Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:33:54 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20100
#KOTW20100
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஐனவரி 9, 2018
“மார்க்ஸீயவாதிகளும் காந்தியவாதிகளும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நடக்கும் காலம் இது” – மூத்த எழுத்தாளர் களந்தை பீர் முஹம்மது உரை!!
செய்திஅ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம், சஊதி அரபிய்யா)
இந்த பக்கம் 6077 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எழுத்து மேடை மையம் – தமிழ் நாடு & வாசகர் வட்டம் – காயல்பட்டினம் அரசு பொது நூலகம் இணைவில் 30.12.2017 அன்று காந்தி குறித்த ஆவணப்பட திரையிடலும் காந்திய பொருளாதாரம் குறித்த நூல் விவாதமும் நடைபெற்றன. இந்நிகழ்வில், காலச்சுவடு இதழின் துணையாசிரியரான களந்தை பீர் முஹம்மது சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இது குறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:

இச்செய்தியறிக்கையின் உள்ளடக்கங்கள்

(அ) எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு
(ஆ) அரசு பொது நூலகம் - காயல்பட்டினம்
(இ) வரவேற்புரை
(ஈ) அரிய ஆவணப்படம்
(உ) ஏ.கே.செட்டியார் – உலகம் சுற்றிய தமிழன்
(ஊ) நிலைத்த பொருளாதாரம் – நூல் அறிமுகம்
(எ) ஜே.சி.குமரப்பா – காந்தியை மிஞ்சிய காந்தி
(ஏ) சிறப்பு விருந்தினர் – அறிமுகம்
(ஐ) களந்தை பீர் முஹம்மது சிறப்புரை
(ஒ) நினைவுப் பரிசு
(ஓ) நூல்கள் வாங்கிட…
(ஔ) தொடர்புடைய முந்தைய பதிவுகள்

(அ) எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு

சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் முனைப்போடு, திரையிடல், நூலாய்வுகள் & விவாத அரங்கம் போன்ற பல்வேறு நிகழ்வுகளின் மூலம் - நம் மக்களிடம் மாற்று சிந்தனையை கொண்டு செல்லும் முன்னோடி தளமாக “எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு” விளங்குகிறது.

அவ்வகையில், இவ்வமைப்பின் 24-ஆவது நிகழ்வாக, மகாத்மா காந்தி குறித்த அரிய ஆவணப்பட திரையிடலும் & காந்திய பொருளாதாரத்தை முன்னிறுத்தும் ஓர் சிறந்த நூலைப்பற்றிய விவாதமும் கடந்த 30.12.2016 அன்று நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில், மூத்த எழுத்தாளரும் காலச்சுவடு இதழின் துணையாசிரியருமான களந்தை பீர் முஹம்மது சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.



(ஆ) வாசகர் வட்டம் – காயல்பட்டினம் அரசு பொது நூலகம்

எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு & அரசு பொது நூலகம் – காயல்பட்டினம் இணைவில் நடத்தப்பட்ட 2-ஆவது திரையிடல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, Modern Times & The Man Who Planted Trees ஆகிய இருவேறு ஆங்கிலப் படங்கள், 10.09.2017 ஞாயிற்றுக்கிழமையன்று அங்கு திரையிடப்பட்டன. அந்நிகழ்வில் மாவட்ட நூலக அலுவலர் ராம் சங்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

இவை தவிர, இவ்விரு அமைப்புகளும் குழந்தைகளுக்கான நிகழ்வுகள் & திட்டங்கள் பலவற்றையும் இணைந்து ஒருங்கிணைக்கின்றன.







(இ) அறிமுகவுரை

காலை 09:30 முதல் முற்பகல் 12:00 வரை நடைபெற்ற இந்நிகழ்வுக்கு வருகைத் தந்த அனைவர்களையும், எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாளை பஷீர் ஆரிஃப் வரவேற்று, நிகழ்ச்சி குறித்த அறிமுகவுரையை வழங்கினார்.



அவரது உரையின் சுருக்கம் கீழ்வருமாறு:

--- அரசியல், கலை, கல்வி, பண்பாடு & வரலாறு என இங்குள்ள குடிமைச்சமூகத்தின் எல்லா வெளிகளும் இன்று பிரித்தாளும் வெறுப்புக் கொள்கையின் பிடிக்குள் வேகமாக சென்றுக் கொண்டிருக்கின்றது. நாடு வரலாறு காணாத நெருக்கடிக்குள் வழுக்கிச் செல்கின்றது.

--- இந்த நிலையில், காந்தியை நாடு மீண்டும் தேடுகின்றது. ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமையின் காவலராக, நாட்டு விடுதலையாளராக, நுகர்வு வெறிக்கும் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதற்கும் எதிரானவராக & எல்லோருக்குமான பொருளாதாரத்தின் இலக்கணங்களை வகுத்த திருஉருவாக காந்தி எழுந்து நிற்கின்றார்.

--- காந்தியை விட்டு வெகு தொலைவு பயணித்து விட்ட நாடு இன்று அவரை மீண்டும் பயிலவும் மனங்கொள்ளவும் தொடங்கியுள்ளது.




(ஈ) அரிய ஆவணப்படம்

நிகழ்வின் சிறப்பம்சமாக, “மகாத்மா காந்தி – இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கதரிசி (Mahatma Gandhi: Twentieth Century Prophet)” என்ற அரிய ஆவணப்படம் திரையிடப்பட்டது.



80 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படம், காந்தி வாழும் காலத்திலேயே எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நூறு ஒளிப்பதிவாளர்களின் படப்பிடிப்பு, நான்கு கண்டங்களில் 1,00,000 மைல்கள் பயணம், பதினைந்து வருட காலம் என யுக நாயகரைப்பற்றிய ஒளி ஆவணத்திற்கு ஒரு யுகத்தின் உழைப்பு நல்கப்பட்டுள்ளது.

23 ஆகஸ்ட் 1940-ல் வெளியிடப்பட்ட காந்தி ஆவணப் படம் பெரும் வெற்றிபெற்றது.

முதன்முதலாக சென்னையில் திரையிடப்பட்ட இந்த ஆவணப்படமானது, பின்னர் விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் பாபு ராஜேந்திர பிரசாதால் புது தில்லியில் திரையிடப்பட்டது.





(உ) ஏ.கே.செட்டியார் – உலகம் சுற்றிய தமிழன்

தமது பயண நூல் கட்டுரைகளால், உலகம் சுற்றிய தமிழன் என அறியப்படும் மறைந்த ஏ.கே.செட்டியார் அவர்களின் கடின உழைப்பால் இந்த ஆவணப்படம் வெளிவந்தது. காந்தியின் ஆவணப்படத்திற்கான செய்திகளை திரட்டவே மேற்கொள்ளப்பட்ட பயணங்களும் உண்டு.







சுமார் மூன்று ஆண்டு காலமாக சேகரிக்கப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து 12,000 அடி நீளமான மகாத்மா காந்தி படத்தை தமிழில் தயாரித்து வெளியிட்டார். சில நாட்களில் இது தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிட்டார். ஆனால் இதனை அப்போதைய பிரித்தானிய அரசுக்கு அஞ்சி திரையரங்குகள் திரையிட முன்வரவில்லை

ஏ.கே.செட்டியாரின் முயற்சியால் இந்த ஆவணப்படம் தமிழிலிருந்து ஹிந்தியிலும், தெலுங்கிலும் & ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.

10 பிப்ரவரி 1953-இல் ஆங்கிலத்தில் திரையிடப்பட்ட படத்தின் முதல் காட்சி வாஷிங்டனில் அரங்கேறியது. அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர் தொடங்கி, ஐ.நா.வின் தலைவரும் உலக நாடுகளின் தூதுவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

கிட்டதட்ட தொலைந்த நிலையில் இருந்த இந்த ஆவணப்படமானது மீட்கப்பட்டுள்ளது. இதனை வெளியிட்டிருப்பவர்கள் தில்லி காந்தி அருங்காட்சியகத்தினர். காந்தி குறித்து வெளிவந்திருக்கும் ஆவணப்படங்களிலேயே இதுதான் முதன்மையான & கிட்டதட்ட முழுமையான ஆவணப்படம் என்ற பெருமையையும் உடையது.

தாம் வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டிருந்த போது பல இதழ்களுக்கு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை “உலகம் சுற்றும் தமிழன்” என்ற பயண நூலாகத் தமிழில் எழுதி 1940 இல் வெளியிட்டார் ஏ.கே.செட்டியார்.

(ஊ) நிலைத்த பொருளாதாரம் – நூல் அறிமுகம்

ஆவணப்படத் திரையிடலைத் தொடர்ந்து, ஜே.சி.குமரப்பா எழுதிய “நிலைத்த பொருளாதாரம் (Economy of Permanence)” நூலாய்வு நடைபெற்றது.



இந்தப் பொருளாதாரக் கொள்கையைத் தன்னுடைய அல்லது காந்தியுடைய மூளையிலிருந்து தனித்துவமாக உதித்த புத்தம்புதுக் கொள்கை என எந்த இடத்திலும் ஜே.சி. குமரப்பா உரிமை கொண்டாடவில்லை. மனித அறிவின் பரப்பானது ஒரு எல்லைக்குட்பட்டதுதான். மனித வாழ்வைவிடப் பெரியதான இயற்கையிலிருந்து தொடங்கி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் கடவுளுடன் கொண்டு இணைப்பதன் வாயிலாக அவர் செய்ததெல்லாம் பொருளாதாரத்தை அதன் இயல்பான வடிவில் மீட்டுருவாக்கம் செய்ததுதான் என ஆன்ம பணிதல் செய்கின்றார் குமரப்பா.

குருவி, மலை, நாணல் செடி, பழம், ஆறு போன்ற இயற்கையின் பல்வேறு வெளிப்பாடுகள் தங்களுடைய இயல்பான அன்றாடச் செயல்பாடுகளின் வழியாகவே இயற்கையின் மற்ற அனைத்துக் கூறுகளுடனும் எவ்வித நெருக்குதலும் இல்லாமல் ஒத்திசைகின்றன. ஒன்று மற்றதை வாழ்ந்து செழிக்க வைக்கின்றன.இயற்கையின் மற்றெல்லா உயிரற்ற உயிருள்ள அசையும் அசையாப் படைப்புகளுக்கும் இது பொருந்தும்.

முரண்களும் மோதல்களும் நீக்கப்பட்ட அன்பும் அமைதியும் ததும்பும் சூழலில் இயற்கையின் உள்வெளி லயத்துடன் பொருளாதாரத்தைக் கச்சிதமாகக் கொண்டு பொருத்தி அதற்கு நிலைத்த தன்மை என்ற அமரத் தன்மையைப் பெற்றுக் கொடுக்கின்றது இந்த நூல்.

(எ) ஜே.சி.குமரப்பா – காந்தியை மிஞ்சிய காந்தி

ஜே.சி.குமரப்பா கி.பி. 1892 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்தார். லண்டனில் கணக்கியலாளராக பணியாற்றியவர். காந்தியின் அன்றாட வாழ்க்கையின் ஒரு துளியில் ஈர்க்கப்பட்டு, கை நிறைய ஊதியமும் ஆடம்பரமும் நிறைந்த வாழ்க்கையை விட்டு வெளியேறி, முழுமையான காந்திய பொருளியலாளரானார்.



காந்தியையே மிஞ்சிய காந்தி என்றழைக்கப்பட குமரப்பா, தான் நம்பிய கொள்கைகளின் தடத்தில் துளியும் சமரசமில்லாமல் வாழ்ந்தவர். காந்தியும் நேருவும் இவரின் நேரடி விமர்சனத்திற்கு ஆட்பட்டிருக்கின்றனர். மிக குறைந்த உடைமைகளைக் கொண்டு எளிய வாழ்க்கையை பற்றிக் கொண்டு வாழ்ந்தவர். நாட்டின் பொருளாதாரப்பாதை தடம் மாறி செல்வதைக்கண்டு மனம் உலைந்து அதன் விளைவாக உடல் நலிவுற்று அரசு பொது மருத்துவமனையில் உயிர் நீத்தவர்.

(ஏ) சிறப்பு விருந்தினர் – அறிமுகம்

எழுத்தாளர் களந்தை பீர் முஹம்மது 1953-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் பிறந்தவர். மனைவி, மகன், மகளுடன் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் தற்சமயம் வசித்து வருகின்றார். இந்திய பொதுவுடைமை கட்சியின் கலை & இலக்கிய பிரிவான கலை இலக்கிய பெருமன்ற உறுப்பினர்.



சிறுகதை தொகுப்புகள் (4), தொகுப்பு நூல்கள் (3) & கட்டுரை தொகுப்பு (1) என பலவற்றை எழுதியுள்ள இவர், சிந்தனைச்சரம் & தி இந்து தமிழ் நாளிதழ் ஆகியவற்றில் பணியாற்றியவர். தற்சமயம், நாகர்கோவிலிருந்து வெளிவரும் இலக்கிய மாத இதழான காலச்சுவடின் துணை ஆசிரியராக பணியாற்றுகின்றார்.

(ஐ) களந்தை பீர் முஹம்மது சிறப்புரை

நிலைத்த பொருளாதாரம் நூல் குறித்த சிறப்புரையை எழுத்தாளர் களந்தை பீர் முஹம்மது வழங்கினார்.



அவரது உரையின் சுருக்கம் கீழ்வருமாறு:

--- மார்க்ஸீயவாதிகளும் காந்தியவாதிகளும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நடக்கும் காலம் இது!

--- வெளிநாட்டுக்காரர்கள் இங்கு ஒரு பொருளை சந்தைப்படுத்த வேண்டுமென்றால், முதலில் அதன் மீதான புதிய மதிப்பீடுகளை உருவாக்குகின்றனர். அதன் பிறகு, ஏற்கனவே உள்ளூரில் நடைமுறையில் இருக்கும் பண்பாட்டு நடவடிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் இழிவாக பார்க்க வைக்கின்றனர். எடுத்துக்காட்டாக, பொது இடங்களிலும் அலுவலகங்களிலும் லுங்கி, வேஷ்டி கட்டுவது நாகரீகமில்லை என்ற மனப்பான்மை.

--- பல நூறாண்டுகளாக இங்கு நாம் வாழும் அன்றாட வாழ்க்கை முறை என்பது மிக எளிதானது. இதில் கழிவு என்பது மிகக் குறைவாகவே உருவாகும். பெரும்பாலும் அனைத்தும் மறுசுழற்சியாகி விடும். ஆனால் மேலை நாட்டு வாழ்க்கை முறையானது அன்றாடம் ஏராளமான கழிவுகளை உருவாக்கும். அந்தக்கழிவானது எல்லோருக்கும் ஒரு சிக்கலாக மாறும்.



--- உணவுக்கான வேளை வரும்போது நாம் தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து வாழையிலைப் போட்டு எளிதாக உண்டு விட்டு போய்க் கொண்டே இருப்போம். பிறகு வாழையிலை குப்பைக்கு போகும். அதை கால் நடைகள் உண்ணும். அந்தக் கால் நடைகள் போடும் கழிவு மண்ணுக்கு உரமாகி மீண்டும் நமக்கு உணவாகும்.

--- மேலை நாட்டுக்காரன் உணவருந்துவதற்கு முன்னர் நிறைய ஆயத்தங்களையும் முன்னெடுப்புகளையும் செய்ய வேண்டியுள்ளது. சாப்பாட்டு மேசை, மேசை விரிப்பு, நாற்காலி, விதவிதமான கரண்டிகள், கலன்கள் & சமையல் கூடம் என பலவகை ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. அதற்காக ஒரு தொகை செலவழிக்க வேண்டியுள்ளது.

--- நுகர்வினால் உண்டாகும் பெரும் கழிவு மலைகள் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் கொட்டப்படுகின்றன. உள் நாட்டில் உண்டாகும் கழிவுகளை வைத்துக் கொண்டு என்ன செய்ய? என நாம் தடுமாறுகின்றோம்.

--- சென்னையில் நோக்கியா செல்பேசி ஆலைக்கு இடம், நீர், மின்சாரம் & சாலை வசதி போன்றவற்றை இலவசமாக அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்கினோம். திடீரென ஒரு நாள் அவன் ஆலையை மூடி விட்டு சென்று விட்டான். இன்று அந்த நிலப்பரப்பானது ஆலைத்தளவாடக் குப்பைகள் மண்டிய பாழ் நிலமாகியுள்ளது. அதில் கைவிடப்பட்ட தொழிலாளர்களுக்கும் எந்த நிவாரணமுமில்லை.

--- பெரும் முதலீட்டை கொண்டுவந்து குவிப்பதினால்தான் மலை போன்ற உற்பத்தி, இயற்கை வளச்சுரண்டல் & நுகர்வு வெறி போன்றவை உருவாகுகின்றன.

--- நாம் நுகரும் எல்லா இயற்கை வளங்களிலும் விரைவில் பற்றாக்குறை ஏற்படும். அப்போது நாம் போன பாதை வழியாகவே திரும்பி வர வேண்டியிருக்கும். அப்படி திரும்பி வரும்போது நமக்காக எதுவுமே எஞ்சியிருக்காது. எல்லாமே ஏற்கனவே பாழ்பட்டிருக்கும்.

--- நர்மதா அணைக்கட்டுமான வேளையில் ஏராளமான பழங்குடியினர் அகதிகளாக்கப்பட்டனர். அவர்களுக்கு இழப்பீடாக பணத்தை வழங்கியது அரசு. “இந்த பணத்தைக் கொண்டு நாங்கள் என்ன செய்வது? எங்களைப்பொறுத்த வரை அது ஒரு காகிதம்தான். நாங்கள் இதுவரை பணம் என்ற ஒன்றையே பார்த்ததில்லை. எங்களை காடுகளுக்குள் வாழ விட்டாலே போதும். அதுவே எல்லாவற்றையும் எங்களுக்கு வழங்கும்,” என்றனர் அந்த பாமர மக்கள்.



--- நாடு இன்று இவ்வளவு தொலைவு வந்து விட்டது. இதை அப்படியே பின்னோக்கி இழுப்பது என்பது அசாத்தியமானது. ஆனால் நாம் நிதானிக்க வேண்டும்.

--- மைய நீக்கம் எனப்படும் முறையைக் கையாண்டால் பென்னம் பெரும் ஆலைகளுக்கான தேவை ஏற்படாது. அதனால் ஓரிடத்தில் மொத்தமாக இயற்கை வளங்களை சுரண்டவும் தேவைப்படாது.




(ஒ) நினைவுப் பரிசு

நிகழ்வின் இறுதியில், எழுத்தாளர் களந்தை பீர் முஹம்மதுவிற்கு, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் சார்பில் கதர் சட்டை, வேட்டி, சவர்க்காரம் (soap) & உள்ளூர் அத்தர் குப்பி ஆகிய காதிப் பொதியை நினைவுப் பரிசாக - தாய்லாந்து காயல் நல மன்றத்தின் தலைவர் எம்.எஸ். ஸெய்யது முஹம்மது வழங்கினார்.





அதன் பின்னர், நிகழ்ச்சிக்கு வந்திருந்த மூவர், அரசு பொது நூலகத்தின் புரவலர்களாக சேர்ந்தனர். அதற்கான தொகையை அவர்கள், நூலகர் முஜீப்-யிடம் வழங்கினர்.

நன்றி நவிலல் & கஃப்ஃபாராவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

(ஓ) நூல்களை வாங்கிட…

1) நிலைத்த பொருளாதாரம்
ஆசிரியர்: ஜே.சி.குமரப்பா
தமிழில் அ.கி. வேங்கட சுப்ரமணியன்
இயல்வாகை & பனை வெளியீடு
தொடர்புக்கு: 9942118080 / 9486972602

இந்த நூலுக்கு அப்பால், ஜே.சி.குமரப்பாவின் சிந்தனைகள், பின்வரும் நூல்களாக தமிழில் வாசிக்கக் கிடைக்கின்றன.

2) டாக்டர் ஜே.சி.குமரப்பாவின் கருத்துக் களஞ்சியம்
தொகுப்பு: மா.பா.குருசாமி
சர்வோதய இலக்கியப் பண்ணை
தொடர்புக்கு: 0452-2341746

3) தாய்மைப் பொருளாதாரம்
(காந்திய பொருளியல் அறிஞர், ஜே.சி.குமரப்பா கட்டுரைகள்)
வெ.ஜீவானந்தம்
இயல்வாகை
தொடர்புக்கு: 9942118080

4) இரும்புத்திரையின் பின்னால் (ருஷ்யாவில் குமரப்பா)
ஜீவானந்தம்
மலைகள் பதிப்பகம்
தொடர்புக்கு: 9789009666 (பனுவல்)


(ஔ) தொடர்புடைய முந்தைய பதிவுகள்

1> டிச. 30-இல் காந்தி குறித்த அரிய ஆவணப்பட திரையிடல் & காந்திய பொருளாதாரம் குறித்த ஜே.சி.குமரப்பாவின் நூல் விவாதம்!! ஊர் மக்களுக்கு அழைப்பு!!
http://www.kayalpatnam.com/shownews.asp?id=20043

2> சாம்பல் மலர் – மதுரையில் நடந்த “நிலைத்த பொருளாதாரம்” நூல் அறிமுக நிகழ்ச்சி & அதனையொட்டிய பயணம் (தே.கல்லுப்பட்டியில் அமைந்திருக்கும் காந்தி ஆசிரமம்) ஆகியன குறித்த சாளை பஷீர் ஆரிஃப்-இன் எழுத்து மேடை கட்டுரை!!
http://www.kayalpatnam.com/columns.asp?id=203

3> மாவட்ட நூலக அலுவலர் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரையிடல் நிகழ்ச்சி!!! எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு & அரசு பொது நூலகம் இணைவில் நடந்தேறியது!!!
http://www.kayalpatnam.com/shownews.asp?id=19740

4> அரசு பொது நூலகத்துக்கு காட்சிப்படத்திரை (screen for projector) அன்பளிப்பு!!! திரையிடல் நிகழ்வுகளுக்காக “எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு” அமைப்பு வழங்கியது!!!
http://www.kayalpatnam.com/shownews.asp?id=19744


முக்கிய மேற்கோள்கள்

1> நிலைத்த பொருளாதாரம் – நூல் விமர்சனம்
https://www.panuval.com/nilaiththa-porulatharam-10004174

2> காந்தியை விஞ்சிய காந்தியவாதி! - ஜே.சி.குமரப்பா நினைவுநாள் சிறப்புப்பகிர்வு!
https://www.vikatan.com/news/coverstory/79095-author-of-gandhian-economic-thought---j-c-kumarappa-memories.html

3> சத்தியத்தின் குமாரன் – ஜே.சி.குமரப்பா
http://www.jeyamohan.in/87423#.WlG9md-WaM8

4> “உலகம் சுற்றும் தமிழன்” ஏ.கே. செட்டியார்!
http://keetru.com/index.php/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/29045-2015-08-25-23-31-28

5> மகாத்மா காந்தி – இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கதரிசி – ஏ.கே.செட்டியார்
http://www.gandhitoday.in/2017/01/blog-post_30.html


ஒளிப்பட தரவுகள்

Scroll.in; MadrasMinutes.com; FivePrime.com & CommonFolks.in

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒளிப்படங்கள்:
ஃபழ்ல் இஸ்மாயீல், சாளை பஷீர் ஆரிஃப் & கத்தீப் மாமூனா லெப்பை

செய்தியாக்கம்:
சாளை பஷீர் ஆரிஃப்
அ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம்)



Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
விதைக்குமுன் விதை! (?!)  (8/1/2018) [Views - 2050; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved