Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:53:11 AM
புதன் | 17 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1721, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்13:37
மறைவு18:27மறைவு01:41
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 21557
#KOTW21557
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 5, 2019
மக்வா பொதுக்குழுவில் வெற்றிடப் பொறுப்புகளுக்கு புதியவர்கள் நியமனம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4436 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மலபார் காயல் நல மன்றப் பொதுக்குழுக் கூட்டத்தில், அதன் நிர்வாக வெற்றிடப் பொறுப்புகளுக்குப் புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் புதிய செய்தித் தொடர்பாளர் எச்.ஏ.அஹ்மத் மதார் வெளியிட்டுள்ள அறிக்கை:-

மலபார் காயல் நல மன்றத்தின் 25 வது பொது குழு கூட்டம் 24.11.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி அளவில் கோழிக்கோட்டில் உள்ள M.K.நெய்னாகாக்கா வீட்டு மாடியில் வைத்து நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்... அதன் நிகழ்முறைகளும்.. தீர்மானங்களும்.





நிகழ்வின் துவக்கமாக பொருளாளர் N. மொகுதூம் மீரா சாஹிப் அவர்களின் மகனார் M.M.S.ஹமிது அஷ்கர் அவர்கள் அழகிய குரலில் அருள்மறை ஓதி நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். அடுத்ததாக செயற்குழு உறுப்பினர் ஜனாப் M.G. செய்யது இபுராஹிம் அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று‌ பேசினார். நிகழ்ச்சிகளை மன்றத்தின் துணை செயலாளர் ஜனாப் J.நாகூர் மீரான் அவர்கள் தொகுத்து வழங்கினார். அடுத்ததாக கடந்த கூட்டத்தின் மினிட்ஸை மன்றத்தின் செய்தி தொடர்பாளர் ஜனாப் H.A.அஹமது மதார் அவர்கள் வாசித்து கூட்டத்தின் அங்கிகாரம் (ஒப்புதல்)பெற்று கொண்டார்.

தலைமையுரை

நமது மன்ற தலைவர் ஜனாப் S.சேக் சலாஹுதீன் அவர்கள் தலைமை உரையாற்றினார்.

அவர் தம் உரையில் நம் முன்னால் துணை தலைவர் N.M. முஹியத்தீன் அப்துல் காதர் அவர்களின் மரணத்தை தொடர்ந்து புதிய துணை தலைவராக ஜனாப் T.S.சாஹிப்தம்பி அவர்கள் தேர்ந்தெடுக்கபட்டதையும் தற்போது உள்ள 15 செயற்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைவு ஏற்பட்டதை அடுத்து அந்த காலி இடத்திற்கு புதிய செயற்குழு உறுப்பினராக ஜனாப் S.பாதுல் அஸ்ஹாப் அவர்கள் தேர்ந்தெடுக்கபட்டதையும் முறைப்படி அறிவித்தார்.

இந்த வருடமும் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள சேத பாதிப்புகளின் நிவாரண பணிகளுக்கு வேண்டி கலெக்ஷன் செய்யப்பட்ட தொகையை சேதமடைந்த வீடுகளின் பராமரிப்பு பணிகளுக்கு செலவு செய்வது என தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கோழிக்கோடு மாவட்டம் ஒலவன்னா பகுதியில் உள்ள ரஷிதா என்ற பெண்மணியின் வீடு தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த வீட்டின் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் விளக்கி கூறினார். மேலும் அவர் தம் உரையில் செயற்குழு கூட்டத்தில் ஆலோசனைக்கு எடுக்கப்பட்டு இருந்த வருங்காலத்தில் மக்வாவிற்கு என ஒரு அவசர கால நிதி (EMERGENCY) உருவாக்கி வைப்பதை பற்றி நாம் இங்கு கருத்து பரிமாற்றம் செய்து தீர்மானம் எடுத்து கொள்ளலாம் என கேட்டுக்கொண்டார்.

செயலாளர் உரை

அடுத்ததாக நமது மன்ற செயலாளர் ஜனாப் A.S.I. முஹம்மது ஸிராஜ் அவர்கள் உரையாற்றினார். அவர் தமது உரையில் இந்தப் பருவத்தில் மூன்று செயற்குழுவும் மழை வெள்ளத்தின் நிவாரண பணிகளுக்கு 5 சிறப்பு கலந்துரையாடல் கூட்டமும் நடைபெற்று இருப்பதாக கூறினார். மேலும் இன்று நாம் கலந்து கொண்டு இருப்பது 25 வது பொதுக்குழு என்பதையும் சுட்டி காட்டினார். இதுபோன்று இன்னும் பற்பல ஆண்டுகள் மக்வா சீரூம் சிறப்புடன்‌ பணியாற்றிட துஆ செய்தார். புதிய துணை தலைவர் நியமனம், புதிய செயற்குழு உறுப்பினர் நியமனம், புதிய செய்தி தொடர்பாளர் ஜனாப் H.A.அஹமது மதார் ஆகியோர் நியமிக்கபட்ட அடிப்படை விவரங்களை விளக்கி கூறினார்.

கடந்த பொதுக்குழுவில் தீர்மானிக்கபட்டு இருந்தபடி... '"மக்வாவின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் நம் மன்றத்தின் செயல்பாடுகளில் ஆர்வத்துடன் பங்கெடுக்கும் வகையில் மாதந்தோறும் நடைபெறும் செயற்குழு கூட்டங்களில் (EC)கலந்து கொண்டு செயற்குழுவின் நடைமுறைகளை பற்றி அறிந்து கொள்வதற்காக ஒவ்வொரு மாதமும் மூன்று நபர்களை சிறப்பு அழைப்பாளராக அழைப்பதென்று முடிவு செய்யப்பட்டது. அந்த முறையில் இந்த பொதுக்குழு வரையில் நடைபெற்ற 3 மாத செயற்குழு கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராக பொதுக்குழு உறுப்பினர்கள் A.M.ரஞ்சித் குமார் , S.I.சேகு அப்துல் காதர் , M.A மஹ்பூபு சுபுஹானி , S. ஜெய்னுல் ஆப்தீன் ஹபீப் ஆகியோர் கலந்து கொண்டதையும் நினைவு கூர்ந்தார்.

கடந்த மாதம் நமது பொதுக்குழு உறுப்பினர் ஒருவரின் தந்தையின் மருத்துவ செலவுக்கு வேண்டி பண உதவிகள் செய்யப்பட்டதையும் கூறினார். மேலும் நமது முன்னால் துணை தலைவரின் மகத்தான சேவைகளை நினைவு கூர்ந்து அவரின் மஃபிரத்திற்கு துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டி கொண்டார்.

மஃரிப் தொழுகையை அல்-ஹாஃபிழ் அரபி முஹம்மது முஹ்யித்தீன் அவர்கள் வழி நடத்தினார்.

கணக்கு தாக்கல்

அடுத்ததாக மன்றத்தின் பொருளாளர் ஜனாப் N. மொகுதூம் மீரா சாஹிபு அவர்கள் கடந்த பொதுக்குழுவிற்கும் இந்த பொதுக்குழுவிற்கும் வரையுள்ள கணக்குகளை தாக்கல் செய்தார். அதனை கூட்டம் ஒப்புதல் வழங்கியது, மேலும் நம் மன்றத்தின் செயல்பாடுகளைக் பார்த்து நம் மன்றத்தின் உறுப்பினராகவோ, ஆதரவாளர்களாகவோ இல்லாதவர்கள் கூட நன்கொடை தருவதாக தெரிவித்தார்.

கணக்கு தனிக்கையாளர் உரை

இந்த பருவத்திற்கான கணக்கு தனிக்கையாளரான K.M.முத்து முஹம்மது ரபீஃக் (KRS) அவர்கள் உரையாற்றினார். "Old job , New experiences ... என்பதை மேற்கோள் காட்டி தனது இந்த புதிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். பொருளாளர் தனது சிரமமான வேலை சுமைகளுக்கு இடையிலும் தனது பணியில் மிகச்சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார் . கணக்குகள் எல்லாம் சரியாக உள்ளது. மக்வாவின் செயற்குழு உறுப்பினர்கள் தனது சொந்த பணத்தை போட்டு வேலை செய்பவர்கள் என பாராட்டினார்.

அறங்காவலர் உரை

அடுத்ததாக நமது மன்றதின் ஷிஃபாவின் அறங்காவலர் சாளை M.A.K முஹம்மது உதுமான் உரையாற்றினார். மக்வா 2010 ல் தொடங்கப்பட்டு இன்று 25 வது பொதுக்குழுவை அடைந்துள்ளது. எல்லா புகழும் இறைவனுக்கே.. என்று புகழ்ந்தார். இந்த பருவத்தின் செயற்குழு உறுப்பினர்களின் பணிகள் சிறப்பான முறையில் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார். ஷிஃபாவின் பணிகள் சிறப்பாக செயல்படுவதாகவும் K.M.T ல் அமையவுள்ள டயாலிசிஸ் யூனிட் பற்றிய ஏற்பாடுகளை விவரித்தார்.

மக்கள்‌ மருந்தகம் நல்ல முறையில் செயல்படுவதாகவும், இன்ஷா அல்லாஹ்... மக்கள் மருந்தகத்தின் எதிர்கால திட்டமான Won medical laboratory பற்றிய செய்திகளை விளக்கி கூறினார். மக்வா உறுப்பினர்கள் பணம் உதவி செய்வதில் சளைத்தவர்கள் இல்லை. எந்த அவசர உதவிகளுக்கும் நாடி சென்றால் அதை முழுமையாக நிறைவேற்ற கூடியவர்கள் என பெருமிதம் கொண்டார். மழை வெள்ள நிவாரண பணிகளை விரிவாக பேசினார்.

கருத்து பரிமாற்றம் & தீர்மானங்கள்

மன்றத்தின் வளர்ச்சிக்கு கருத்துக்களும் ஆலோசனைகளும் தெரிவிக்கபட்டன. குறிப்பாக மன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்களின் இரத்த உறவுகளுக்கு வேண்டி அவசர கால (Emergency fund) ஏற்படுத்துவது பற்றிய கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றன.

நம் மன்றத்தின் மூலம் கொடுக்கப்படும் மருத்துவ உதவிக்கான நிதி அனைத்துமே Emergency fund என்ற அடிப்படையிலும் , பணத்தை கையில் வைத்திருப்பது பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்ற அடிப்படையிலும் Emergency fund என்பது சாத்தியமில்லை என்று அதிக உறுப்பினர்கள் கருத்து தெரிவித்ததை தொடர்ந்து, அது தேவையற்றது என‌ தீர்மானிக்கப்பட்டது. மேலும் மக்வா தனது உறுப்பினர்களுக்கு தேவைபடும் மருத்துவ உதவிகளை முன்னின்று‌ செயல்படுத்தும் என்றும், அவசர தேவைகளுக்கு நம் உறுப்பினர்களிடம் சென்று இதன் தேவைகளை எடுத்து கூறி உடனடியாக செயல்பட முற்படும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

நன்றியுரை

இறுதியாக செயற்குழு உறுப்பினர் S.பாதுல் அஸ்ஹாப் அவர்கள் நன்றி கூற கஃபாரா துஆ உடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.

இரவு உணவு

வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவாக இடியப்பமும், காயல் களறி கறியுடன் சுவைமிகு ஜவ்வரிசியும் பரிமாறப்பட்டது. உணவு ஏற்பாடுகளை துணை தலைவர் T.S.சாஹிப்தம்பி தலைமையில் K.M.நெய்னா முஹம்மது, M.S. அஹமது மரைக்கார், M. முஹம்மது சுலைமான், A.S.I உவைஸ்னா லெப்பை, ஆகியோர் மிக சிறப்பாக செய்தார்கள்.

கலந்து கொண்ட அனைவரும் ஒருவரையொருவர் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட விதம் சிறப்பான முறையில் அமைந்தது. உறுப்பினர்களில் அதிகமானோர் தனது குழந்தைகளையும் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து கூட்டத்திற்கு சிறப்பு சேர்த்தனர். அல்ஹம்துலில்லாஹ்...

கூட்ட நிகழ்வுகளின் படங்களை https://photos.app.goo.gl/KNqVG3xUFPxbFaKP7 என்ற இணைப்பில் சொடுக்கித் தொகுப்பாகக் காணலாம்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[படங்கள் இணைக்கப்பட்டுள்ளன @ 11:18 / 08.12.2019.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தால். ...
posted by mackie noohuthambi (kayalpatnam) [05 December 2019]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46452

இந்த கூட்டத்தில் பேசப்பட்ட செய்திகளில் நிதி நிலை அறிக்கை முக்கிய இடம் பெறுகிறது. அநேகமாக பொது நல இயக்கங்களில் மிக சூடாக விவாதிக்கப் படும் செய்தி நிதி பற்றியதுதான். குழப்பங்களும் கூச்சல்களும் ஏற்படுவதும் அந்த நிதி நிலை பற்றிய அறிக்கைதான். வெளிப்படை தன்மை இல்லாமல் இருக்கும் இந்த பொருளாதார விஷயம் நல்லவரகளையும் சந்தேகிக்க வழி வகுத்துவிடுகிறது.

''மயிரூடாடா நட்பு பொருளூடாட கெடும்'' என்பார்கள் பணம் எங்கே குவிந்து காணப் படுகிறதோ, அது இறை இல்லங்களானாலும் சரி அநாதை இல்லங்களானாலும் சரி மத்ரஸாக்கலானாலும் சரி வக்ப் சொத்துக்களானாலும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களானாலும் சரி அங்கெல்லாம் இந்த குளறுபடிகள் இருக்கவே செய்கிறது அது தவிர்க்க முடியாத ஒரு முஸீபத்தாக இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது வேதனைக்குரிய விஷயம். எனவே அவசர நிலை நிதி என்று ஒன்று தேவை இல்லை, கையில் பணம் குவிந்துருப்பது சரியல்ல என்று இந்த மன்றம் முடிவு செய்திருப்பதை மனதார வரவேற்கிறேன் .

நான் தம்மாம் காயல் நல மன்ற செயலாளராக இருந்த காலத்திலும் ரியாத் காயல் அலையன்ஸ் கமிட்டி துணை தலைவராக பணியாற்றியபோதும் இந்த கருத்துக்களை முன்மொழிந்து அது ஏற்றுக் கொள்ளப் பட்டு நடை முறை படுத்தப் பட்டது. அவ்வப்போது அந்த நிதிகள் செலவழிக்க பட்டால் கேள்வி கேட்பவர்களும் குறைவார்கள் மன்ற பொருளாளருக்கும் பொறுப்புக்கள் குறைந்து நிம்மதியாக இருக்கலாம். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் காலம் கனிந்து இப்போது ஓட்டு எண்ணுபவருக்கே பணம் கொடுக்கும் காலமாக பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கும் இந்த கால கட்டத்தில் இந்த அமைப்பு மிக சிறப்பாக வெளிப்படை தன்மையுடன் தன் பொது நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இப்போது நமது காயல்பட்டணம் மண்ணிலும் வெள்ளம் தண்ணீர் என்று மக்கள் அவதி பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஐக்கிய பேரவை மூலம் அதற்கான குழு நியமிக்கப் பட்டு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. உங்கள் கருணை பார்வையை நமது ஊரின் பக்கமும் கொஞ்சம் திருப்புங்கள். கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தால் அங்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவும்.

நீங்கள் செய்வீர்களா..நீங்கள் செய்வீர்களா......

இந்த குரல் மூன்று ஆண்டுகளுக்கு முன் நமது தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மக்களிடம் கேட்ட கேள்விகள்...இப்போது அவர்கள் மறைவுதினமான இன்றும் நினைவுக்கு வருகிறது. அவை வைர வரிகள் மக்களின் உணர்வுகளை உசுப்பி விட்ட வரிகள்..

வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved