Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:47:44 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20910
#KOTW20910
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், செப்டம்பர் 18, 2018
மலபார் கா.ந.மன்றம் & ஐக்கியப் பேரவை இணைந்து, கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1873 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கேரளாவில் அண்மையில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு – கோழிக்கோட்டிலுள்ள மலபார் காயல் நல மன்றமும் (மக்வா), காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையும் இணைந்து நிவாரண உதவிகள் செய்துள்ளன. இதுகுறித்து, மலபார் காயல் நல மன்றம் சார்பில் சாளை முஹம்மத் உதுமான் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-

அன்போடு காயல்பட்டினம்.....

கடந்த 100 வருடங்களில் மிகப்பெரிய மழையையும், வெள்ள போக்கத்தையும், மண் சரிவுகளையும், அதன் மூலம் 483 உயிர் சேதமும், சுமார் 4 லட்சம் குடும்பங்களில் உள்ள 15 லட்சம் மனிதர்களை பாதிப்புக்குள்ளாகி, 40 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலான பொருள் சேதத்தையும் சந்தித்து அவதிக்குள் சிக்கி தவிக்கும் கேரள மக்களில் ஒரு சில குடும்பங்களுக்கு நம் காயல்பட்டிணம் மக்களின் அன்பு கலந்த உதவிக்கரம் மூலம் அவர்களின் அடிப்படை தேவைகள் சிலதை நிறைவேற்றினோம், கேரளவில் உள்ள பிரபலமன தினசரிகளில் செய்திகள் வெளியிட்டு நம் காயல் மக்களை வெகுவாக பாராட்டினார்கள். அல்ஹம்து லில்லாஹ்

காயல்பட்டிணம் முஸ்லீம் ஐக்கிய பேரவையுடைய முழு ஒத்துழைப்பு

வீடு வீடாக சென்று பொருள் சேகரித்த நம் காயல்பட்டிணம் முஸ்லீம் ஐக்கிய பேரவை அதனை முறையாக உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களை தேர்ந்தெடுத்து ஒப்படைக்க வேண்டும் என்ற முயற்சியை துவங்கி கோழிக்கோடு அதன் சுட்டு வட்டாரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட அடுத்த நாள் முதலே கலத்தில் இறங்கி உதவிப்பணிகளை செய்துகொண்டிருக்கும் காயலர்களின் அமைப்பான மலபார் காயல் நல மன்றமான எங்கள் அமைப்பை தொடர்பு கொண்டு நம் ஊர் மக்களிடம் இருந்து சேகரித்த தொகை மூலம் அடிப்படை தேவைக்கான பொருட்களை வாங்கி முறைப்படி அந்த மக்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்து தரவேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு

கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் திரு U.V. ஜோஸ் IAS அவர்களை சந்தித்து

பாதிக்கபட்ட பகுதியின் கவுன்சிலர்கள் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு அதனை வில்லேஜ் ஆபீஷர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தால் சரிபார்க்கப்பட்ட பிறகு மாவட்ட ஆட்சியரிடம் இருந்து நேரடியாக பெற்றுக்கொண்டு



மாவட்ட ஆட்சியருடைய ஒத்துழைப்புடன் பாதிக்கப்பட்ட பகுதியின் அருகாமையில் உள்ள பள்ளிக்கூடங்களில் வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், வில்லேஜ் ஆபீஸர்கள், கவுன்சிலர்கள் முன்னிலையில் கோழிக்கோடு 3 வில்லேஜ்களில் 197 குடும்பம் ஒரு இடத்தில் வைத்தும், கோழிக்கோடு 50 குடும்பம் மற்றொரு இடத்தில் வைத்தும், வயநாடு 50 ஆதிவாசி குடும்பங்களுக்கு பனமரம் என்ற ஊரில் வைத்தும் நம் பொருட்களை கைமாறினோம் அல்ஹம்து லில்லாஹ்.













கோழிக்கோட்டி 197 குடும்பங்களுக்கு பொருட்கள் கொடுக்கும் கட்சி



வயநாடு, பனமரம் என்ற ஊரில் 50 ஆதிவாசி குடும்பங்களுக்கு



கோழிக்கோடு ஜெயில் ரோட்டில் வைத்து 50 குடும்பங்களுக்கு





பொருட்களை பெற்றுக்கொண்ட குடும்பங்கள் உளமார நமக்காக பிரார்த்தனை செய்தது நம்மை கண்கலங்க செய்தது.



இந்த நிகழ்வுகள் அனைத்திலும் காயல்பட்டிணம் முஸ்லீம் ஐக்கிய பேரவை பெரியவர்கள் தங்கள் வயதையும் பொருட்படுத்தாமல் சிறிதும் ஓய்வின்றி கடந்த 3 தினங்களாக முழுநேர பணியாற்றினார்கள் என்பது குறிப்பிட தக்கது.



எங்களின் கலப்பணியின் போது நாங்கள் கண்ட காட்சிகளும், அந்த மக்களின் மனநிலையும் பாதிப்பின் ஆழத்தை அப்பட்டமாக படம்பிடுத்து காட்டுவாத இருந்தது, மலை சரிவினால் 4 வீடுகள் 15 உயிரை பறித்துக்கொண்டு சில நொடிப்பொழுதில் மண்ணும் கல்லுமாக சிதைந்து விட்ட இடத்தை பார்த்தோம், இரண்டு மாடி வணிக கட்டிடம் ஒன்று மண்ணுக்குள் புதைந்ததையும் வர்ணிக்க முடியாது





வயநாடு, பனமரம் என்ற ஊரில் பாதிக்கப்பட்ட வீடுகளில் ஒரு இஸ்லாமிய சகோதரியின் வீடு





பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் சேகரித்த தொகையில் இன்னும் சிறு தொகை நம் கையில் மீதம் உள்ளது. அவைகளை இந்த மக்களுக்கு அடுத்து என்ன தேவை என்பதை முறைப்படி தெரிந்துகொண்டு தகுதியானவர்களுக்கு நம்மால் முடிந்தவரை உதவலாம் என்றுள்ளோம். இன்ஷா அல்லாஹ் இன்னும் தேவைகள் அதிகம் இருந்தாலும் உதவிகள் செய்ய முயற்சிக்கலாம் என்ற ஒரு நம்பிக்கையை நம் ஐக்கிய பேரவை பெரியவர்கள் தந்துள்ளார்கள்.

அந்த மக்கள் விரைவில் சகஜநிலை அடைவதற்காக எல்லா தொழுகையிலும் பிரார்த்தனை செய்வோம்.

அந்த மக்களுக்கும், நம் மக்களுக்கும் ஆரோக்கியத்தையும், சமாதானத்தையும் தருவானாக (ஆமீன்)


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...காயலர்கள் கேரளர்கள் இணைப்பு பாலம் மலபார் காயல்நல மன்றம்
posted by mackie noohuthambi (kayalpatnam) [18 September 2018]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 46267

மலபார் காயல்நலமன்ற ஆண்டறிக்கை நலத்திட்டங்கள் பற்றிய செய்தி இந்த இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டபோது நான் ஒரு கருத்தை பதிவு செய்திருந்தேன். இப்போது தேவை உங்கள் உதவிகள் காயலர்களுக்கு அல்ல கேரளத்தில் காயம்பட்டவர்களுக்கு என்று எழுதி இருந்தேன். அல்ஹம்து லில்லாஹ் மிக்க சந்தோஷமான மனநிறைவுதரும் நிகழ்வு இப்போது பதிவாகி இருக்கிறது.

''அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவிலாத வெள்ளம் வந்தால் ஆடும்
''தென்னை இளம் கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னை தன்னை சாய்த்து விடும்
புயலாக வரும்பொழுது''

என்று ஒரு கவிஞன் பாடியது நினைவுக்கு வருகிறது. நிழற்படங்கள் சொல்லும் செய்தியும் அதுதான்.

எவ்வளவு ரம்மியமான காட்சிகளுனூடே எவ்வளவு கொடூரமான இயற்கை தாக்குதலும் நடந்திருக்கிறது எல்லாம் அல்லாஹ்வின் தேசம்தான். ஆனாலும் இப்படி இயற்கை காட்சிகள் நிறைந்த பூமி எப்படி சிதறி சின்னாபின்னமானது என்பதை நினைக்கும்போது அல்லாஹ்விடம் கை ஏந்தி பாவ மன்னிப்பு கேட்க நாம் கடமைப் பட்டுள்ளோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லோரது பாவங்களையும் மன்னித்து இது போன்ற சீற்றங்களால் நம்மை சோதித்து நாம் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக நிற்காமல் நம்மையும் நம் சமுதாயத்தையும் நமது தாய் நாட்டையும் பாதுகாப்பானாக...

காயல்பட்டினம் ஐக்கிய பேரவை உறுப்பினர்கள் தெருத்தெருவாக வந்து கேரளாவுக்கு உதவி கேட்டு வந்தார்கள் மக்கள் அள்ளி அள்ளிக் கொடுத்தார்கள்.அது முறையாக கேரளா அரசிடம் ஒப்படைக்கப்பட்ட செய்தி மக்களிடம் இதுவரை எதுவும் சொல்லப்படவில்லையே என்ற மனக் குறை என்போன்றவர்களுக்கு இருந்தது. இந்த தகவல் மூலம் அந்த மனக்குறை அகன்றுள்ளது என்றாலும் இணைய தளத்தையே எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். மக்களுக்கு ஒரு நோட்டீஸ் மூலம் நன்றி தெரிவித்தால் அவர்கள் மனநிறைவு பெறுவார்கள் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். வாழ்த்துக்கள். .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved