Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:13:36 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 4896
#KOTW4896
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, அக்டோபர் 15, 2010
உதவித்தொகை பெற முட்டுக்கட்டை! மக்கள் சேவாக்கரங்கள் குற்றச்சாட்டு!! அரசு மகளிர் பள்ளி தலைமையாசிரியை விளக்கம்!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4397 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நடுவண் அரசின் சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் உதவித்தொகைகளைப் பெறுவதற்காக, மாணவியரால் சமர்ப்பிக்கப்படும் விண்ணங்களுடன் இணைக்கப்படும் சான்றிதழ்களிலுள்ள சிறு சிறு எழுத்துப் பிழைகளைக் காரணங்காட்டி, அவர்கள் உதவித்தொகையைப் பெற்றிட முட்டுக்கட்டையாக இருப்பதாக, காயல்பட்டினம் அரசு மகளிர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை மீது காயல்பட்டினம் மக்கள் சேவாக்கரங்கள் அமைப்பின் நிறுவனர் பா.மு.ஜலாலி குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

நமதூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியரின் பெற்றோரிடமிருந்து, சில மாதங்களுக்கு முன்பாக, மத்திய அரசின் சிறுபான்மை கல்வி உதவித்தொகை கிடைப்பதில் உள்ள சிரமங்களுக்கு நிவாரணம் வேண்டி, பொதுச்சேவையாளர் என்ற முறையில் எனக்கு அழைப்புகள் வந்தன.

என்னவென்று விசாரித்ததில், மேற்படி தீவுத்தெரு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை அவர்கள் இந்த கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பம் செய்வதற்கு குடும்ப அட்டையில் ஒரு சிறிய எழுத்துப் பிழை இருந்தாலும், “அதையும் திருத்தம் செய்து தந்தால்தான் பரிசீலனைக்கு அனுப்பப்படும்... திருத்தம் செய்து தரப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்” என்று கூறியுள்ளார். இதனால் இந்த 2010 – 11ஆம் வருட கல்வி உதவித்தொகைக்கு பலர் விண்ணப்பம் செய்ய முடியாமல் போய்விட்டது.

மேலும் பலரிடம் (மாணவியரின் பெற்றோரிடம்) இந்த ஆண்டு கல்வி உதவித்தொகை, குடும்ப அட்டை திருத்தம் செய்ய முடியாததால், கல்வி உதவித்தொகை தேவையில்லை என்று எழுத்துப்பூர்வமாக தலைமையாசிரியை கையொப்பம் வாங்கி வைத்துள்ளார். (இத்தகவல் மாவட்ட கல்வி அலுவலர் மூலம் கிடைத்தது.)

இது விஷயமாக, மக்கள் சேவாக்கரங்கள் அமைப்பின் நிறுவனர் என்ற முறையில் நேரடியாக தலைமையாசிரியை அவர்களிடம், “இப்படியெல்லாம் அலைக்கழிக்காதீர்கள்!” என்று கூறியதற்கு, “குடும்ப அட்டையில் திருத்தம் செய்யவேண்டும்... அப்படி விதியில்லை என்பதற்கு உரிய அலுவலரிடம் எழுதி வாங்கித்தாருங்கள்!” என்று கூறினார்.

இது தொடர்பாக நான், சம்பந்தப்பட்ட சென்னை சிறுபான்மை ஆணையர், மாவட்ட சிறுபான்மை அலுவலர், மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோரிடம் எழுத்துப்பூர்வமாக எழுதிக்கேட்டதன் அடிப்படையில், கல்வி உதவித்தொகை பெற குடும்ப அட்டையில் திருத்தம் தேவையில்லை என்று மாவட்ட கல்வி அதிகாரியிடமிருந்து எழுத்துப்பூர்வமாக கடிதம் பெற்று வைத்துள்ளேன்.

இது விஷயமாக, மேற்படி பள்ளியின் தலைமையாசிரியை அவர்கள் தன்னிச்சையாக முடிவு எடுக்கக் கூடாது; சிறுபான்மை மாணவியர் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் மேற்படி தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, உரிய அதிகாரிகளிடம் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமும், தபால் மூலமும் வேண்டிக்கொண்டுள்ளோம்.

மாவட்ட கல்வி அதிகாரியின் நடவடிக்கையைப் பொருத்து எமது அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடரும் என்பதை தெரியப்படுத்துகிறோம். இது விஷயமாக, மாவட்ட கல்வி அதிகாரி கேட்டுக்கொண்ட படி, நீங்களும் உரிய விசாரணை மேற்கொண்டு உண்மை நிலையை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டுகிறோம்.


இவ்வாறு மக்கள் சேவாக்கரங்கள் அமைப்பின் நிறுவனர் பா.மு.ஜலாலி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காயல்பட்டினம் தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரிய யு.திருமலையிடம் நாம் நேரடியாக விளக்கம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது:-



சிறுபான்மை மாணவியருக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, மாணவியர், BC, MBC, BCM ஆகிய பிரிவுகளைச் சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்;

50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்;

வேறு உதவித்தொகைகள் எதுவும் பெற்றிருக்கக் கூடாது

போன்ற விதிமுறைகள் உள்ளன. இந்த விதிமுறைகளுக்குட்பட்டு விண்ணப்பிக்கும் மாணவியரின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அவ்வாறு விண்ணப்பிக்கும் மாணவியர் பலரின் விண்ணப்பங்களுடனான இணைப்புச் சான்றிதழ்களில் உள்ள பெயருக்கும், நம் பள்ளியில் பதிவு செய்யப்பட்டுள்ள அவர்களின் பெயர்களுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருந்தால், அம்மாணவியரை மட்டுமே குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம் செய்து கொண்டு வருமாறு நாங்கள் கூறுகிறோம்.

சில மாணவியர் அவ்வாறு திருத்தம் செய்து கொண்டு வந்து தருகின்றனர். பெரும்பாலான மாணவியர் அதிலுள்ள சிரமத்தைக் கருத்தில் கொண்டு, உதவித்தொகை தங்களுக்குத் தேவையில்லை என்று தெரிவிக்கின்றனர். அவ்வாறு உதவித்தொகை தேவையில்லை என்று தெரிவிக்கும் மாணவியரிடம், எழுத்துப்பூர்வமாக நாங்கள் கடிதம் பெற்றுக்கொள்கிறோம்…

“திருத்தம் செய்தால்தான் கல்வி உதவித்தொகை கிடைக்கும் என்று அரசு ஆணை ஏதுமில்லை“ என தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் கடிதம் மூலம் மக்கள் சேவாக்கரங்கள் அமைப்பிற்குத் தெரிவித்திருக்கிறாரே...? என்று நாம் கேட்டபோது,

எங்களிடம் கணக்குத் தணிக்கைக்காக (ஆடிட்டிங்) அலுவலர்கள் வந்து பதிவுகளைப் பார்க்கும்போது, இதுபோன்ற விண்ணப்பங்களை சரிசெய்யாமல் நான் அனுப்பியிருந்தால், அதற்காக நாங்கள்தான் கண்டிக்கப்படுகிறோம்... எனவேதான், செய்வதை முறையாகச் செய்துவிடுவோம் என்ற அடிப்படையில் நான் இவ்வேலைகளைச் செய்து தரச் சொல்கிறேன்...

இந்த விதிமுறைகளை ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கே நாங்கள் விதிக்கிறோம்... அதே நேரத்தில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியரின் பெயர்களை அரசுத் தேர்வுக்காக பள்ளியிலிருந்து அனுப்பி வைக்கும்போது, நாங்களே மிகுந்த கவனம் செலுத்தி, குடும்ப அட்டையிலும், பள்ளியின் பெயர் பதிவிலும் வேறுபாடுகள் இல்லாதவாறு பெயர் திருத்தம் செய்து அனுப்பி வைக்கிறோம்...

உண்மையில், நாங்கள் இந்த மாணவியருக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கக் கூடாது என்ற கெட்ட எண்ணம் கொண்டிருந்தால், நாங்கள் ஏன் அவர்கள் விஷயத்தில் இவ்வளவு ஆர்வம் எடுக்க வேண்டும்...?

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியருக்காக அத்தருணத்தில் நாங்கள் மேற்கொள்ளும் இம்முயற்சி காரணமாக, பிற்காலத்தில் அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது எவ்வித சிரமமுமின்றி செல்ல முடிகிறது. இதுபோன்ற பெயர் வேறுபாடுகள் உள்ளவர்கள் எந்தளவுக்கு அலைச்சல்களை அப்போது சந்திக்கின்றனர்...? யார் மீதும் குற்றம் சுமத்த முடியாத அத்தருணத்தில் செய்வதறியாது மாணவியர் திகைத்து நிற்பதை விட, இப்போதே அவர்களை சரிசெய்து விடுமாறு நாங்கள் சொல்வதில் தவறு என்ன இருக்கிறது...?

மாணவியரோ அல்லது அவர்களின் பெற்றோரோ பெரும்பாலும் இலகுவாகப் புரிந்துகொள்ளும் இவ்விஷயத்தை இந்தளவுக்கு பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்பதே என் கருத்து!

பொதுவாக அரசு பள்ளிக்கூடங்களில் அரசுப் பொதுத்தேர்வுகளின்போது தேர்வறை கண்காணிப்பாளராக (Supervisor) ஆண் - பெண் யாரையும் அனுப்புவதுண்டு! ஆனால் எமது பள்ளியில் கோஷா பெண்கள் படிப்பதைக் கருத்தில் கொண்டு, யாரும் கோரிக்கை வைக்காத நிலையிலும் நாங்களாகவே முயற்சிகள் மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட்டு, பெண் கண்காணிப்பாளர்களை வரவழைக்க பல்லாண்டுகளாக ஏற்பாடு செய்து தருகிறோம்... மாணவியரிடம் நாங்கள் எந்த உள்நோக்கத்தோடும் செயல்படுவதில்லை என்பதை, அவர்களிடம் நேரடியாகவே கேட்டறிந்துகொள்ளலாம்
என்றார்.

தங்களுக்கு கல்வி உதவித்தொகை தேவையில்லை என்று எழுதிக்கொடுத்த மாணவியர் சிலரை நாம் நேரில் அழைத்து விசாரித்தபோது, தலைமையாசிரியையோ, இதர ஆசிரியைகளோ ஒருபோதும் தங்களை அவ்வாறு கடிதம் தர கட்டாயப்படுத்தியதில்லை என்றும், ஓரிரு வருடங்கள் பொறுத்திருந்தால், பத்தாம் வகுப்பில் எவ்வித அலைச்சலுமின்றி, பள்ளியிலிருந்தவாறே பெயர் திருத்தமும் செய்து, உதவித்தொகைக்கும் எங்களால் விண்ணப்பிக்க முடியும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் தாம் அவ்வாறு எழுதிக் கொடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. GOVT AID MUST REACH ALL STUDENT & SCHOLL SHOULD BE HELPED
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [15 October 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 524

1.As a statement of Head miss.Why she is not taking care of this issue in the starting itshelf instead of 10th standared.
2.If the Aditor ask about this issue, She can show the approval of District Educational officer that GOVT. AID can be received without correction of Family card.
3.She is giving good result on Education to our students of kayal,At the same time, I request her to takecare of eligible student to get GOVT AID without her own rule and regulation.
4.Also our student must be aware and take intrested to get these type of help always.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. RIGHTS
posted by N.S.E.MAHMOUD (Yanbu. KSA.) [15 October 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 527

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

மேலே உள்ள செய்திகளை படிக்கும்பொழுது உள்நோக்கம் உண்டா? இல்லையா? என்பதை இறைவனே அறிவான்.

உதவி தொகையை பெறுவதற்கு சான்றிதழ்களில் வித்தியாசம் இருந்து அதன் காரணமாக அவர்களுடைய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தலைமை ஆசிரியர் மறுத்தால் அதை எந்த வகைலாவது ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் அதை எழுத்து மூலமாக தாருங்கள் என்று ஏன் தலைமை ஆசிரியர் கேட்கிறார்? அல்லது பெற்றுக்கொள்கிறார்? இது அவசியம் ஆராயப்பட வேண்டிய விசயம்.

பிற்காலத்திலே இது நம் ஊரையும், சமுதாயத்தையும் பாதிக்கும். காயல்பட்டனத்திலே பெரும்பாலனவர்கள் உதவித்தொகை வேண்டாம் என எழுதி கொடுத்து இருப்பார்களானால், வருங்காலத்திலே உதவி தொகைகள் கிடைக்காமல் போகவோ? அல்லது விகிதாச்சாரங்கள் குறையவோ வாய்ப்பு உண்டு. எனவே முறையான நடவடிக்கையின் மூலம் நம் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

தலைமை ஆசிரியர் அவர்கள் பத்தாவது வகுப்பு படிக்கும் மாணவியர்களுக்கு உதவிசெய்வதாக சொல்கிறார்கள், அது உண்மைதான், காரணம் அரசு தேர்வுக்காக அவர்கள் இதை சரிசெய்து அனுப்பாவிட்டால் இந்த பிரச்சினையில் மாணவிகளை விட பள்ளிக்கூட நிர்வாகிகளுக்குத்தான் அதிக சிரமம் ஏற்படும்.

"இந்த விதிமுறைகளை ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கே நாங்கள் விதிக்கிறோம்..."என்று தலைமை ஆசிரியர் கூறுகிறார்கள். ஒன்பது வரை உள்ள மாணவிகளும் உதவித்தொகை பெற்றால் அந்த குடும்பங்கள் எவ்வளவு பயனடையும் என்பதை தலைமை ஆசிரியர் உணர்ந்து செயலாக்கிட வேண்டும்.

எனவே, இனிமேலாவது பெற்றோர்களும், மாணவ, மாணவியர்களும் விழிப்புணர்வுடன் இருந்து நமக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை பெற வேண்டும்.

இவைகளிலே ஏற்படும் சட்டச்சிக்கலுக்கு பொதுத்தொண்டுகளை அணுகி உதவி பெற்றிட வேண்டும்.

வஸ்ஸலாம்.
N S E மஹ்மூது.
யன்பு , சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Invistigate
posted by Sayna Thai Nadu (Bangkok ) [16 October 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 531

Student dont know anything abt this, Nobody know abt kayalgovern ment hr sec school Principle specially mention KOSA student , I Request to the Principle pls dont mention kosa studen or anything things like that all are student, pls student dont write anything and given to the headmiss, is not effective for you , is efficitive for ur daughter or son , so pls take care of this type of Things,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Good
posted by M.S.K. SULTHAN (Deira, Dubai) [16 October 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 533

We are highly appreciated for Founder of Makkal Seva Karangam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved