Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:22:01 AM
வியாழன் | 2 மே 2024 | துல்ஹஜ் 1736, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:10
மறைவு18:27மறைவு13:11
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5859
#KOTW5859
Increase Font Size Decrease Font Size
வியாழன், மார்ச் 24, 2011
நகரின் தெரு விளக்குகள் பராமரிப்பு தனியார்மயப்படுத்தப்படுகிறது!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2937 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் உள்ள அனைத்து தெருவிளக்குகள், கோபுர விளக்குகள் போன்றவைகளை பராமரிக்கும் பணி தனியார்மயப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த தீர்மானம் ஜனவரி 24 அன்று நடந்த நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் எண் 817 மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அவைக்குமுன் வைக்கப்பட்ட பொருள் கீழ்வருமாறு:-

இந்நகராட்சியில் உள்ள 18வார்டுகளுக்கும் தெருவிளக்குகள் பராமரிப்பதற்கு என நிரநதர பணியாளர்கள் கிடையாது. காயல்பட்டணம் வளர்ந்து வரும் பெருநகராமாக உள்ளது. ஆகவே மிகதிருப்திகரமாக தெருவிளக்கு பராமரிக்க இயலவில்லை. எனவே தெருவிளக்கு பராமரிப்பிற்குரிய அனைத்து பணிகளையும் உள்ளடக்கி தனியார்மயமாக்கும் விதமாயும் வருடாந்திர தெருவிளக்கு உதிரி சாமான்கள் மற்றும் பணியாளர்கள் சம்பளம், இவையாவும் நகராட்சி செய்யும் செலவினங்களைவிட தனியார்மயமாக்குவதால் நகராட்சிக்கு செலவினங்கள் குறையும். ஆகவே 2011-2012ஆம் ஆண்டிற்குறிய நகராட்சி தெருவிளக்கு பாராமரிப்பு தனியார் மயமாக்கும் கேட்டுக் கொண்ட நகர்மன்றத்துணைத்தலைவர் எம்.எ.கசாலி மரைக்கார் அவர்களின் கடிதம் மன்றத்தின் முடிவிற்கு

அலுவலக குறிப்பு:
நகராட்சிப் பகுதியில் 1185 குழல் விளக்குகளும் 269 சோடியம் விளக்குகளும், 100 எண்ணம் எனர்ஜி சோலார் விளக்குகளும் 5 எண்ணம் உயர்மின ; கோபுரவிளக்குகளும் ஆக மொத்தம் 1554 விளக்குகளும் உள்ளது. இவற்றினை முறையாக பராமரிக்க நகராட்சி பணியாளர்கள் இல்லை. பணி ஏற்பாட்டின் அடிப்படையில் 3 பணியாளர்கள் மூலம் பராமரிக்க பணி நடைபெற்று வருகின்றது. இவர்களால் தெருவிளக்கு பராமரிப்பு பணிகளை செவ்வனே செய்ய இயலவில்லை. எனவே நகரில் உள்ள 18 வார்டுகளுக்கும் தெருவிளக்கு பராமரிக்க பணிகள் செய்ய தனியார் வசம் ஒப்படைக்கப்படும் இதற்காகும் தோராய செலவு ஓராண்டிற்கு ரூ.12.00 லட்சம் மன்றம் அனுமதிக்கலாம்.

நகராட்சி முடிவு:
அங்கீகரிக்கப்பட்டது


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Nalla oru vaipu
posted by sayna (Bangkok) [24 March 2011]
IP: 203.*.*.* Thailand | Comment Reference Number: 3510

Assalamu Alaikum,
kayal sagotharar galay nalla oru vaipu,
Ithai naluva vidatheergal,
Velie orukarar galay tender yaduka vidatheergal

Nama oorai sarthavargalay ithai yadungal
nalla muraiel saithu kudungal,
Oril niraya nanbargal veli illamal irukeerargal


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. சபாஷ்.... சரியனமுடிவு.....
posted by IBRAHIM (CHENNAI) [24 March 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3536

நீங்கள் எடுத்த முடிவு சரியானதுதான்

நகராட்சி என்ற விளக்கு அணைவதற்கு நாட்கள் நெருங்குவதால் கடைசியான இந்த வாய்ப்பினை (கவுன்சிலர்கல்) பயன்படுதிகொள்ளவும்

வரும் நகரமன்ற தேர்தலில் படித்த, நேர்மையான, சமுதாய சிந்தனை கொண்ட நல்லவர் வர வேண்டும்

இப்போது இருக்கின்ற 18 பேர்களும் மாற்ற பட வேண்டும்.... வரும் நகமன்ற உறுப்பினர்கள் லஞ்சம் பெறாத கண்ணியமிக்கவராக இருக்க வேண்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. உள்ளூர் காண்ட்ராக்ட்டர்களே!
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [25 March 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3540

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அனைத்து வகையான தெருவிளக்குகளையும் பராமரிக்கும் பணி தனியார்மயப்படுத்தப்பட்டுள்ளது என்பது பல வகைகளில் வரவேற்க வேண்டிய திட்டம்.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் அதன் மூலம் நிரந்தர பணியாளர்கள் இல்லை என்ற குறை நீக்கபட்டு, இவ்வளவு நாட்களாக எரியாதிருந்த தெருவிளக்குகள் எல்லாம் இன்ஷா அல்லாஹ்! முறையாக எரியும்.

விளக்குகள் எரியாதிருந்தாலோ, உடைந்திருந்தாலோ அல்லது வேறு எந்த இடையூறும் மக்களுக்கு இருந்தால் ஒப்பந்தக்காரரும் முறையாக பராமரிப்புச் செய்வார், நகராட்சியும் அதிகாரத் தோரணையில் உத்தரவு பிறப்பிக்கும்.
-----------------------------------------
மக்களே! ரோடுகள் போடுவதும் கூட தனியாரிடம்தான் ஒப்பந்தம் கொடுத்து போடுகிறார்கள் அது எப்படி? நன்றாகவா இருக்கிறது? அதில் நகராட்சியின் அதிகாரம் எங்கே? என்று கேள்வியை எழுப்பாதீர்கள்!!! காரணம் ரோடு போடுகிற ஒப்பந்தத்திற்கு மேலிருந்து கீழ்வரை (நகராட்சி அதிகாரி - வார்டு மெம்பர்) பெரும்பாலானவருக்கு பங்கு உண்டு அதனால் யாராலும் தட்டிக் கேட்க முடியாது.

ஆனால் இந்த தெருவிளக்கு ஒப்பந்தம் விட்டால் அல்லது ஒப்பந்தம் விட்டிருந்தாலும் அதில் சிலருக்கு மட்டுமே பங்கு இருக்கும் - பெரும்பாலானவருக்கு பங்கு இருக்காது.

பழைய முறைப்படி நகராட்சி தெரு விளக்குகளை பராமரிப்பு செய்துகொண்டிருக்கும்போது அதற்காக அவர்கள் வாங்கிய உதிரிபாகங்கள் மற்றும் மராமத்து செலவுகள் வகையில் பங்கு வாங்கி கொண்டிருந்த கூட்டம் இதில் பங்கு கிடைக்காததால் அதிகாரத்தோரணையில் உத்தரவுகளை பிறப்பிக்கும்.
----------------------------------------
இனிமேல் பார்க்கலாம் மின் வாரிய ஊழியர்களுக்கும் - நகராட்சி அலுவலக ஊழியர்களுக்கும் உள்ள தொடர்பு எத்தகையதாக இருந்தது என்பதையும்.

கடற்கரையில் போடப்பட்ட மின்னொளி விளக்கில் என்ன ஊழல் நடந்தது என்பதையும், இன்னும் பல, பல விசயங்களையும் பொறுத்திருந்து பார்த்தால் எல்லாம் விரைவில் வெட்ட வெளிச்சமாகும் - அதுதான் தெருக்கள் எல்லாம் வெளிச்சமாகப் போகுதே அந்த வெளிச்சத்தில்.
-------------------------------------------
உள்ளூர் காண்ட்ராக்ட்டர்களே!

தெரு விளக்குகள் பராமரிப்பு பணிகளுக்கு காண்ட்ராக்ட் எடுப்பதற்கு முயற்சிக்கலாமே இன்ஷா அல்லாஹ்! உங்களுக்கு வாய்ப்புக்கள் கிடைக்கக்கூடும்.

என்னைப் பொறுத்தவரை 12 இலட்சம் என்பது கூடுதலான தொகையாகத்தான் தெரிகிறது, உங்கள் அனுபவங்களின் மூலம் அலசிப்பார்த்து ஆலோசித்து குறைந்தத் தொகைக்கு காண்ட்ராக்ட் எடுத்து நல்ல முறையில் செய்து ஊருக்கும் உதவி, நீங்களும் நேர்மையான முறையில் சம்பாதிக்கலாமே. முயற்சி செய்து பாருங்கள் நேர்மையான வழியில், இன்ஷா அல்லாஹ்! கிடைக்கும்.

வல்ல அல்லாஹ்! நம் ஊர் நகராட்சியை நேர்மையாளர்கள் நிறைந்த சபையாக ஆக்கி வைப்பானாக ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
DCW 53வது கால்கோள் தின விழா!  (24/3/2011) [Views - 3053; Comments - 5]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved