Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:34:13 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20458
#KOTW20458
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஏப்ரல் 24, 2018
நெய்னார் தெருவில் நள்ளிரவில் மின் கம்பிவடம் அறுந்து தொங்கியது! பொதுமக்கள் முறையிட்டபோது காயல்பட்டினம் மின் வாரியம் அலட்சியம்!! “நடப்பது என்ன?” குழுமம் உயரதிகாரிகளைத் தொடர்புகொண்டதையடுத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2388 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நெய்னார் தெரு – கீழ நெய்னார் தெரு ஆகிய இரண்டு தெருக்களுக்கிடையே – காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) மைதானத்தையொட்டிய மின் கம்பத்தில், இன்று நள்ளிரவில் உயரழுத்த மின்சாரத்தைக் கடத்திச் செல்லும் மின் கம்பி வடம் ஒன்று அறுந்து தொங்கியது.





அதுபோல, அதே பகுதியில் மற்றோர் இடத்திலும் மின் கம்பி வடம் அறுந்து தொங்கி, சாலையோரத்தில் நின்ற கார் மீது படிந்தவாறு கிடந்தது.





அதிகாலை ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றிவிட்டு, அப்பக்கமாகச் சென்ற அப்பகுதியைச் சேர்ந்த சில பொதுமக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக – அங்கு யாரும் நெருங்கி விடாத அளவில் பாதுகாப்பாக நின்றுகொண்டனர்.



நெய்னார் தெருவைச் சேர்ந்த ‘அம்பலம்’ ஜாஃபர் ஸாதிக் என்ற சமூக ஆர்வலர், இக்காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியுற்று, உடனடியாக காயல்பட்டினம் மின் வாரிய அலுவலகத்தைத் தொடர்புகொள்ள, அங்குள்ள தரைவழி தொலைபேசியில் இணைப்பே கிடைக்கவில்லை என்பதால், காயல்பட்டினம் மின் வாரிய துணைப் பொறியாளரின் கைபேசி எண்ணுக்குத் தொடர்புகொண்டு பிரச்சினையைக் கூறியிருக்கிறார்.

“காலை 8 மணிக்கு வயர் மேன் வருவார்” என அவர் கூற, “உயிருக்கு ஆபத்தான நிலையில் மின் கம்பி வடம் தொங்கிக் கொண்டிருப்பதற்கு உடனடியாக நடவடிக்கை வேண்டும்” என்று அவர் கேட்டிருக்கிறார். ஆனால், அவர் பிரச்சினைக்குக் காது கொடுக்காமல், அலட்சியமாகப் பேசியதாகக் கூறிய அவர், உடனடியாக, “நடப்பது என்ன?” குழுமத்தில் உடனடியாக தனது புகாரைப் பின்வருமாறு பதிவு செய்தார்:-

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். நான் காயல்பட்டினம் கீழ நெய்னார் தெருவிலிருந்து அம்பலம் ஜாஃபர் ஸாதிக்... (LTS கோல்ட் ஹவுஸில் முன்பு பணியாற்றினேன்.)

(1) எங்கள் வீட்டின் முன்புறமுள்ள மின் கம்பத்தில் உள்ள தெரு விளக்கிலிருந்து புகை வருகிறது. கடுமையான - எரிந்த வாசனை வீடு முழுக்க வீசுகிறது.

(2) எங்கள் பகுதி முழுக்க Low voltage காரணமாக, மின் சாதனப் பொருட்கள் சரியாக இயங்கவில்லை. இரவு முழுக்க மின் விசிறியும் சரியாக இயங்கவில்லை.

இக்குறைகளைச் சரி செய்வதற்காக, நமது காயல்பட்டினம் மின் வாரிய அலுவலகத்தின் தரைவழி தொலைபேசி எண்ணுக்கு (+91 4639 283202) பலமுறை தொடர்புகொண்டும் யாரும் எடுக்கவில்லை. இக்கட்டான காலகட்டங்களில் யாரேனும் தொடர்புகொள்வதற்காகவே அந்த எண் உள்ளது என்றும், அவசர அடிப்படையில் பழுதுகளைச் சரி செய்வதற்காகவே மின் வாரிய அலுவலகத்தில் 24 மணி நேரமும் யாரேனும் இருப்பார்கள் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் எனக்கு மின் வாரிய அலுவலகத்திலிருந்து தீர்வு கிடைக்கவில்லை.

சரி, புதிதாக ஒரு AE வந்திருக்கிறாரே...? அவருக்குத் தொடர்புகொண்டு சொல்லலாம் என அவரது கைபேசி எண்ணுக்கு இன்று அதிகாலையில் தொடர்புகொண்டேன்.

“உங்க லைன் மேனுக்குச் சொல்லுங்க...” என்றார்.

“சார்! உங்க அலுவலகத்திற்குத் தொடர்புகொண்டேன்... யாரும் எடுக்கவில்லை... லைன் மேனும் யாரும் எடுக்கவில்லை... இன்று காலை 9 மணிக்கு மாதாந்திர பராமரிப்பு என்றும் மின்தடை செய்வீர்கள். நேற்றிலிருந்து எங்களுக்கு சரியான மின் வினியோகம் இல்லை... என்ன செய்ய?” என்று நான் கேட்டேன்.

“காலங்காத்தால ஏன் எனக்கு ஃபோன் செய்து தொந்தரவு பண்றீங்க? 8 மணிக்கு லைன் மேன் வந்து சரி செய்வார்” என்று மிக அலட்சியமாக பதில் சொல்கிறார்.

“சார்! நாங்கள் எங்கள் குறைகளை உங்களிடம்தான் சொல்ல முடியுமே தவிர, நாங்களே மின் கம்பத்தில் ஏறி சரி செய்ய இயலாது! தெரு விளக்கு தீப்பிடித்து எரிகிறது என்று நான் கூறிய பிறகும் மிகவும் அலட்சியமாக பதில் சொல்கிறீர்களே...?” என்று ஆதங்கத்துடன் கூறினேன்.

ஆக மொத்தத்தில், இந்த நிமிடம் வரை (24.04.2018. செவ்வாய்க்கிழமை காலை 06.45 மணி) எங்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.

தயவுசெய்து, நமது “நடப்பது என்ன?” குழும அட்மின்கள் இது விஷயத்தில் தலையிட்டு, எங்கள் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத் தர அன்புடன் வேண்டுகிறேன். நன்றி.

இப்படிக்கு,
அம்பலம் ஜாஃபர் ஸாதிக்,
கீழ நெய்னார் தெரு, காயல்பட்டினம்.
தொடர்புக்கு: +91 7010258054)


இவ்வாறு அவரது புகார் அமைந்திருந்தது. இதே போன்ற புகார் பெரிய நெசவுத் தெருவிலிருந்தும் “நடப்பது என்ன?” குழுமத்தால் பெறப்பட்டு, உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

இப்புகாரையடுத்து, ஆறுமுகநேரி துணை மின் நிலையத்திலுள்ள உயரதிகாரி, தூத்துக்குடியிலுள்ள மின்வாரிய மண்டல உயரதிகாரி ஆகியோரது தொடர்பு எண்களை “நடப்பது என்ன?” குழுமத்தினர் குழுமத்தில் பதிவு செய்து, அவர்களைத் தொடர்புகொள்ளக் கூறியதோடு, தாங்களும் நிர்வாகத்தின் சார்பில் அவ்வதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசியிருக்கின்றனர்.

அடுத்த சில மணித்துளிகளில் நிகழ்விடம் வந்த மின் வாரிய அலுவலர்கள் விரைவாக அப்பழுதுகளைச் சரிசெய்தனர்.



இரவு நேரங்களில் இதுபோன்று - மின்சாரம் தொடர்பான விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறுகையில், காயல்பட்டினம் மின் வாரிய அலுவலகத்திலுள்ள தரைவழி தொலைபேசியைத் தொடர்புகொண்டால் எப்போதுமே Engage ஒலி கேட்டவண்ணமே உள்ளதாகவும், இவ்வாறு தொடர்ந்து அலட்சியமாக இருந்தால், இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆதங்கத்துடன் கூறினர்.

இரவு நேர புகார்களுக்கு சரியான நடவடிக்கைகளை உடனுக்குடன் வழங்கிட, மின் வாரிய உயரதிகாரிகளிடம் “நடப்பது என்ன?” குழும நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved