
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5959
#KOTW5959
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஏப்ரல் 10, 2011
தேர்தல் 2011: “துட்ட எங்கே...?” வாக்காளர் எதிர்பார்ப்பு! அலுவலர் திகைப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3925 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களுக்கு அவர்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட வாக்காளர் சீட்டு (பூத் ஸ்லிப்) வீடு வீடாக வினியோகிக்கப்பட்டுள்ளது.

காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவிலுள்ள ஒரு வாக்காளர் வீட்டில் அவர்களது வாக்காளர் சீட்டை வினியோகிப்பதற்காக அலுவலர் அந்த வீட்டின் கதவைத் தட்டியபோது, ஆர்வத்துடன் திறந்த அங்குள்ள பெண்மணி வாக்காளர் சீட்டை அலுவலர் அவரிடம் கொடுத்து கையெழுத்து கேட்டவுடன்,

“துட்ட எங்கே...? துட்டு தராம நான் எதுலயும் ஒரு கையெழுத்தும் போட மாட்டேன்!” என்று தீர்க்கமாக தெரிவித்தாராம்.

இதனால் அதிர்ந்துபோன அந்த அலுவலர், “இது கட்சிக்காரங்க தர்ற சீட்டு இல்லமா... தேர்தல் ஆணையம் தர்றது...” என்று விளக்க,

“யார் தந்தா எனக்கென்ன...? துட்டு தந்தா வாங்கிட்டு கையெழுத்து போடறேன்... இல்லாட்டி எதுவும் வேணாம்...!” என்று அதிரடியாக சொல்லிவிட்டாராம்.

நொந்துபோய் திரும்பிச் சென்ற அவரை மறுபடி அந்த வீட்டிற்கு அழைத்துச் சென்ற தெருவாசி ஒருவர், அப்பெண்ணிடம் பணிவாக விளக்கம் கூறி வாக்காளர் சீட்டை ஒப்படைத்து கையெழுத்து பெறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தகவல்:
மஞ்சுளா சாமு,
அப்பாபள்ளித் தெரு, காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வாழ்க பணநாயகம்!
posted by கவிமகன் எம்.எஸ்.அப்துல் காதர் (துபாய்) [10 April 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3874

தேர்தல் ஆணைய அலுவலர் வேண்டுமானால் அதிர்ச்சி அடையலாம். இதில் நாம் அதிர்ச்சியோ ஆச்சர்யமோ அடைவதற்கு ஒன்றுமில்லை. கடந்த இடைத்தேர்தலில்,மார்க்கசட்டத்திற்கும் இந்திய இறையான்மைக்கும் புறம்பாக,கைக்கூலி வாங்கியதோடு நில்லாமல்,வாங்கினால் என்ன தப்பு? என்று டிஸ்கசன் போர்டில் வாய்கிழிய விவாதித்த நண்பர்களுக்கு ,"துட்ட எங்கே" என்ற இந்த நல்ல செய்தித் தொகுப்பை அர்ப்பணம் செய்வோமாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ISTHIKHAARAA DHUA FOR ELECTIONS
posted by T,M,RAHMATHHULLAH (kayalpatnam TEL. 043692808526) [10 April 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3876

NAH..WANUSALLY...RASOOLI...KAREEM!

S P R I T U A L E L E C T I O N...

OH! BROTHERS IN ISLAAM !!

PLS KEEP IN MIND AND CONVEY OTHERS THE FOLLOWING MATTERS, REGARDING ONE OF THE WAYS TO SELECT AND VOTE FOR RIGHT CANDIDTAES ON THE 13TH APRIL 2011, OF TAMIL NADU MLA ELECTION.

THAT IS TO DO PRAY SALAATHUL ISTHIKHAARA WITH COMPLETE CONDITIONS TOLD BY SUNNAH UPTO 7 TIMES IN MODE OF 2 BY 2 RAKAATH OR AS MUCH AS U CAN. AFTER FINISHED YOUR ISTHIKHAARAA PARAYER IMMEDIATELY RECITE WITH IKHLAAS THE CONCERNED DHUAA (ASK WITH YOU CONFIDENT MUALLAIMS -HAZRETHS- IF NOT KNOWN) THAT IS ISTHIKHAARAA DHUA. WHICH WAS TAUGHT TO IBN ABBAS (RAZHI....) BY OUR PROPHET SAll..... AND WE DEFINITELY SAY IT IS MOST RIGHTFUL, SPECIAL AND ONLY PROPER MODE FOR THIS KIND OF FACTS AND OTHER MATTERS ALSO, WHICH WE CANNOT ABLE TO DECIDE OR IN COMPLICATION TO GET DECISION AT ANY TIME, ANY WHERE. INSHAA ALLAAH !(REFER BUKHARI HADHEETH)

2NDLY THESE ALL ARE PRACTECING AND ACHIEVED SUCCESS SEVERAL TIMES BY ELDERS OF MOMIN AND AWAAMS TOO. SO YOU MAY TRY FOR THE SAKE OF ALLAH, AND GET REWARDS ANDSATISFIED YOURSELVES. MAY ALLAH QABOOL AND BLESS US EVER./tmr.kpm 10-4-2011 =sun=eve 10-4-1432

(N.B: ONE WHO DO PRAY ISTHIKHAARAA HE WILL NOT GET GRIEVENESS -MANACHANJALAM- EXTRACT OF HADHEETH.)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. சோதனை என்று தான் சொல்லணும்
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [11 April 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3878

இப்படி ஓட்டுக்கு துட்டு கொடுத்து, இலவசங்கள் கொடுத்து ஒரு தலைமுறையையே பாழ்படுத்தி வைத்து இருக்கின்றார்கள்.

சாதனைகளை சொல்லி ஓட்டுகேட்ட காலம் மாறி விட்டதை, சோதனை என்றுதான் சொல்லணும்.

Moderator:Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. முடிவும் உண்டு,விடிவும் உண்டு எங்கள் விரல்களிலே...
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்.(ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.) [11 April 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3879

இன்னும் ரெண்டு தெருவுக்குப் போகச் சொல்லுங்க அங்கே போர்வை எங்கே? செல் ஃபோன் எங்கே? லேப்டாப் எங்கே? இது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் கேட்பாங்க...! அரசியலா நடத்துறங்க? அயோக்கியத்தனமே தவிர வேறேதுமில்லை! இதில் அனைத்துக் கட்சிகளும் அடங்கும்.

“காசு கொடுத்து ஓட்டு வாங்கும் கள்வர்க்கூட்டமடா -இது
நாட்டை ஆள வேடம் போட்டு நசுக்கும் கூட்டமடா,
நம்மை பொசுக்கும் கூட்டமடா!

அரசியலுக்கு அடித்தளமென்றால் லஞ்சம் அதுதானே,
அந்த லஞ்சம் நம்மை ஆள்வதாலே பஞ்சம் காண்போமே,
கொடிய பஞ்சம் காண்போமே!

இலவசமென்றதும் இளித்து நிற்கும் ஈனத்தனத்தாலே -உன்
இரத்தம் உறைந்து உழைப்பை இழந்து வீழ்வாய் மண்மேலே, மக்கள் ஓட்டை விலைக்கு வாங்கும் அரசியல்வாதிகளே!

அதனால் ஆட்சியமைத்து அரியனை ஏறி அடித்த கொள்ளைகளால் நீங்கள் அகப்படப் போகும் நாள் வெகுதூரம் என எண்ணிவிடாதீகள்!

முடிவும் உண்டு, விடிவும் உண்டு எங்கள் விரல்களிலே, அதை அழுத்தும் போதே தெரிந்து போகும் அழிபவர் யாரென்று”


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Payment to us 5 years once.
posted by Mohamed Abdul Kader (Al Khobar) (Al Khobar) [11 April 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3888

Who one will come to the regime, corruption never going to be an end. (From Parliment to Municipalty).

They will ask money for any kind of work. The social work gone with Tsunami.

It is a time for them to pay to us once in 5 years.

This is an invenstment for political party. You people stop them to do the business without investment. Let them invest.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. எறும்புக் கூட்டமாய் இருப்பதே மேல்!!!
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [11 April 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3889

வலி சொல்ல வந்த இடத்தில்
வரிக்கு என்ன விதிமுறை
என்றாவது மாறுமா என் தலைமுறை!

என் விரல் நுனியில்
மையிட;
விலை நடக்கும்;
இடம் கொடுத்தால்
பை நிறையும்!

குரல் கொடுக்க
விரல் விட்டு
எண்ணும் கூட்டம்;
அதுவும் விரல் வேண்டும்
ஓட்டுக்கு என்பதால்!
இனியாவது
கசப்புகளைக் காலாவதியாக்கி
கரம் கோர்ப்போம்
பகைத் தீர்ப்போம்!

குழு குழுவாய் தனித்திருந்து
புழுவாய் அழிவதைவிட;
அடிக்க வரும்
எதிரியை கடித்துவிட்டு சாகும்
எறும்புக் கூட்டமாய் இருப்பதே மேல்!!!

வழிக்காட்டுவோம்
வருங்கால தலைமுறைக்கு;
விட்டுவிட்டால்
வீதியில்தான் நிற்ப்போம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. வருங்கால இந்தியா நான்!
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [11 April 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3890

நான் படித்த கவிதை...

அன்னையை ஒட்டி
நின்ற என்னை
எட்டி நிற்கச் சொல்லி;
வாசலுக்கு வருகைப்
போடச் சொன்னாள்!

ஒலிப்பெருக்கியின்
ஓசையைக் கேட்டதும்;
ஓடி வா;
எங்கிருந்தாலும் என்னைத்
தேடிவா என்றாள்!

அலறும் சப்தத்துடன்
உயரும் குரலுடன்;
ஓர் வண்டி
என் தெருவை மிதிக்க;
ஓடிச் சென்றேன்;
அன்னையைக் காண!

ஒலிப் புலனை
ஓங்கி அடித்து;
ஒலிப்பெருக்கியோ
ஒய்யாரமாய் என்
வீட்டில் நிற்க;
வாக்குக் கேட்டு
வரிசையாய் ஓர் கூட்டம்!

அம்மாவிடம் கொடு என;
அன்பாய் என் தலைக் கோதி;
மறக்காமல் நம் சின்னம்;
என்று பணத்தைக்
கரத்தில் திணித்து;
பக்கத்து வீட்டுப்
படியேறியது
வெள்ளை ஆடைக் கூட்டம்!

முடிந்தது என் வேலை என்று;
அம்மாவின் முந்தாணையில்
முறுக்கிக் கொள்ள;
மெல்ல நகர்ந்தேன்;
அடுப்படிக்கு!

மீண்டும் திருப்பினாள் எனை;
அடுத்த வண்டி வரும் போதும்
ஓடி வா;செல்லம் என்று!

வாசலுக்கு விரையும்
வருங்கால இந்தியா
நான்!

நன்றி - யாசர் அரஃபாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. மக்கள் திருந்தாத வரை மக்களை ஆள்பவர்கள் திருந்த போவதில்லை
posted by Moulavi.Hafil M.S.Kaja Mohideen.Mahlari (Singapore.) [11 April 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 3896

ஆஹா! மிகவும் உசாரான ஒரு பெண்மணிதான்.இவனுங்க ஆட்சிக்கு வந்தாலும்,வராவிட்டாலும் நமக்கு என்ன பெரிதாக கிடைத்துவிட போகின்றது.ஆகவே! இதுதான் சரியான நேரம்.இப்போ கேட்டா தான் எதாவது கிடைக்கும்.என நினைத்து விட்டார்போலும்.பாவம் அதையும் கிடைக்க விடாமல் செய்து விட்டார்கள்.ஆக இவ்வளவு கேவலமாக ஆகிவிட்டது.நமது அரசியலும்,அரசியல்வாதிகளும்.மக்கள் திருந்தாத வரை மக்களை ஆள்பவர்கள் திருந்த போவதில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Vote for cash
posted by Meera Sahib (Kayalpatnam) [12 April 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3908

Assalamu alaikkum

It shows the lack of awareness about Independance and democracy. Democracy is sold at stalls in exchange for money. The present generation is currupted by these politicians. Tomorrow we are going to witness or hear undemocratic practices during polling. Let Allah saves so many lives . We have no other way than to pray Allah for a peaceful polling. Pls let the citizen exercise their rights to choose their representative in harmony. But I feel Its nothing but a dream in our country. We can witness even the ladies will jump into the arena to give Kalla Oottu. Oh India! this is your fate! Your citizen cannot reveal their aspirations , willingness and the sense of choosing their reps! Oh India! you are the world's largest democratic nation.........?????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Good catch !
posted by Shakeel (Bangalore) [12 April 2011]
IP: 202.*.*.* India | Comment Reference Number: 3915

Good catch Samu tholappa.

Although an amusing news item, there is a lot to learn from this about the state of a section of people and their outlook to elections.

This is what they had seen over the years during elections and thats why they expect it.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. உன்னை சொல்லி குற்றமில்லை
posted by salih (Hongkong) [12 April 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 3923

திணை விதைத்தவன் திணை அறுப்பான். மக்களுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியது யார்? மார்க்க சட்டத்திற்கும் இந்திய இறையாண்மைக்கும் புறம்பாக யார் நடந்தார் யார் நடத்திக் காண்பித்தார் என்பதை திருப்பி கேட்டுக்கொள்ளவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. காலம் செய்த கோலமடி!
posted by கவிமகன்.எம்.எஸ்.அப்துல் காதர். (துபாய் ) [12 April 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3924

மொட்டக்கடுதாசி ஒன்னும் ரொம்ப நாளா வரலியேன்னு நேத்துதான் நெனச்சேன்!

நல்லத நெனச்சா லேட்டாகுது! வீணாப்போனத நெனச்சா உடனே நடக்குதுய்யா!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
திடீர் மழை  (10/4/2011) [Views - 2532; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved