Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:23:37 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20697
#KOTW20697
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுன் 24, 2018
கருங்குளம் அருகே வாகன விபத்தில் காயலர் மரணம்! மனைவிக்கு பலத்த காயம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 6199 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கருங்குளம் என்ற ஊருக்கருகில், இன்று அதிகாலையில் அரசுப் பேருந்தும், ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதியதில், காரில் பயணித்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த கணவர் – மனைவி இருவரும் படுகாயமுற்றனர். சிகிச்சை பலனின்றி கணவர் காலமானார். விரிவான விபரம்:-

காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்தவர் புகாரி என்பவரது மகன் எஸ்.எம்.பி.முஹம்மத் அப்துல் காதிர் (வயது 35). இவர், தனது மனைவி ஃபாத்திமுத்து ஜஹ்ரா (வயது 32) உடன் - திருநெல்வேலியிலுள்ள உறவினர் வீட்டுக்கு ஆம்னி காரில் சென்று கொண்டிருந்தனர். கருங்குளம் அருகே கார் பயணித்தபோது, எதிர்திசையில் - திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்குச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தும், ஆம்னி காரும் நேருக்கு நேர் மோதின.





ஆம்னி கார் அப்பளம் போல நொறுங்கியதில், அதில் பயணித்த கணவர் – மனைவி இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், எஸ்.எம்.பி.முஹம்மத் அப்துல் காதிர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஃபாத்திமுத்து ஜஹ்ரா பலத்த காயத்துடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து அதிகாலையில் நடந்தபோதிலும், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் தேங்கி நின்றன. இந்த அரசுப் பேருந்தை அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியர் பட்டி சுப்பையா மகன் முருகேசன் (48) ஓட்டி வந்தார். பஸ்ஸில் 48 பயணிகள் இருந்தனர்.

செய்துங்கநல்லூர் காவல் உதவி ஆய்வாளர்களான சதீஷ், பெஞ்சமின், கோபால் ஆகியோர் நிகழ்விடம் சென்று போக்குவரத்தைச் சரி செய்தனர். இவ்விபத்து குறித்து செய்துங்கநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தகவல்:
நோனா உவைஸ்

நன்றி:
Srivaikundam Today News


[கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 18:25 / 24.06.2018.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இரங்கல்
posted by SMB FAIZAL (Al Khor, QATAR) [24 June 2018]
IP: 37.*.*.* | Comment Reference Number: 46195

அஸ்ஸலாமு அழைக்கும்

. إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!! மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும். ஆதாரம் :- புகாரி -7377

எனது நண்பனுடைய வபாதஹ் தகவலை அறிந்ததும் மிகவும் கவலை அடைந்தேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். அவருடைய குடும்பத்தார் அனைவர்க்கும் எனது ஸலாத்தய் தெரிவித்து கொள்கிறேன்.

அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜஹூன்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [25 June 2018]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 46197

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜஹூன்!

ஓட்டுனர் எவ்வளவு கெட்டிக்காரராக இருந்தாலும்,கண் சொருகுதுமாதிரி உணர்ந்தால்,உடனே வண்டியை ஓரம்கட்டி விட்டு ஒரு 10 நிமிடம்,அல்லது 5 நிமிடமாவது கண்ணுயர வேண்டும்.சமாளித்து கொண்டுபோய் விடலாம் என்றால்,அதுதான் மிகப்பெரிய விபத்துக்கு வித்தாகிவிடும்.5 நிமிடம் அயர்ந்தால் 1/2 மணி நேரமும்,10 நிமிடம் கண் துஞ்சினால் குறைந்தது 2 மணிநேரம் வரை சுறுசுறுப்பாக வண்டியை ஓட்டலாம்!

எல்லா வாகன ஓட்டுனர்களையும் "எமன்" பிடிக்கும் நேரம் அதிகாலை 4.1/2 மணியிலிருந்து 7 மணிவரை. இரவுமுழுதும் ஒட்டிய ஓட்டுனர், இந்த நேரத்திலும் தொடர்ந்து ஓட்டினால்,அவர் அதிர்ஷ்டமாக உயிர்பிழைத்து வாழ்கிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அனுபவத்தில் அடிவாங்கிய,
ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...CONDOLENCE
posted by S.D.SEGU ABDUL CADER (QUEDE MILLATH NAGAR) [27 June 2018]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 46198

CONDOLENCE Assalamu alaikum wrwb. INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON. إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!! மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும். ஆதாரம் :- புகாரி -7377 எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம். May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family. Aameen! Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved