Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:55:56 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20887
#KOTW20887
Increase Font Size Decrease Font Size
சனி, செப்டம்பர் 1, 2018
மாசற்ற மண்பாண்ட விற்பனையைத் தொழிலாக்கிக் கொண்ட காயல் இளைஞர்கள்! பெருநாளையொட்டி கடற்கரையில் கண்காட்சியை நகராட்சி சுகா. ஆய்வாளர் துவக்கி வைத்தார்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4911 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஞெகிழி (ப்ளாஸ்டிக்) பொருட்களால் – இந்தியா உட்பட உலகம் முழுக்க மாசுபட்டு, சுற்றுச்சூழலுக்குப் பெருங்கேட்டை விளைவித்து வருகிறது.

தமிழகத்தில் ப்ளாஸ்டிக் உற்பத்திக்கு வரும் 2019 ஜனவரி மாதம் முதல் தடை விதிக்கப்படவுள்ளதாக அண்மையில் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, மாற்றுப் பொருட்களின் மீது பொதுமக்களுக்கு மோகம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 22.08.2018. புதன்கிழமையன்று ஹஜ் பெருநாளையொட்டி, காயல்பட்டினம் கடற்கரையில் மண்பாண்டப் பொருட்கள் உற்பத்தி & விற்பனைக் கண்காட்சி – “பழமையில் புதுமை EXPO 2018” எனும் தலைப்பில் நடைபெறவுள்ளதாக பொதுமக்களுக்குப் பிரசுரங்கள் வழியே அறிவிக்கப்பட்டது.



காயல்பட்டினம் அக்பர்ஷா தெருவைச் சேர்ந்த முஹம்மத் ரிஃபாஸ், மருத்துவர் தெருவைச் சேர்ந்த முஹம்மத் முஹ்யித்தீன், சதுக்கைத் தெருவைச் சேர்ந்த ஷேக் ஃபைஸல் ஆகியோர் இணைந்து அவ்வறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.



ஹஜ் பெருநாளன்று 17.00 மணிக்கு, காயல்பட்டினம் கடற்கரையில் – பெருநாள் மக்கள் திரளுக்கிடையே கண்காட்சி துவங்கியது. காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் விற்பனையைத் துவக்கி வைத்து, கண்காட்சியைப் பார்வையிட்டு, பொதுமக்களிடையே உரையாற்றினார்.







ஞெகிழிப் பொருட்களால் உலகமே மாசுபட்டுக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், தரமான – கவர்ச்சியான மண்பாண்டப் பொருட்களை உள்ளடக்கி இக்கண்காட்சியை நடத்திக் கொண்டிருப்பதும், இதற்கென தனி விற்பனையகமே துவங்கியிருப்பதும் மிகுந்த பாராட்டுக்குரியது என்று புகழ்ந்துரைத்த அவர், பொதுமக்கள் – தடை செய்யப்பட்ட – சுற்றுச்சூழலுக்குப் பெருங்கேடு விளைவிக்கிற பொருட்களைத் தவிர்த்து, இதுபோன்ற தரமான மண்பாண்டப் பொருட்களை ஆர்வத்துடன் பயன்படுத்த வேண்டும் என்றும், அதற்காக உழைக்கும் அனைவருக்கும் ஒத்துழைப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தண்ணீர் பானைகள், சமையல் பாத்திரங்கள், இட்லி சட்டிகள், தண்ணீர்க் குடுவைகள், தேனீர்க் குடுவைகள் என விதவிதமான மண்பாண்டப் பொருட்கள் – வழமையான உற்பத்தித் தரத்தையும் தாண்டி நேர்த்தியாகவும், சுத்தமாகவும் ஆயத்தப்படுத்தி, விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.





பொதுமக்கள் அதிகளவில் பொருட்களை வாங்கிச் சென்றதோடு, கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த – களிமண் கொண்டு மண் பாண்டங்கள் உற்பத்தி செய்யப்படும் பிரிவை – இதுவரை காணாத வியப்புடன் கண்டுகளித்துச் சென்றனர்.







பாதுஷா, உமர் ஃபாரூக், அப்துல் பாஸித், செய்யித் இப்றாஹீம் ஆகிய இளைஞர்கள் துணைப்பணியாற்றினர்.

காயல்பட்டினம் கூலக்கடை பஜாரில் House World எனும் பெயரில் இதற்கென விற்பனையகம் துவக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற மாயை மறைகின்றது
posted by mackie noohuthambi (kayalpatnam) [01 September 2018]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 46263

நாம் என்னவெல்லாம் புதுமை என்று நினைத்தோமோ அதெல்லாம் நமக்கு கேடு விளைவிக்கும் பொருள்களாக மாறி விட்டதை காலம் கடந்து உணர்கிறோம்.

பிளாஸ்டிக் பைகள் பிளாஸ்டிக் வாளிகள் நமது மண்பாண்டங்களையும் துணிப் பைகளையும் ஏன் நல்ல காற்று வீசும் பனை ஓலை விசிறிகளை நாம் புறம் தள்ளுவதற்கு காரணமாக அமைந்தது.

அரசுகள் அந்த செயற்கை பொருள்களுக்கு ஊக்கம் தந்தது அதை தயாரிக்கவும் அனுமதிகள் வழங்கின. செயற்கை உரங்கள் நமது இயற்கை உரங்களை பாழ்ப்படுத்தவும் அரசுகள் ஊக்கம் தந்தன விளைவு இப்போது அதன் கேடுகளை நாம் அனுபவித்து வருகிறோம்.

நமது கல்யாண விருந்துகளில் கந்தூரி வைபவங்களில் வழங்கப் பட்ட மண் சிட்டிகள் கலயங்கள் பலாப்பெட்டிகள் பனை ஓலைப் பெட்டிகள் எல்லாம் ஒரு தலைமுறைக்கு காணாமல் போய்விட்டது.

இன்று இருபது வயதுள்ள ஒரு இளைஞனுக்கு அவை எல்லாம் ஆச்சரிய பொருளாக மாறி விட்டது. இப்போது ''பழையன கழிதலும் புதியன புகுதலும்'' என்ற சொல்லாடல் விடைபெறுகிறது என்பதை எண்ணும்போது மனதுக்கு சந்தோசமாக உள்ளது. இந்த மண்பாண்ட விற்பனையை நாம் ஊக்குவிக்க வேண்டும்.

''ஊக்கு விற்பவனை ஊக்குவித்தால்
ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்
என்று ஒரு புது கவிதை சொல்கிறது.

கலயங்களும் சிட்டிகளும் மீண்டும் நமது மணவிழாக்களில் இடம்பெறவேண்டும்.

கோடை காலங்களில் மின்விசிறிக்கு பதிலாக இயற்கை சுகம் தரும் பனை ஓலை விசிறிகள் நம் வீட்டில் இடம் பெறவேண்டும்.

நமது கந்தூரி வைபவங்களில் மீண்டும் ஓலைப் பெட்டி பலாப் பெட்டி.

நமது வீடுககளில் ஐஸ் பெட்டிகளுக்கு பதிலாக மண்பாண்ட குடங்கள் சட்டிகள் நமது அடுப்பங்கரைகளை வந்து அடைய வேண்டும்.

இதற்கு ஒரு அடையாளமாக இந்த கலாச்சார மாற்றத்தை இங்கு அரங்கேற்றி இருக்கும் இளைஞர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved