Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:40:15 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 21615
#KOTW21615
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 16, 2019
குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா: டிச. 19இல் நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நிரல் வெளியீடு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1494 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அண்மையில் இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள – குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து, 19.12.2019. வியாழக்கிழமையன்று காயல்பட்டினத்தில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான நிகழ்ச்சி நிரல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது:-



தகவல்:
மன்னர் பாதுல் அஸ்ஹப் (மாவட்ட துணைத்தலைவர், இ.யூ.முஸ்லிம் லீக்.)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...ஹிட்லரின் மறுபதிப்பு
posted by mackie noohuthambi (kayalpatnam) [17 December 2019]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46456

ஹிட்லரின் சர்வாதிகாரம் எப்படி ஒரு இனத்தை அளிப்பதற்காக தலைதூக்கியது அதே பாணியில் மோடி அவர்களின் இஸ்லாமிய இனத்தின் உரிமைகளை வேரோடு பிடுங்கி எறியும் வகையில் போய்க்கொண்டிருக்கிறது.

முத்தலாக் எதிர்ப்பு சட்டம் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்ற தீர்ப்புக்கு மறைமுகமான சூத்திரதாரி இப்போது குடியுரிமை என்ற ஒரு முஸ்லீம் விரோத சட்டத்தை இயற்றியுள்ளார். சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் மகா சூழ்ச்சியாளன் அல்லாஹ் என்று தெரியாமல் ஆட்டம் போடுகிறார்.

நாடாளுமன்றத்தில் ராஜ்யசபாவில் தனக்கு miruka பலம் இருக்கிறது என்ற ஒரு மமதையில் தான் நினைத்ததை எல்லாம் சாதித்து விடலாம் என்று மனப் பால் குடித்துக் கொண்டிருக்கிறார் மோடி. மஹாராஷ்டிராவில் தன் கையைக் கொண்டே தன் கண்ணை குதிக்க கொண்டு அவதி பட்டவர் முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டி பார்க்கிறார்.

இயற்கையாகவே முஸ்லிம்கள் அமைதியானவர்கள் என்ற எண்ணத்தில் தான் செய்யும் எல்லாக் காரியங்களுக்கும் முஸ்லிம்கள் சும்மா காய் kattik கொண்டு vedikkai paarthuk kondiruppaarkal என்று கனவு காண்கிறார். ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயம் மட்டுமல்ல maatru matha sakothararkalum kooda இந்த சர்வாதிகார போக்கை கண்டித்து முஸ்லிம்களுக்கு தோல் கொடுக்க வந்திருக்கிறார்கள்.

நல்ல நண்பன் நல்ல மனைவி இவர்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வது, சிரிப்பும் செழிப்பும் நிறைந்த நேரத்தில் அடையாளம் தடுமாறிவிடும். ஆனால் சோதனையும் வேதனையும் நிறைந்த நேரத்தில் அடையாளம் தெளிவாக தெரிந்து விடும்.

தமிழ்நாடு அரசின் நீல சாயம் வெளுத்து விட்டது. மோடியின் எல்லா உணர்வுகளுக்கும் வடிகால் அமைத்துக் கொடுக்கும் ஒரு அசிங்கமான ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது என்பதை சொல்லவும் வேண்டுமா இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து வந்து இந்தியாவில் வாழும் தமிழர்கள் நிலை என்ன என்று அவர்கள் சிறிதும் சிந்திக்காமல் மோடிக்கு ஜால்றா அடித்து கொண்டிருக்கிறார்கள் .

மியான்மரில் இருந்து குடி பெயர்ந்து வந்துள்ள முஸ்லிம்கள் ரோஹிங்கியாக்களுக்கு என்ன கத்தி...போகின்ற போக்கில் அடுத்தது COMMON CIVIL CODE சட்டமாக்கப் பட்டு விடும்போல் தெரிகிறது. இதை முளையிலேயே கிள்ளி எறிய இப்படி பட்ட ஆர்ப்பாட்டங்கள் காலத்தின் கட்டாயம் எல்லோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு நமது எதிர்ப்புக்களை தெரிவிப்போம் வாருங்கள்.

அல்லாஹ்வின் நாட்டமின்றி எதுவும் நடக்காது. நள்ளிரவிலேயே இந்த சர்வாதிகாரிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள் என்ற சரித்திரம் நமக்கு முன்னால் உள்ளது . உத்தவ் தாக்ரே போன்ற இந்துத்வ மனம் கொண்டவர்களே இந்த ஆட்சியை கண்டித்துக் கொண்டிருக்கிறார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by nizam (india) [17 December 2019]
IP: 37.*.*.* | Comment Reference Number: 46458

வெள்ளாப்புலி எனும் ஓய்வு பெற்ற கேரள ஐ ஏ எஸ் அதிகாரியின் நுட்பமான கேரள தொலைக்காட்சியில் வாதத்தை சங்பரிவார் அதிர்ந்து போயிணர். அவர் கூறுகிறார் ஒருவேளை என் ஆர் சி கட்டாயமாக்கும் போது ஒரு இஸ்லாமியன் கூட அதை செய்யமாட்டான் என்று. பேராசிரியர் அய்யநாதன் அடித்து கூறுகிறார் இந்த சட்டம் உச்ச நீதிமன்றத்தில் ரத்து செய்யப் படும் என்று எது எப்படீயோ தூங்கியதுபோதும் விழித்தெழூவோம் வழக்கறிநராக இருந்தால் சட்டத்தின் கதவை தட்டுங்கள் மருத்துவராக இருந்தால் உங்களிடம் வரும் நோயாளிகளிடம் இதுபற்றிய விழிப்புணர்ச்சி உண்டாக்குங்கள் அரசியல்வாதியாக இருந்தால் இதன் நியாயத்தை உங்கள் தொண்டர்களிடம் விளக்குங்கள் குறிப்பாக அதிமுக என்னவென்று ஏன் ஆதரவு கொடுத்தீர்கள் என்று கேளுங்கள் பொறியாளராக இருந்தால் சக பணியாளர்களின் ஆதரவு திரட்டுங்கள். இப்படீ சொல்லூங்கள் கைபர் கணவாய் மூலம் நூழைந்தவன் ஆயிரம் கால சரித்திரம் கொண்ட எங்களை வெளியேற சொல்வது என்ன நியாயம் என்று எல்லாவற்றை விட இறைவனின் ஆதரவை பற்றிப் பிடிக்கும் நேரமிது ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...ஜமாஅத்திலிருந்து அதிமுக MP நீக்கம்
posted by mackie noohuthambi (kayalpatnam) [18 December 2019]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46459

இன்றைய நாளிதழை படித்தபோது கிடைத்த செய்தி இது. முஹம்மது ஜான் அவர்கள். அதிமுக மக்களவை உறுப்பினராக இருப்பவர். தான் ஒரு இஸ்லாமியன் என்ற உணர்வுகளை தாண்டி தான் ஒரு கட்சிக்கு கட்டுப்பட்டவன் என்பதால் தன் வாக்கை இஸ்லாமிய எதிர் எண்ணம் கொண்ட ஒரு வெறிபிடித்த கட்சியின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் என்ற செய்தி அறிந்து ராணிப் பேட்டை நகர முஸ்லீம் ஜமாத்தார்கள் அவரை ஜமாத்திலிருந்து நீக்கி இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது . இந்த ஜமாத்தினருக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக .

மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்கள் ஒழு இல்லாமல் ''முஹம்மது'' என்ற பெயரை உச்சரிக்க மாட்டார் என்று சொல்வார்கள். ஆனால் இந்த சகோதரர் முஹம்மது ஜான் என்ற பெயரை வைத்துக் கொண்டு முஹம்மது நபி அவர்களின் உம்மத்தில் ஒருவராக இருந்து கொண்டு எப்படி இந்த இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்தின் அடிவருடிகள் சொல்லுக்கு கட்டுப் பட்டு வாக்களித்தார் என்று தெரியவில்லை . அல்லாஹ் அவன் நாடியவர்களுக்குத்தான் ஹிதாயத்தை கொடுப்பான் என்பார்கள். முஹம்மது ஜான் அவர்களுக்கு அல்லாஹ் ஹிதாயத்தை கொடுத்து அவர் உடனடியாக இந்த பாவ செயலிலிருந்து நீங்கி தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்ப்போம். MLA களும் MP க்களும் நகர்மன்ற தலைவர்களும் ஏலம் போகும் ஒரு அசிங்கமான மாநிலம் தமிழ்நாடு என்று ஆகிவிட்டபோது முஹம்மது ஜான் அதற்கு விதிவிலக்காக இருப்பார் என்று நாம் நினைக்க முடியாது இருந்தாலும் அல்லாஹ் அவருக்கு ஒரு அசாத்திய துணிச்சலை கொடுத்து அதிலிருந்து வெளியேறுவார் என்று நம்புவோம் .

வாழ்வதற்கு பொருள் வேண்டும்
வாழ்வதிலும் ஒரு பொருள் வேண்டும்,

சிந்திப்பாரா முஹம்மது ஜான்?...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:... ஏலம் போகும் தமிழா உன் விலை என்ன?
posted by mackie noohuthambi (kayalpatnam) [19 December 2019]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46460

இந்தக் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவில் ஒரு மிகப் பெரிய குறைபாடு இருக்கிறது. அதைச் சுட்டிக்காட்டி இருப்பது தமிழகத்தைச் சோ்ந்த நமது நாடாளுமன்ற உறுப்பினா்கள் அல்லா்; ஆனால், ஒடிஸா மாநிலத்தின் பிஜு ஜனதா தளம்தான். இந்தியக் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவில் இலங்கையிலிருந்து அகதிகளாக விரட்டி அடிக்கப்பட்ட தமிழா்களான ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் சோ்க்க வேண்டும் என்று பிஜு ஜனதா தளம் கோரியிருப்பதில் நியாயம் இருக்கிறது.

1977, 1983-ஆம் ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரங்களைத் தொடா்ந்து இந்தியாவுக்கு லட்சக்கணக்கில் அகதிகள் வந்தனா். தமிழக வருவாய்த் துறை அலுவலகத்தின் கணக்கின்படி 2010 வரை சுமாா் 3 லட்சம் போ் வந்துள்ளனா். தமிழகத்தில் 107 அகதிகள் முகாம்களில் 64,114 போ் பதிவு செய்யப்பட்டிருக்கிறாா்கள். அவா்கள் இந்தியப் பிரஜைகளாகவும் இல்லாமல், இலங்கைக் குடியுரிமை பெற்றவா்களாகவும் இல்லாமல் திரிசங்கு நிலை வாழ்க்கை வாழ்ந்து வருகிறாா்கள்.

தமிழகத்தைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்கள் இந்த மசோதாவில், இந்தியாவில் குடியேறி மூன்று தலைமுறையாக நாடில்லாமல் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகள் குறித்துக் கவலைப்படவில்லையே, ஏன்? தினமணி நாளிதழ் தலையங்கத்தில் ஒரு பகுதி இது....௧௨ பச்சை தமிழர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து அதை அதிக வாக்குகளால் சட்டமாக்க உதவி செய்திருக்கிறார்கள். இதில் அன்புமணி ராமதாஸ் என்ற பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும் முஸ்லீம் பெயர் தாங்கிய முஹம்மது கான் என்ற அதிமுக காரரும் அடக்கம்.இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று ஒரு அதிமுக மந்திரி சொல்லி இருக்கிறார். ''கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன்'' என்று சொன்னானாம். தமிழ் துரோகிகள் இவர்களின் இரட்டை நாடகம் நன்கு புரிகிறது ஜெயலலிதா பாடுபட்டு காப்பாற்றிய இரட்டை இலை இப்போது தாமரைக்குள் சங்கமமாகிறது..காவி அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஜெயலலிதா எங்கே காவி அரசுக்கு சாமரம் வீசி கற்பூரம் கொளுத்தும் , ஏலத்துக்கு விலை போகும் EPS OPS எங்கே..தமிழகமும் தமிழனும் வெட்கி தலை குனிய வேண்டும்.... .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by nizam (india) [19 December 2019]
IP: 37.*.*.* | Comment Reference Number: 46461

தமிழர்களுக்கு ஆப்படிக்க வருகிறது CAA..

இப்போ நடைமுறையில் நாம் எதிர்த்து கொண்டிருப்பது CAB. இந்த சட்டத்திருத்தை பயன்படுத்தி அடுத்ததாக வரவுள்ளது CAA (Citizen Amendment Act)

அதாவது "குடிமக்கள் பதிவேடு". உள்துறை அமைச்சரே வாய்மொழிந்திருக்கிறார்..

இதன் சாராம்சம் என்னவென்றால் இந்தியாவில் உள்ள அனைவரும் தான் இந்தியர்கள் தான் என்பதை நிரூபிக்க வேண்டும்.

எப்படி நிரூபிப்பது..?

கீழ்க்கண்ட ஆவணங்கள் மூலம் நிரூபிக்க வேண்டும்,

1. நீங்களோ, உங்கள் பெற்றோரோ, அவர்களைப் பெற்றவர்களோ 1947 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்தியாவில் பிறந்தவர்களா? அதை நிரூபிக்க உங்கள் அப்பா/ தாத்தா ஆகியோரின் 1947 ஆம் ஆண்டிற்கு முன்னரான சொத்து ஆவணங்கள், அதில் உங்களுக்குரிய பங்கு / உரிமையை நிறுவ வேண்டும் ( 1987 ஆம் வருடத்திற்கு முன் மணமான பெண்களிற்கு பெரும்பாலும் சொத்துரிமை இல்லை )

2. 1950 க்கு பிறகு உங்கள் குடும்பத்தில் பிறந்த அனைவரது பிறப்பு சான்றிதழும் வேண்டும். அதாவது உங்கள் அப்பா, அம்மாவிற்கான அரசின் பிறப்புச் சான்றிதழ், உங்கள் பிறப்பு சான்றிதழ் உங்கள் தாத்தா 1947 க்கு பின்னர் பிறந்தவராயின் அவரது சான்றிதழும் வேண்டும்

3.உங்களது அப்பா/ தாத்தா பிறப்புச் சான்றிதழ் அல்லது சொத்து ஆவணம் இல்லையெனில் சொத்துரிமை கொண்ட யாராவது ஒரு உறவினரின் உறவை ஒரு வரைபடமாக வரைந்து ( family tree) அவரது ஒப்புதலோடு ஆணையத்திடம் கொடுக்கலாம்.

4. நீங்கள் 1953 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்தவராக இருந்து , அப்பா இந்தியரென பிறப்புச் சான்றிதழ் மூலமாகவோ , அல்லது சொத்து ஆவணங்களாலோ நிறுவ முடியவில்லை எனில் உங்கள் இந்தியக் குடியுரிமைத் தகுதி கேள்விக்குரியதாகும். அகதிகள் மூகாமிற்கும் அனுப்பப்படலாம்.

மேல் கூறப்பட்டுள்ள ஆவண விவரம் ஏற்கனவே அஸ்ஸாம் மாநிலத்தில் குடியுரிமை பதிவேடு நடத்தி முடிக்கபட்ட விவரம்.. இதன் மூலம் பல லட்சம் அஸ்ஸாமிய குடிமக்கள் அகதிகள் முகாம்களில் அடைத்து விட்டனர். தமிழர்களுக்கு என்று வரும்போது இன்னும் கூடுதல் நெருக்கடிகள் தரப்படலாம்..

இப்போ இந்துவாகவே இருந்தாலும் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை கிடையாது என முன்பே திட்டமிட்டு தெளிவாக அறிவித்துவிட்டார்கள். ஈழத்தமிழர்களுக்கும் நமக்கும் உள்ள ஒரே வேறுபாடு நிகழ்காலத்தில் நம்மிடம் உள்ள இந்திய ஆவணங்கள் மட்டுமே.
1940, 50 களின் ஆவணம் கண்டிப்பாக பல தமிழர்களிடம் இருக்க போவதில்லை. அப்படி ஆவணம் இல்லாத நிலையில் நாமும், ஈழத்தமிழர்களும் ஒரே வரையறையில் வந்துவிடுவோம். நம்மை ஈழத்தமிழர் என தாராளமாக சந்தேகிக்க அனுமதியுண்டு.

அஸ்ஸாமியர்களுக்காவது இந்து என்று சொல்லி தப்பித்துக் கொள்ள ஒரு வாய்ப்பு இருந்தது, ஆனால் தமிழர்களுக்கு அந்த வாய்ப்பும் கிடையாது..

முதலாவது தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியவில்லை என்ற வஞ்சகத்தை பல வழிகளிலும் காட்டிக் கொண்டே இருக்கிறது.
நமக்கு குடியுரிமை, ஓட்டுரிமை இல்லையென்றால் சுலபமாக தமிழகத்தை பிடித்து விடலாம்..

இரண்டாவது நம் கடல் வளம் (சாகர்மாலா), நிலவளம்(மீத்தேன்), மலை (நியூட்ரினோ) வளங்களை களவாட பல ஆண்டுகளாகவே திட்டம் தீட்டி தான் வருகிறது. அதற்கு தடையாக இருப்பது நாம் மட்டும் தான், மக்கள் மட்டும் தான்.

ஒரே ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு வேண்டி 13 அப்பாவி தமிழர்களின் உயிர்களை பலியிட துணிந்த மத்திய பாஜக அரசுக்கு பல லட்சம் கோடிகளுக்கு கதவு திறக்கும்போது விடுவார்களா..??

மக்களா..?? பணமா..?? என்றால் மோடியும், அமீத்ஷா வும் எதை தேர்ந்தெடுப்பார்கள் என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்...

போதிய ஆவணம் இல்லை என்று, நம்மையும் ஈழத்தமிழர்கள் என முத்திரை குத்தி சுலபமாக அகதிகளாக்கி விடுவர்..

இந்த CAB யை தடுத்து நிறுத்தாவிட்டால் நமக்கு பெரும் அழிவு காத்திருக்கிறது...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved