ஐக்கிய அரபு அமீரக காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் எதிர்வரும் நவம்பர் 26 அன்று காலையில், அல் சபா பார்க், அல் சத்வா, துபாயில் நடைபெறவுள்ளது. இது குறித்து அம்மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
மன்றத்தின் சார்பில் விரைவில் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ள சிறப்பு மலரை தயாரிக்கும் பொறுப்பு, காயல்பட்டினம் தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் இடம் வழங்கப்படவுள்ளது. இப்பணிக்காக, மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் அவர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ளவுள்ளார்.
எனவே, இச்செய்தியைப் பார்க்கும் அமீரக காயலர்கள் தங்களது கவிதைகள், கட்டுரைகள், துணுக்குகள், நகைச்சுவை துணுக்குகள், நகர சரித்திர குறிப்புகள் உள்ளிட்ட படைப்புகளை, அக்கூட்டத்தில் தவறாமல் சமர்ப்பிக்குமாறும், இத்தகவலை அமீரகத்தின் அனைத்து காயலர்களுக்கும் தெரிவித்து, அவர்களையும் ஆக்கங்களுடன் வரச்செய்யுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|