Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:45:23 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19952
#KOTW19952
Increase Font Size Decrease Font Size
சனி, நவம்பர் 25, 2017
முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி வளாகத்தில், மூன்று மாதங்களில் 25 வகையான நாட்டு மரக்கன்றுகள் & செடிகள் என 150-க்கும் மேற்பட்டவை நடப்பட்டு பராமரிப்பு!! பள்ளி நிர்வாகம் தகவல்!!
செய்திஅ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம், சஊதி அரபிய்யா)
இந்த பக்கம் 3855 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி வளாகத்தில், அப்பள்ளியின் நிர்வாகம் & முன்னாள் மாணவர்கள் இணைவில், மூன்று மாத காலங்களில் 25 வகையான நாட்டு மரக்கன்றுகள் & செடிகள் என 150-க்கும் மேற்பட்டவை நடப்பட்டுள்ளன. இது குறித்து, அப்பள்ளியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:

பசுமைத் திட்டம்

கடந்த சில ஆண்டுகளாக, பூமியின் வெப்பம் மிகுதியாவதை நாம் நன்குணர்கிறோம். இந்த வெப்பத்தை குறைக்கும் முக்கிய காரணியாக மரங்கள் விளங்குகின்றன.

"மரங்களை வளர்த்தல் வறண்ட நிலப்பகுதியை பசுமையாக்கி, மண் வளத்தை பெருக்கி, பாலைவனமாக்கலை தடுத்து, உணவு பாதுகாப்பை உறுதி செய்து, நீர் நெருக்கடியை பெருமளவு குறைக்கிறது."

இந்த பேருண்மையை கருத்தில் கொண்டு, காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளியில் ‘பசுமைத் திட்டம்’ ஒன்றை, 24.08.2017 அன்று துவங்கினோம். புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே!

இதன் மூலம், பள்ளி வளாகத்தின் பரந்த நிலப்பரப்பில், மிகுதியான மரங்களை வளர்த்து - பசுமை நிறைந்த ஒரு சோலைவனமாக அதனை மாற்றிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மூன்று மாதங்களாக நடைபெறும் பணிகள்

துவக்கமாக, வல்லுநர்களிடம் முறையான ஆலோசனைகள் பெறப்பட்டு, சொட்டு நீர் பாசனத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன் பின்னர், பல்வேறு கட்டங்களாக, நாட்டு மரக்கன்றுகள் & செடிகள் நடவு செய்யும் நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்வுகளுக்கு, பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரான ஹாஜி அப்துல் லத்தீஃப் தலைமை ஏற்க, பள்ளியின் துனை செயலாளர் ஜனாப் கே.எம்.டீ.சுலைமான் நெறிப்படுத்தி - முறையே அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.



பள்ளியின் நிர்வாகி ஹாஃபிழ் இர்ஷாத் அலி, பள்ளியின் செயலாளர் ஹாஃபிழ் சம்சுதீன், முதல்வர் திரு ஆர். ரத்தினசாமி & மாணவியர் பிரிவின் தலைமை ஆசிரியை திருமதி சிரோன்மணி, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜனாப் சாளை பஷீர் ஆரிஃப் & ஜனாப் ஃபழ்ல் இஸ்மாயீல், நவீன காயலின் முதல் விவசாயி ஜனாப் செம்பருத்தி 48 இப்றாஹீம், சமூக ஆர்வலர்கள் ஜனாப் அப்துல் பாசித் & ஹாஃபிழ் பி.எஸ்.ஷாஹுல் ஹமீது & இளைஞர் ஐக்கிய முன்னனியின் செயலாளர் ஜனாப் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



பள்ளி வளாகத்தை பசுமையாக்க வேண்டுமென்ற நிர்வாகத்தின் நோக்கத்தை, (04.09.2017 அன்று நடைபெற்ற பயின்றோர் பேரவை கூட்டத்தில் கலந்துகொண்ட) முன்னாள் மாணவர்களும் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

25 நாட்டு மர / செடி வகைகள்

இத்திட்டத்தின் கீழ், புன்னை, மகிழம், இலுப்பை, கடம்பு, நீர் மருதம், செண்பகம், பூவரசு, மகாகனி, சரக்கொன்றை, மந்தாரை, நாவல், புங்கன், வேம்பு, அரச மரம், எலுமிச்சை, மாதுளை, நொச்சி, நந்தியாவட்டம், வாடாச்சி, நாட்டு செம்பருத்தி, தங்க அரளி, சிறியா நங்கை, நாக தாளி, நெல்லி & ரோசா என 25 வகையான மரக்கன்றுகள் & செடிகள் நடப்பட்டன. இவற்றுள், சில மூலிகை செடிகளும் அடங்கும்.



முதல் கட்ட நிகழ்வுக்கு (24.08.2017), மதுரையை சார்ந்த சிறுதானிய விவசாயி திரு.கார்த்திகேயன் பார்கவிதை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பல வகையான நாட்டு மரக்கன்றுகளை (மொத்தம் 88), மதுரையில் இருந்து தருவித்ததோடு – முறையே அவற்றை நட்டு பராமரிப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.





அதன் பின்னர், 07.10.2017 அன்று, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திரு பொன்னம்பலம் அன்பளிப்பாக வழங்கிய 50 மரக்கன்றுகள், பள்ளி வளாகத்தினுள் நடப்பட்டன.

பள்ளியின் தோட்ட பராமரிப்பாளர் திரு சாமி, மரங்களை நடும் பணிகளில் சிறப்புற செயல்பட்டதோடு, இன்றும் இத்திட்டம் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்குவதற்கு பெரும் பங்காற்றுகிறார். இந்நிகழ்வுகளில், ஆர்வமுள்ள மாணவ-மாணவியர்கள் & ஆசிரிய-ஆசிரியைகளும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.









இயற்கைக் கல்வி

08.10.2017 அன்று எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் இணைவில், மாணவர்களுக்கான இயற்கைக் கல்வி முகாம் ஒன்று, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்முகாமில், முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி உட்பட நகரின் 4 பள்ளிகளில் இருந்து 71 மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இயற்கை வளம், மரம் வளர்த்தலின் பயன், மண் பாண்டங்களின் நன்மைகள் & பறவைகள்-பூச்சிகள் குறித்த விழிப்புணர்வு என பல்வேறு சூழலியல் குறித்த அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.

மதுரையை சேர்ந்த பறவை ஆர்வலர் திரு. இரவீந்திரன் & ஆழ்வார்திருநகரியை சேர்ந்த குயவர் திரு. தர்மலிங்கம் ஆகியோர் சிறப்பு பயிர்சியாளர்களாக கலந்துகொண்டனர்.

முகாமின் ஒரு பகுதியாக, பள்ளி வளாகத்தில் நாட்டு வகை மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆர்வமுள்ள மாணவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில், காயல்பட்டினம் நகராட்சியின் முன்னாள் தலைவர் ஜனாபா ஆபிதா ஷேக் தலைமையேற்று சிறப்பித்தார்.

ஜனாப் கே.எம்.டீ சுலைமான் அவர்களுடன், எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஜனாப் அ.ர.ஹபீப் இப்றாஹீம் இணைந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.

இயற்கை ஆர்வலரான ஜனாப் கவுஸ் முஹம்மது மரம் வளர்ப்பதன் சிறப்பு குறித்து மாணவர்களுக்கு விளக்கி - செய்முறை பயிற்சி வழங்கினார்,





எதிர்காலத் திட்டங்கள்

இன்னும் வெவ்வேறு நாட்களில், இன்ன பிற மரக்கன்றுகளும் நடப்பட்டன. ஆக, இந்த மூன்று மாத காலத்தில் மொத்தம் 150-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் / செடிகள் நடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. புகழ் அனைத்தும் இறைவனுக்கே!

மரம் நடுவதோடு நம் பணி நிறைவுறாது. அவைகளுக்கு தேவையான அளவில் பாசன வசதி வழங்கி, சரியான இயற்கை உரம் இட்டு, தொடர்ச்சியான பராமரிப்பு பணியில் ஈடுபடுவதும் அவசியம் என்பதை நன்கு அறிந்துள்ளதால், அதற்கான பல்வேறு முயற்சிகளை, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் & பள்ளியின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் மீது பெருவிருப்பம் கொண்டுள்ள சமூக ஆர்வலர்களின் உதவிகொண்டு, முழுமையாக செயல்படுத்துகிறோம். வருங்காலங்கலில், இத்திட்டத்தின் நீட்சியாக – பள்ளி வளாகத்தின் ஏனைய வெற்று நிலங்களிலும் மரங்களை நட்டு பசுமையாக்கிடும் முயற்சிகளை தொடர்ந்து செயல்படுத்த, இறையுதவியை கோருகிறோம்.

மரங்களை வளர்ப்பதோடு நில்லாமல், அதனைக்கொண்டு பள்ளி மாணவர்களுக்கு அழகிய முறையில் இயற்கைக் கல்வியை வழங்கவும், தற்சார்பு வாழ்க்கைக்கான அடிப்படை பயிற்சிகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம் (இறைவன் நாடினால்).

நன்றி பாராட்டுதல்

இத்திட்டம் இதுவரை வெற்றிகரமாக நடந்திட அருள்புரிந்த வல்ல இறைவனை போற்றிப் புகழ்ந்தவர்களாய், இதற்காக பெரிதும் உழைத்த & நிதியுதவி அளித்த முன்னாள் மாணவர்கள் & தன்னார்வலர்கள்; நிகழ்ச்சிகளில் பங்கேற்ற, ஆலோசனைகள் வழங்கிய, களப்பணியாற்றிய சிறப்பு விருந்தினர்கள், பயிற்சியாளர்கள், முன்னாள் & இன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், முதல்வர்கள், ஆசிரிய-ஆசிரியைகள், பள்ளி ஊழியர்கள் & தோட்ட பராமரிப்பாளர் ஆகிய அனைவருக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்!

மேலும், இத்திட்டம் தொடர்ந்து செயல்படவும் வெற்றியடையவும் பிரார்த்திக்குமாறு, உங்களை பணிவன்புடன் வேண்டுகிறோம்.

தொடர்புடைய முந்தைய பதிவுகள்

1. பள்ளியை என்றும் இயற்கைச் சூழல் மாறாமல் பாதுகாக்க வேண்டும்! முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி பயின்றோர் பேரவை கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் வலியுறுத்தல்!
(04.09.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19648)

2. நான்கு பள்ளிகளில் இருந்து 71 மாணவர்கள் பங்கேற்ற “இயற்கை முகாம்”!! எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு & முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப் பள்ளி இணைவில் நடைபெற்றது!!
(08.10.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19807)


இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல், களப்பணி & ஒளிப்படங்கள்
ஹாஃபிழ் இர்ஷாத் அலி, கே.எம்.டீ.சுலைமான், ஷேக் முஹம்மது, அப்துல் பாசித், ஹாஃபிழ் பீ.எஸ்.ஷாஹுல் ஹமீது, ஃபழ்ல் இஸ்மாயீல், சாளை பஷீர் ஆரிஃப், கவுஸ் முஹம்மது, செம்பருத்தி 48 இப்றாஹீம் & அ.ர.ஹபீப் இப்றாஹீம்

செய்தியாக்கம்
அ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம்)



Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வளரட்டும் விருட்சமாக இன்ஷாஅல்லாஹ் மரத்தோடு மனமும்
posted by Bukhary (Abu dhabi) [27 November 2017]
IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45923

அல்ஹம்துலில்லாஹ் புகைபடத்தில் சிறு மரகன்றுகளை பார்க்கவே கண்கள் குளிர்கிறது. இவைகள் விருட்சமானால் மழையில் மனமும் நிறையும்.

அனைத்பது ள்ளிக்கூடங்களின் நிலத்திலும்,பள்ளிவாயில்களின் நிலங்களிலும் இன்னும் அனைத்து பொது இடங்களிலும் பசுமை படரட்டும்.

துஆவுடன் வாழ்த்துக்கள். அல்லாஹ் இதில் நமக்கு அபிவிருத்தி செய்வானாக ஆமீன்.

(கருத்துக்கள் மிகக்குறைவே இதற்குமரம்தான் காரணமா இல்லை மனம்தான் காரணமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Ahamed (Hong Kong) [27 November 2017]
IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 45924

மாஷா அல்லாஹ்..பசுமை காயலின் முதல்படி!! ஊரெங்கும் இந்த பசுமை விரிவடையவேண்டும் என்று வல்ல ரஹ்மானிடம் பிரார்த்திக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. உடையவன் இல்லாட்டி ஒரு முழம் கட்டை!
posted by S.K.Salih (Kayalpatnam) [27 November 2017]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 45925

தம்பி ஹபீப் இப்றாஹீமின் வடிவமைப்பிலான இச்செய்தியைப் பார்த்து, என் கண்கள் குளிர்ந்துவிட்டன. மனமார்ந்த பாராட்டுக்கள்!

பொதுவாகவே, நமதூரில் மரம் வளர்ப்பைப் பலரும் செயல்திட்டங்களாகக் கொண்டு நிறைவேற்றியும், எல்லோருக்கும் உரிய பலன் கிடைப்பதில்லை. காரணம், பராமரிப்புக்கு அடுத்தவரை நம்புவதே!

இங்கோ நிலைமையே வேறு! யார் பராமரிக்க வேண்டுமோ அவர்களே தன்னார்வத்துடன் முன்வந்து, செயல்திட்டங்களுக்குத் துணை நின்று, இந்தளவில் சாதித்திருக்கின்றனர். இன்ஷாஅல்லாஹ் விரைவில் இவ்விடம் பசுமைத் தோட்டமாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இதை முன்னுதாரணமாகக் கொண்டு, இதர பொது நிறுவனங்களும், பொதுமக்களும் தம்மாலான முன்முயற்சியை மேற்கொண்டால் எல்லோருக்கும் பயனளிக்கும்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. முல்லைக்கு தேர் கொடுத்த பாரி
posted by முத்துவாப்பா (அல் கோபர்) [28 November 2017]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45926

முல்லைக்கு தேர் கொடுத்த பாரி என்று வரலாற்றில் கண்டதுண்டு .... இன்றைய சூழலில் நமது பூமி முல்லைக்காகவும் பாரிக்காகவும் வாடிய நிலமாய் வறண்டு போவோமோ என்ற நிலையில் இச்செய்தி கண்டு பாரிகள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள் என்று பறை சாட்டியுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved