Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:20:16 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20952
#KOTW20952
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, செப்டம்பர் 28, 2018
பேருந்து நிலைய வாயிலில் காவல்துறை சாவடி அமைக்க நகராட்சி அனுமதி வழங்கவில்லை! த.அ.உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு நகராட்சி பதில்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1245 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் பேருந்து நிலைய வாயிலில் காவல்துறை சாவடி (Police Beet) அமைக்க நகராட்சி அனுமதி வழங்கவில்லை என “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு நகராட்சி பதிலயளித்துள்ளது.

இதுகுறித்த செய்தியறிக்கை:-

காயலபட்டினம் பேருந்து நிலைய வாயிலில் கடந்த மார்ச் மாதம் - ஆறுமுகநேரி காவல்நிலையம் சார்பாக - காவல்துறை சாவடி (POLICE BOOTH) ஒன்று நிறுவப்பட்டது.



காவல்நிலையம் இல்லாத ஊர் என பெயர்பெற்ற நகரில் காவல்துறை சாவடி (POLICE BOOTH) நிறுவப்பட்டது குறித்து நகரில் பலரால் - எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நடப்பது என்ன? குழுமம் உட்பட நகரின் பல்வேறு அமைப்புகள் இந்த காவல்துறை சாவடியை அகற்றிட அரசிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் இன்று வரை அந்த காவல்துறை சாவடி அகற்றப்படவில்லை.

இதற்கிடையே - ஒரு இடத்தில் காவல்துறை சாவடி அமைப்பது குறித்த ஏதாவது வழிமுறைகள், அறிவுரைகள், சுற்றறிக்கைகள் உள்ளனவா என சென்னையில் உள்ள தமிழக தலைமை காவல்துறை (DGP) அலுவலகத்தில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) கீழ் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக தகவல் கோரப்பட்டது.

அதற்கு பதில் வழங்கியுள்ள தமிழக தலைமை காவல்துறை அலுவலகத்தின் பொது தகவல் அலுவலர், அவ்வாறு எந்த ஆவணமும் இல்லை தெரிவித்துள்ளனர்.



நகராட்சிக்கு பாத்தியப்பட்ட பேருந்து நிலைய வளாக வாயிலில் காவல்துறை சாவடி அமைத்திட - நகராட்சி அனுமதி வழங்கியுள்ளதா என காயல்பட்டினம் நகராட்சியிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது.



அதற்கு பதில் வழங்கியுள்ள, காயல்பட்டினம் நகராட்சியின் பொது தகவல் அலுவலர், அவ்வாறு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

[பதிவு: செப்டம்பர் 10, 2018; 8:00 am]
[#NEPR/2018091001]


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...ஆளுமை இல்லாத ஆட்சிகள்.
posted by mackie noohuthambi (kayalpatnam ) [28 September 2018]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46274

அதிர்ச்சி அளிக்கும் செய்தி. ஆனால் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில்.இரண்டு அரசியல் ஆளுமைகளை சமகாலத்தில் இழந்து நிற்கும் மக்களின் போதாத காலம்..

ஒரு சிலை கோயிலில் இருந்தால் அது கடவுள் என்று போற்றப்படுகிறது அதே சிலை கோயிலுக்கு வெளியே வந்தால் அது எந்த சக்தியும் அற்ற வெறும் சிலையாக மாறுவது மட்டுமல்ல கோடிக்கணக்கில் விலை போகும் வர்த்தகப் பொருளாகவும் மாறி விடுகிறது. இன்றைய நாளிதழில் வந்த செய்தி இது அதிர்ச்சி தரும் சுமார் 100 கோடி ரூபாய் பெறுமதியான சிலைகள் கைப் பற்றப் பட்டிருக்கிறது.

காவல் துறைபற்றி சட்டமன்ற உறுப்பினர் முதல் கம்பெடுத்தவனெல்லாம் வேட்டைக்காரன் என்ற முறையில் மிக கேவலமாக பேசி காவல் துறையை களங்கப் படுத்துகிறார்களே என்ற கவலை ஒரு பக்கம் இவர்களும் இப்படித்தானே தீமைகளுக்கு துணைபோகிறார்கள் என்ற கவலை மறுபக்கம்.

நகராட்சியின் அனுமதியில்லாமல் வீட்டுக்கு வரும் குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டால் கூட நகராட்சி அனுமதி வாங்காமல் அதை சரி செய்ய முடியாது. ஒரு குழி தோண்ட முடியாது ஒரு கல்யாண பந்தல் அமைக்க முடியாது என்றெல்லாம் சட்டங்கள் இருக்கும்போது காவல் துறை எப்படி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இப்படி ஒரு பொதுமக்கள் அதிகமாக கூடும் இடத்தில் ஓர் மினி காவல் நிலையம் அமைத்தார்கள். இதை பகல் கொள்ளை என்று சொல்வதைவிட வேறு என்னென்று சொல்வது.

இத்தனைகாலம் அது எப்படி நகராட்சி நிர்வாகத்துக்கு தெரியாமல் போனது என்பது ஆச்சரியமான செய்தி. மொத்தத்தில் நாட்டில் மக்களாட்சியும் இல்லை,ஊரில் நகராட்சியும் இல்லை. நேர்மை நியாயம் என்று பேசுபவர்கள் ஒதுங்கி நிற்கிறார்கள் வெட்டு குத்து என்று பேசுபவர்கள் கோலோச்சுகிறார்கள்.

நமது ஊரை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்..நமது கையில் உள்ள கடைசி ஆயுதம் அதுதான் ஆனால் வலிமையான ஆயுதமும் அதுதான் இறைவனிடம் கை ஏந்தி பிரார்த்திப்போம்.

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் புரியலே
அட அண்ட காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியலே... பேதம் புரியலே...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved