Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:51:04 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 21697
#KOTW21697
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஐனவரி 23, 2020
ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்ததால் சென்ட்ரல் வங்கியில் பரபரப்பு! வைப்புப் பணம் குறித்து அஞ்சத் தேவையில்லை என வங்கி சார்பில் பரப்புரை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2267 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பொதுவாக வங்கிகளில் கணக்கு துவக்கும்போது Know Your Customer – KYC என்ற நடவடிக்கையின் கீழ் சில ஆவணங்கள் வாடிக்கையாளர்களிடமும், ஏற்கனவே கணக்கைத் துவக்கி, ஆவணம் சமர்ப்பிக்காதவர்களிடமும் வங்கி நிர்வாகத்தால் கேட்கப்படும்.

சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் சார்பில் அவ்வாறான அறிவிப்பு கடந்த 11.01.2020. அன்று ‘தினத்தந்தி’ நாளிதழில் விளம்பரமாக வெளியிடப்பட்டிருந்தது. அதில், சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களுள் “National Population Register - NPR – தேசிய மக்கள் பதிவேட்டில் வழங்கப்பட்டுள்ள கடிதம்” என்ற ஓர் ஆவணமும் சமர்ப்பிக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.



அண்மையில் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம், அதன் தொடர்பிலான NPR உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் – குறிப்பாக காயல்பட்டினத்திலும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் வெளிவந்துள்ள இவ்வறிவிப்பானது, மக்கள் எதிர்க்கும் ஒரு சட்டத்தின் கீழான ஆவணத்தை அவர்களே வேறொரு வகையில் தந்தாக வேண்டிய கட்டாயத்தை அவ்விளம்பரம் ஏற்படுத்தியிருப்பதாக சென்ட்ரல் வங்கி – காயல்பட்டினம் கிளை வாடிக்கையாளர்கள் புரிந்துள்ளனர். கூடவே, அந்த ஆவணத்தைச் சமர்ப்பிக்காவிடில் – வங்கியில் வைப்பில் இருக்கும் தொகைக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற ஒரு தகவல் நகர் முழுக்கப் பரவி, மக்களைப் பெரிதும் குழப்பியது.

இந்நிலையில், இம்மாதம் 20, 21 ஆகிய நாட்களில் - காயல்பட்டினம் எல்.கே.லெப்பைத்தம்பி சாலையில் அமைந்துள்ள - சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் காயல்பட்டினம் நகர கிளையில் அவ்வங்கியில் கணக்கு வைத்திருந்த வாடிக்கையாளர்கள் தமது வைப்புப் பணத்தைத் திரும்ப எடுப்பதற்காகப் பெருமளவில் குவிந்துவிட்டனர். இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவும் ஏற்படாதிருக்க ஆறுமுகநேரி காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருந்தது. இவ்விரு நாட்களிலும் சில கோடி ரூபாய் வரை வைப்புத்தொகையை வாடிக்கையாளர்கள் தம் கணக்குகளிலிருந்து எடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.











இச்செய்தி வேகமாகப் பரவியதையடுத்து, சன் டீவி உள்ளிட்ட தொலைக்காட்சி ஊடகத்தினரும், நாளிதழ் செய்தியாளர்களும் நிகழ்விடம் வந்து செய்திகளைச் சேகரிக்கவே மேலும் பரபரப்பானது. அதன் தொடர்ச்சியாக இன்னும் பல வாடிக்கையாளர்களும் வரிசையில் நின்று தமது வைப்புப் பணத்தை எடுத்து வந்தனர்.

இவ்வாறிருக்க, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருவதாகவும், வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவையை அது வழங்கி வருவதாகவும், ஆவணங்கள் கேட்கப்படுவது புதிதாகக் கணக்கைத் துவக்க மட்டுமே என்றும், கேட்கப்பட்டுள்ள ஆவணங்களுள் ஏதேனும் ஒன்றைக் கொடுத்தால் போதுமானது; NPR கடிதத்தைத்தான் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும், மேலும் ஏற்கனவே கணக்கு வைத்துள்ளவர்களின் வைப்புப் பணத்திற்கு எந்த பாதிப்பும் இதனால் இல்லை என்றும் - வங்கியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் நேற்று ஆட்டோ வாகனத்தில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு பரப்புரையாக அறிவிப்புச் செய்யப்பட்டது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...வதந்திகளை பரப்புவது இஸ்லாத்தில் தடை செய்யப் பட்ட ஒன்று
posted by mackie noohuthambi (kayalpatnam) [23 January 2020]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46475

ஒரு நபி தோழர் அவர்கள் உறங்கி கொண்டிருந்தார். அவர் அருகில் அவரது சாட்டை இருந்தது இன்னொருவர் அதை விளையாட்டுக்காக எடுத்து மறைத்து வைத்திருந்தார். நபி தோழர் கண் விழித்து பார்த்தபோது திடுக்கிட்டு அங்குமிங்கும் பார்த்தார் இந்த செய்தியை அறிந்த நபிகள் நாயகம் அவர்கள் சொன்னார்கள் ஒரு முஸ்லிமை மற்றொரு முஸ்லீம் திடுக்கிட வைப்பவர் அவர் நம்மை சார்தவர் அல்ல என்று சொன்னார்கள் என்று ஒரு ஹதீது படித்த ஞாபகம்.

அப்படியானால் இப்படி ஒரு ஊர் மக்களையே தன் whatsapp செய்தி மூலாம் தவறான தகவல்களை பரப்பி மக்களை குழப்புவது எப்படி ஒரு உண்மையான முஸ்லிமுக்கு தகுதியாகும். இந்த தவறான தகவலை பரப்பியவர் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தன்னுடைய பெயர் பிரபல்யம் ஆக வேண்டும் என்பதற்காக இப்படி செய்ப்பவர்கள் கவனித்து நடந்து கொள்வார்களாக அல்லாஹ் அவர்களை மன்னிப்பானாக. ஆண்டு எவ்வளவு பெண்களுடைய லுஹர் அஸர் தொழுகைகள் கலாவாக்கி விட்டது என்பதை இவர்கள் அறிவார்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by nizam (india) [24 January 2020]
IP: 37.*.*.* | Comment Reference Number: 46477

சகோதர் மக்கீ கூறியதுபோல வாட்சாப்பு வதந்திகள் தங்களது குழுமத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதே சமயம் குடியுரிமை சட்டத்தின் சங்பரிவார் சதி திட்டங்களை மக்களுக்கு அம்பலப்படுத்த வாட்சாப்பின் பங்கை நன்றியோடு நினைவு கூறுகிறேன்.

இந்த செய்தியை கூகுள் முலம்தான் நான் தெரிந்து கொண்டேண் என்பதை நமது காயல் மக்களின் விழிப்புணர்ச்சியாகத்தான் பார்க்கிறேன். இதை குடியுரிமை சட்ட எதிர்ப்பின் அடையாளமாக பார்க்கிறேன்.

வரும் தேர்தல்களில் முதல் முக்கிய கோரிக்கையாக குறிப்பாக அதிமுக கட்சியிடம் குடியுரிமை சட்ட விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வலியறுத்த வேண்டும். குடியுரிமை சட்டத்தின் முக்கிய நோக்கமே இஸ்லாமியர்களை தேர்தலில் பங்கெடுக்காமல் இருக்க யார் யாரெல்லாம் நீண்டகாலம் வாக்களிக்காமல் இருக்கிறார்களோ அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதாக கூட சங்பரிவார் திட்டமிடலாம். ஆகையால் வெளீநாடுவாழ் இஸ்லாமியர் கொஞ்சம் செலவு சிரமம் பார்க்காமல் தேர்தல் நேரத்தில் இந்தியா வந்து வாக்களிக்க வேண்டும்.

இரண்டாவது வரலாற்று ரீதியாக இஸ்லாமியர் அந்நியர் என்ற பொய்யை சங்பரிவார் மீ(மோ)டியா மூலம் பரப்புவதை சுதிர் சவுத்திரி எனும் பார்ப்பன பத்திரிகையாளனின் பிரச்சாரத்தை ஜீ சேனலில் பாரத்து அதர்ச்சியடைந்தேன். இதற்கு பதிலடியாக கல்விசாலைகளிள் சரியான வரலாற்று போட்டிகள் இஸ்லாமியரின் ஆயிரமாணடு வரலாறு குறிப்பாக லத்திப் ஹாஜீயார் எழுதிய காயலின் தொன்மையான வரலாறு இந்திய சுதந்திரத்தில் முஸ்லீம்களின் பங்கு போன்றவை நடத்தப்பட வேண்டும் பெற்றோர்களும் வீட்டில் பிள்ளைகளுக்கு மேற்சொன்ன வரலாற்று உண்மைகளை சொல்லிக்கொடுக்க வேண்டும். இதுசம்பந்தமாக தெருமுனை பிரசாரங்கள் சொற்பொழிவுகள் நடத்த படவேண்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved