Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:55:29 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19799
#KOTW19799
Increase Font Size Decrease Font Size
திங்கள், அக்டோபர் 16, 2017
“பாஜ அரசு தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்படுகிறது!” – காயல்பட்டினம் செய்தியாளர் சந்திப்பில் இ.யூ.முஸ்லிம் லீக் சட்டமன்றக் கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2632 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்படுவதாக காயல்பட்டினத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக சட்டமன்றக் கட்சித் தலைவரும் – அதன் மாநில பொதுச் செயலாளருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. காயல்பட்டினத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

மத்தியில் பா.ஜ.க. பொறுப்பேற்ற பிறகு சிறுபான்மை சமுதாய மக்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. இங்கு பல்வேறு மொழி, இனம், கலாச்சாரங்களை கொண்டது.

ஆனால் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை அடிப் படையாக கொண்ட ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மக்கள் என்ற ரீதியில் மத்திய அரசு செயல்படுகிறது. இதற்காக மற்ற கட்சிகளை தடை செய்வது, உரிமைகளை பறிப்பது, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்து வது, ஹஜ் பயணிகளுக்கு மானியத்தை நிறுத்துவது, சுற்றுலா தலங்களின் பெயர் பட்டியலிலிருந்து தாஜ்மஹால் பெயரை அகற்றியது, கல்வி கொள்கைகளை மாற்றியது, இந்தி, சமஸ்கிருதம் மொழிகளை திணிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பா.ஜ.க. அரசு செயல்படுகிறது. தமிழக அரசும் இதை கண்டு கொள்ளாமல் மத்திய அரசை கண்மூடித்தனமாக ஆதரித்து வருகிறது.

காயல்பட்டினத்தில் வரும் அக்டோபர் 14ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சிறுபான்மையினர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது. தேசிய ஒருமைப்பாடு, சமூக நல்லிணக்கம், சிறுபான்மை யினரின் கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாத்திட இம்மாநாட்டில் உறுதிமொழி ஏற்கப்படும். இம்மாநாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 250 பள்ளிவாசல் ஜமாஅத்கள் பங்கேற்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து வரும் 28ம் தேதி கடலூரிலும், டிசம்பர் 23ம் தேதி திருச்சியிலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி கடையநல்லூரிலும் இம்மாநாடு நடக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் இம்மாநாடு நடத்தி முடிக்கப்படும்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் நூற்றுக்கணக் கானவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்த பாதிப்பு அதிகரித்து விட்டது.

அதிமுக கட்சி குழப்பத்தை மட்டும் பார்க்காமல் மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டும். தமிழகத்திலுள்ள குழப்பமான சூழ்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற கவர்னர் இதற்குத் தீர்வு காண வேண்டும். தமிழக அரசு 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டும் அது தொடர்பாக அரசு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சியியினர் ஓரணியில் நின்று வலியுறுத்தி வருகிறோம்.

மேலும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீதும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு ஜனநாயகத்தை செயல் இழக்க செய்துவிட்டனர். இவ்விஷயத்தில் தமிழக கவர்னர் எந்தவித நிர்பந்தத்திற்கு அடிபணியாமல் பாரபட்சமற்ற முறையில் ஜனநாயகத்தை தழைக்க செய்ய வேண்டும். மத்தியஅரசு நதிநீர் பிரச்சினை, காவிரி நீர், ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட எந்த திட்டங்களுக்கும் தமிழகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி அமையவேண்டும். இதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாநாடு அச்சாணியாக இருக்கும்.


இவ்வாறு அவர் கூறினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச்செயலாளர் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கீ, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜே. மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைச் செயலாளர்கள் அப்துல் வாகித், சுல்தான், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் என்.டி. முஹம்மது இஸ்மாயில், மாவட்ட எஸ்.டி.யூ. செயலாளர் எலக்ட்ரிஷன் பஷீர், காயல்பட்டினம் நகர தலைவர் என்.ஏ. முஹம்மது ஹஸன், நகர செயலாளர் ஏ.எல்.எஸ். அபுசாலிஹ், நகர பொருளாளர் கே.எம்.என். மஹ்மூது லெப்பை , வார்டு பிரைமரி நிர்வாகிகள் பி.எம்.எஸ். அமானுல்லாஹ், ஏ.கே. மஹ்மூது சுலைமான், எம்.டி.ஏ. மஹ்மூது முகைதீன், என்.டி. அஹமது சலாவுதீன்,எம்.இஸட். சித்தீக், கே.என்.டி. அபூபக்கர் சித்தீக்,கே.வி.எச்.எம். மஹ்மூது ஜிப்ரி உள்ளிட்ட நிர்வாகிகள் பேட்டியின் போது உடனிருந்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...அது மீறி செயல்படும் ஆட்சியாளர்களை அல்லாஹ் விட்டு வைப்பதில்லை
posted by mackienoohuthambi (colombo) [16 October 2017]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45836

அத்து மீறி செயல்படும் ஆட்சியாளர்களை அல்லாஹ் விட்டு வைப்பதில்லை. முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் ஆட்சியாளர்களையும் அல்லாஹ் விட்டு வைப்பதில்லை.இந்த நிதர்சன உண்மைகளை கடந்த கால அரசியல் நிகழ்வுகள் நமக்கு நினைவு படுத்துகின்றன. இலங்கையில் யாரும் அசைக்க முடியாத அசைத்துப் பார்க்க முடியும் என்றும் யாரும் கனவு கூட கண்டிருக்கமுடியாத அசுர பலத்ததுடன் செயல்பட்ட அரசையும் அதன் அதிபரையும் ஒரே டேபிளில் இரவு சாப்பாட்டை பகிர்ந்து கொண்ட நண்பர்கள் இருவரையும் அடுத்த நாள் காலையில் விழித்தெழும் போது எதிரிகளாக விழித்தெழ செய்து தொடர்ந்து வந்த அதிபர் தேர்தலிலும் அடுத்து வந்த பொது தேர்தலிலும் முன்னாள் அதிபராக எதிர் கட்சி வரிசையில் அமர செய்தவன் அல்லாஹ். பிரௌன் வீட்டில் வளர்ந்த மூஸா நபியை பிரௌனுக்கு எதிராக களத்தில் இறக்கி விட்டு பிரௌனை மண்ணை கவ்வ செய்தவன் அல்லாஹ். எங்கள் ஆட்சியில் எரிக்கும் சூரியனும் எங்களை கேட்டு தான் எழும் விழும் என்று அசுர பலத்துடன் வாழ்ந்த பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை முறியடித்து அவர்களை நிலை குலைய செய்தவன் அல்லாஹ். எனவே இந்த காவி ஆதிக்கத்தின் நாடி நரம்புகளை ஒடிக்க அல்லாஹ்வுக்கு வெகு நேரம் பிடிக்காது. அவன் ஒன்றை நினைத்தால் ஆகி விடு என்றால் ஆகி விடும் அவ்வளவுதான். எனவே முஸ்லிம்கள் இதை பற்றி அலட்டிக் கொள்ளாமல் அல்லாஹ்வின் மீது தங்கள் நம்பிக்கையை அதிகப்படுத்திக் கொண்டு அல்லாஹ்வும் அவனது நபியும் சொன்னபடி வாழ்ந்தால் இறுதி வெற்றி முஸ்லிம்களுக்கே. LAA THOWFEEQA ILLAA BILLAAH .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved