Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:56:10 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5163
#KOTW5163
Increase Font Size Decrease Font Size
புதன், டிசம்பர் 1, 2010
உறுப்பினர்கள் முழுமையாக ஒத்துழைத்தால் ஊரைத் தூக்கி நிறுத்தலாம்! அமீரக கா.ந.மன்ற பொதுக்குழுவில் தலைவர் கருத்து!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4193 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மன்ற உறுப்பினர்கள் முழுமையான ஒத்துழைப்பைத் தந்தால், காயல்பட்டினத்தைத் தூக்கி நிறுத்தலாம் என அமீரக காயல் நல மன்ற பொதுக்குழுக் கூட்டத்தில், அதன் தலைவர் தெரிவித்தார்.

கூட்ட நிகழ்வுகள் குறித்து மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

ஐக்கிய அரபு அமீரக காயல் நல மன்றத்தின் உறுப்பினர் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, துபை அல்ஸஃபா பூங்காவில் நடைபெற்றது. மன்றத் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ தலைமை தாங்கினார்.

காயல்பட்டினம் அஹ்மத் நெய்னார் பள்ளியின் முத்தவல்லி ஹாஜி பி.எஸ்.ஏ.ஷாஃபீ முன்னிலை வகித்தார். ஐக்கிய அரபு அமீரகம் துபை லேண்ட்மார்க் குழும நிறுவனங்களின் அதிபர் ஸாதிக், துபை பைரஹா டைமண்ட்ஸ் நிறுவனத்தின் அதிபர் கீழக்கரையைச் சார்ந்த ஹாஜி நஜ்முத்தீன், இ.டி.ஏ. ஷிப்பிங் டிவிஷன் பொது மேலாளர் கீழக்கரை ஹாஜி செய்யித் ஹுஸைன், திருச்சி நகரிலுள்ள எல்.கே.எஸ். ஃபர்னிச்சர் நிறுவனத்தின் அதிபர் ஹாஜி எல்.கே.கே.செய்யித் அஹ்மத், சென்னை இ.டி.ஏ. மெல்கோ. நிறுவனத்தின் இயக்குனர் ஹாஜி எச்.என்.ஸதக்கத்துல்லாஹ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

ஹாஃபிழ் எஃப்.ஷெய்க் ஸலாஹுத்தீன் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.





தலைவர் உரை:

பின்னர் கூட்டத் தலைவரும், அமீரக காயல் நல மன்றத்தின் தலைவருமான ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ உரையாற்றினார். அவர் தனதுரையில்,

நமதூரில் பல தெருக்கள், பல வித்தியாசமான கருத்துக்களைக் கொண்டவர்கள் இருக்கின்றோம். எனினும், அவற்றைப் பாராமல் இங்கு அனைவரும் ஒரு சேர வந்தமர்ந்திருப்பது உண்மையில் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

உறுப்பினர்களாகிய உங்கள் அனைவரின் ஒத்துழைப்பால் நமது மன்றம் நிறைய ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களை நிறைவேற்றி, தேவையுடையோரின் தேவைகளைத் தகுந்த நேரத்தில் கண்டறிந்து பூர்த்தி செய்துள்ளது. இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்ற ஆவலிலும் நம் மன்றம் உள்ளது. எனினும் இவையனைத்தும் உறுப்பினர்களாகிய உங்கள் யாவரின் முழுமையான ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே நடைமுறை சாத்தியமாகும்.

மன்றத்தின் உறுப்பினர் சந்தா மிகவும் குறைந்தளவிலேயே உள்ளது. இதுவரை மன்றத்தால் செய்து முடிக்கப்பட்டுள்ள அனைத்து நற்பணிகளும் பல்வேறு வாய்ப்புகளின் மூலம் திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. உலக காயல் நல மன்றங்களில் நம் மன்றத்தில்தான் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் யாருக்கும் எந்த வேலையும் வைக்காமல், தாமாக முன்வந்து, தமது கடமையெனக் கருதி மாதச் சந்தா தொகையை சமர்ப்பித்தால் இன்ஷாஅல்லாஹ் நமதூரைத் தூக்கிப் பிடிக்க அது ஒன்றே போதும்...

இன்று நம் நகரில் புற்றுநோயாளிகள் அதிகரித்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது. இது விஷயத்தில் துவக்கமாக அக்கறை எடுத்துக்கொண்டு, செயலாற்றிய கத்தர் காயல் நல மன்றத்திற்கு உறுதுணையாக இருந்து, அவர்கள் வகுக்கும் செயல்திட்டங்களில் நம்மையும் இணைத்துக்கொள்ள வேண்டும்...
என்றார்.

ஆண்டறிக்கை:

தலைவர் முன்னுரையைத் தொடர்ந்து, மன்ற கல்விக்குழு செயலாளர் மூஸா நெய்னா, மன்றத்தின் ஆண்டறிக்கையை வாசித்தார். கடந்த ஓராண்டில் மன்றத்தால் செய்து முடிக்கப்பட்டுள்ள அறப்பணிகள், அவற்றுக்கான செலவுத்தொகை விபரங்கள் உள்ளிட்டவற்றை புள்ளிவிபரத்துடன் அவர் தெளிவுற எடுத்துரைத்தார்.




சிறப்பு விருந்தினர் உரை:

மன்றத்தின் சேவை மகத்தானது! -எல்.கே.கே.செய்யித் அஹ்மத் (அதிபர், எல்.கே.எஸ். ஃபர்னிச்சர், திருச்சி)

சிறப்பு விருந்தினர் வரிசையில், திருச்சி எல்.கே.எஸ். ஃபர்னிச்சர் அதிபர் எல்.கே.கே.செய்யித் அஹ்மத் துவக்கமாக உரையாற்றினார். அவர் தனதுரையில்,

1971ஆம் ஆண்டு நான் அமீரகத்தில் அடியெடுத்து வைத்தேன். அன்றெல்லாம் மிகவும் சொற்பமான காயலர்களே இங்கு பணியாற்றினர். இன்றோ நம் மக்கள் மிகப்பெரிய அளவில் இங்கு சொந்தமாக வியாபாரம் செய்கின்றனர்... பணியாற்றுகின்றனர்... வந்து செல்கின்றனர்... இதனைப் பார்ப்பதற்கு மிக்க மகிழ்ச்சியாயிருக்கிறது.

இன்று நண்பகலில் நடைபெற்ற ஜும்ஆ குத்பா உரையில், கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையை உருவாக்குவதன் அவசியம் குறித்தும், ஒற்றுமைக்கு இழுக்குண்டாக்குவோரின் கதி குறித்தும் இறைமறை குர்ஆனிலிருந்தும், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளிலிருந்தும் ஏராளமான செய்திகளை கத்தீப் அவர்கள் எடுத்துரைத்தார்கள். இந்த இடத்திற்கு மிகவும் பொருத்தமான செய்தியாகவே அதை நான் பார்க்கிறேன்...

ஆம்! கருத்து வேறுபாடுகள் நமக்கிடையில் மார்க்க ரீதியாக பல இருந்தும், இவ்விடத்தில் அவற்றைப் பாராமல் ஒற்றுமையாக – குடும்பத்தினருடன் ஒன்றுகூடியிருப்பது உண்மையில் எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த மன்றத்தின் உழைப்பு, சேவை மகத்தானது! அவை தொடர அல்லாஹ் அருள் புரிவானாக...
என்றார்.

தொடர்ச்சியான பின்தொடரல்தான் இந்த அமைப்பை வெற்றிப்பாதையில் கொண்டு செல்கிறது! –கீழக்கரை ஹாஜி சாதிக் (அதிபர், லேண்ட்மார்க் குழும நிறுவனங்கள், துபை, ஐக்கிய அரபு அமீரகம்)

சிறப்பு விருந்தினர்களில் அடுத்து உரையாற்றிய துபை லேண்ட்மார்க் ஹோட்டல் அதிபர் கீழக்கரை ஸாதிக் ஹாஜி தனதுரையில்,

நான் இந்த அமீரக காயல் நல மன்றத்தின் இதுபோன்ற ஓரிரு கூட்டங்களில் இதற்கு முன்பும் கலந்துகொண்டிருக்கிறேன்... அன்றிருந்த நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இன்றைக்கு நிறைய மாற்றங்களை என்னால் காண முடிகிறது.

நிறைய உறுப்பினர்கள்... நிறைய சமூக - சமுதாயப் பணிகள்... இவையனைத்தும் மன்றத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளின் அயராத உழைப்பாலேயே சாத்தியமாயிற்று!

இன்று என்னை இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள அழைத்திருந்தார் மன்றத் தலைவர் புகாரீ ஹாஜியார். ஆனால், அழைத்தது முதல் அடிக்கொரு ஃபோன் கால் செய்து என்னைப் பின்தொடர்ந்து கொண்டேயிருந்தார். துவக்கமாக அழைப்பதற்கு ஒரு ஃபோன்... அதை நினைவூட்ட தினமும் சில தொலைபேசி அழைப்புகள்... இன்று காலையில் ஓர் அழைப்பு... நான் கிளம்பிவிட்டேனா என்பதை அறிய ஓர் அழைப்பு... நான் இங்கு வந்துவிட்டேனா என்று அறிந்திட ஓர் அழைப்பு... பூங்காவிற்குள் நான் நுழைந்துவிட்டதை உறுதி செய்ய ஓர் அழைப்பு....

ஒரு வேலையை சிரமேற்கொண்டால், இப்படியான தொடர்ச்சியான பின்தொடரல் (ஃபாலோ-அப்) இருந்தால் மட்டுமே அது முழுமையடையும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் உங்கள் மன்றத் தலைவர் புகாரீ ஹாஜியார்...

எங்கள் நிறுவனங்கள் சார்பாக, சிரமப்படும் சமுதாய மக்களுக்காக அமைப்பை நிறுவி, நிதி திரட்டப்பட்டுள்ளது. ஆனால், யாருக்கு எவ்விதம் வழங்குவது என்று முடிவு செய்வதில் நாங்கள் சற்று சிரமப்படத்தான் செய்கிறோம்.

ஆனால், அவற்றையெல்லாம் எவ்வாறு வினியோகிப்பது என்பன போன்ற பாடங்கள் உங்கள் மன்றத்தின் செயல்திட்டங்கள் மூலம் எங்களுக்குக் கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது...
என்றார்.

என்னை மதித்து அழைத்ததே எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது... –ஹாஜி செய்யித் ஹுஸைன் (பொது மேலாளர், இ.டி.ஏ. ஷிப்பிங் டிவிஷன்)

தொடர்ந்து உரையாற்றிய இ.டி.ஏ. ஷிப்பிங் டிவிஷன் பொது மேலாளர் கீழக்கரை ஹாஜி செய்யித் ஹுஸைன் தனதுரையில்,

நான் வயதில் மிகவும் சிறியவன்... இத்தனை பெரியவர்கள், அனுபவசாலிகள், பொதுச்சேவைகளில் ஊறித்திளைத்தவர்கள் ஒன்றுகூடி அலங்கரித்துக் கொண்டிருக்கும் இச்சபையில் என்னையும் மதித்து அழைத்து, மேடையில் அமரச் செய்திருப்பதை நான் பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன்... உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்... என்றார்.

காயல்பட்டினம் எங்கள் ஊர் என்று சொல்வதில் பெருமையடைகிறோம்... –ஹாஜி கீழக்கரை நஜ்முத்தீன் (அதிபர், பைரஹா டைமண்ட்ஸ் அன்ட், துபை)

சிறப்பு விருந்தினர் வரிசையில் தொடர்ந்து உரையாற்றிய துபை பைரஹா டைமண்ட்ஸ நிறுவனத்தின் அதிபர் கீழக்கரை ஹாஜி நஜ்முத்தீன் தனதுரையில்,

எந்த நல்ல காரியத்தை எடுத்துக்கொண்டாலும், அதைச் செய்து முடிப்பது கீழக்கரையா, காயல்பட்டினமா என்ற நீயா, நானா போட்டி நமது இரண்டு ஊராருக்கிடையிலும் எப்போதும் உண்டு. என்றாலும், பொதுச் சேவைகளில் இவ்வளவு திட்டமிட்ட செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் காயல்பட்டினத்தைப் பார்க்க எனக்கு சற்று பொறாமையாகத்தான் உள்ளது!

சன் டி.வி. “நிஜம்” நிகழ்ச்சியில் காயல்பட்டினம் குறித்த தகவல் தொகுப்பு சில தினங்களுக்கு முன் ஒளிபரப்பப்பட்டது. நானும் அதை ஆர்வத்துடன் கவனித்தேன். காயல்பட்டினம் மக்களின் இஸ்லாமிய ஒழுங்குமுறை குறித்து அதில் கருத்து தெரிவிக்கப்பட்டபோது, என்னுடன் இருந்த என் வீட்டார், “எங்க ஊர் காயல்பட்டினத்தைப் பற்றித்தான் சொல்றாங்க...” என்றார்கள். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்த நிகழ்வாகும்.

நீங்கள் யாவரும் ஒற்றுமையுடன் ஊருக்கு ஒருங்கிணைந்த பல நற்பணிகளை ஆற்றிட அல்லாஹ் அருள் புரிவானாக...
என்றார்.

உலக காயல் நல மன்றங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு அமீரக மன்றம்! –எச்.என்.ஸதக்கத்துல்லாஹ் (இயக்குனர், இ.டி.ஏ. மெல்கோ நிறுவனம், சென்னை)

சிறப்பு விருந்தினர் வரிசையில் இறுதியாக உரையாற்றிய சென்னை இ.டி.ஏ.மெல்கோ நிறுவனத்தின் இயக்குனர் ஹாஜி எச்.என்.ஸதக்கத்துல்லாஹ் தனதுரையில்,

நான் இந்த அமீரக காயல் நல மன்றத்தின் துவக்க கால உறுப்பினர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இம்மன்றம் துவக்கப்பட்டபோது நான் அதில் உறுப்பினரானேன்.

அன்றிருந்த அமைப்பிலிருந்து, இன்றுள்ள அமைப்பு நிறைய மாற்றங்களைக் கண்டுள்ளது... நிறைய சேவைத் திட்டங்களைச் செய்துள்ளது இம்மன்றம்...

நமதூர் கே.எம்.டி. மருத்துவமனையை நாம் மெருகூற்ற வேண்டும். அதற்கு இன்னும் பல உதவிப்பணிகளை இம்மன்றம் செய்திட வேண்டும். நமதூர் இளைஞர்கள் தொடர்ச்சியான ஊக்கமளிக்க வேண்டும்.

முன்பு போலல்லாமல் இன்று நமதூர் மாணவர்கள் நிறைய படிப்புத் துறைகளில் படித்து பட்டம் பெறுகிறார்கள்... இன்றைய தேவை என்ன என்பதை உணர்ந்து, அதற்கேற்ற பாடப் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து மாணவர்கள் படிப்பதற்கு ஊக்கமளிக்கப்பட வேண்டும்...
என்றார்.

காயல்பட்டினத்தில் அனைத்து மஹல்லாக்களின் நேரடி கட்டுப்பாட்டிலான நிர்வாகக் கூட்டமைப்பு தேவை! –எஸ்.கே.ஸாலிஹ் (நிறுவனர், தாருத்திப்யான் நெட்வர்க்)

இக்கூட்டத்தில், காயல்பட்டினம் நகரின் தற்போதைய தேவை குறித்து உரையாற்றுவதற்காக சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார் காயல்பட்டினம் தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ். அவர் தனதுரையில்,

கீழக்கரையினருக்கும் நன்மையில் பங்குண்டு...

இங்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உரையாற்றிய பெருமக்கள் காயல்பட்டினத்தைப் பார்க்க பொறாமையாக இருப்பதாக ஆதங்கப்பட்டுக் கொண்டார்கள். உண்மையில் அவர்களின் மகத்தான தொழில் வழிகாட்டுதலைப் பார்த்து காயல்பட்டினத்தாராகிய நாம்தான் அவர்களுக்கு கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.

ஆம், இன்று கீழக்கரையைச் சார்ந்த நம் பெரியவர்கள் தொழில் துறையில் இறையருளால் இந்தளவுக்கு காலூன்றியிருக்கவில்லையெனில், தமிழ் பேசும் முஸ்லிம்கள் இந்தளவுக்கு பெருவாரியான அளவில் இந்த அமீரகத்தில் இருந்திருப்பார்களா...?

பெரும்பெரும் தொழில் நிறுவனங்களை உருவாக்கி, அவற்றின் மூலம் தமிழ் பேசும் நம் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமின்றி, தகுதியுள்ள முஸ்லிமல்லாத மக்களுக்கும் கூட நல்ல வேலைவாய்ப்புகளை அமைத்துக் கொடுத்து, இன்று அவர்கள் தம் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் உதவிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவற்றுக்கெல்லாம் காரணம் கீழக்கரையைச் சார்ந்த இந்த பெரியவர்கள்தான்!

எனவே, இந்த மன்றத்தின் எந்த ஒரு நற்பணியாக இருந்தாலும், அவையனைத்தின் நன்மைகளிலும் கீழக்கரை தொழில் வழிகாட்டிகளுக்கு நிச்சயம் அல்லாஹ் ஒரு சம பங்கை வைத்திருக்கிறான் என்றே நான் கருதுவேன்...

மஹல்லா ஜமாஅத் கூட்டமைப்பு...

காயல்பட்டினத்தில் இன்று நம்மை வேதனையிலாழத்தக் கூடிய பல நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன... ஒழுக்க சீர்கேடுகள், இளைஞர்களின் கட்டுப்பாடற்ற தன்மை, கல்வித்துறையில் மாணவர்களின் வளர்ச்சிக் குறைவு, சிதைந்து வரும் பெண்கள் கட்டுப்பாடு, மறைந்து வரும் மார்க்க விழுமியங்கள்... நகர நிர்வாகங்களின் சீர்கேடு...

இவையனைத்தையும் ஒன்றிணைந்து சரிசெய்ய வேண்டிய கடமை நம் யாவருக்கும உள்ளது. அதன் முதற்கட்டமாக, நம் ஊரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் நேரடி நிர்வாகிகளையும் அங்கத்தினராகக் கொண்ட கூட்டமைப்பை அமைத்து, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் அவர்களில் ஒருவரை அக்கூட்டமைப்பின் தலைவராக்கி, அடிக்கடி ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, நகர சீர்கேடுகளைக் களைந்து, கட்டுப்பாட்டுடன் கூடிய சமூக ஒற்றுமையை, பிற சமுதாயத்தினருடன் மேற்கொள்ளப்பட வேண்டிய நல்லிணக்கத்தைக் கட்டிக் காப்பாற்ற வேண்டியது நம் அனைவர் மீதும் கடமை.

அதனைக் கருத்தில் கொண்டு, நகர சங்கங்களின் மூலமாக இதுகுறித்த செயல்திட்ட முன்வடிவு ஒன்று உருவாக்கப்பட்டு, நமது காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகத்தின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இறையருளால் அது சாத்தியமானால், நம் நகரில் கட்டுப்பாட்டுடன் கூடிய நகர நிர்வாகம், சமய நல்லிணக்கம், ஒழுக்க மேம்பாடு, சமூகப் புரட்சி ஆகியவற்றை நம்மால் நிச்சயம் செய்து காட்ட முடியும்.

புற்றுநோய்க்கெதிரான செயல்திட்டம்...

நம் நகரில் இன்று புற்றுநோயாளிகள் மிக அதிகளவில் பெருகி வருகின்றனர். எங்கோ, யாருக்கோ ஏற்பட்டது என்ற நிலை மாறி, இன்று நம்மவர்கள் ஒவ்வொருவருமே நம்மைச் சார்ந்தவர்களை புற்றுநோயாளிகளாகக் காணும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலர் இன்று மரணித்தும் விட்டார்கள்...

இந்நோய் பரவலுக்கான சரியான காரணத்தை முறைப்படி கண்டறிய வேண்டிய அவசியம் நமக்குள்ளது. கண்ணை மூடிக்கொண்டு, அந்த தொழிற்சாலைதான் காரணம்... இந்த மொபைல் ஃபோன்தான் காரணம் என்று சொல்லி முடித்துவிடாமல், எது காரணம் என்பதை எவ்வாறு கண்டறிய வேண்டுமோ அதற்கான வழி வகைகளைச் செய்ய வேண்டும்.

தலைவர் அவர்கள் சொன்னது போல, இது விஷயத்தில் துவக்கமாக அக்கறை எடுத்து செயல்வடிவம் தந்த கத்தர் காயல் நல மன்றத்தின் தலைமையில் இதர மன்றங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயலாற்றினால் நிச்சயம் நம்மால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, அதைக் களைவதற்கான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தி, இருக்கும் உயிர்களையேனும் காத்திட இயலும்.

எனினும், பரவலாக இன்று காரணமாகச் சொல்லப்படுவது நமதூருக்கு அருகிலுள்ள தொழிற்சாலையினால் என்பதுதான்! சரியான செயல்திட்டத்துடன் அதை ஆய்ந்தறிந்து நாம் சொல்ல வேண்டும். உண்மையில் அத்தொழிற்சாலை காரணமல்ல என்று ஆய்வின் இறுதியில் உறுதி செய்யப்பட்டால் அதை ஏற்கவும் நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.

அடுத்து காரணமாகச் சொல்லப்படுவது கைபேசி பரவல். இன்று நம் வீடுகளிலுள்ள ஒவ்வொருவரிடமும் கைபேசி உள்ளது. தூங்கியெழுவதற்கு அலாரமாக்க கூட அதுதான் நம் தலைக்கருகில் இருக்கிறது. இதன் வீரியம் நம் உடலில் எந்தளவுக்கு பாதிப்பை உண்டாக்கும் என்பதை நாம் கண்டறிந்து, ஒருவேளை அதைத் தவிர்த்துதான் ஆக வேண்டுமென்றால் நம் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு அதற்கும் நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.

அடுத்து, நம் வாழ்க்கை முறையில் நிறைய மாற்றங்களை நாம் செய்தாக வேண்டியுள்ளது. நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்கள் உடலுக்கு சக்தியாக மாற்றப்படுகிறது. மற்றவை விஷமாக வெளியேற்றப்படுகிறது. அவை பெரும்பாலும் வியர்வை, சிறுநீராக வெளியேறுகிறது, வெளியேற வேண்டும்.

ஆனால், இன்று நம் வீட்டிலுள்ள ஆண்கள் பெண்களின் உணவுப் பழக்கவழக்கத்தில் நிறைய குறையுள்ளது. அந்தச் சாப்பாட்டின் சத்து போக எஞ்சிய கெடுதிகள் வியர்வையாக வெளியேறுவது முற்றிலும் இல்லை என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு!

ஆம், அன்றிருந்த ஆட்டு உரல், அம்மி, கையால் துணி துவைத்தல் உள்ளிட்ட அனைத்தும் இன்று மறக்கடிக்கப்பட்டு விட்டது. இன்னும் ஒருபடி மேலே சொல்வதென்றால், இனி பிறக்கும் குழந்தைகளுக்கு இப்பொருட்களையெல்லாம் ஆதம் நபி காலத்தில் உபயோகிக்கப்பட்ட பொருட்களைப் பார்ப்பது போன்ற அதிசயப் பொருளாகத்தான் நாம் காண்பிக்க வேண்டிய நிலை வரும்.

அன்று நம் மக்கள் செய்யும் வேலைகளே அவர்களின் நோய் தீர்க்கும் காரணியாக இருந்தது. இன்று அவற்றையெல்லாம் நாம் மறந்துவிட்டதால், வேலை செய்யாமலேயே - மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக, உடற்பயிற்சி என்ற பெயரில் கை காலை ஆட்டிக் கொண்டு இருக்க வேண்டிய நிலையாகிவிட்டது.

எனவே, நம் உணவுப் பழக்கவழக்கம், வாழ்க்கை முறை உள்ளிட்ட அனைத்திலும் இயன்றளவுக்கு தகுந்த மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

அமீரக காயல் நல மன்ற சிறப்பு மலர்...

உங்கள் அமீரக காயல் நல மன்றத்தின் சார்பில் சிறப்பு மலரொன்று வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் நம் நகர் குறித்த சரித்திரங்கள், மன்றம் துவக்கப்பட்ட வரலாறு, மன்றத்தின் சேவைகள், புகைப்படத் தொகுப்புகள், உறுப்பினர்களின் படங்களுடன் கூடிய விபரப்பட்டியல், கட்டுரைகள், கதைகள், கவிதைகள், துணுக்குகள் உள்ளிட்ட மன்ற உறுப்பினர்களின் படைப்புகள் என அனைத்தையும் இடம்பெறச் செய்திட மன்றத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். இந்த மலரை தயாரித்துத் தரும் பொறுப்பு இச்சிறியவனிடம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான படைப்புகளை தமது புகைப்படங்களுடன், kayaluae.souvenir@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு உறுப்பினர்கள் அனைவரையும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இதே ஒற்றுமை ஊரிலும்...

இன்று இக்கூட்டத்தில் உங்கள் யாவரையும் நகர்நலன் என்ற ஒரே எண்ணங்கொண்ட காயலர்களாக ஓரிடத்திலேயே பார்க்கும் வாய்ப்பை அல்லாஹ் எனக்குத் தந்தருளியுள்ளான். பல கொள்கை கோட்பாடுகள், பல ஜமாஅத்தினர் போன்ற வேறுபாடுகளுக்கிடையிலும் இங்கு யாவரும் ஒன்றிணைந்து அமர்ந்திருக்கும் இக்காட்சி, இதே திறந்த மனதுடன் தாயகத்திலும் தொடர வேண்டும் என்ற எனது நெடுநாள் ஆசையை வல்ல அல்லாஹ் நிறைவேற்றித் தருவானாக...


இவ்வாறு அவர் பேசினார்.

கூட்ட்த்தில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு, மன்றத் தலைவர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ, துணைத்தலைவர் ஹாஜி துணி உமர் ஆகியோரும், சிறப்பு அழைப்பாளருக்கு ஹாஜி மக்பூலும் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.



பின்னர், மதிய உணவாக காலித் பிரியாணி, சிக்கன் 65 அனைவருக்கும் பரிமாறப்பட்டது. தேனீர் ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தில் கலந்துகொண்டோர் தேவைப்படும்போதெல்லாம் எடுத்துக்கொள்ளும் வகையில் தேனீர், சமோசா பொதுவிடத்தில் வைக்கப்பட்டிருந்த்து.













குழந்தைகள் உள்ளிட்ட கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் வயதுக்கேற்ப விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. நன்றியுரைக்குப் பின் துஆவுடன் கூட்டம நிறைவுற்றது.





கூட்டத் துளிகள்...

பகல் நேரம் குறுகியதாக இருந்ததால், உறுப்பினர் அறிமுகம் உள்ளிட்ட வழமையான கூட்ட நிரலில் பல நடைபெறாமற்போனது...

கடந்த கூட்டங்களை விட இக்கூட்டத்தில் பெண்களின் வருகை அதிகமாக இருந்தது...

பல்வேறு அவசரப் பணிகள் காரணமாக, மதிய உணவுக்குப் பின் கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலோ கலைந்து சென்று விடுவர். ஆனால் இக்கூட்ட்த்தில், உறுப்பினர்கள் ஒருவர் கூட அசையாமல் கடைசி வரை இருந்தது நகர்நலனில் அவர்களின் அக்கறையைப் பறைசாற்றுவதாய் அமைந்திருந்த்து...

அமீரக காயல் நல மன்றம் உள்ளிட்ட உலக காயலர்களின் செய்திகளையும், உள்ளூர் செய்திகளையும் எவ்வித பாரபட்சமுமின்றி உடனுக்குடன் உறுதிபடுத்தி வெளியிடும் காயல்பட்டினம்.காம் வலைதளத்திற்கு இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டதோடு, மன்ற உறுப்பினர்களின் விபரப்பட்டியல் (profile), சந்தா நிலுவை, கூட்ட அறிவிப்புகள் உள்ளிட்ட அடிக்கடி செய்யப்பட வேண்டிய பணிகளுக்காக காயல்பட்டினம்.காம் வலைளத்தில் தனியொரு பக்கத்தை உருவாக்கித் தந்து, அதிலிருந்து உறுப்பினர்களுக்கு உடனுக்குடன் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள வழிவகை செய்து தரப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

கூட்டத்திற்கிடையில் அஸ்ர் தொழுகையையும், கூட்ட நிறைவில் மஃரிப் தொழுகையையும், காயலர்கள் பூங்கா வளாகத்திலேயே கூட்டாகத் தொழுதனர்.



மன்ற செயலாளர் யஹ்யா முஹ்யித்தீன் நன்றியுரைக்குப் பின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்திற்கு வருவதற்கும், கூட்டம் முடிந்து செல்வதற்கும் அபூதபியிலிருந்தும், துபையிலிருந்தும் காயலர்களுக்காக இலவச வாகன வசதி செய்யப்பட்டிருந்தது.




இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



















தொகுப்பு:
அமீரக காயல் நல மன்றம் சார்பாக,
சாளை ஷேக் ஸலீம்
(துணைத்தலைவர்)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. MASHA ALLAH.
posted by SATNI.Seyedmeeran. (Jeddah.KSA) [02 December 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1362

AssalamuAlaikkum. Intha Arputhamana Photos, News Parthida Kannukum, Kalpukkum Kulirchiyum Magilchiyaka Ullathu.

SJM.SafiKaka, LKK.SeyedAhmedMama, HN.Sadak Kaka, SK.Salih Thamby (Wappa Sikkirama Ooru Poi Seruma... Nee Illamey Oorukkum, Kadal Kadanthu Valum Engalukkum Theduthuma Kayal Newsla Unnai) Matrum Anaithu Virunthalaikal Nam Thoppul Kodi Uravana Kilakkarai Sithevikal, Anaithu Nam Makkalkaliyum Kayalil Kuda Illai Ulagil Engum Paarkka Mudiyatha KA(D)YAL Makkal MashaAllah Thabarakkallah.

Anaivarukkum Nengarntha Nalvalthum, Narsalamum ASSALAMUALAIKKUM. Valga UAE KWA, Valarka Adan Narpani YA ALLAH AAMEEN.

SATNI.S.A.SEYEDMEERAN.JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Free Trip 2 DXB
posted by S.T. LABEEB (TSUTIN, LA, USA) [02 December 2010]
IP: 99.*.*.* United States | Comment Reference Number: 1363

I have seen all my relatives, friends, Kayalpatnam known people and my contemporary. I feel I missed the chance. The deliver given by Mr. SK Salih Hafiz is quite fair and common. The function KWA, Emirates is wonderful. People of Kayalpatnam Expect more benefit from you as usual. S.T.LABEEB


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Dubai Meeting
posted by vsm ali (kangxi, jiangmen, china) [02 December 2010]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 1366

உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஒருசேர பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. ஆடிட்டர் புஹாரி காக்காவுக்கு நன்றி. ( eid கூட்டத்தில் , எங்களையும் கூப்பிடவில்லையே , என்ற Sella wappa வின் ஏக்கத்தை போக்கிவிட்டீர்கள். இதுல யாரு Sella Wappa ன்னு தெரியலையே ? )

" ஊரை தூக்கி நிறுத்தும் " முயற்ச்சியில் , அனைவரது கருத்துக்களும் நன்றாகவே உள்ளது. அனைத்து பள்ளிகளிலும் ஒருசிலரை தேர்ந்தெடுத்து " one united jamaath " நல்ல யோசனை. நீயா , நானா என்ற ' ஈகோ " ஒழிந்தாலே போதும், அடுத்தவர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகாமல் , மேலோங்கி நிற்கலாம்.

சலீம் காக்கா, ஹ்ம்ம்ம் ....... பிரியாணி, சமோசா , எங்கள் ஊரில் இதெல்லாம் இல்லை. இவற்றையெல்லாம் பார்க்கும்போது நாமும் அங்கே இருந்திருக்கக்கூடாதா என்ற ஏக்கம் உள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. dubai (mini kayal)
posted by nafeela (Bangkok) [02 December 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 1368

masha allah we are very proud in kayalitis i saw the picture the picture look like a mini kayalpatnam so nice may allah shower his blessings all kayalitis


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Biggest News !
posted by Shakeel ahamed (Seattle, USA) [02 December 2010]
IP: 203.*.*.* Korea, Republic of | Comment Reference Number: 1369

Very happy to see such a grand gathering.
And I think this is the BIGGEST NEWS ITEM EVER.:)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. கூட்டமைப்பு தேவை!
posted by N.S.E. மஹ்மூது (Yanbu - Saudi Arabia) [02 December 2010]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1373

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

மாஷா அல்லாஹ்! பொதுக்குழுக் கூட்டம், பார்க்க சந்தோசமாக இருக்கிறது.

சிறப்பு விருந்தினர்கள் எல்லாம் வந்து கலந்துக்கொண்டு சிறப்பாக்கி வைத்திருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

தலைவர் அவர்கள் சொல்வது போல் உறுப்பினர்கள் அனைவர்களும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தால் இன்ஷா அல்லாஹ்! எல்லா காரியங்களிலும் முழு வெற்றியை அடையலாம் என்பது உண்மையே.

சிறப்பு விருந்தினர்கள் உரைகள் நன்றாக இருந்தது.

சகோதரர் எஸ்.கே. ஸாலிஹ் அவர்கள்பேசும்போது நல்ல பல கருத்துக்களை சொன்னார்.

அதிலும் " காயல்பட்டினத்தில் அனைத்து மஹல்லாக்களின் நேரடி கட்டுப்பாட்டிலான நிர்வாகக் கூட்டமைப்பு தேவை! " என்று அவர் சொன்னது மிகவும் சிறந்த கருத்து , பொருள் பொதிந்ததும்கூட.

புற்று நோயை பற்றி தலைவர் அவர்களும், சகோதரர் ஸாலிஹ் அவர்களும் சொன்னதுபோல்

" துவக்கமாக அக்கறை எடுத்துக்கொண்டு, செயலாற்றிய கத்தர் காயல் நல மன்றத்திற்கு உறுதுணையாக இருந்து, அவர்கள் வகுக்கும் செயல்திட்டங்களில் நம்மையும் இணைத்துக்கொள்ள வேண்டும்" என்பதுதான் சரியாகத் தெரிகிறது.

நல்லதொரு ஒற்றுமையை இந்த பொதுக்குழுக் கூட்டத்தை பார்க்கும்போதே! அறிய முடிகிறது மாஷா அல்லாஹ். இதுபோல் ஊரிலும் நல்லதொரு ஒற்றுமை ஏற்பட்டு எல்லா காரியங்களிலும் வெற்றி பெற இறைவன் அருள்வானாக ஆமீன்.

------------------

இதில் உள்ள போட்டோக்களில்தான், நிறைய மக்களை பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன். குறிப்பாக எல்.கே.கே.செய்து அஹ்மது காக்காவை 25 வருடத்திற்கு பிறகும், துணி உமர் காக்கா அவர்களை 40 வருடத்திற்குப் பிறகு இப்போதுதான் அதுவும் போட்டோவில் பார்க்கிறேன். திருச்சியிலே படித்துக் கொண்டிருக்கும்போது பார்த்தது. இன்ஷா அல்லாஹ் விரைவில் ஊரிலே சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும் என்று எண்ணுகிறேன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. KWA ANNUAL MEET UAE
posted by NOOHU SAHIB (KAYALPATNAM) [02 December 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 1375

MASHA ALLAH LA HOWLA WALA KUWWATHA ILL BILLAH. INSHA ALLAH I PRAY THIS UNITY WILL CONTINUE IN OUR KAYAL ALSO.FORGET ALL EGOS AND HATRED COME FORWARD TO UNITE FOR THE WELFARE OF OUR KAYAL AND FIGHT AGAINST COMMON ENEMY.MAY ALLAH ACCEPT ALL OUR NOBLE SERVICES AAMEEN.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. masha Allah
posted by FSK (United Kingdom) [03 December 2010]
IP: 82.*.*.* United Kingdom | Comment Reference Number: 1382

Masha Allah really happy to see people from all muhallas in a single gathering.. every one have their own opinion and belief about religion. please let us forget criticizing others and aim for perfection in our own lives. we have all the qualities to be called as a model town in many aspects. let us unite to reach that height. happy to see mama and kaka and all the kayals here.. May Allah bless us .. Aameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Alhamdhulillah
posted by sirajudeen (saudi arabia) [03 December 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1383

ITS VERY NICE GET TOGATHER PARTY.FIRST SAY THANKS TO ALLAH.ITS VERY GOOD GRAND PARTY.MINI KAYAL NANBARGALAIUM,ANBARGALAIUM PARKUMPOLUTHU ALAWATRA SANTHOSAM.NAMUDAYA WELFARE MENMELUM VALARCHI ADAYANUM.SUKRAN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Great job KWA Dubai!!
posted by Salai Mohideen (California) [03 December 2010]
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 1387

I think its the first time I see such a lengthy news content in KOTW. Its impressing/ informative discussion points & many familiar faces. As rightly mentioned by Br.JSA Bukhari, cooperation of every kayalite in Dubai will strengthen and motivate their efforts to implement many more projects in kayal. Also every kayalite has to understand, its our responsibility towards KPM to cooperate and active participation in kwa activities in their region.

After seeing the activeness of KWA Dubai, KWA Jeddah, Sp're & so on, many times I wished to be working in those regions than US since atleast that would help me to get actively involved and get together with kayalite team.

As usual, kudos to KWA Dubai & keep up your good work!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. kayalthe great
posted by mohmed younus (Chennai ) [03 December 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 1390

உண்மையில் இவ்வளவு சிறப்பான கூட்டத்தை பார்பதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. நமது ஊரை போல வெளி நாடுகளில் வாழும் மற்ற எந்த ஊர் மக்களாலும் இவ்வளவு சிறப்பான சேவைகளை செய்கிறார்கள் என்று நாம் கேள்வி பட்டது இல்லை. நமது ஊரை போல மேலும் பொருள் செல்வத்திலும்,செல்வாக்கிலும் அதிக பலமுள்ள கீழக்கரை மக்களால் கூட இது போன்ற சேவைகளையும்,ஒன்று கூடலையும் நடத்தி காட்டுவர் என்பது சந்தேகம் தான் , நான்கு பேர் ஒரு ஊரில் இருந்தால் கூட, நல மன்றங்களை ஏற்படுத்தி சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றதே! எல்லா புகழும் அல்லாஹுவுக்கே.

இன்றைய காலத்தில் நூறு பேரு இருந்தால் கூட மாதம் ஐந்து கொலைகளும், கொள்ளைகளும் நடக்கும் நேரத்தில், ஐம்பது ஆயிரம் பேர் வாழும் ஊரில் அத்தி பூத்தாற்போல் நடக்கும் சில அசம்பாவிதங்கள் நமது ஊரின் பெருமையும் கெடுக்கும் அளவில் கோல் கிடையாது. என்னதான் வீட்டுக்கு வீடு டிவி இருந்தாலும், நண்பர்களே!தியேட்டர் சென்ற படம் பார்க்கும் கலாச்சாரம் வேறு.

தியேட்டரில், மஜீத் மக்ழரியும், ஹாமித் பக்ரியும், அஹ்மத் அப்துல் காதிர் ஆழிமும் பாயான் செய்ய மாட்டார்கள். நண்பர்களே! அன்று சன் டிவியின் நிகழ்ச்சிக்கு பிறகு இப்படியும் ஒரு நகரம் இந்த காலத்திலும் உண்டா என்று வியந்தவர்கள் ஆயிரம் பேர். நமதூரை சுற்றியுள்ள ஊர்களில் வேலை பார்க்கும் மாற்று மத சகோதர்கள் கூட காயல்பட்டினத்தில் வீடு கிடைக்காதா என்று விரும்புவது, நமது ஊரில் நிலவும் அமைதியும் பாதுகாப்பும் தான் தன காரணம்.

எதோ இரண்டு வீடுகளுக்கு இடையில் நடக்கும் முடுக்கு சண்டையை கரணம் காட்டி முடுக்கின் அவசியத்தை சிலர் குறைத்து மதிப்பிடுவது உண்டு. ஆனால்,இந்த அமைப்பை கண்ட ஒரு ஆந்திர தோல் வியாபாரி இந்த முடுக்கு அமைப்பை படமாக ஆக்க விரும்பினார்.

எவ்வளவோ கூறலாம். தயவு செய்து,ஊரின் சிறுமையை மட்டும் கூறாதீர்கள். இந்த ஊரில் பிறக்க அல்லாஹ் நமக்கு தந்த வாய்ப்புக்கு நன்றி கூறுங்கள் .

முஹம்மது யூனுஸ்
சென்னை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved