Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:11:03 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 21673
#KOTW21673
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஐனவரி 7, 2020
லஞ்சம் – ஊழலற்ற நகர்மன்றம் உருவாக ஒத்த கருத்துடைய அமைப்புகள் உள்ளாட்சித் தேர்தலை எங்ஙனம் அணுகலாம்? “மெகா / நடப்பது என்ன?” தன் நிலைபாட்டை அறிவித்தது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1067 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் லஞ்சம் – ஊழலற்ற நல்ல நகர்மன்றம் உருவாக்கப்பட – ஒத்த கருத்துடைய பொதுநல அமைப்புகள் உள்ளாட்சித் தேர்தலை எந்த வகையில் அணுகலாம் என்பது குறித்து - காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு தனது நிலைபாட்டை அறிவித்துள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-

இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சந்திக்கும் மூன்று வகையான தேர்தல்களில் - உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல்களே, பொது மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகம் தாக்கம் ஏற்படுத்த கூடிய தேர்தலாகும்.

மூன்றாண்டுகாலமாக தமிழகத்தில் நடத்தப்படாத இந்த தேர்தல், விரைவில் நடைபெறவுள்ளதாக அறிவிப்புகள் வந்துள்ள சூழலில், கடந்த பல ஆண்டுகளாக - காயல்பட்டினம் நகரில் பல்வேறு மக்கள் பணிகளை - இறைவனின் உதவிகொண்டு - செய்துவரும் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) | நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம் - இந்த தேர்தலை எவ்வாறு அணுகுவது என பொது மக்களிடம், வினவியிருந்தது.

கருத்து தெரிவித்த பெருவாரியான மக்கள் - ஒத்த கருத்துள்ள அமைப்புகளுடன் தேர்தலில் நிற்கவேண்டும் என்றும் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில், 11-11-2019 அன்று மெகா அமைப்பு - ஒத்தகருத்துள்ள அமைப்புகளுடன், தேர்தல் குறித்து பேசிட - குழு ஒன்றினை அமைத்தது.

இதற்கிடையில் - காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பாக - உள்ளாட்சி தேர்தல்கள் குறித்து பேசிட அழைப்பு கடிதம் வந்தது. அதன் அடிப்படையில் - மெகா நிர்வாகிகள் மற்றும் பேரவை நிர்வாகிகள், சந்திப்பு - இறைவனின் நாட்டத்தினால் - நவம்பர் 19 அன்று இரவு 8:30 மணி அளவில், பேரவை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பிலும் மற்றும் அதன் பிறகு நடந்த சந்திப்புகளிலும் பரிமாறப்பட்ட விஷயங்கள் அடிப்படையில் - கீழே விவரிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் - ஆலோசனைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

இதுவே மெகா அமைப்பின் - ஒத்தக்கருத்துள்ள பல்வேறு அமைப்புகள் - உள்ளாட்சி தேர்தலுக்காக - எவ்வாறு ஒன்றிணையலாம் என்பதற்கான - நிலைப்பாடும் ஆகும்.

=============================
பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டம் (COMMON MINIMUM PROGRAMME)
=============================

-- எந்த தனி மனிதரின், அமைப்புகளின், அரசியல் கட்சிகளின் - அழுத்தங்களுக்கு அடிபணியாத, நேர்மையான முறையில் செயல்படக்கூடிய தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் ஆகியோரை தேர்தலில் வெற்றிபெற செய்வது

-- நகருக்கு தேவையான அவசியமான பணிகளை அறிந்து, நீதமாக அனைத்து மக்களுக்கும் அவற்றை செய்து கொடுக்க திட்டமிடல்

-- லஞ்சம், ஊழல் ஆகியவற்றை நகராட்சியில் இருந்து கலைந்திட பணியாற்றுதல்

============================
வேட்பாளர்களை அடையாளம் காண - ஒரு குழு / அமைப்பு (COMMITTEE/FORUM)
============================

நேர்மையான, திறமையான வேட்பாளர்களை அடையாளம் காண - ஒரு குழு / அமைப்பு (COMMITTEE/FORUM) அமைக்கலாம்.

அந்த குழுவில் - ஒத்தகருத்துள்ள, மேலே தெரிவிக்கப்பட்டுள்ள CMP மீது முழு நம்பிக்கை கொண்டுள்ள - அமைப்புகள், தனி நபர்கள் - இடம்பெறலாம்.

அந்த குழு - ஒவ்வொரு வார்டில் இருந்தும், விருப்ப மனு பெறலாம்.

பெறப்பட்ட விருப்ப மனுக்கள், குழுவினால் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, ஒத்த கருத்து (CONSENSUS) அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படலாம்.

குழுவில் உள்ளவர்களில் - மெஜாரிட்டி, மைனாரிட்டி கருத்துக்கள் என்ற அடிப்படையில் இல்லாமல், ஒத்த கருத்து (CONSENSUS) என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டால் - வேட்பாளர் சிறப்பாக அமையவும், அனைவரின் முழு ஆதரவு பெறவும் வாய்ப்புகள் அதிகம்.

ஒத்தகருத்து எட்டாத அரிய சூழலில், பெறப்பட்ட விருப்ப மனுக்களில் - ஆட்சேபனை அதிகம் உள்ள நபர்களை நீக்கிவிட்டு, மீதமுள்ள வேட்பாளர்களை - கல்வி, அனுபவம் போன்ற தகுதிகள் அடிப்படையில் முடிவு செய்யலாம்.

================================
யாரை வேட்பாளராக தேர்வு செய்யலாம்? யாரை தேர்வு செய்வதை தவிர்க்கவேண்டும்?
================================

சட்ட ரீதியாக - 21 வயது நிரம்பி, அந்த உள்ளாட்சி அமைப்பில் வாக்காளராக இருக்கும் எவரையும் தேர்வு செய்யலாம்.

உறுப்பினர் வேட்பாளரை தேர்வு செய்யும்போது, தலைவருக்கு ஒரு தகுதி, துணைத்தலைவருக்கு ஒரு தகுதி, உறுப்பினர்களுக்கு ஒரு தகுதி என தனித்தனியாக பார்க்காமல் - தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு வேட்பாளரும் – தலைவர் பொறுப்புக்கு பொருத்தமானவர், துணைத்தலைவர் பொறுப்புக்கு பொருத்தமானவர், உறுப்பினர் பொறுப்புக்கு பொருத்தமானவர் - என்ற ஒரே அளவுகோல் படி - முடிந்த அளவு – தேர்வு செய்யப்படவேண்டும்

சமூக பணிகளில் ஆர்வம் உள்ளவர்களை தேர்வு செய்யலாம்.

சமூக பணிகளில் ஏற்கனவே முன் அனுபவம் உள்ளவர்களை தேர்வு செய்யலாம்.

நம் சக்திக்கு உட்பட்டு ஆய்வு செய்ததில் - இவர் லஞ்சம், ஊழலுக்கு துணை புரியாதவர், செய்யாதவர், நகராட்சி பணிகள் என்னென்ன என அறிந்து செயல்படக்கூடியவர், எந்த தனி நபர்/அமைப்பு/கட்சியுடைய, தவறான நெருக்கடிகளுக்கு அடிப்பணியாதவர் என்ற நம்பிக்கையும் வழங்கும் நபர்களை மட்டும் - நாம் வேட்பாளர்களாக தேர்வு செய்யலாம்.

அரசியல் கட்சிகளில் இருப்பவர்களை தேர்வில் கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். அவர்களால் - கண்டிப்பாக, சுயமாக செயல்படுவது கடினம்.

ஏற்கனவே - நகராட்சி பொறுப்புகளில் இருந்து - லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டவர்களையும், அதற்கு ஆதரவாக / கண்டிக்காமல் செயல்பட்டவர்களையும் கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்

மேலும் விருப்ப மனு சமர்ப்பித்தவர்களில் - ஊழல், லஞ்சத்திற்கு ஆதரவானவர், கண்டிக்காதவர், கண்டுக்கொள்ளாதவர் என அறியப்பட்டால், அது போன்றவர்களையும் தவிர்க்கவேண்டும்

============
அனைத்து வார்டுகளிலும் தேர்வு
============

காயல்பட்டினம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 9 பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 1 வார்டு, SC சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊரின் மைய பகுதியில் சுமார் 11 வார்டும், அனைத்து சமுதாய மக்கள் கலந்திருக்கும் விதத்தில் - 3 வார்டும், முஸ்லீம் அல்லாத சமுதாயத்தினர் பெருவாரியாக இருக்கும் வார்டுகள் நான்கும் உள்ளன.

ஊழலற்ற, லஞ்சமற்ற, நேர்மையான - திறமையான நிர்வாகம் என்பது அனைத்து சமுதாய மக்களின் விருப்பம் என்பதால் - நம் தேர்வு 18 வார்டுகளிலும் இருப்பது - முக்கியமும், கட்டாயமும் ஆகும்.

======
பிரச்சாரம்
======

குழுவில் இடம்பெற்றுள்ள அனைவரும் (அமைப்புகள், சமூக ஆர்வலர்கள்) - முழுமையாக - 18 வேட்பாளர்களுக்கும் ஆதரவாக – களம் இறங்க வேண்டும்.

களத்தில் - இந்த குழுவின் திட்டங்கள் என்னென்ன என்பதை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும். திட்டங்கள் அடிப்படையில் வாக்கு கேட்கவேண்டும். அப்படி இல்லாமல், இவர்கள் ஊரின் வேட்பாளர்கள், களத்தில் நிற்கும் பிறர் ஊருக்கு எதிரானவர்கள் என்ற தொனி இருக்கக்கூடாது.

ஜனநாயக நாட்டில் - யாரும் தேர்தலில் நிற்கலாம்.

=======
தேர்தலுக்கு பிறகு
=======

இறைவனின் உதவியுடன், இந்த குழுவின் பெருவாரியான வேட்பாளர்கள் - வெற்றிபெற்றால், இந்த குழு - வெற்றி வேட்பாளர்களுக்கு, தலைவர், துணைத்தலைவர், நகராட்சி குழு அங்கத்தினர் - தேர்வு செய்ய வழிகாட்டலாம். நிர்பந்தம் செய்யக்கூடாது

தேர்தலுக்கு பிறகு - குழுவின் வெற்றி வேட்பாளர்கள் எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை, முற்கூட்டியே தீர்மானித்து - அதில் வேட்பாளர்கள் ஒப்புதலும் பெறலாம்.

வெற்றிபெறும் வேட்பாளர் - சட்டரீதியாக சுயமாக செயல்படவேண்டும் என்பதால், குழு / அமைப்புக்கு கட்டுப்படவேண்டும் என்ற உத்தரவாதங்களை தவிர்த்து, தார்மீக உத்தரவாதங்களை மட்டும் கோரவேண்டும்.

வெற்றி வேட்பாளர்கள் - தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர் ஆனபிறகு - அவர்கள் சிறப்பாக,சுயமாக, செயல்பட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கலாம்.

இந்த விபரங்கள் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகிகளிடம் 24-11-2019 அன்று நேரில் வழங்கப்பட்டது.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved