Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:41:14 PM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5790
#KOTW5790
Increase Font Size Decrease Font Size
சனி, மார்ச் 12, 2011
சட்டமன்றத் தேர்தல் 2011: இ.யூ.முஸ்லிம் லீகிற்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்குமா?
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4723 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (36) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வரும் ஏப்ரல் 13ஆம் தேதியன்று நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தம் கட்சிக்கு 63 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டுமென காங்கிரஸ் பிடிவாதமாக இருந்தது.

இதனால், கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று அஞ்சப்பட்டதாகவும், எனவே மதச்சார்பற்ற இக்கூட்டணியில் பிளவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு தம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மூன்றிடங்களில் ஒன்றைத் தருவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவரும், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சருமான இ.அஹ்மத் தலைமையில் அக்கட்சி வாக்களித்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில், அண்மையில் நாகூரில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழுவில், வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிப்பதெனவும், தம் கட்சியின் சார்பில் 8 தொகுதிகளைக் கேட்பதெனவும், குறைந்தபட்சம் 3 தொகுதிகளிலாவது போட்டியிடுவதெனவும், தனி சின்னத்திலேயே போட்டியிடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டதாகவும்,

பொதுக்குழு தீர்மானத்தை மதியாமல், ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகளில் ஒன்றை மாநில தலைமை தன்னிச்சையாக விட்டுக்கொடுத்துள்ளது பெரும் தவறு என்றும், அத்தவறுக்கு பொறுப்பேற்று மாநில தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டுமேனவும், அவ்வாறு விலகாவிடில் தாங்களே ஒரு தலைவரை ஏற்படுத்த வேண்டி வரும் என்றும் அக்கட்சியின் மகளிரணி மாநில அமைப்பாளரும், மறைந்த மாநில தலைவர் அ.கா.அப்துஸ்ஸமதின் மகளுமான ஃபாத்திமா முஸஃப்ஃபர் செய்தியாளர் நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மதச்சார்பற்ற கூட்டணி பிளவுற்று விடக்கூடாது என்பதற்காக தனக்குக் கூட தெரியாமல் கிடைத்த மூன்று தொகுதிகளில் ஒன்றை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விட்டுக்கொடுக்க முன்வந்தது திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமிழக முதல்வருமான மு.கருணாநிதியை மிகவும் நெகிழச் செய்ததாகவும், அதற்கு பரிசாக தந்ததையும், தர வேண்டியதையும், தம்பியையும் தலைவர் தந்துள்ளார் எனவும், ஓரிரு நாட்களில் அந்த நற்செய்தி முழுமையாகத் தெரிய வரும் என்றும் தி.மு.க. சார்பில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அதிகாரப்பூர்வ வலைதளம் தெரிவிக்கிறது.

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளபடி “தந்ததை” என்பது தரப்பட்ட 3 தொகுதிகள் எனவும், “தர வேண்டியதை” என்பது கூடுதல் தொகுதிகளாக இருக்கலாம் எனவும், “தம்பியை” என்பது, தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் தலைவர் திருப்பூர் அல்தாஃபிடம் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசி, அவரது கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீகுடன் இணைய மேற்கொண்ட முயற்சி என்றும் பொருளறியப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்த சரியான விளக்கம் ஓரிரு நாட்களுக்குள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பொறுப்போமே
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபர்) [12 March 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3223

எப்படியோ, எல்லோரும் ஒன்றாக சேர்ந்து ஒரே அணியாக இருக்கத்தான் நம் எல்லோருக்கும் ஆசை.

மேலதிக கமெண்ட்ஸ் தட்டுவதற்கு, சரியான விளக்கம் ஓரிரு நாட்களுக்குள் தெரிய வரும் வரை பொறுப்போமே..!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஹல்வா பால்..?
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்(அபு ரிஃபாத்) (புனித மக்கா.) [13 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3226

அழுகின்ற பிள்ளை தான் பால் குடிக்கும்.ஆனால்,நாம் அலறிய அலறலில் ஹல்வா(?)பால் கொடுக்க முன் வந்துள்ள திமுகவிற்கு நாம் இன்னும் பாடம் கற்பிக்க முன் வர வேண்டும்.இஸ்லாமிய சமுதாயம் என்றால் கிள்ளுக்கீரை என்ற நினைப்பு பல அரசியல் கட்சிகளுக்கும் உண்டு.தற்போது நாம் நம் பலத்தை உணர்ந்து செயல் படவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

எனவே,உணர்ந்து கொண்டு ஓர் அணியில் ஒன்று திரண்டு உருப்படியான ஓர் ஆட்சிக்குத் துணை நிற்போம்,நம் உரிமைகளை இழந்து விடாமல்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. கருணாநிதி லீக்
posted by jamal (colombo) [13 March 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 3227

சாரி. நீங்கள் அதை முஸ்லீம் லீக' கட்சி என்று போட்டிருக்கக் கூடாது. கருணாநிதி லீக் என்று போட்டிருக்க வேண்டும்.இவர்கள் திருச்செந்தூர் இடைத் தேர்தலில் அழகிரியால் அவமானப்படுத்தப்பட்டதையும் இன்னும் பல அவனமானங்களைத் தாங்கியும் தன்மானம் இல்லாமல், சூடு சுறணை இல்லாமல் தி.மு.க.வுடன் ஒட்டிக் கொண்டிருப்பது ஏனோ? கேவலமாக இல்லை. இதுவா சமுதாய கட்சி? சமுதாயத்தை கருணாநிதியிடம் அடகு வைத்த கட்சியல்லவா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Good Question
posted by Sayna (Bangkok ) [13 March 2011]
IP: 203.*.*.* Thailand | Comment Reference Number: 3228

Wow Arumaiyana Questions

Ithuku yannoda Answer nandraga irukum du ninaikiraan ,

Yannaikie Muslimgal otrumaiya irukereegalo
Appo thaan ungaluku olungana Seat illa chair kooda
kidaikum, athu varaikum ipadi thaan,

Indian Union Musleem Leegu illa inoru puthu leege vathalum kooda ipadi thaan,

Muslimgal yallorum sarthu otrumaiya oru katchie arambiga apo ungaluku Seat yanna Chair yanna
niga keytathu yallam kidaikum
Atu varaikum Randu kaiku lolly pop kuduku kara mathirie ungaluku Randu seat thaan, Venam du sonna kudua kavalai pada mattangapa,

Randu seat kuduthathu kooda nonbunalaila pallivasaluku poie kangie kuduchie irukoom,

Nandriya maraka koodathudu oru randu seat avalavu thaan,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. IUML SHOULD BE STRONG
posted by sulaiman lebbai (RIYADH - S.ARABIA) [13 March 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3229

ASSALAMU ALAIKUM,IN THIS CASE IUML SHOULD BE STRONGLY DEMAND ONE SEAT BACK FROM DMK. WE SHOULD NOT LOOSE OUR DEMAND.WE MUSLIM MUST BE TOGETHER IN ONE GROUP. THEN ONLY WE CAN SHOW OUR FULL POWER TO OTHERS.MAY ALLAH GIVES US UNITY TO OUR PEOPLE.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. PENNUKU THAIRIYAM
posted by Rahman (kayal) [13 March 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 3231

oru pen thairiyama kural kuduthirkaga,april 13kul yannathan nadakuthun poruthirunthu parpom.yar kural koduthavathu MUSLIM makkaluku nallathu nadakatum.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Tamilnadu election 2011
posted by Kulam Ahmed Mohideen (Jeddah) [13 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3234

முஸ்லிம் லீக் Cong-Dmk கூட்டணி உடையாமல் இருக்க முயற்சி செய்து தானாகவே தான் ஒரு சீட் விட்டு கொடுத்தது. இதை கொச்சை படுத்தாமல் நமக்கு கிடைக்கும் நன்மைகளை யோசித்து பாருங்கள்

கலைஞர் முஸ்லிம்களுக்கு செய்த நன்மைகள் திமுக ஆட்சியில் தான் முஸ்லிம் ஐ ஏ எஸ் மற்றும் ஐ பி எஸ் அதிகாரிகள் மிக உயர் பதவிகளான உள்துறை செயலாளர், முதல்வரின் முதன்மை செயலாளர் மற்றும் உளவுத்துறை ஐ ஜி போன்ற பதவிகளுக்கு நியமிக்கபட்டர்கள். தென்காசியில் கோத்ரா மாதிரியான கலவரத்தை ஏற்படுத்த RSS காரர்கள் முயன்றதை முளையிலேய கண்டுபிடித்து இந்து முஸ்லிம் கலவரத்தை தடுத்தவர் உளவுத்துறை ஐஜி ஜாபர் சேட்.

இடஒதுக்கீடு மூலம் நம் மக்கள் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் கிடைக்க வழி செய்தது முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி வழங் குவது குறித்து பரிசீலித்து மீண்டும் இந்த ஆட்சி அமைந்தால் தர வாய்ப்புள்ளது.

வக்ப் வாரியம் முயற்சியில் இஸ்லாமியர்க்கு பயன் அளிக்கும் வகையில் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி அமைக்க உத்தர விட்டவர் தமிழக முதல்வர். இரு வாரம் முன்பு கூட நம் சகோதரர்கள் 109 ஏழை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு, தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம் பாட்டு கழகத்தின் சார்பில் ஆட்டோக்கள் வழங்கப்பட்டது . சமச்சீர் கல்வி திட்டத் தில் உருது மற்றும் அரபி மொழிகளை பாடமாக இணைக்க ஆணை பிறப் பித்தவர் தமிழக முதல்வர். பள்ளிவாசல்களில் பணி புரியும் உலமாக்கள் மற் றும் பணியாளர்களுக்கு இரு சக்கர வாகனம் (மிதி வண்டி) வழங்க உத்தர விட்டவர் தமிழக முதல்வர்.

கலைஞர்தான், மதமாற்ற தடை சட்டத்தை சட்டமன்றத்தை கூட்டி தீர்மானமாக கொண்டுவந்து முறையாக ரத்து செய்து உத்தரவிட்டார்.

தமிழகத்தில் இருந்து எந்த வருடமும் இல்லாத அளவில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பை பெற்றுத் தந்தவர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர்.

நம் சமுதாயம் உள்பட அனைத்து சமுதாயம் பயன் படும் வகையில் மருத்துவ திட்டம், ஆம்புலன்ஸ் திட்டம். ஒரு ரூபா அரிசி, வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம், எல்லாத்துக்கும் மேல் மதசாற்பட்ட தன்மை.

இது போல் ஐந்து வருடத்தில் நிறைய சொல்ல முடியும். சமுதாயம் ஒரு சீட் இழந்தாலும், அதற்கு பரிகாரமாக நிச்சயம் சமுதாயத்துக்கு காலம் காலமாக பயன் அளிக்கும் நல்ல திட்டங்கள் கிடைக்க கலைஞர் வாக்குறுதி அளித்திருப்பார்

Ahmed Mohideen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இந்த தேர்தலில்
posted by SUBHAN (abu dhabi) [13 March 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3236

அன்புள்ள சகோதரர்களே எனது மனதில் உள்ள எண்ணங்களை பகிர்ந்து கொள்வது இந்த நேரத்தில் நலம் என நினைக்கிறன் தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரமே இதற்கான சரியான சந்தர்பம் தமிழ் நாட்டில் முஸ்லிம் லீக் கட்சிக்கு அல்லது முஸ்லிகளுகோ அரசியல் அமைப்புகள் சரியான ஒரு மதிப்போ மரியதியோ கொடுப்பதில்லை

மாறாக நேற்று முளைத்த சாதிகட்சிகள் சாதிய அமைப்புகளுக்கு முக்கியதோவம் கொடுத்து சிகப்பு கம்பளம் விரித்து சீட்டு கொடுகிறார்கள் நாமோ கிடைத்ததில் ஒன்றை விட்டுகொடுத்து……. ஏதும் தராவிட்டாலும் பரவாயில்லை என்ட மனபக்குவதுடன்....................

காரணம்...பாய் எதுசொன்னாலும் தலையை தலையை ஆட்டுவர் அவர்களுக்கு நம்மை விட்டால் வேறு
நாதி இல்லை எண்ட நினைப்பாக கூட இருக்கலாம்

சரி இந்த பிரச்சனைக்கு தீர்வு என்ன? நமது காயல் பட்டினம் வெப் சைட்டில் அளளுக்கு கருத்து சொல்லி என்ன தீர்வு கண்டோம். கொஞ்சம் சிந்தித்து நாம் ஏன் சுயேச்சையாக திருச்செந்தூர் தொகுதியில் ஒருவரை நிறுத்திஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாய பலத்தை காட்ட முன்னோடியாக இருக்க கூடாது வெற்றி முக்கியமல்ல நமது பலம் அவர்களுக்கு புரியணும் வாருங்கள் இது தன்நல்ல சந்தர்பம்

நம்ம திருச்சந்தூர் தொகுதியில் மட்டுமல்ல நமது அயல் தொகுதி நண்பர்கள் அனைவர்களுக்கும் மெயில் அனுப்பி தமிழ் நாட்டில் உள்ள எல்லா தொகுதிகளிலும் பொது வேட்பாளர்களை நிறுத்தி நமது பலத்தை நிருபிக்க வேண்டும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நீங்கள் எந்த கட்சியின் அனுதாபியாகவும் இருந்து விட்டு போங்கள் தயவு செய்து இந்த தேர்தலில் உங்கள் வாக்குகளை முஸ்லிம் வேட்பாளருக்கே அளியுங்கள் இதை விட்டால் நமக்கு வேறு சந்தர்ப்பம் நம் பலத்தை நிட்சயமாக கிடைக்காது.

மீண்டும் மீண்டும் உங்களை எல்லாம் கேட்டு கொள்வது ஒன்றை மட்டுமே நீங்கள் எந்த கட்சியை செர்தவரகினும் இந்த தேர்தலில் மட்டும் கட்சி மறந்து நமது பலம் நிருபிக்க பட உங்கள் வாக்குகளை இஸ்லாமிய வேட்பாளருக்கே அளிக்க வேண்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. அரசியல் தனித்தன்மை
posted by IBN SAHIB (Dammam, Saudi Arabia) [13 March 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3239

திமுக முஸ்லிம்களுக்கு அதிகமாக செய்துள்ளதாக ஒரு சகோதரர் எழுதியுள்ளார். இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது முஸ்லிம்களின் அரசியல் தனித்தன்மை. திமுக முஸ்லிம்களுக்கு அதிகமாக நன்மை செய்துள்ளது என்றால் நேரடியாக திமுகவே முஸ்லிம்களின் ஓட்டை வேட்டை ஆட வேண்டியதுதானே! எதற்காக முஸ்லிம் லீக்கிற்கு கொடுப்பது போல் கொடுத்து பின்பு சீட்டை புடுங்கி முஸ்லிம்களை அவமானப்படுத்த வேண்டும். இல்லையென்றால் முஸ்லிம் லீக்கை திமுகவின் சிறுபான்மை பிரிவாக அறிவிக்க வேண்டியது தானே?

முஸ்லிம்களின் அரசியல் தனித்தன்மையை காலங்காலமாக சிதைப்பது கலைஞர்தானே!. ஏன் முஸ்லிம் லீக்கிற்கு என்று ஒதுக்கிய சீட்டை புடுங்கி அவமானப்படுத்துவது இது முதல் முறை அல்லவே! அதுவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதித்த பிறகு. சென்ற சட்டமன்றத் தேர்தலிலும் 3 சீட்டு கொடுத்த பிறகு 1 சீட்டு அபகரிப்பு. சென்ற பாராளுமன்றத் தேர்தலில் 1 சீட்டு. முஸ்லிம் லீக் தலைவர் துணிச்சலாக ஏணி சின்னத்தில் நிற்போம் என்ற உடன், அதில் துரைமுருகன் தலையிட்டு அபுதாபியிலிருந்து சகோ. அப்துல் ரஹ்மானை தருவித்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கப்பட்டார். முஸ்லிம் லீக் தலைவராலேயே ஒன்றும் செய்ய முடியாத அவல நிலையைதானே நாம் பார்த்தோம்.

எம்ஜிஆர், அதிமுக ஆரம்பித்த காலத்திலிருந்தே முஸ்லிம்கள் பரவலாக அக்கட்சியை எதிர்த்தே வாக்களித்தோம். அதிமுகவை ஆதரித்த பல சமுதாயத்தின் நிலையை எம்ஜிஆர் உயர்த்தி விட்டார். அதிமுகவை முஸ்லிம்கள் ஆதரித்து இருந்தால், நம் சமுதாயத்தையும் பல நிலைகளில் உயர்த்தி இருப்பார். இதுதானே யதார்த்தம்.

எம்ஜிஆர் நடிகர் ஆதலால் எதிர்க்க வேண்டும் என்று ஏதோ மார்க்க கடமை போல் எதிர்த்தோம். ஆனால் எம்ஜிஆரின் படங்களுக்கு திரைகதை எழுதிய கருணாநிதியை ஆதரித்தோம்.

சட்டசபையில் முஸ்லிம் தீவிரவாதிகள் என்ற சொல்லாடலை முதலில் பதிவு செய்தவரே கருணாநிதிதான் என்பதை யார்தான் மறக்க முடியும். கருணாநிதியின் ஆட்சியில்தான் கோவை கலவரமும் அதை தொடர்ந்து 19 முஸ்லிம்கள் அநியாயமாக எரித்தும் / சுட்டும் கொல்லப்பட்டார்கள். இதை யாராலும் மறுக்க முடியுமா? ஆனால் கருணாநிதி போலீஸாரை தட்டிக் கொடுத்தார்.

நமதூரில் எம்ஜிஆர் மீது கல் / செருப்பு வீசியபோதும், பெருந்தன்மையாக கல் வீசியவர்கள் காயலர்கள் அல்ல, வெளியுரிலிருந்து வந்தவர்கள் என்று பேசி, ஆவேசமாக இருந்த அவரின் ஆதரவாளர்களை கட்டுக்குள் கொண்டு வந்தார். இந்த பெருந்தன்மை கருணாநிதியிடம் உண்டா?

எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் வரை திமுகவால் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை. அந்த கஷ்ட காலத்தில் முஸ்லிம்கள் திமுகவிற்கு முட்டுக் கொடுத்தார்கள். ஆனால் முஸ்லிம்கள் குஜராத்தில் கொன்றொழிக்கப்படும் போது கருணாநிதி முஸ்லிம்களின் எதிரியான பாஜகவின் ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து கொண்டு இருந்தார். இப்படி பல துரோகங்களை எழுதிக் கொண்டே போகலாம்.

திமுகதான் முஸ்லிம்களின் அரசியல் தனித்தன்மையை முடக்குகிறது என்பதை முஸ்லிம்கள் விளங்கியே வைத்துள்ளார்கள். இன்ஷா அல்லாஹ் திமுக முஸ்லிம்களும் கூடிய சீக்கிரம் தெளிவடைவார்கள் என்பது திண்ணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. இன்னுமா இந்த ஊரு கருணாநிதியே நம்புது!!!
posted by Cnash (Makkah ) [13 March 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3240

இந்த கூட்டணி ஒடஞ்சா என்ன ஓட்டிகிட்டு இருந்த என்ன !! அதை பத்தி ச்பெக்ட்ரும் ராஜா வும் கருணாநிதி குடும்பமும் தானே கவலை படனும்.. காதர் மொஹிதீனுக்கு என்ன கவலை ....
கதை கேக்க நல்ல தான் இருக்குது !!

இன்னுமாடா இந்த ஊரு இந்த கருணாநிதியே நம்புது!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. election 11
posted by Kulamahmed (Jeddah) [13 March 2011]
IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3241

நண்பர்களே நாம் மறைமுகமாக யாரை ஆட்சிக்கு வர உதவி செய்கிறோம் பார்த்தீர்களா. கீழே உள்ள செய்தியை பாருங்கள் "சூப்பர் ஸ்டார் ரஜினியை ரகசியமாக சந்தித்துப் பேசினார் பத்திரிகையாளரும், அதிமுக கூட்டணியின் அறிவிக்கப்படாத அரசியல் தூதுவர் என வர்ணிக்கப்படுபவருமான துக்ளக் சோ.

அதிமுகவுக்கு ஆதரவான சக்திகளை திரட்டும் வேலையில் சோ உள்ளிட்ட சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது ஆலோசனையைத்தான் தற்போது ஜெயலலிதா மிக மிக அதிகமாக கேட்கிறார், நம்புகிறார், செயல்படுகிறார். இந்த சோ மாதிரியானவர்கள் யோசனைப்படிதான் அவர் மதிமுக, இடதுசாரிகளை கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட சோ ரஜினிகாந்த்தை சந்தித்துப் பேசியுள்ளார். அ.தி.மு.க அணியில் விஜயகாந்தின் தே.மு.தி.க.வை இடம் பெற செய்ததில் சோ முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் ரஜினியைச் சந்தித்தது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது."

மறைமுக இந்துத்துவா ஆட்சி தமிழகத்தில் வராமல் பார்க்க வேண்டியது நமது கடமை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. உரிமையுடன் எதிர்க்க முடியுமா
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [13 March 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3242

அனைவர்களுடைய கருத்துக்களும் மிகவும் அருமையாகவும், அனல் பறக்கும் படியும் உள்ளன. கலகம் பிறந்தால் தான் ஒரு வழி பிறக்கும்.

முஸ்லிம் லீக் உடைய பய்லா(விதி) பிரகாரம் யார் ஒருவர் வேறு கட்சியில் உறுப்பினர் ஆக இருந்தால் அவர் முஸ்லிம் லீக் இன் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார். தற்போது முஸ்லிம் லீக் இன் தலைவாராக இருக்கும் என்னுடைய ஆசான் பேரா. காதர் முஹைதீன் அவர்கள் தி.மு.க வின் உறுப்பினர், அவர்களின் உறுப்பினர் எண். 248396 . தற்போது அவர்களின் நிலை என்ன?

முஸ்லிம் லீக் இன் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் தி.மு.க உறுப்பினர்களே. தி.மு.க கொறடா என்ன கட்டளை இடுகிறாரோ அதைத்தவிர வேறு ஏதும் கூற முடியுமா? இந்த அடிமைத்தனம் "சமுதாயத்திற்காக குரல் கொடுக்கும் உரிமையை" நசுக்குவதா, இல்லையா. அதற்கு பதிலாக முஸ்லிம் லீக் கட்சியை தி.மு.க உடன் இணைத்து விடலாமே. கலைஞர் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 கொடுத்தாலும் ஒன்றுதான், 33 கொடுத்தாலும் ஒன்றுதான்.

உதாரணத்திற்கு நம் காயல்பட்டிணத்தை, காவிப்பட்டிணம் (நடந்து கொண்டு இருக்கும் குடியேற்றம் நம் ஊரை இப்படி மாற்றிவிடுமோ என்ற பயம் உள்ளது) என்று பெயர் மாற்ற தி.மு.க அரசு மசோதா கொண்டு வந்தால் அதை ஆதரிப்பது தவிர இவர்களுக்கு வேறு வழி இல்லை. ஒரு மஞ்சள் துண்டை எடுத்து கலைஞர் வீட்டிற்க்கு சென்று கெஞ்சுவதை தவிர உரிமையுடன் எதிர்க்க முடியுமா.(இந்த உதாரணத்திற்கு மன்னிக்கவும்).

இன்னும் எழுதலாம்..இப்போதானே களம் சூடுபிடித்து உள்ளது. சம்பளம் கொடுப்பவருக்கு கொஞ்சம் வேலை செய்யனும் அல்லவா.. அதாங்க டூட்டி பார்க்கணும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. யார் நல்லவர் ?
posted by Mohamed (kayal) [13 March 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 3243

எம்ஜீர் , ஜெயலலிதா என்னவோ நல்லவர் மாதிரி சிலர் எழுதி உள்ளார். இவர்களுடைய நல்ல சரிதத்தை பார்த்து தான் நம் இஸ்லாமியர் நட்பு வைத்து உள்ளார்ஹ்ல் போல தெரியுது. நமக்குள் காசுகஹாதான் மார்கத்தையும் அமைப்புகளையும் பிரித்து பல விதமாக உள்ளோம், இப்படி இருக்க அரசிலில் உள்ள தலைவரகளை பேச நமக்கு எந்த வாய்ப்பு உள்ளது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. மதசார்பில் மகத்தான காவலர் கருணாநிதி
posted by Cnash (Makkah) [14 March 2011]
IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3247

சகோதரர் திமுக வின் கொள்கை பரப்பு செயலளார் செய்கிற பணியை அழகாக செய்து இருக்கிறார்!! கருணாநிதி மறந்த லிஸ்ட் எல்லாம் கூட இவர் ஞாபக படுத்தி இருக்கிறார். குஜராத்தில் காட்டு மிராண்டி ஆட்சி நடத்தி கொண்டு இருக்கும் கயவன் மோடி கூட இது போன்ற அடிப்படை நன்மைகளை முஸ்லிம் மட்டும் இல்லை மற்ற சிறுபான்மை சமுதாயத்திற்கு செய்துதான் இருக்கிறார்.

தென்காசியில் கோத்ரா சம்பவம் நடக்க இருந்ததை இந்த கருணாநிதி காப்பாற்றி விட்ட்ரராம்!!! இதே கோத்ரா சம்பவத்தை 1998 லே இவர் கீழே உள்ள police கோயம்புதூர் il நிகழ்த்தி காட்டி விட்டார், 19 உயிர்களை பலியாக்கி, அத்தனை முஸ்லிம் குடும்பத்தையும் இன்று வரை நடு தெருவுக்கும் கொண்டு வந்த பெருமை இந்த கருணாநிதியைதான் சேரும்!! இத்தனை வெறி ஆட்டம் போட்ட போலீஸ் கு கருணாநிதி கொடுத்த நன்னடத்தை certificate, அவர்கள் வெறும் கருப்பு பட்ச் தான் அணிந்து வந்து தங்கள் எதிர்ப்பை காட்டினார் என்று அன்றைய கூட்டாளி வாஜ்பாயிக்கும், அத்வானிக்கும் குளிரவச்சார்.

அன்றைக்கு கோயம்புதூர் கலவரத்தில் கைது செய்ய பட்ட அப்பவி முஸ்லிம்கள் 12 வருடம் சிறைக்குள்ளே எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் தவிக்கின்றனர்!! முஸ்லிம்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய ஜெயலலிதாதான் 5 வருஷம் உள்ளே வச்சி இருந்தார், முஸ்லிம்களின் காவலர் கருணாநிதி விரைந்து முடித்து தண்டனையாவது வாங்கி கொடுத்தாரா!!! அவருடைய அன்றைய கூட்டணி தோழர் அத்வானி கூட்டத்திற்கு குண்டு வைக்க முயற்சி என்றுதானே அத்தனை போரையும் உள்ளே தூக்கி போட்டு அத்தனை முஸ்லிம் குடும்பங்களையும் கருவறுத்தார்!! அதற்க்கு அவருடைய ஆட்சியில் என்ன பரிகாரம் தேடினார்!!

அண்ணா நூற்ற்றன்று விழா முன்னிட்டு 100 ஆயுள் தண்டனை கைதிகளை வெளியே கொண்டு வந்தரே அதில் ஒரு முஸ்லிம் கைதி உண்டா! அத்தனையும் திமுக ஆட்சிகாக கொள்ளை கொலை என்று உள்ளே போனவர்லாம் வெளியே வந்தார்கள் அப்பாவி முஸ்லிம்கள் இன்னும் தீர்ப்பு வழங்காமல் உள்ளே செத்து கொண்டு இருகிறார்கள். நாயை சுட்டது போல் சுட்ட பல போலீஸ் அதிகாரிக்கு அதே கருணாநிதி ஆட்சியில் பதிவி உயர்வு கொடுத்து அழகு பார்து BJPக்கு நன்றி விசுவாசம் காட்டினார்

எதோ என்னைக்கு மத சார்பற்ற ஆட்சி அமைய விட்டு கொடுத்தாராம் !!! இந்த மதசார்பில் மகத்தான காவலர் கருணாநிதிதான் அன்று BJP, அத்வானி கும்பலுடன் கை கோர்த்தார் !! இதே முஸ்லிம் லீக் in தலைவர் அப்துல்லதீபை தோற்கடிக்க மருமகன் மாறன் அமைச்சராக BJP உடன் சேர்ந்து மத்திய சென்னை யில் 1999 il போட்ட ஆட்டம் எல்லாம் மறந்து போனதா!!

இன்றைக்கு சோ வை ரஜினி பார்கிராராம் பேசுறாராம் !! ஏன் இதே சோ உம ரஜினியும் கருணாநிதி கட்சிக்கு குரல் கொடுக்க வில்லையா!!! அப்போ சோ ம ரஜினியும் முஸ்லிம் அ மாறி இருந்தாரா? சரி இப்போ ஒரு மாதம் முன்னே வரை காங்கிரஸ் உடன் இழுபரி il இருக்கும் போது கருணாநிதி இல. கணேசனை வீடு தேடி பொய் wheelchair il பிறந்த நாள் வாழ்த்து சொல்லி விட்டு வந்தாரே அது என்ன சூழ்ச்சி!!! BJP ஒன்றும் தீண்ட தகாதவர்கள் அல்ல என்று வாய் கிழிய பேசியவர் இன்று மத சார்பற்ற ஆட்சிகு முஸ்லிம் லீக் கை பலி கொடுத்து தியாகம் செய்கிறாராம்!!

ஏன் விடுதலை சிறுத்தையும், கொங்கு வேளாளர் கட்சியையும் சீண்டி பார்க்க மாற்றரா!! தெக்கதவன் துலுக்கன் என்று கருணாநிதிக்கு சொல்லியா கொடுக்கணும்... 60 வருட கால முஸ்லிம்களின் நண்பன், 14 வயதில் திருக்குவளையில் பிறைகொடி பிடித்தவருக்கு இது கூட தெரியாதா!!!

கருணாநிதியை நம்புவது ஈமானில் ஒரு கடமை என்று என்னைக்கு நினைப்பதை நிறுத்துவீர்களோ அப்போதான் இந்த சமுதாயதிற்கு ஒரு விடிவு பிறக்கும்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. kulam ahmed
posted by zainulabdeen(dmdk joint secratery.kpm) (kayalpatnam) [14 March 2011]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 3249

assalamualaikum. sakodarar kulam ahmed solvadaipol vijayakandin dmdk, admk uadn koottani serndadal maraimuka induttuva ondrum varapovadilla. andraikume maraimuka induttuvavai dmk tan adarittu varukiradu. tamil nattil bjp udan mudal koottani amaittadu dmk tan.

dmdk andraikkume tiranda madalakattan irukkume tavira maraimukamana anda kariyattilum dmkvai pol maraimukamaha eedupadadu.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. MMK
posted by lebbai (riyadh) [14 March 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3253

After coimbatore incident, MMK also supported DMK long time and conducted paaratu vizha. Why MMK did this? Don't just blame muslim league alone.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. கருணா சிஷ்யர்களே! பதில் சொல்லுங்கள்!!
posted by kavimagan (dubai) [14 March 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3255

சோவும், ரஜினியும், ஜெயாவும் இணைந்து இந்துத்துவ ஆட்சியை உருவாக்கிவிடக்கூடும் என்று பூச்சாண்டி காட்டும் நண்பர்களே!

அ) முதன்முதலில் முஸ்லிம் தீவிரவாதிகள் என்ற வார்த்தையை சட்டமன்றத்தில் பதிவு செய்தவர் கருணாநிதி என்னும் இனத்துரோகிதான் என்ற முத்துவாப்பா அவர்களது குற்றச்சாட்டுக்கு பதில் எங்கே? மழுப்பாலான பதில் வந்தால், ஆதாரங்கள் அணிவகுக்கும்.

ஆ) கோயம்புத்தூர் கலவரத்தில், காவல்துறையின் துணையோடு இந்த சமூகத்தை கருவறுத்தது கருணாநிதிதான் என்னும் Cnash அவர்களது ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுக்கு பதில் எங்கே?

இ) தாய்ச்சபையை உடைத்து, லத்தீப் அவர்கள் தலைமையில் தந்தைசபையை உருவாக்கிய பாசிச சக்தி யார்?

ஈ) அதே லத்தீப் சாஹிப் அவர்கள் சட்டமன்றத்தில் இடஒதுக்கீட்டிற்கான கோரிக்கையை வைத்தபோது, மிகக்கடுமையாக அதை மறுத்துப்பேசி,என்றோ கிடைக்க வேண்டியதை இன்றுவரை இழுத்தடித்தது யார்? வக்காலத்து வாங்குபவர்கள் பதில் சொல்ல முடியுமா?

உ) நரேந்திர மோடிக்கு எதிரான தீர்மானம் பாராளுமன்றத்தில் தோற்றுவிடக் காரணமானவர்களில் கருணாநிதிக்குப் பங்கில்லையா?

ஊ) ஒவ்வொரு ஆண்டும் பாபரி மஸ்ஜித் இடிப்பு நாளில், தமிழக முஸ்லிம்களை, வெங்கொடுமைச் சிறையடைத்து வேதனைப்படுத்தியது கருணாநிதியா? ஜெயலலிதாவா?

எ) தனக்கு எதிராக இரண்டு இயக்கங்கள் உருவாகக் காரணமாக இருந்தார் என்பதால், பிணையில் வரமுடியாத பலவழக்குகளை உண்டாக்கி, குணங்குடி ஹனீபா அவர்களை பன்னிரண்டு ஆண்டுகள் பாழுஞ்சிறைக்குள் அடைத்தவர் யார்? கருணா சிஷ்யர்களே பதில் சொல்லுங்கள்.

இன்னும் எழுதிக்கொண்டே போனால் வலைதளமே வளைந்துவிடும்.

இவர்களுக்கு சவுக்கடி கொடுக்க, ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்கள் கொதித்தெழுந்திருக்கும் இந்த வேளையில், எதை எதையோ எழுதி சமூகத்திற்கு பின்னடைவு ஏற்படக் காரணமாக இருந்து விடாதீர்கள் அன்பு நண்பர்களே!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. No unity
posted by lebbai (riyadh) [14 March 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3257

For long time ADMK ruled TN by MGR & JJ, but they never supported reservation for muslim, but at least eventhough MK delayed, he finally provided it.

Every party has pros & cons, let's discuss in decent way without using hard words on others. The main reason for our fall is not because of DMK or ADMK, becasue we don't have unity. We have to blame ourself.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. குனிய குனிய கொட்டுவோம்.
posted by IBN SAHIB (Dammam, Saudi Arabia) [14 March 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3260

மமக என்ற அரசியல் கட்சி, சமுதாயத்தின் அரசியல் தனித்தன்மையை எந்த கட்சியிடமும் அடகு வைக்கவில்லை. கட்சி ஆரம்பித்த 3 மாதங்களில் சென்ற பாராளுமன்ற தேர்தலில், 1 தொகுதி தருவதாகவும் ஆனால் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்ற உத்தரவினால், தோல்வி அடைவோம் என்று தெரிந்தும் தனித்து நின்றது.

தேர்தலில் நிற்பதே சமுதாய பிரச்சனைகளை சட்டம் இயற்றும் மன்றங்களில் எடுத்து வைப்பதற்குதானே? அதை விடுத்து பிற கட்சிகளின் கொறடா அனுமதித்தால்தான் பேச முடியும் என்றால் முஸ்லிம் சமுதாய கட்சி என்ற பெயர் எதற்கு?

அதிமுகவோ அல்லது திமுகவோ, யாரையும் தனித்துவம் பெற அனுமதிப்பதில்லை. நாம் தான் நம்முடைய சமுதாயத்தின் அரசியல் தனித்துவத்தை நிலை நிறுத்து பாடுபட வேண்டும். இல்லையென்றால் பெரிய அரசியல் கட்கிகள் குனிய குனிய கொட்டிக் கொண்டுதான் இருப்பார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. கூட்டி கழித்து பார்த்தால்???
posted by IBN SAHIB (Dammam, Saudi Arabia) [14 March 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3263

முஸ்லிம் லீக் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்து திமுக – காங்கிரஸ் கூட்டணியை வழுப்படுத்தியிருப்பதாக சிலர் விளக்கம் கொடுக்கிறார்கள். ஆனால் திமுகவோ 7,மார்ச்,2011ல் உருவாகிய 'பெருந்தலைவர்' மக்கள் கட்சி(நாடார் கட்சி)க்கு ஒரு சீட்டு நேற்று (13-மார்ச்-2011) ஒதுக்கியுள்ளது. அதாவது முஸ்லிம் லீக் விட்டுக் கொடுத்த ஒரு சீட்டை, பெ.ம.க விற்கு திமுக ஒதுக்கி உள்ளது அல்லது திமுக பிறப்பதற்கு முன்பே உருவாகிய முஸ்லிம் லீக் ஒரு வாரத்திற்கு முன்பு உருவான பெ.ம.க விற்காக ஒரு சீட்டை விட்டுக் கொடுத்ததுள்ளது என்று எடுத்துக் கொள்ளலாமா?

என்ன, தாய்சபை என்று பெருமை அடித்துக் கொள்ளும் முஸ்லிம் லீக்கும், ஒரு வாரத்திற்கு முன்பு உருவாகிய 'பெருந்தலைவர்' மக்கள் கட்சியும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும்.

சமுதாய காவலர்(?!) கலைஞரின் பார்வையில் கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாத்தான் வருது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. நிறை
posted by seyed mohd (DAMMAM) [14 March 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3265

சகோதரர் கவிமகன், அடுக்கடுக்கா கேள்வி கேட்டு ஆதாரத்துடன் நிருபிக்க தயார் என்கிறார்.

இவர் கூறும் எல்லா குற்ற சாடும் கடந்த ஐந்து வருடத்தில் நடந்த்தவை இல்லை. நம்ம சமுத்தாய கட்சிகள் தமுமுக உள்பட ஏன் போன தேர்த்தலில் இத்தனை குற்ற சாட்டு இருக்கும் பொது ஆதரவு கொடுத்தது. அம்மாவை பற்றி மட்டும் ஏன் தாங்கள் ஒரு குற்றச்சாட்டை மட்டும் சொல்லுவதில்லை. எதுவுமே இல்லையா??. இதுதான் நமக்கு பின்னடைவு.

சிஷ்யர் என்ற வார்த்தை தேவை இல்லாததது. அட்மின் இதை எடிட் செய்து இருக்கலாம்.

இங்கே திமுக ஆட்சி நிறை கூறினால், அதை மறுக்க முடியவில்லை. மாறாக ஜெயா எப்போதும் நம் சமுத்தயத்தை தூக்கி நிருத்தியார் போல் பாவனை செய்து வக்காலத்து வாங்குகிறார்கள்.

இவர்களுக்கு சவுக்கடி கொடுக்க, ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்கள் கொதித்தெழுந்திருக்கும் இந்த வேளையில், எதை எதையோ எழுதி சமூகத்திற்கு பின்னடைவு ஏற்படக் காரணமாக இருந்து விடாதீர்கள் அன்பு நண்பர்களே! என்று சொல்லுகிறீர்களே! ஒட்டு மொத்தமா ஜெயா அவர்களுக்கு ஒட்டு போடலாமா அல்லது நம் சார்பா முஸ்லிம் சுஎட்ச்சை போடலாமா?

ஒருவரிடம் மட்டுமே நிறை இல்லாமல் குறை உள்ளது போலவும், மற்றவர் குறை இல்லாத நிறை உள்ளவர் போல் பாவித்து டென்ஷன் ஆக கருத்து பதிய வேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Innuma puriyalai
posted by Sayna (Bangkok) [14 March 2011]
IP: 203.*.*.* Thailand | Comment Reference Number: 3267

Yaru Atchiku vanthalum,
Muslim galin nilamai ithu thaan,

Sapitu vittu kaiyai utharinal yathanai sottru parukai kilay vilum yosithu parungal , Athai thaan yantha katchieum muslim galuku saium, ithai purinthu kolla kastamaga irukirathu, Muslim galuku yavalavoo saithu irukiroom yandru sonnal pattiyalida sollungal, Tharpothu muslim legula irupavargalai , Yangaluku randu seat thavai illai intha randu seat tuku pathila nangal thanithu pottie ittu jaithu katuoom du solla sollungal, Solla mattargal karanam pathavie da oru veri, Muslim League katchiyai arambithu vittu avargaludaiya sinnathil naam yaan nirka vendum Muslim galuku oru Sinnam irukutula atha nillunga kandipa 2 illa 5 idathula vetri kidaikum, Piraruku pinnala serupaithukie kondu poratha vittu vittu, nama serpa nama thooka kathu kirunga Varthai kadumaiyaga irukum du ninaikiraan, Jalra adikiratha vittu vittu, Ullathai sollungal


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Failed in seat getting
posted by lebbai (Riyadh) [14 March 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3268

It is wrong if IUML returned one seat back to DMK, but if the party voluntarily gave a seat to Congress to strenthen the coalition, it might be useful in future in the coming parlimentary election to defeat BJP in the center. MMK is successful in contesting under own symbol, but failed to ask enough seats (like muslim league).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு
posted by Sulthan (Sudan) [14 March 2011]
IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 3269

சற்று முன் கிடைத்த செய்தி...

இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் தாவூத் மியாகான் தலைமையில் இயங்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் 2011 தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான அணிக்கு ஆதரவு தெரிவிப்பது என்றும், அந்த அணியில் சேர்ந்து போட்டியிடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அங்கே ரெண்டு கொடுத்தார்கள் ? இங்கே எத்தனை கிடைக்கும்..? பொறுத்திருந்து பார்க்களாம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. AWARENESS
posted by ali sahib (al-hasa) [14 March 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3271

தமிழகத்தின் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளை கொண்ட நன்னிலம் சட்டமன்றத் தொகுதி தவிர, ஏறத்தாள 60க்கும் மேற்பட்டத் தொகுதிகள் 80ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களை கொண்டவை.

நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தாலும் இன்றுவரை அந்த தொகுதியில் எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளரோ அல்லது முஸ்லிம் அரசியல் கட்சியோ தமிழகத்திற்காக இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவேயில்லை என்பது ஆச்சரியகரமான, அதே சமயம் வருத்தத்திற்குரிய செய்தியாகும்.

தமிழகத்தில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் முப்பதுக்கும் அதிகமாக இருக்கின்றது. அவைகளில் சிலவற்றை இங்கே காணலாம்:

1. நன்னிலம்,2. கடலாடி,3. கேயம்புத்தூர் மேற்கு ,4. மதுரை மத்தி, 5. திருச்சி, 6. சேலம், 7. அரவக்குறிச்சி, 8. குடியாத்தம், 9. ராணிப்பேட்டை,10. ஆற்காடு,11. சென்னை துரைமுகம்,

12. சேப்பாக்கம்,13. ஆயிரம் விளக்கு, 14. திருவல்லிக்கேணி, 15. எக்மோர், 16. சென்னை பூங்காநகர், 17. ராயபுரம், 18. திண்டுக்கல்,19. நத்தம்,20. பெரியகுளம், 21. பாளையங்கோட்டை, 22. திருச்செந்தூர்.

இதுதவிர, தமிழகத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகள் என்பதாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை. 23 சட்டமன்றத் தொகுதிகள் அறுபதாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை. தமிழக முஸ்லிம்கள் அனவைரும் ஒரே குடையின் கீழ் ஒன்றினைந்து நமக்கு நாமே உருவாக்கும் அரசியல் அமைப்புக்கு வாக்களிப்போம் எனில் தமிழகத்தில் மாத்திரம் 45-55 சட்டமன்றத் தொகுதிகளிலும், 4-6 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நமக்கு வெற்றி நிச்சயம் என்பதை உறுதியாகக் கூறமுடியும். அனைத்து அரசியல் கட்சிகளையும் நம் காலடியில் விழ வைப்பதுடன், தமிழக அரசியலைப் பொறுத்தவரை நாம் வகுத்ததுதான் சட்டம் என்கிற நிலையையும் உருவாக்க முடியும்.

தமிழகத்தின் 6 மாநகராட்சிகளில் முஸ்லிம்களே மேயர்கள் என்பதையும் உறுதியாகக் கொள்ளலாம். சென்னையைத் தவிர தமிழத்தில் மற்றுமுள்ள மாநகராட்சிகளில் ஒன்றரை இலட்சம் வாக்குகள் பெறுபவரே மேயர். மதுரை, திருச்சி மற்றும் கோவை மாநகராட்சிகள் 3 இலட்சம் முஸ்லிம் வாக்களர்களைக் கொண்டவை. சேலம் மற்றும் நெல்லை மாநகாராட்சிகள் இரண்டரை லட்சம் முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை.

சட்டசபை தொகுதிகளில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் ஒருங்கிணைந்து தமது வாக்குகளையும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே அளிப்பார்கள் எனில், தமிழக சட்சடசபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் முஸ்லிம்களே என்கிற நிலை ஏற்படும். முஸ்லிம்களின் சம்மதம் இல்லாமல் எந்த ஒரு சட்டமும் நிறைவேற்றப்பட முடியாது என்கிற நிலையை தமிழக சட்டசபையிலும் உருவாக்கமுடியும்.

தமிழகத்தில் மட்டுமில்லாது, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா என இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் உள்ள சட்டசபைகளிலும் இந்நிலையே உருவாகும். இதே நிலை தொடருமெனில் நாடாளுமன்றத்திலும் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை பெரும்பான்மை நிலைக்கு உயரும்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 400 முதல் 800 பள்ளிவாயில்களை ஒன்றிணைப்பது மிகவும் எளிதான காரியம். தமிழகத்தில் உள்ள 8000 பள்ளிவாயில்களைச் சார்ந்த ஒன்றரை கோடி முஸ்லிம்களும் ஒரு பொது நலனுக்காக ஒன்றிணைவார்கள் எனில், நாம் நினைக்கும் எதையும் சாதிப்பது எளிது என்பதை முஸ்லிம்கள் அனைவரும் உணர வேண்டும்.

இது நேர்த்தியான, அதேசமயம் யாருக்கும் எந்தவித ஆபத்தும் இல்லாத அமைதியான முடிவு என்பதையும் முஸ்லிம்கள் அனைவரும் உணர வேண்டும். தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் அரசியல் செல்வாக்கு மற்றும் ஆட்சி அதிகாரம் பெற வேண்டும் என்பதற்கு இதைத்தவிர ஒரு சரியான தீர்வு இல்லையென்றே சொல்ல வேண்டும். அரசியல் செல்வாக்கு மற்றும் ஆட்சி அதிகாரம் இன்றி இந்த பூமியில் நாம் எதையுமே சாதிக்க முடியாது என்பது உறுதி.

இதுபோன்ற பிற அரசியல் கட்சிகளுக்காக கொடி தூக்கி அவர்களை வெற்றிபெற செய்ய வேண்டுமா? அவர்கள் வெற்றி பெற்று ஆட்சிபீடம் ஏறிய பின்பு நம்முடைய அடிப்படை உரிமைகளுக்காக அவர்களிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலை தேவைதானா?

தேர்தல் காலங்களில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறோமே. ஏன்? முஸ்லிம்கள் முஸ்லிம் வேட்பாளருக்கே வாக்களிக்கட்டும். முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிபெற்று வந்த பின்புள்ள நிலைமையை ஆய்ந்தறிந்து, முஸ்லிம்களுக்கு நல்லது செய்யக்கூடியவர்களுக்கு நம்முடைய ஆதரவை வழங்கலாம். மானம் மற்றும் சுயமரியாதை ஈமானின் ஒரு பகுதி என்பதை முஸ்லிம்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

இக்கட்டுரையை மீண்டும் மீண்டும் படியுங்கள். முஸ்லிம்களுக்கு நன்மை செய்யாத எந்த ஒரு அரசியல் கட்சியையும் நம்பாதீர்கள். முஸ்லிம்களே! அனைவரும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைவோம். நமது ஒற்றுமையின் மூலம் நாம் விரும்பியவைகளை உடனடியாகப் பெற முடியும். இந்த முடிவை சிந்தித்து செயல்படுத்துவது முஸ்லிம்களாகிய நம்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைவோம். நம் அன்றாட வாழ்க்கை எளிதாக அமையும். நாம் நமது அடிப்படை உரிமையான இறைவழிபாட்டு உரிமைகளை தங்கு தடையின்றி தொடரலாம். நம் வருங்கால தலைமுறையும் பாதுகாப்பான வாழ்வைத் தொடரும்.

தேர்தலில் நாம் வாக்களிக்காமல் புறக்கணிப்போம் எனில் நஷ்டம் நமக்குத்தான். ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றது. நாம் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஏராளமான மாற்றங்களை கொண்டுவரும். அரசை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நம்மில் சிலர் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள். அதனால் ஏற்படும் நஷ்டம் நமக்கே! மற்ற அரசியல் கட்சிகள் நம்மை எள்ளி நகையாடுவதுடன், அதிக பயனடைவது அவர்களே என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனதருமை முஸ்லிம் சொந்தங்களே! நமக்கென ஒரு தனி அரசியல் அமைப்பு காண்பதும், அந்த அமைப்பின் மூலம் நமக்காக பாடுபடக்கூடிய முஸ்லிம் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்புவதுமே இனி நம்முடைய தலையாய பணியாக இருக்க வேண்டும்.

நாளைய உலகம் நம் கையில் என்பதை தெளிவாக தெரிந்த நாம், மரணித்த பிணம் போல் நடமாட வேண்டுமா? நாம் நம்முடைய குறிக்கோளில் தெளிவாக இருப்போம். அனைத்து அரசியல் கட்சிகளையும் நம் பின்னால் கைகட்டி நிற்க வைப்போம். அமைதியாக நாம் நம்முடைய குறிக்கோளை எட்டுவோம். நமது உறுதிமொழி நம் வருங்கால தலைமுறையின் வாழ்வுரிமைக்கு அடிப்படையாக அமையட்டும். எந்த காரணம் கொண்டும் முஸ்லிம்களின் ஒற்றுமை என்னும் அடிப்படை குறிக்கோளை விட்டு நம் கவனம் சிதறாமல் இருக்கட்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் இதற்கு அருள் புரியட்டும்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. டொக்கொமோ ரேஞ்சுக்காவது...
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா) [15 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3288

அன்பு நண்பர் அலி ஸாஹிப் எடுத்து வைத்த அனைத்து கருத்துக்களும் முத்தானவை. நம் சமுதாய மக்கள் நமது அபார சக்தியை இன்னும் உணரவே இல்லை.சிங்கம் தூங்கும் போது சுண்டெலி கூட சிந்து பாடும் என்பது உண்மைதான்.

இவ்வளவு வாக்குகளை வைத்துக்கொண்டு நம் சமுதாயம் மட்டும் ஏன் இப்படி எடுப்பார் கைப் பிள்ளையாக இருக்க வேண்டும்?கொடுத்த சீட்டை பிடுங்கி வேறு யாருக்கோத் தாரைவார்த்த திமுக மீது ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயமே வெறுப்புணர்வோடு இருப்பதாக உளவுத்துறை உருப்படியான தகவல்களைக் கொடுத்த பின்பும், ஊசலாடாத கருணாநிதி & குடும்ப அரசியல்வாதிகளுக்கு குளிர் ஜுரம் ஏற்படும் விதம் நாம் நமது வாக்கு எந்திரத்தை உபயோகப்படுத்தினால் மட்டுமே வருங்கால கட்டங்களில் நம் சமுதாயம் சற்று தலைதூக்க முடியும்.

ஒரு குடையின் கீழ் ஒன்று திரண்டு ஓரணியில் செயல் படுவது சாத்தியமா? என்றால் சாத்தியமே! சமுதாயத்தின் பெயரை முன்னால் வைத்துக் கொண்டு சம்பிரதாயக் கட்சியாகவே இருந்து வரும் முஸ்லிம் லீக் நம் மக்கள் மனதில் முதலில் இடம் பிடிக்க வேண்டும். அரசியலில், அதிகாரத்தில், நாம் ஏன் பின் தங்கியுள்ளோம்? என்பதையும், இன்றுவரை ஒரு ரோடு கூட போடமுடியாமல் பாரம்பரிய கட்சி என்று மார்தட்டிக் கொள்வதில் அர்த்தமே இல்லை!

மக்களைக் கவரும் விதத்தில், மக்களோடு மக்களாகக் கைகோர்த்து பல நல்ல சேவைகளைச் செய்ய வேண்டும், புதிய யுக்திகளைக் கையாண்டு அரசியலில் ஆடு புலி ஆட்டம் ஆட வேண்டும். வெறும் பி.எஸ்.என்.எல் போல் இல்லமல் ஏர்டெல், ஏர்செல், அட்லீஸ்ட் ஒரு டொகொமோ ரேஞ்சுக்காவது தன்னை முஸ்லிம் லீக் மாற்றிக்கொள்ளாதது வரை இந்த கருணாநிதி கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்துக் கொண்டேதான் இருப்பார்.

எனவே முஸ்லிம் லீக் தன்னை ஒருமுறை சுயப்பரிசோதனை செய்துகொள்வது நல்லது!!!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Election 2011
posted by Kulamahmed Mohideen (Jeddah) [15 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3296

சென்னை: இந்தியாவிலேயே அதிகபட்ச பொருளாதார சுதந்திரத்தை அனுபவிக்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான் என்று ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

'இந்தியா மாநிலங்களில் பொருளாதார சுதந்திரம் 2011' என்ற தலைப்பில் பிரேஸர் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது. இதன் அதிகாரப்பூர்வ அறிக்கை இன்று வெளியானது.

இந்த அறிக்கையில், இந்தியாவிலேயே அதிகபட்ச பொருளாதார சுதந்திரம், மனிதவள மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சொத்து வளம் போன்றவற்றில் முதலிடம் வகிப்பது தமிழகம்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு அடுத்த இடத்தில் குஜராத்தும், மூன்றாவது இடத்தில் ஆந்திரப்பிரதேசமும் வருகின்றன. 2005-ல் மிகச் சிறந்த வளர்ச்சியைப் பெற்றிருந்த பஞ்சாப் இந்த ஆண்டு 12 இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

பீகார் மாநிலம்தான் மிக மோசமான நிலையில் உள்ளதாகவும், பொருளாதார சுதந்திரத்தில் கடைசி இடத்தில் இருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. மகா மெகா ஊழல்
posted by IBN SAHIB (Dammam, Saudi Arabia) [15 March 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3297

திட்டம் தீட்டி திருடுகின்ற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது. திமுக ஆட்சியில் திட்டங்கள் தீட்டுவதே அவர்களின் கல்லா கட்டத்தானே?

இந்திய சரித்திரத்தில் மகா மெகா ஊழல் புரிந்த பெருமை திமுகவையே சாரும். தேர்தல் நேரத்தில் பிரேஸர் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் போன்ற பல நிறுவனங்களின் அறிக்கைகள் இன்னும் பல வரலாம். ஜெ.ஜெ. ஆட்சி செய்யும்போது எப்படி காசு கொடுத்து தன் அரசுக்கு பெருமை தேடி கொண்டாரோ அதே போல் தான் இதுவும்.

இந்த ஆய்வறிக்கை உண்மையானல் அது தமிழக மக்களின் அன்றாட வாழ்கையில் பிரதிபளித்திருக்க வேண்டும். விலைவாசியை மக்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உண்மையாலுமே திமுக சாதனைப் புரிந்து இருந்தால், மக்களின் வாங்கும் திறமை கூடி இருக்க வேண்டும். அப்படி ஒன்றும் கூடவில்லை. எனவேதான் திமுக இலவச திட்டங்களை அமுல்படுத்துகிறது. (இலவச திட்டங்களில் எத்தனை டகால்டியோ?!!!!)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Proactive thinking
posted by Riyath (Hong Kong) [15 March 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 3298

I read the essay of our folks proactivally published here from their worthful research/experiences and understand that all Muslims are ready to vote for A muslim party.

If that the case then Instead of looking for a new party or individual, why cant we encourage our existing organised UNITED Musilm league with our full tempo/support to renewal the membership and upgrade to the latest world to help/impress our people whereever/whenever possible.

I know this is not simple, at the same time nothing is imposiible if we focus together to the single direction.

Win-Win: People make Party to Win and Party should make People to Win.

We surely achive atleast margin if all of our youngsters and experienced muslims joined together and share their ideas for reaching same goal.

**Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. நெஞ்சறிந்து பொய்யற்க!
posted by kavimagan (dubai) [15 March 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3299

நமது சமுதாயத்திற்கு கிடைத்த நன்மை, தீமைகளின் மீது பிரயாணம் செய்து கொண்டிருந்த கருத்து விவாதம், மிகவும் சாமர்த்தியமாக கருணாநிதியின் பாணியிலேயே, இன்னொரு தளத்திற்கு திருப்பி விடப்பட்டிருக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகாலத்தில் மாத்திரம், வெறும் இலவச திட்டங்களுக்காக தமிழகம் ஒரு லட்சம் கோடி கடன்பட்டிருக்கிறது என்பதனை மறைத்து, பொருளாதார தன்னிறைவு பெற்ற ஒரே மாநிலம் தமிழகம் என்ற ஒரு வடிகட்டிய பொய் பிரேசர் இன்ஷ்டிவ்ட் என்ற பெயரில் பரப்பப்படுகிறது.

பிரேசர்போல ஆய்வு செய்யும் ஆயிரம் ஆயிரம் இன்ஷ்டிவ்ட்கள் இருந்தாலும், நமது மத்தியதிட்டக்கமிஷனில் தமிழகத்தின் நிலை என்ன? வறுமை இருக்கும் வரை இலவசத் திட்டங்கள் இருக்கும் என்ற கருணாவின் பேட்டி பத்திரிகைகளில் வெளியாகி ஒருமாத காலம் கூட ஆகவில்லை.

பல ஆயிரம் கோடி ஊழல் விசாரணையில், தலைவரது மனைவி, மகள், மகளின் மனம் கவர்ந்தவர்கள், தொலைக்காட்சி அலுவலகம் இன்னும் வெளிவராத பல்வேறு நிறுவனங்கள் என்று தமிழகத்தை நாறடித்தவர்கள் இன்னும் என்னென்ன கூத்தெல்லாம் ஆடி இருப்பார்கள் என்பது அனைத்தும், இறையருளால் ஆட்சி மாற்றத்திற்குப் பின் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும்.அப்போது தெரியவரும் பொருளாதார தன்னிறைவு பெற்றது தமிழகமா? அல்லது தலைவரின் குடும்பமா என்று.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. பாபர் மசூதி
posted by seyed mohamed (Dammam) [15 March 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3300

பாபர் மசூதி இடிப்புக்குப்பின். பத்து ஆண்டுகளாக (ஓவ்வொரு டிசம்பர் 6-ஆம் தேதியும்) தொடர்ந்து குரல் கொடுத்த வந்த, பாபர் மசூதிக்காக எங்களைப் போல் யாரும் போராடியதில்லை என்று பெறுமை பேசிக்கொண்ட த,மு,மு,க, இப்போது பாபர் மசூதி இடிப்பை ஆதரித்து, அந்த இடத்தில் இராமர் கோயில் கட்ட செங்கற்களை அனுப்பிய அ,தி,மு,க,வுடன் கூட்டணி வைத்துள்ளது, இதில் குறிப்பிட்டுச் சொல் வேண்டியது என்னவென்றால் இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் பாபர் மசூதி இடிப்பை கண்டித்த போது, அதை “ஆதரித்த ஓரே தலைவர் ஜெயலலிதாதான், வாழ்க! த,மு,மு,க,வும் அதன் சந்தர்ப்பவாத கொள்கைகளும்!! அதிமுக விற்கு ஜால்ரா அடிக்கவே சில கவிகள் உள்ளதே?

The Prophet PUH said: “No people will ever prosper who appoint a woman in charge of them.” (Al-Bukhaari)

அரசியலில் உயர் பதவியில் இருந்து ஆட்சி அதிகாரம் செய்ய பெண்களுக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. எவாறு இஸ்லாத்துக்கு மாற்றமா சமுதாய கட்சிகள், கவிகள் ஆதரவு தருகிறதோ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. தலையாட்டி பொம்மைகள்!
posted by kavimagan (dubai) [16 March 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3302

ஆணித்தரமான பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாத பட்சத்தில், தனிநபர் தாக்குதலில் இறங்கிவிடுவது பலவீனர்களின் பண்பாகும். பாவம்! அது அவர்களின் இயலாமை!! கரசேவைக்கு அ.தி.மு.க.ஆதரவு என்ற விஷமப் பிரச்சாரம் முன்வைக்கப்பட்டபோதே, அதை அ.தி.மு.க. தலைமை அதிகாரப்பூர்வமாக, பட்டவர்த்தனமாக அன்றே மறுத்துவிட்டது என்பதனை நாட்டு நடப்புகளை அவதானிப்பவர்கள் மறுக்க முடியாது. ஒரே பொய்யை திருப்பி திருப்பி சொல்வதால் அது உண்மையும் ஆகி விடாது.

மேலும்,மு.லீக்.க்கு 10 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்கிய ஒரே கட்சி அ.தி.மு.க.தான். 1977 ஆம் ஆண்டு தேர்தலின்போது, வள்ளல். MGR அவர்களோடு கூட்டணி அமைத்த தாய்ச்சபையை, கருணா மீதான பற்றற்ற பாசத்தால், பத்தில் ஒன்பது தொகுதிகளில் இந்த சமுதாயம் தோற்கடித்தது. ஆனாலும், MGR அவர்கள் வென்று, முதல்வர் ஆனார் என்பதே வரலாறு.

எனது கருத்தின் எந்தப்பகுதியிலும் ஒரு பெண்தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று பதிவு செய்யவே இல்லை. சாராயக்கடைகளை தமிழகத்திற்கு அறிமுகம் செய்த கருணாநிதியை ஆதரிக்கும் எவருக்கும், மார்க்க ரீதியாக விவாதம் செய்ய எந்த அருகதையும் இல்லை என்பதே எனது பணிவான கருத்து!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Election 2011
posted by Kulam Ahmed Mohideen (Jeddah) [16 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3305

காங்கிரஸ் கட்சிக்காக தனது ஒரு இடத்தை விட்டுத் தந்து பெருந்தன்மையாக நடந்து கொண்ட இந்தியயூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தியாகத்தைப் பாராட்டும் வகையில், அந்தக் கட்சிக்கு மீண்டும் மூன்று இடங்களைக் கொடுத்துள்ளார் முதல்வர் கருணாநிதி.

நேற்று தொகுதிள் விவரம் அறிவிக்கப்பட்டது. அப்போது முஸ்லீம் லீக் கட்சிக்கு மீண்டும் 3 இடங்களை ஒதுக்கி திமுக அறிவித்தது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கருணாநிதியும், காதர் மொஹைதீனும் கையெழுத்திட்டனர்.

முஸ்லீம் லீக் கட்சிக்கு பெருமை வாய்ந்த சென்னை துறைமுகம் தொகுதியை திமுக கொடுத்துள்ளது. இந்தத் தொகுதி முதல்வர் கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் போட்டியிட்டு வென்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லீம் லீக் கட்சிக்கான தொகுதிகள்:

துறைமுகம்
வாணியம்பாடி
நாகப்பட்டனம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. அதுனாலே உமக்கு பெண்ணை ஆதரிக்க அருகதை மார்க்கம் தருமா...சிந்தனை புரிய வேண்டும்.
posted by seyed ahmed (Dammam) [16 March 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3316

சாராயக்கடைகளை தமிழகத்திற்கு அறிமுகம் செய்த கருணாநிதியை ஆதரிக்கும் எவருக்கும், மார்க்க ரீதியாக விவாதம் செய்ய எந்த அருகதையும் இல்லை என்பதே எனது பணிவான கருத்து!

சரி அவர்க்குதான் அருகதை இல்லை..அதுனாலே உமக்கு பெண்ணை ஆதரிக்க அருகதை மார்க்கம் தருமா...சிந்தனை புரிய வேண்டும்.

டாஸ்மாக் கொண்டு வந்ததே இரும்பு பெண்மணி தானே? கவி கூறும் அநேக குற்றசாடும் கடந்த ஐந்து வருடத்தில் நடத்தவை இல்லை. நம்ம சமுத்தாய கட்சிகள் தமுமுக உள்பட ஏன் போன தேர்தலில் இத்தனை குற்ற சாட்டு இருக்கும் பொது ஆதரவு கொடுத்தது. அம்மாவை பற்றி மட்டும் ஏன் தாங்கள் ஒரு குற்றச்சாட்டை மட்டும் சொல்லுவதில்லை. எதுவுமே இல்லையா??

ரியாத் (HK) அவர்கள் எழுதிய கருத்தை சற்று சீர் தூக்கி பாருங்கள். கவியை தவிர எல்லோருமே ஓரளவு நியாயமாகவே அவரவர் கருத்து பதிவு செய்கிறார்கள்.

காலில் விழும் கலாச்சாரத்தை அறிமுகம் செய்த்தவரல்லவா..அம்மா என்றால் சும்மாவா... குறை இல்லாத தானே தலைவி அல்லவா??

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. யார் தலையாட்டி?
posted by seyed mohamed (Dammam) [16 March 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3320

ஆணித்தரமான பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாத பட்சத்தில், தனிநபர் தாக்குதலில் இறங்கிவிடுவது பலவீனர்களின் பண்பாகும். பாவம்! அது அவர்களின் இயலாமை!!

கரசேவைக்கு அ.தி.மு.க.ஆதரவு என்ற விஷமப் பிரச்சாரமாம். ADMK கொள்கை பரப்பு செயலாளரா தாங்கள்? யார் தலையாட்டி?

இட ஒதுக்கீடு தந்தது யார்?

உலமா நல வாரியம் அமைத்தது யார்?

உயர் பதவி உள்துறை செயலாளர், IPS, IAS, நம் சமுதாயத்துக்கு தந்தது யார்?

நம் சமுதாயத்துக்கு மருத்துவ கல்லூரி தொடங்க அனுமதி தந்தது யார்?

இது போன்று நிறைய சொல்லலாம்...

இதுவெல்லாம் மறுக்க முடியுமா அல்லது மறைக்க முடியுமா?

அனால் இதுவெல்லாம் தந்தது வாய் கூசாமல் ஜெயா என்றால்தான் சிலருக்கு சந்தோசம். என்ன செய்ய??

இந்த அம்மா உருப்படியா என்ன நம் சமுதாயத்துக்கு செய்தார்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. அவரவர் உரிமை.
posted by kavimagan (dubai) [17 March 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3325

அன்புச் சகோதரர்களே! எனது எந்தக் கருத்துப் பதிவிலும்,ஜெயாவை ஆதரியுங்கள் என்று நான் எழுதியதே இல்லை. ஆனால் எதையுமே அரை குறையாக புரிந்து கொள்ளும் சிலர்,எங்களைப் போன்றவர்களை ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் என்பதைப்போல சித்தரிக்க முயற்சிக்கின்றார்கள். நமது சமூகத்தின் வாக்கு வங்கியை மொத்தமாக அனுபவித்துவிட்டு,சில ரொட்டித்துண்டு சலுகைகளை வீசிஎறிந்து,வெறும் வார்த்தை ஜாலங்களால் நம்மை வளைத்து வைத்திருக்கின்ற கருணாநிதியின் பிடியிலிருந்தும்,மயக்கத்திலிருந்தும் வெளியே வந்து சிந்தியுங்கள் என்ற கருத்தை மாத்திரம்தான் நான் இதுவரை அழுத்தமாகப் பதிவு செய்து வந்திருக்கின்றேன்.இதே கருணாநிதியின் மயக்கத்தில், பலமுறை இவர்களுக்காக சிறை சென்றதும்,துறைமுகம் பகுதி மாணவர் அணிச்செயலாளர் ஆகப் பொறுப்பில் இருந்த போது,அன்றைய அ.தி.மு.க.ஆட்சியில் காவல்துறையின் அராஜகங்களை நேர்கொண்டதும் இவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதன் பின்னர் TIMES OF INDIA தேசிய நாளிதற்காக பணியாற்றிய போது,நமது சமூகம் கருணாவைப் போல அதிகாரவர்க்கத்தினால் எவ்வாறெல்லாம் அடிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதனை உணர்ந்தேன்.தெளிந்தேன்.உங்களிடமும் அதைத்தான் சொல்கிறேன்.சில நாட்களுக்கு முன்னர்,நான் இதே வலைதளத்தில் பதிவு செய்த கருத்தினை மீண்டும் ஒருமுறை தருகிறேன்.தலைவனும்,தலைவியும் வாழ்ந்தது போதும்.இனியேனும்,நாமும்,நமது தலைமுறையும் வாழ வேண்டும். துரோகிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்பதே எனது கருத்து.யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அவரவர் உரிமை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved