Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:44:26 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19836
#KOTW19836
Increase Font Size Decrease Font Size
சனி, அக்டோபர் 28, 2017
நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அரபு வனப்பெழுத்து வரைகலை (Arabic Calligraphy) பயிற்சி: “குறைந்தது ஐந்து கலைஞர்களாவது காயலில் உருவாக வேண்டும்!” பயிற்சியாளர் முஹ்தார் அஹ்மத் விருப்பம்!!
செய்திஅ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம், சஊதி அரபிய்யா)
இந்த பக்கம் 3657 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு, கத்தர் காயல் நல மன்றம் & பெங்களூரு காயல் நல மன்றம் இணைவில், காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப் பள்ளி வளாகத்தில், 15.10.2017 ஞாயிறன்று மத்ரஸா மாணவ-மாணவியருக்கு “அரபு வனப்பெழுத்து வரைகலை” அறிமுகப் பயிற்சி பட்டறை & கலைக் கண்காட்சி (Arabic Calligraphy Introductory Training Workshop & Art Gallery) நடைபெற்றது. இது குறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் சார்பாக எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:

உள்ளடக்கங்கள்:

(அ) கண்காட்சியுடன் நடந்தேறிய பயிற்சி முகாம்
(ஆ) எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு
(இ) கத்தர் காயல் நல மன்றம்
(ஈ) பெங்களூரு காயல் நல மன்றம்
(உ) சிறப்பு பயிற்சியாளர்
(ஊ) நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
(எ) நிகழ்முறை
(ஏ) அரபி ஹாஜிக்கு விருது
(ஐ) சிறப்பு மொழிபெயர்ப்பாளர்
(ஒ) பரிசளிப்பு & நிறைவு விழா
(ஓ) ஒளிப்பட செருகேடு & வலையொளி காணொளி
(ஔ) தொடர்புடைய முந்தைய பதிவுகள்

(அ) கண்காட்சியுடன் நடந்தேறிய பயிற்சி முகாம்!

எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு, கத்தர் காயல் நல மன்றம் (KWAQ) & பெங்களூரு காயல் நல மன்றம் (KWAB) இணைவில், “அரபு வனப்பெழுத்து வரைகலை”-யை (Arabic Calligraphy) நமதூரின் அரபு மத்ரஸாக்களில் பயிலும் மாணவ-மாணவியருக்கு அறிமுகம் செய்யும் பொருட்டு, சென்ற அக்டோபர் 15, 2017 ஞாயிற்றுக்கிழமை அன்று, கலைக் கண்காட்சியுடன் கூடிய அறிமுகப் பயிற்சி பட்டறை (Introductory Training Workshop & Art Gallery) ஒன்றை சிறப்புற நடத்தினோம், அல்ஹம்துலில்லாஹ்.

முன்னதாக, இப்பயிற்சி குறித்து நகரின் பல்வேறு ஆண்கள் & பெண்கள் அரபு மத்ரஸாக்கள் தொடர்புகொள்ளப்பட்டு, தனித்தனியே மாணவ-மாணவியர் சேர்க்கை நடைபெற்றது. கூடவே, கண்காட்சி குறித்து ஜும்ஆ பள்ளிகளில் பிரசுரமும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவால் வழங்கப்பட்டது.





(ஆ) எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு

சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் முனைப்போடு, திரையிடல், நூலாய்வுகள், இயற்கைக் கல்வி முகாம், கதைசொல்லல், கைவினைப் பொருட்கள் உருவாகும் பயிற்சி & விவாத அரங்கம் போன்ற பல்வேறு நிகழ்வுகளின் மூலம் - நம் மக்களிடம் மாற்று சிந்தனையை கொண்டு செல்லும் முன்னோடி தளமாக “எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு” விளங்குகிறது.

இவ்வமைப்பின் புதிய முயற்சியாக அமைந்த இந்த நிகழ்வு, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பு நடத்திய 20ஆவது நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

(இ) கத்தர் காயல் நல மன்றம்

பள்ளி மாணவ-மாணவியருக்கான வருடாந்திர வினாடி-வினா போட்டி & இயற்கை முகாம், பொதுமக்களுக்கான புற்றுநோய் பரிசோதனை முகாம், மாடித் தோட்டப் பயிற்சி முகாம் & உணவே மருந்து என மாறுபட்ட நிகழ்ச்சிகள் பலவற்றை முற்காலங்களில் சிறப்புற நடத்திய கத்தர் காயல் நல மன்றத்தின் நிகழ்ச்சி வரிசையில் இம்முகாமும் ஒன்று.

(ஈ) பெங்களூரு காயல் நல மன்றம்

மாணவர்களுக்கான துறைசார் ஆலோசகர் நியமனத் திட்டம் (Mentor & Mentee Programme), வேலைவாய்ப்பு தேடும் மாணவர்களுக்கான பயிற்சி & தங்கும் விடுதி ஏற்பாடு, இயலாநிலை மாணவர்களைக் கொண்ட பள்ளிக்கு அனுசரணை & உயர்கல்வி வழிகாட்டல் முகாம் போன்ற பல்வேறு சிறப்பம்சமிக்க நிகழ்ச்சிகள் / திட்டங்களை செயல்படுத்திய பெங்களூரு காயல் நல மன்றம், இம்முகாமின் மூலம் மற்ற இரு அமைப்புகளுடன் முதன்முறையாகக் கைகோர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(உ) சிறப்பு பயிற்சியாளர்

இந்நிகழ்வில், பெங்களூரைச் சார்ந்த இந்திய இஸ்லாமிய கலை & பண்பாட்டு மையத்தின் (Indo-Islamic Institute of Art & Culture) நிறுவனர் ஜனாப் முஹ்தார் அஹ்மத் பயிற்சியாளராக பங்கேற்றார். இவர் அரபு வனப்பெழுத்து வரைகலையை துருக்கியில் முறையாக பயின்று-பட்டயம் (إجازة) பெற்ற முதல் & ஒரே இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் நடந்த உலகளாவிய அரபு வனப்பெழுத்து வரைகலைப் போட்டியில் பங்கேற்ற 700 கலையாக்கங்களில், இவரது அழகிய ஆக்கத்திற்கு இரண்டாம் இடம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், இவருடன் இவரது நேரடி மாணவர்களான ஜனாப் முஹம்மது அப்துல் சத்தார், ஜனாப் அப்துல் சத்தார் சுப்ஹான், ஜனாப் முஹம்மது அஜாருள் ஹக் & ஜனாப் அமீருள் இஸ்லாம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.



(ஊ) நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கலைக் கண்காட்சி காலை 09:30 முதல் நண்பகல் 12:30 மணி வரை பெண்களுக்கும், மதியம் 01:30 முதல் மாலை 04:30 மணி வரை ஆண்களுக்கும் திறக்கப்பட்டது. இதில், ஜனாப் முஹ்தார் அஹ்மத் அவர்களின் கைவண்ணத்தில் உருவான (ரூ 10,000 முதல் ரூ 55,000 வரை மதிப்புள்ள) 20 அழகிய கலையாக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. கூடவே, வனப்பெழுத்து வரைகலை தொடர்பான நூல்களும், எழுதுகோள்களும் அரங்கை அலங்கரித்தன.

காலை 11:00 மணி அளவில் துவங்கப்பட்ட பயிற்சி பட்டறையில், ஜாவியா அரபிக் கல்லூரி, முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி, ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம், மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை ஆகிய அரபிக் கல்லூரிகள் / மத்ரஸாக்களின் மாணவர்களும், இக்கலையில் ஆர்வமுள்ள தனி நபர்கள் சிலரும் கலந்துகொண்டு பயனடைந்தனர். மதியம் சுமார் 01:00 மணியளவில் நிறைவுறுவதாக இருந்த பயிற்சியானது, பயிற்சியாளர் & பயிற்சி பெறுபவர்களின் பெரும் விருப்பத்தினால், உணவு & ளுஹ்ர் வணக்க இடைவேளைக்குப் பின்னர், மதியம் 02:30 மணியளவில் மீண்டும் துவங்கப்பட்டு, மாலை 04:30 மணியளவில் நிறைவடைந்தது.

கண்காட்சி & பயிற்சி பட்டறை ஆகிய இரண்டு தனித்தனி நிகழ்ச்சிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இவ்விரண்டிலுமே, பெண்கள் மிகுதியான ஆர்வம் கொண்டு பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. பெண்கள் பகுதியின் பணிகளை இக்ராஃ கல்வி சங்கத்தின் தன்னார்வலர்கள் முறையே முன்னின்று ஒருங்கிணைத்தனர்.













(எ) நிகழ்முறை

எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினரும், கத்தர் காயல் நல மன்ற பிரதிநிதியுமான ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதி துவங்கியதோடு, நிகழ்ச்சிகளையும் நெறிப்படுத்தினார். கூடவே, பயிற்சிக்கான விதிமுறைகளையும் எளிதில் புரியும் வண்ணம் இலகுவாக விளக்கினார்.



நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளியின் துணைச் செயலாளர் ஜனாப் கே.எம்.டீ.சுலைமான் நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னின்று செய்திருந்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினரான ஜனாப் கவுஸ் முஹம்மது வரவேற்புரையாற்றினார்.

எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஜனாப் அ.ர.ஹபீப் இப்றாஹீம் அறிமுகவுரை நிகழ்த்தினார். அதில், பயிற்சியாளர் ஜனாப் முஹ்தார் அஹ்மத் & சிறப்பு விருந்தினர் ஜனாப் முஹம்மது முஹ்யித்தீன் (அரபி ஹாஜி) ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து, அரபு வனப்பெழுத்து வரைகலை குறித்து சுருக்கமாக விவரித்தார்.

“அரபி ஹாஜியிடம் பயின்று அவரின் கலையை உயிர்ப்போடு வைக்கத் தவறிய நாம், இன்று ஜனாப் முஹ்தாரை அனுகியுள்ளோம். இனியும் நம் சமூகம் இழந்துவிடக் கூடாதவைகளுள் இக்கலையும் ஒன்று! எண்ணற்ற ஆலிம்களையும், ஹாஃபிழ்களையும் தன்னகத்தே கொண்ட காயல் பதியில், இக்கலையில் தேர்ச்சிபெற்ற வல்லுநர்கள் பலரும் உருவாகிட வேண்டும்!” எனவும் விருப்பம் தெரிவித்தார்.



பயிற்சியின்போது, இந்தோனெஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எழுதுகோள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, பயிற்சிக்குப் பின் அவை திரும்பப் பெறப்பட்டன. ஒரு சில ஆர்வமுள்ள மாணவர்கள் மட்டும், அவற்றை விலைகொடுத்து (ரூ 200) வாங்கிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.













நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, ஜனாப் முஹ்தார் அஹ்மத் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பும், கலையாக்கங்களும் ஒளிப்படங்களாக பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டன.

(ஏ) அரபி ஹாஜிக்கு விருது

முஹம்மத் முஹ்யித்தீன் எனும் அரபி ஹாஜியார், நமதூரின் எண்ணற்ற வீடுகளது முகப்புகளிலும், பள்ளிவாசல்களிலும், பலகைகளிலும் அரபு எழுத்துக்களை அழகுற பதிக்கும், நவீன காயலின் ஒரே “கல் செதுக்குக்கலை வல்லுநர் (Stone Carving Expert)” ஆவார்.

நமதூர் மட்டுமல்லாது தமிழகத்தின் பிற இடங்கள் & இலங்கையிலும், தமிழ், அரபு, ஆங்கிலம் & மலையாளம் என பல மொழிகளின் எழுத்துக்களையும் தனது கைவண்ணத்தால் பதித்துள்ளார்.

அப்பேர்பட்ட நமதூரின் நற்கலைஞரது கலை வாழ்வைப் பாராட்டி கண்ணியப்படுத்தும் வகையில், ஜனாப் கே.எம்.டீ.சுலைமான் அவருக்கு பொன்னாடை அணிவித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் சார்பில், அரபி ஹாஜிக்கு ரூ. 10,000 (பத்தாயிரம் ரூபாய்) சிறப்புப் பரிசாக வழங்கப்பட்டது. மற்றொரு கலைஞரான ஜனாப் முஹ்தார் அஹ்மத் தனது கைகளால் இப்பரிசை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.





(ஐ) சிறப்பு மொழிபெயர்ப்பாளர்

உருது மொழியை தாய்மொழியாகக் கொண்ட ஜனாப் முஹ்தார் அஹ்மத் சொல்வதை மாணவ-மாணவியருக்கு எளிதில் புரியும் வண்ணம் தமிழில் கொண்டு சேர்க்கும் பணியை காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ கே.சுல்தான் ஸலாஹுத்தீன் மளாஹிரீ சிறப்புற செய்தார். இவரின் நேரடி மொழிபெயர்ப்பு, இப்பயிற்சிக்கு மொழி ஒரு தடையில்லை என்பதனை நிரூபிக்கும் வண்ணம் அமைந்தது. பயிற்சியாளரையடுத்து, இவரே இந்நிகழ்வின் முடிசூடா மன்னராக விளங்கினார் என்றால் அது மிகையாகாது.



(ஒ) பரிசளிப்பு & நிறைவு விழா

சிறப்பான முறையில் பயிற்சியளித்த ஜனாப் முஹ்தார் அவர்களுக்கு மவ்லவீ கே.சுல்தான் ஸலாஹுதீன் மளாஹிரீ சால்வை அணிவிக்க, கத்தர் காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஜனாப் கத்தீப் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.





நினைவுப் பரிசாக, ஜனாப் முஹ்தார் அஹ்மத் அவர்களுக்கு Tuhlat Al Mujahidm: A Historical Epic of the Sixteenth Century (ஆசிரியர்: ஷெய்க் மஹ்தூம்; இந்தியாவில் போர்த்துகீசிய குடியேற்றக்காரர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மலபார் முஸ்லிம்களின் போராட்டங்கள் குறித்த முதல் நூல்) எனும் ஆங்கில வரலாற்று நூலும், அரபி ஹாஜி அவர்களுக்கு மவ்லானா ஜலாலுதீன் ரூமியின் கிதாபுல் மஸ்னவீ (ஆசிரியர்: ஆர்.பீ.எம்.கனி) எனும் தமிழ் நூலும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.



பயிற்சிக்குப் பின் பேசிய ஜனாப் முஹ்தார் அஹ்மத், “இச்சிறப்பான நிகழ்வை ஏற்பாடு செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஊரிலிருந்து குறைந்தது ஐந்து கலைஞர்களாவது இந்த உன்னத கலைத் துறையில் உருவாக வேண்டும்,” என விருப்பம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து ஜனாப் எஸ்.கே.ஸாலிஹ் நன்றியுரையாற்றினார்.

இப்பயிற்சிப் பட்டறையில் ஆர்வமாகப் பங்கேற்ற மாணவ-மாணவியருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதியாக, துஆ – கஃப்பாரா – ஸலவாத்துடன், நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.



இம்முகாமை ஏற்பாடு செய்த மூன்று அமைப்புகள், முன்னின்று நடத்திக் கொடுத்த ஏற்பாட்டுக் குழு அங்கத்தினர், இலவசமாக இடமளித்து – நிகழ்ச்சி சிறப்புற நடைபெற அனைத்து வகையிலும் ஒத்துழைப்பளித்த முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி நிர்வாகம், பயிற்சியாளராகப் பங்கேற்ற ஜனாப் முஹ்தார் அஹ்மத் & அவரது குழு, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அரபி ஹாஜி, சிறப்பு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய மவ்லவீ கே.சுல்தான் ஸலாஹுத்தீன் மளாஹிரீ, நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட மாணவ-மாணவியர், நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் அழைப்பை ஏற்று அவர்களை அனுப்பி வைத்த அனைத்து மத்ரஸா நிர்வாகங்கள், நிகழ்ச்சிக்காக பெரிதும் உழைத்த முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி ஊழியர்கள், பெண்கள் பகுதியில் சிறப்புற பணியாற்றிய இக்ராஃ கல்வி சங்கத்தின் தன்னார்வலர்கள் & அவர்களை அனுப்பி வைத்த அதன் நிர்வாகி ஜனாப் தர்வேஷ், பயிற்சியாளர் & அவரின் குழுவுக்கு தங்குமிடம் அளித்த ஜனாப் பாதுல் அஸ்ஹாப் (சென்னை அரஃபாத் டிரேடர்ஸ்), அவர்களுக்கு சிறப்புற விருந்தோம்பல் வழங்கிய ஜனாப் அ.ர.ஹபீப் இப்றாஹீம் குடும்பத்தார், பயிற்சியாளரை பெங்களூருவில் சந்தித்து - ஊர்தி ஏற்பாடுகளை முன்னின்று செய்த ஹாஃபிழ் அப்துல்லாஹ் முஹாஜிர், ஏனைய தன்னார்வலர்கள் & இன்னும் இப்பட்டியலில் விடுபட்டுப்போன அனைத்து நல்லுள்ளங்களுக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.



(ஓ) ஒளிப்பட செருகேடு & வலையொளி காணொளி

முகாமில் எடுக்கப்பட்ட அனைத்து ஒளிப்படங்களையும், தனி உயர்தெளிவான படங்களாக பதிவிறக்கம் செய்திட கீழுள்ள வலைப்பக்கத்தை (ஒளிப்பட செருகேடு – Photo Album) சொடுக்கவும்:

https://photos.app.goo.gl/FGzowgOcP172AJoG3

நிகழ்ச்சியில் பங்கேற்க தவறியவர்களின் வசதிக்காக, நிகழ்ச்சியின் முக்கிய பகுதிகள் காணொளிகளாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ், அவை விரைவில் வலையொளி காணொளியாக (YouTube video) வெளியிடப்படும்.

(ஔ) தொடர்புடைய முந்தைய பதிவுகள்

1. அக். 15 அன்று மத்ரஸா மாணவ-மாணவியருக்கு “அரபு வனப்பெழுத்து வரைகலை அறிமுகப் பயிற்சி பட்டறை” (Arabic Calligraphy Introductory Training Workshop)!! எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு, கத்தர் காயல் நல மன்றம் & பெங்களூரு காயல் நல மன்றம் இணைவில் ஏற்பாடு!!
(10.10.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19775)

2. அக். 15 அன்று “அரபு வனப்பெழுத்து வரைகலை கண்காட்சி” (Arabic Calligraphy Art Gallery)! பெங்களூரை சார்ந்த ஜனாப் முஹ்தார் அஹ்மத் - தனது கலையாக்கங்களை காட்சிபடுத்துகிறார்!! நகர மக்கள் & பள்ளி/மத்ரஸா மாணவ-மாணவியருக்கு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு!!
(10.10.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19776)

3. “எழுத்துக்களின் காதலர்கள்!” - அ.ர.ஹபீப் இப்றாஹீம் ஆக்கத்தில் எழுத்து மேடை கட்டுரை (08.11.2016; http://www.kayalpatnam.com/columns.asp?id=211)


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள உதவி:
காதர் மைதீன்
அப்பாஸ்

ஒளிப்படங்கள்:
கே.ஜெ. ஷாஹுல் ஹமீத்
ஷேக் முஹம்மத்
அ.ர.ஹபீப் இப்றாஹீம்

செய்தியாக்கம்:
அ.ர.ஹபீப் இப்றாஹீம்
எஸ்.கே.ஸாலிஹ்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:..கல் செதுக்குக்கலை வல்லுநர் அரபி ஹாஜிக்கு விருது .
posted by A.R.Refaye (Abudhabi) [29 October 2017]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45874

கல் செதுக்குக்கலை வல்லுநர் அரபி ஹாஜிக்கு விருது

முஹம்மத் முஹ்யித்தீன் எனும் அரபி ஹாஜியார், நமதூரின் எண்ணற்ற வீடுகளது முகப்புகளிலும், பள்ளிவாசல்களிலும், பலகைகளிலும் அரபு எழுத்துக்களை அழகுற பதிக்கும், நவீன காயலின் ஒரே “கல் செதுக்குக்கலை வல்லுநர் (Stone Carving Expert)” ஆவார்.

அந்த பெருத்தகைக்கு விருது வழங்கியதன் மூலம் விருது மகத்துவம் பெற்றுள்ளது.

அவர்களை கவனப்படுத்தாமல், பயன்படுத்தாமல் போனது நமது துரதிர்ஷ்டம்.ஆர்வமுள்ளவர்களுக்கு இவர்கள் தமது கல் செதுக்குக்கலை பயிற்றுவிக்கும் வாய்ப்பினை உலக மன்றங்கள் மூலம் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா?

காயலில் அரபு வனப்பெழுத்து வரைகலை கலைஞர்களை உருவாக்கிட வழிவகை செய்ய திட்டமிடுதல் அவசியம்.

சிறப்பான இந்நிகழ்வை ஏற்பாடு செய்த நல்லுள்ளங்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.நன்றி

A.R.Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...விழுதுகள் வேருக்கு எடுக்கும் விழா...
posted by mackie noohuthambi (colombo) [30 October 2017]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45875

படித்து பரவசம் அடைந்தேன்.

நான் இறந்த பிறகு எனக்கு ஒரு தாஜ்மஹால் கட்ட வேண்டாம். நான் வாழும்பொழுது வனப்புடன் வாழ ஒரு குடிசை கட்டித்தாருங்கள் என்று ஒரு கலைஞன் சொல்கிறான். அரபி ஹாஜியார் அவர்களுக்கு ரொக்கப் பரிசு கொடுத்து கௌரவிப்பதும் வெறும் பத்தாயிரம் அளிப்பதும் அவரது கவுரவத்துக்கு இழுக்கு என்று நினைக்கிறேன்.

அவர்கள் மழையில் நனைந்து வந்து கொண்டிருந்தார்கள் சாஹிப் அப்பா தைக்காவிலிருந்து வைகறை பொழுது அது.எங்கே மழையில் செல்கிறீர்கள் வாருங்கள் வீட்டுக்கு என்று என் வீட்டுக்கு அழைத்து சென்று ஒரு புது குடையும் ஒரு சால்வையும் போர்த்தி அவர்களை நான்கௌரவித்த நாள் என் நினைவுக்கு வருகிறது.

மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய்
வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய்
தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய்
சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய்
என்று தன் காதலியை பார்த்து ஒருவன் பாடுவதாக கவிப் பேரரசு வைரமுத்து பாடுவார்.

இந்த அரபு வனப்பெழுத்து வரைகலை அரபி ஹாஜியாருக்கு எப்படி அத்துப்புடியாகியது என்று நான் வியந்து அசந்து போன காலங்கள் நினைவுக்கு வருகிறது. ஒரு சில அற்ப ரூபாய்களுக்கு அவர் வானில் ஏறி விலை மதிக்க முடியாத முத்துக்களை நமது வீட்டு முகப்பில் பதித்து தந்து செல்வார். என்னங்க இத்தனை எழுத்துக்கு இவ்வளவு ரூபாயா என்று அவரை கிண்டலாக கேட்பேன் . பேசாமல் இந்த தொழிலுக்கே வந்து விடலாம் போல் தெரிகிறதே என்பேன். நல்லா வாருங்களேன் நான் சொல்லி தருவதற்கு தயாராக இருக்கிறேன் யாருமே இந்த துறையை ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன் என்கிறார்களே என்று அவர்கள் ஏங்குவார்கள். எங்கே தன் தொழிலுக்கு யாரும் போட்டியாக வந்து விடுவார்களோ என்ற ஏக்கம் நிறைந்த இந்த காலத்தில் வெள்ளத்தியாக அவர்கள் பேசுவது வியப்பாக இருக்கும்

அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் கொடுக்க வேண்டும் தமிழக அரசை நமது சட்டமன்ற உறுப்பினர் அனிதா அவர்களும் நம் மண்ணின் மைந்தர் அபூபக்கர் அவர்களும் அணுகி அவருக்கு அரசு விருதும் பெற்றுக் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று இந்த இணையத்தளம் மூலம் அன்பு கோரிக்கை வைக்கிறேன்.

நமதூரில் ஹாபிள்களும் உலமாக்களும் அதிகம் இப்படிப்பட்ட அரபு வனக்கலை வல்லுநர்கள் முன்காலத்தில் இருந்தார்கள் என்று முன்னோர்களை போற்றி புகழ்வதிலும் அவர்களுக்காக விழா எடுப்பதிலும் நாம் வல்லவர்களாக இருக்கிறோம். ஆனால் இந்த கலையை நாம் தொட்டுப் பார்க்கவில்லை. முஹ்தார் அவர்கள் விருப்பம் மிக சரியானது. எல்லாவற்றுக்கும் ஒரு காலம் உண்டு அந்த காலம் இப்போது கனிந்து வந்துள்ளது. முஹ்தார் அவர்கள் கோடு போட்டுள்ளார்கள் நம்மவர்கள் ரோடு போடவேண்டும். அவர்கள் புள்ளி வைத்துள்ளார்கள் நாம் கோலம் போட வேண்டும்.நமது இக்ரா கல்வி சங்கம் இதற்காகவும் ஒரு வழிகாட்டலை இளைஞர்களுக்கு சொல்லலாம்.மிக சங்கடமான ஒரு கலை ஆனால் அதை தெரிந்து கொண்டால் அதற்காக நேரம் ஒதுக்கினால் அது கைகூடும். மீன் குஞ்சிக்கு நீந்த கற்றுக் கொடுக்கத் தேவை இல்லை. அரபி நமக்கு கைவந்த கலை அதை இப்படி ஒரு மாற்று யோசனையுடன் சிந்தித்தால் பல வாய்ப்புக்கள் இந்த துறையில் கிடைக்கும். அரபி ஹாஜி யாரைப் போல குறைந்த தொகை வாங்க வேண்டியதில்லை. கொட்டி கொட்டி கொடுப்பார்கள். ஆவன செய்யுங்கள் அல்லாஹ் துணை நிற்பான்.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் முஹ்தார் அஹமத் அவர்களுக்கும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [30 October 2017]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45876

அஸ்ஸலாமு அழைக்கும் .

ஒரு வித்தியாசமான நிகழ்வு தான்...இவை ....நமது மண்ணில் இந்த நிகழ்வு சிறப்பாக நடந்ததை நினைத்து பெருமையாகவே இருக்கிறது .....எங்கள் காலங்களில் இது போன்ற நிகழ்வு நடக்காமல் போனதை நினைத்து கொஞ்சம் வருத்தமே ....

காலத்தின் செயல் பாடு என்றே தான் சொல்லணும் .....

நம் மரியாதைக்குரிய ...ஜனாப் ..அரபி மாமா அவர்களை இந்த மன்றம் மறக்காமல் இந்த தருணத்தில் '' நினைவு கூர்ந்ததை ''...நாங்கள் பெருமை கொள்கிறோம் ....மன்ற நிர்வாகிகளை பாராட்டுகிறோம் ...

தற்போது .ஜனாப் ..அரபி மாமா அவர்களை .நிழற் படத்தில் பார்த்த போது .....நம் கண்முன்னாடி வந்து செல்வது ...மலை / வெயில் ..என்று பாராமல் நமது ஊரின் ஒவ்வொரு புது வீட்டின் பால்கனியின் & நம் பள்ளிகளின் ....பலகை போட்டு மேல் அற்புதமாக ,,மிக கவனமுடன் உட்காந்து ....அரபி எழுத்துக்களை நிதானமாக ...எந்த ஒரு தவறும் இன்றி பதியவைக்கும் '' லாவகம் '' தான் ...எங்களின் நினைவுக்கு வருகிறதுக்கு .....

நம் மரியாதைக்குரிய ஜனாப் ....அரபி மாமா அவர்களை ..கொவைரவிப்பதில் நாம் காலம் கடந்தாலும் .....தற்போது தாங்கள் அவர்களை மேடை ஏற்றி மரியாதை கொடுத்தது ..எண்கள் யாவருக்கும் பெருமையே ....அல்ஹம்துலில்லாஹ் ...

உண்மையை சொல்ல வேண்டுமானால் ...எங்கள் அரபி மாமா அவர்களுக்கு ..கிடைத்தது மூலம் தான் ... அந்த '' விருதுக்கே ''ஒரு கண்ணியம் ...பெருமை .... கிடைத்து இருக்கிறது என்று தான் சொல்லணும்....

இந்த நிகழ்வில் ...நமது ஊர் பெண்மக்கள் அதிக ஆர்வத்துடன்.... அதிகமாக கலந்து ...கொண்டதை ...நினைத்து பார்க்கும் போது....நம் பெண்மக்கள் நல்லதோர் முன்னேற்றத்தின் பாதையில் செல்வதை தான் காட்டுகிறது ....

எல்லா புகழும் இறைவனுக்கே .....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
சவூதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved