Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:37:48 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19906
#KOTW19906
Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 13, 2017
நவ. 24 & 25 தேதிகளில் சிறார் இலக்கியவாதிகள் பங்கேற்கும் இருவேறு கதைசொல்லல் நிகழ்வுகள்!! எழுத்து மேடை மையம் & அரசு பொது நூலகம் இணைவில் ஏற்பாடு!!
செய்திஅ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம், சஊதி அரபிய்யா)
இந்த பக்கம் 3108 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு & அரசு பொது நூலகம் – காயல்பட்டினம் இணைவில், 24.11.2017 (வெள்ளி) & 25.11.2017 (சனி) தேதிகளில், இருவேறு கதைசொல்லல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினர்களாக, 'குட்டி ஆகாயம்' சிறார் இதழின் ஆசிரியர்களான திரு. நிழல் & திரு. காந்தி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இது குறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை கீழ் வருமாறு:

இருவேறு கதைசொல்லல் நிகழ்வுகள்

எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு & அரசு பொது நூலகம் – காயல்பட்டினம் இணைவில், 24.11.2017 (வெள்ளி) & 25.11.2017 (சனி) தேதிகளில், இருவேறு இடங்களில் கதைசொல்லல் நிகழ்வுகளை (இறைவன் நாடினால்) நடத்திட திட்டமிட்டுள்ளோம்.

நிகழ்வு எண்கள் 22 & 23

எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் ஒரு பிரிவாக செயல்படும் 'கண்ணும்மா முற்றம்', குழந்தைகளிடம் – இலக்கியம், பண்பாடு, கலை & இயற்கைக் கல்வி போன்றவைகளை முறையே கொண்டு சேர்க்கும் பெரும்பணியை செய்து வருகிறது.

இந்த கதைசொல்லல் அமர்வுகள், எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் 22 & 23-ஆவது நிகழ்வுகளாகவும் & கண்ணும்மா முற்றம் பிரிவின் 7 & 8-ஆவது நிகழ்வுகளாகவும் அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்புற இயங்கும் அரசு பொது நூலகம்

1964-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நமதூரின் அரசு பொது நூலகம், கட்டிட சீரமைப்பு பணிக்கு உட்படுத்தப்பட்டு - புதுப் பொலிவுடன் மீண்டும் திறக்கப்பட்டது. சுமார் 32,000 க்கும் மேலான நூல்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்த கிளை நூலகத்தில், சுமார் 3200-க்கும் மேலானவர்கள் உறுப்பினர்களாகவும் & 150-க்கும் மேலானவர்கள் புரவலர்களாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, Modern Times & The Man Who Planted Trees ஆகிய இருவேறு படங்களின் திரையிடல் & பள்ளி மாணவர்களுடன் புத்தக திருவிழாவுக்கு இன்ப சுற்றுலா ஆகியன அரசு பொது நூலகத்தின் இணைவில் சிறப்புற நடந்த நிகழ்வுகளாகும்.

அரசு சார்ந்த திட்டங்களுக்கும் வசதிகளுக்கும் முன்னுரிமை வழங்கும் நோக்கோடு, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பானது, அரசு பொது நூலகத்துடன் இணைந்து தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்வுகளை வருங்காலங்களிலும் (இறைவன் நாடினால்) நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

கொண்டாட்டங்களுக்கான மாதம்!

பல்வேறு நோக்கங்களுக்காக, நவம்பர் மாதம் குழந்தைகளுக்கு பிடித்த மாதாமாக இருக்கிறது. மூன்று முக்கியமான நிகழ்வுகளைக் கொண்ட இம்மாதத்தில், அவர்களின் குதூகலம் மிகுதியாக இருப்பது இயல்பான ஒன்றே!

இந்திய தேசத்தின் முதல் கல்வி அமைச்சர் ஜனாப் மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 11-ஆம் தேதியை தேசிய கல்வி தினமாகவும், நம் நாட்டின் முதல் பிரதமர் திரு ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 14-ஆம் நாள், குழந்தைகள் தினமாகவும் கொண்டாடுகிறோம்.

இது தவிர, இந்திய நூலகச் சங்கம் உருவானதை நினைவுகூறும் வகையில், நவம்பர் 14-ஆம் தேதியை தேசிய நூலக தினமாகவும் & நவம்பர் 14-20 வரையுள்ள வாரத்தை தேசிய நூலக வாரமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த முப்பெரும் நிகழ்வுகளை முன்னிட்டு - இந்த ஆண்டின் கொண்டாட்டங்களை, இருவேறு கதைசொல்லல் அமர்வுகளாக நமதூரில் நடத்தவிருக்கிறோம்.

முதலாம் நிகழ்வு, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து - அப்பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கும்; இரண்டாம் நிகழ்வு, காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தில் வைத்து - ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியின் சிறார்களுக்கும் நடக்கவிருக்கிறது.





அரசு பொது நூலகத்தில் நடக்கவிருக்கும் முதலாவது கதைசொல்லல் நிகழ்வு இது!

‘குட்டி ஆகாயம்’ சிறார் இதழ்!

கோயம்புத்தூரில் இருந்து வெளியாகும் ‘குட்டி ஆகாயம்’ சிறார் இதழின் ஆசியர்களான திரு. நிழல் & திரு. காந்தி ஆகியோர் இந்நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

சிறார் இலக்கியவாதிகளான இவர்கள், பல்வேறு கதை அமர்வுகள், சிறார் நூல் மதிப்புரைகள் & குழந்தைகள் குறித்த உரையாடல்களை தொடர்ச்சியாக நடத்திவருகின்றனர்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகும் ‘குட்டி ஆகாயம்’ நூல், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வாழும் குழந்தைகளின் கலை ஆக்கங்களை பதிப்பிக்கிறது.

சென்ற 08.10.2017 அன்று எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு & முஹ்யித்தீன் மேனிலைப்பள்ளி இணைவில் நடைபெற்ற சிறார் இலக்கிய மன்றத்தில் (இயற்கைக் கல்வி முகாமின் ஓர் பகுதி), மாணவர்களுக்கு இந்த நூல் அறிமுகம் செய்யப்பட்டு – அன்பளிப்பாகவும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்களுக்கு…

நிகழ்ச்சிகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, மாணவர்களும் / பெற்றோர்களும் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி & ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளி நிர்வாகங்களையோ அல்லது நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவையோ (கீழே அலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன) தொடர்பு கொள்ளலாம்.

சாளை பஷீர் ஆரிஃப்: 9962841761
முஜீப் (நூலகர்): 9894586729
கே.எம்.டீ.சுலைமான்: 9486655338

தொடர்புடைய முந்தைய பதிவுகள்!

1> கதை சொல்லுதலை வலியுறுத்தி - நாடு தழுவிய ’விழிப்புணர்வு மிதிவண்டி பயணம்’ மேற்கொள்ளும் திரு. குமார் ஷா பங்கேற்ற கதைசொல்லல் அமர்வு!
(07.11.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19883)

2> சிறார் நூல்கள் அறிமுகம் & கதைசொல்லல் நிகழ்வுகளோடு நடந்தேறிய சிறார் இலக்கிய மன்றம் (இயற்கைக் கல்வி முகாமின் ஓர் பகுதி)
(08.10.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19807)

3> தூத்துக்குடி புத்தக திருவிழாவுக்கு பள்ளி மாணவர்கள் சுற்றுலா!!
(06.10.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19767)

4> மாவட்ட நூலக அலுவலர் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரையிடல் நிகழ்ச்சி!!! எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு & அரசு பொது நூலகம் இணைவில் நடந்தேறியது!!!
(10.09.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19740)

5> கதைசொல்லல் & கைவினைப் பொருட்கள் உருவாக்கல் பயிற்சி முகாம்
(09.05.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19218)


இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியாக்கம்
அ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம்)



Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved