Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:25:30 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20870
#KOTW20870
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2018
காயல்பட்டினத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி! மத்ரஸா, பள்ளிக்கூட மாணவர்கள் உட்பட நகர பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2740 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க அரசைக் கோரி, 24.08.2018. வெள்ளிக்கிழமையன்று மாலையில் – போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது. அதில் நகரிலுள்ள மத்ரஸா, பள்ளிக்கூடங்களின் மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டுள்ளனர். இதுகுறித்து, போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும் – அதன் சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-

வரலாற்றுச் சிறப்பும், புனிதமும் நிறைந்த காயல்பட்டினம் நகரில் – சமூக விரோதிகள் சிலரின் சதிச்செயல் காரணமாக, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதில், நல்ல குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களும் சிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கவலைகொண்டு, “போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக் குழு” எனும் பெயரில் குழு அமைக்கப்பட்டு, அதன் மூலம் பல்வேறு தொடர் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு நிறைவில், போதைப் பொருள் நடமாட்டத்தை நகரிலிருந்து முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் பொதுமக்கள் அனைவரையும் திரட்டி – போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி, 24.08.2018. வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு காயல்பட்டினம் பெரிய சதுக்கைத் திடலிலிருந்து பேரணி துவங்கியது. பேரணி தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் எம்.எல்.ஏ. தலைமையேற்க, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வி.கே.தீபு பச்சைக் கொடியசைத்து பேரணியைத் துவக்கி வைத்தார்.



சதுக்கைத் தெரு, முதன்மைச் சாலை, ஸீ-கஸ்டம்ஸ் சாலை வழியாகக் கடந்து சென்ற பேரணி, 05.30 மணியளவில் கடற்கரையில் நிறைவுற்றது. காயல்பட்டினத்திலிருந்து போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் இல்லாமலாக்க அரசை வலியுறுத்தி பேரணியில் பங்கேற்றோர் முழக்கங்களை எழுப்பிச் சென்றனர்.

























பின்னர் மேடை நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. எம்.ஆர்.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ கிராஅத் ஓதி துவக்கி வைத்தார், பேரணி ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களான மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த, சாளை ஸலீம் வரவேற்றார். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமீ தலைமையுரையாற்றினார்.



காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மதிமுக மாவட்டப் பொருளாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் ஆகியோர் கருத்துரையாற்றினர்.



காயல்பட்டினம் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும் – அதன் சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வி.கே.தீபு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

காயல்பட்டினத்தின் புனிதம், நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக விரோதிகளால் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் திட்டமிட்டு பரப்பப்படுவதாகவும், அதில் பள்ளி, மத்ரஸாக்களில் பயிலும் மாணவர்கள் உட்பட பலர் அறியாமையால் சிக்கிச் சீரழியும் நிலை அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை காவல்துறையிடம் முறையிடப்பட்டுள்ளதாகவும், அண்மையில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து கோரிக்கையை முன்வைத்ததாகவும், அதன் தொடர்ச்சியாக தற்போது 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் – சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் கூறினார்.



நகரின் இளைஞர்களையோ, மாணவர்களையோ கேவலப்படுத்துவது தமது நோக்கமல்ல என்றும், அவர்களது வாழ்வும் – அவர்களது குடும்பத்தாரின் நிம்மதியும் கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவும், காயல்பட்டினத்திலிருந்து போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்கும் வரை இடைவிடாமல் அனைவரும் தொடர்ந்து களப்பணியாற்றவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

தொடர்ந்து பேசிய மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வி.கே.தீபு, புகைப்பழக்கம், புகையிலை, கஞ்சா, மது உள்ளிட்ட அனைத்துமே போதைப் பழக்கங்கள்தான் என்றும், தம் மக்கள் கெட்டுப்போகாதிருக்க முதலில் பெற்றோர் அவற்றை விட்டும் ஒதுங்கிப் பேணிக்கையுடன் வாழ வேண்டும் என்று கூறினார்.



போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது, பரப்புவது, விற்பது அனைத்தும் சட்டப்படி குற்றம் என்றும், விற்பனை செய்பவருக்கு மரண தண்டனை வரை வழங்க சட்டம் உள்ளதாகவும் கூறிய அவர், இனி வருங்காலங்களில் காயல்பட்டினத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்கத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் வலிமையுடன் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிப்பதாகவும் கூறினார்.

போதைப் பொருள் ஒழிப்பை வலியுறுத்தி, பின்வருமாறு அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்:-







எங்கள் ஊர் காயல்பட்டினத்தின் வரலாறு, அதன் புனிதம் அனைத்தையும் உணர்ந்துள்ள நாங்கள், அவற்றை வலுப்படுத்தும் செயல்களில் மட்டுமே ஈடுபடுவோம்... அதன் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் எந்தச் செயலிலும் நாங்கள் ஒருபோதும் ஈடுபட மாட்டோம்.

சமூக விரோதிகள் சிலரால் எங்கள் ஊரில் அண்மைக் காலமாக திட்டமிட்டு பரப்பப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டத்தை, சட்டத்தின் துணை கொண்டு கட்டுப்படுத்துவோம். அத்தீமையைச் செய்யும் யாராக இருந்தாலும், அவர்களை தயவுதாட்சண்யமின்றி சட்டத்தின் முன் நிறுத்துவோம்...

வரலாற்றுச் சிறப்புமிக்க எங்கள் ஊர் காயல்பட்டினத்தின் புனிதத்தை எங்கள் வாழ்நாளெல்லாம் பாதுகாப்போம். இந்நகரிலிருந்து தீமைகள் அடியோடு அகற்றப்படவும், நன்மைகள் நிகழ்த்தப்படவும் நாங்கள் தனிப்பட்ட முறையிலும், ஒற்றுமையுடன் கூட்டாக இணைந்தும் எல்லா வகையிலும் பாடுபடுவோம். இதே நோக்கத்தில் பாடுபடுவோருடன் இணைந்தும் நாங்கள் எங்களால் இயன்ற வரை களப்பணியாற்றுவோம் என மனதார உறுதி கூறுகிறோம்.


காயல்பட்டினம் நகர்மன்ற 18ஆவது வார்டு முன்னாள் உறுப்பினர் இ.எம்.சாமி நன்றி கூற, அல்ஜாமிஉஸ் ஸகீர் – சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ துஆவைத் தொடர்ந்து, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.

பேரணியிலும், தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்திலும் – காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம், சென்ட்ரல் மேனிலைப் பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி, காயல்பட்டினம் மாணவர் சமூக நலச் சங்கம் (KSSWA) ஆகிய கல்வி நிறுவனங்களின் மாணவர்கள், அனைத்து ஜமாஅத்துகள் – பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், அங்கத்தினர், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.







































போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக் குழு சார்பாக...
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
படங்கள்:
‘தினகரன்’ ப்ரவீன்


[கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டன @ 11:15 / 27.08.2018.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...DEATH IS THE PENALTY FOR DRUG TRAFFICKING
posted by mackie noohuthambi (kayalpatnam ) [26 August 2018]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46259

அரபகத்துக்கு சென்றவர்களுக்கு இன்றும் செல்பவர்களுக்கும் விமான நிலையத்தில் ஒரு அட்டை வழங்கப் படும். அதிலே நமது கடவு சீட்டு முதல் எல்லா விவரங்களையும் குறிக்க வேண்டும். அந்த அட்டையை கையில் எடுத்தவுடன் சிவப்பு எழுத்துக்களால் குறிப்பிடப் பட்டிருக்கும் வசனம்தான் DEATH IS THE PENALTY FOR DRUG TRAFICKING என்ற கடுமையான எச்சரிக்கை.

ஆனால் இது சர்வ சாதாரணமாக வெளிநாடுகளில் நடக்கும் விஷயம் இந்தியாவின் தென்கோடியில் இருக்கும் ஒரு புனித நகரை எப்படி தொற்றிக் கொண்டது என்பதனை நினைக்கும்போது வருத்தப் படாமல் இருக்க முடியுமா...

காவல் துறை அதிகாரி அவர்கள் பேசும்போது 2011 இல் நமது ஊருக்கு வந்து ரைட் நடத்தி சிலரை கைது செய்ததாக குறிப்பிட்டார் அப்படியானால் சுமார் 10 வருடங்களாக இந்த முஸீபத் நமதூரில் வந்து கோலோச்சிக் கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும்போது வருத்தம் இன்னும் அதிகமாகிறது. எங்கே செல்கிறார்கள் நம் இளைஞர்கள்....

வீதிகளில் கிடக்கும் சாதாரண முள்ளைக்கூட அகற்றி மக்கள் அதை மிதித்து காயமடைந்து விடாமல் காப்பதும் ஒரு தர்மம் ஸதகா என்று சொல்லும் மார்க்கத்துக்கு சொந்தக் காரர்கள் நாம் எப்படி நம் இளைஞர்கள் இந்த இழி நிலைக்கு ஆளானார்கள். அல்லாஹு அக்பர்.

ஈமான் கொண்டவர்களே உங்களையும் உங்கள் குடும்பத்தார்களையும் நகர நெருப்பிலிருந்து பாது காத்துக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் எச்சரிக்கிறான் மாற்றம் நமது வீட்டிலிருந்து துவங்க வேண்டும் ஒவ்வொரு பெற்றோரும் மிக்க கவனமாக நமது மக்களை அவர்களின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

காவல் துறை அதிகாரி அவர்கள் சொல்வதைப்போல மதுக் கடைகளை அரசு திறந்தாலும் அவர்கள் யாரையும் இங்கே வந்து குடியுங்கள் என்று அழைப்பதில்லை . ஆனாலும் ஆங்கிலத்திலே TEMPTING என்றும் ATTEMPTING என்றும் இரு வார்த்தைகள் உள்ளன . நாம் தீயதை நோக்கி சொல்லாவிட்டாலும் தீயவை சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கும்போது நம்மையும் அது இழுக்கும், புகையிலை சிகரெட் பழக்கமும் அப்படிதான். எந்த விஷயம் மனிதனுக்கு தீமை தருமோ அதுவெல்லாம் ஹராம்தான் என்பதை நமது இளைஞர்களுக்கு புரியவைக்க வேண்டும்

ஹெல்மெட் பிரச்சினை, ஒரு இருசக்கர வண்டியில் மூன்று நான்குபேர் அமர்ந்து செல்வதும் கூட நமக்கு தீமை தருகிறது என்பதை தினசரி கண்கூடாக கண்டு வருகிறோம். ஆக ஒட்டுமொத்தமாக இந்த தீமைகளை நமதூரிலிருந்து களைய இந்த மாபெரும் பேரணியை ஏற்பாடு செய்திருப்பவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக

தமிழகத்தில் புகை பழக்கம் அதிக விழுக்காடு இருப்பதாகவும் வருடா வருடம் நமது தமிழகம் அதில் முன்னிலை வகிக்கிறது என்ற நாளிதழ் செய்திகளும் இன்னும் வருத்தமளிக்கின்றன...பள்ளி மாணவர்கள் மத்ரஸா மாணவர்கள் கலந்து கொண்ட இந்த பேரணி ஆக்கப் பணிகளை மேற்கொண்டிருப்பவர்களுக்கு உற்சாகம் அளிக்கிறது.

என்ன இருந்தாலும் அல்லாஹ்வும் அவனது ரசூலும் தடுத்திருக்கும் எல்லா தீமைகளிலிருந்தும் நாம் விலகி இருக்க அல்லாஹ்வே நமக்கும் நமது மக்களுக்கும் ஹிதாயத் தரவேண்டும். நமது ஐவேளை தொழுகைகளில் தஹஜ்ஜத் போன்ற உபரி வணக்கங்களின்போதும் நாம் அல்லாஹ்விடம் இந்த போதைக்கு அடிமையாகாமல் நமது சந்ததிகள் பாதுகாக்கப்படவேண்டும் என்ற து ஆ வை அதிகமதிகம் கேட்க வேண்டும். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக ஆமீன்.

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது
அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது
திருடனாய்ப்பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Ibrahim Faisal (Riyadh) [27 August 2018]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46260

செய்திகள் குறித்த கருத்து பதிவு ஆரம்பித்த நாள் முதல், பலர் தங்கள் கருத்துக்களை பதிவேற்றம் செய்து இருந்தாலும் அதில் மிக சிலர் மட்டுமே இன்றும் தொடர்ந்து எழுதி கொண்டு இருக்கிறர்கள். அதிலும் மக்கி நூஹு தம்பி காக்கா அவர்கள் ஒரு படி மேல் போய் முடிந்த வரை அனைத்து செய்திகளுக்கும் கருத்து பதிவு செய்வார்கள். மாஷா அல்லாஹ். அவர்கள் உடைய ஆயுளை வல்ல ரஹ்மான் நீடித்து வைத்து மென்மேலும் அழகிய அறிவுரைகளை நமக்கு வழங்க அல்லாஹ் கிருபை செய்வானாக, ஆமீன்.

இந்த செய்தியின் கடைசியில் பாடல் வரிகள் எழுதி இருந்தார்கள், ஆனால் தற்காலத்திற்கு ஏற்றெவாறு இப்படி மாற்றி அமைத்தால் சரியாக இருக்கும்.

''சட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது

அதை திட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது

திருடனாய்ப்பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது''

இப்படிக்கு,
இப்ராஹிம் பைசல்
ரியாத்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved