Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:24:09 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19783
#KOTW19783
Increase Font Size Decrease Font Size
வியாழன், அக்டோபர் 12, 2017
கத்தர் கா.ந.மன்றம் சார்பில் காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி! போட்டி வரலாற்றில் முதன்முறையாக எல்.கே. மெட்ரிக் பள்ளி கோப்பையைத் தட்டிச் சென்றது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2560 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கத்தர் காயல் நல மன்றம் சார்பில், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் & இக்ராஃ கல்விச் சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட - நகர பள்ளிகளுக்கிடையிலான 8ஆம் ஆண்டு வினாடி-வினா போட்டியில், இப்போட்டி வரலாற்றிலேயே முதன்முறையாக காயல்பட்டினம் எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி அணி முதலிடத்தை வென்று, கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது.

இதுகுறித்து, கத்தர் காயல் நல மன்றத்தின் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-

எட்டாமாண்டு வினாடி-வினா போட்டி:



கத்தர் காயல் நல மன்றம் சார்பில் - காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுடன் இணைந்து, ஆண்டுதோறும் - காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

எட்டாமாண்டு போட்டி, 07.10.2017. சனிக்கிழமையன்று 16.30 மணியளவில், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) மைதானத்தில் நடைபெற்றது.







பங்கேற்ற மொத்த அணிகள்:

எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 57 அணிகளும்
அரசு மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 56 அணிகளும்,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 35 அணிகளும்,
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியிலிருந்து 33 அணிகளும்,
எல்.கே.மேனிலைப்பள்ளியிலிருந்து 33 அணிகளும்,
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 31 அணிகளும்,
சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 19 அணிகளும்,

என - காயல்பட்டினத்தின் 7 மேனிலைப் பள்ளிகளிலிருந்து, அணிக்கு 2 பேர் வீதம் 264 அணிகளில் 528 மாணவ-மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றனர்.

போட்டி நடத்துநர்கள்:

கோயமுத்தூர் Quiz Clubஇன் இயக்குநர்களும், தனியார் தொலைக்காட்சிகளில், பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டியை தயாரித்து நடத்தி வருவோருமான – கோவை செந்தில் குமார், கோவை நடராஜன் கிருஷ்ணசாமி ஆகியோர் இணைந்து இப்போட்டியை நடத்தினர்.

நுழைவுப் போட்டி:

முதற்கட்ட போட்டி எழுத்து முறையில் நடத்தப்பட்டது. போட்டி நடத்துநர் கோவை செந்தில் குமார் கேள்வித் தொகுப்பை இயக்க, நடராஜன் கிருஷ்ணசாமி அதை ஆங்கிலத்தில் வாசித்து, தமிழாக்கமும் செய்து விளக்க, மாணவ-மாணவியர் அவற்றுக்கான விடைகளை - கொடுக்கப்பட்ட விடைத்தாள்களில் எழுதினர்.





















இறுதிப்போட்டியில் இடம்பெற்ற அணிகள்:

பொது அறிவு சார்ந்து கேட்கப்பட்ட 26 வினாக்களில், அதிக வினாக்களுக்கு சரியான விடையளிக்கும் முதல் ஒரு பள்ளியிலிருந்து மட்டும் இறுதிப்போட்டியில் இரண்டு அணிகளுக்கும், இதர அனைத்துப் பள்ளிகளிலிருந்தும் தலா ஓர் அணிக்கும் என, 2 + 6 என்ற அடிப்படையில் 8 அணிகளுக்கு இடமளிக்கப்படும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், நுழைவுத் தேர்வு முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியின் விடைத்தாள்களை, கத்தர் காயல் நல மன்றத்துடன் இப்போட்டியை இணைந்து நடத்திய இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மதிப்பீடு செய்து, இறுதிப் போட்டிக்குரிய 8 அணிகளை முறைப்படி தேர்வு செய்தனர்.













அதிகளவில் சரியான விடையளித்த எல்.கே. மேனிலைப் பள்ளியிலிருந்து 2 அணிகள்,
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,
அரசு மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,
சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,
எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,
என மொத்தம் 8 அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

நுழைவுத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளை நடத்துநர் மீண்டும் வாசித்து, பங்கேற்ற மாணவ-மாணவியரிடம் விடைகளைக் கேட்க, அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் விடையளித்தனர். சில அரிதான கேள்விகளுக்கு ஓரிரு மாணவர்கள் விடையளித்தனர். அவர்களை நடத்துநர் அழைத்து, அந்த விடைக்கான விளக்கத்தைக் கேட்டபோதும், அவர்கள் அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கமளித்தனர். அவ்வாறான மாணவ-மாணவியருக்கு, நடத்துநர் இனிப்புப் பண்டங்களைப் பரிசாக வழங்கினார்.

மதிப்பீட்டாளர்கள்:

மஃரிப் தொழுகை இடைவேளைக்குப் பின் இறுதிப்போட்டி மேடையில் நடைபெற்றது. இப்போட்டியை செந்தில் குமார் மேடையில் நடத்த, கணினி மூலம் நடராஜன் கிருஷ்ணசாமி கேள்விகளை இயக்கி வழங்கினார்.

தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், இக்ராஃ கல்விச் சங்க பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான் ஆகியோர் இறுதிப்போட்டிக்கான மதிப்பீட்டாளர்களாகக் (Scorers) கடமையாற்றினர்.

இறுதிப் போட்டி துவங்குமுன், அதில் இடம்பெற்ற அணியினர் நுழைவுப் போட்டியில் பெற்ற மதிப்பெண்களை – கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் கத்தீப் மாமுனா லெப்பை மேடையில் அறிவித்தார்.





கேள்விச் சுற்று, விரைவுக் கேள்விச் சுற்று, விரிதிரை மூலம் ஒலி - ஒளிச் சுற்று என பல விதங்களில் கேள்விகள் கேட்கப்பட, இறுதிப்போட்டியில் பங்கேற்ற மாணவ-மாணவியர் ஆர்வமுடன் விடையளித்தனர்.









பார்வையாளர்களுக்கும் பரிசுகள்:

போட்டியில், 8 அணியினரும் விடையளிக்கத் தவறிய கேள்விகள் பார்வையாளர்களிடம் கேட்கப்பட்டு, சரியான விடையளித்தோருக்கு அழகிய பரிசுகள் வழங்கப்பட்டன. கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர்கள் சிலரும், போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் சிலரும் பரிசுப் பொருட்களை வழங்கினர்.

எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளிக்கு கோப்பை:

நிறைவில்,
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின்
என்.செய்யிதா சுமய்யா,
எஸ்.ஏ.எம்.சித்தி ஃபாத்திமா
ஆகியோரடங்கிய அணி முதலிடம் பெற்றது.

இவ்வணிக்கு ரூபாய் 4 ஆயிரம் பணப்பரிசு, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களையும், அணி சார்ந்த எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளிக்கு கோப்பையையும், பரிசளிப்பு விழாவிவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட – காயல்பட்டினத்தின் முதல் சட்டமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் வழங்கினார்.



8 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இப்போட்டியில், கடந்த 7 ஆண்டுகளாக எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்ந்து முதலிடத்தைப் பெற்று வந்த நிலையில், போட்டி வரலாற்றிலேயே முதன்முறையாக எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி முதலிடத்தைப் பெற்று கோப்பையை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாமிடம்:

எல்.கே. மேனிலைப் பள்ளியின்
எம்.என்.அஸ்லம், எஸ்.ஐ.ஆர்.அஹ்மத் பஷீர்
ஆகியோரடங்கிய அணி இரண்டாமிடத்தைப் பெற்றது. இவ்வணிக்கு, ரூபாய் 3 ஆயிரம் பணப்பரிசு, பதக்கங்கள், சான்றிதழ்களை - கத்தர் காயல் நல மன்றத் தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் வழங்கினார்.



மூன்றாமிடம்:

சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின்
ஏ.எஸ்.மர்யம் மாஜியா,
ஏ.எஸ்.சித்தி ஃகாலிதா
ஆகியோரடங்கிய அணி மூன்றாமிடத்தைப் பெற்றது.

இவ்வணிக்கு, ரூபாய் 2 ஆயிரம் பணப்பரிசு, பதக்கங்கள், சான்றிதழ்களை – தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் வழங்கினார்.



இதர 5 அணிகள்:

இறுதிப்போட்டியில் பங்கேற்றதன் மூலம் ரூபாய் 500 பணப்பரிசு மற்றும் சான்றிதழ் பெற்ற இதர 5 அணிகள்:-

சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின்
கே.ஏ.எம்.என்.முஹம்மத் நூஹ்,
ஏ.கே.ஹமீத் ஷாஹ் ஹரீஸ்

முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின்
கே.எஸ்.ஏ.ஆர்.முஹம்மத் அலீ,
எஸ்.எம்.எஸ்.சுலைமான் முஷ்தாக்

அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின்
எஸ்.எம்.பி.ஆயிஷா ஜின்னீரா,
எம்.ஓ.ருக்கய்யா இஸ்ரத் நளீஃபா

சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின்
எம்.எம்.ஃபாத்திமா ஹுமைரா,
வாவு யு.எஃப்.ஆயிஷா



இவர்களுக்கான பரிசுகளை – சஊதி அரபிய்யா தம்மாம் காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஜியாவுத்தீன், இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத், கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் கத்தீப் மாமுனா லெப்பை, சஊதி அரபிய்யா – ஜித்தா காயல் நல மன்றத்தின் முன்னாள் தலைவர் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத், ஜெய்ப்பூர் காயல் நல மன்ற (ஜக்வா) செயலாளர் ஹாஃபிழ் எம்.ஏ.செய்யித் முஹம்மத் ஆகியோர் வழங்கினர்.

நினைவுப் பரிசுகள்:

சிறப்பு விருந்தினரான சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், போட்டியின் துவக்க ஆண்டு முதல் கடந்த 8 ஆண்டுகளாக இதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்டு – சிறப்பான ஒத்துழைப்பை வழங்கி வரும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் ஆகியோருக்கு - போட்டியை நடத்திய கத்தர் காயல் நல மன்றத் தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் நினைவுப் பரிசுகளை வழங்கி, வரவேற்புரையாற்றினார்.









வினாடி-வினா போட்டியை வழிநடத்திய கோவை செந்தில் குமாருக்கு, இக்ராஃ கல்விச் சங்க பொருளாளர் என்.எஸ்.இ.மஹ்மூதும், கோவை நடராஜன் கிருஷ்ணசாமிக்கு, சிறப்பு விருந்தினரான சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கரும் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.





கோரிக்கை:

10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளை எழுத, மாணவர்களுக்கும் – மாணவியருக்கும் காயல்பட்டினத்தில் தனித்தனி தேர்வறைகள் இருந்த நிலை மாற்றப்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக ஒரே தேர்வறையில் இரு பாலரும் இணைந்து தேர்வெழுதும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் மகளிருக்குத் தனித் தேர்வறையைப் பெற்றிட முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மாணவியரும், அவர்களது பெற்றோரும் இக்ராஃ கல்விச் சங்கத்திடம் முறையிட்டதையடுத்து, இக்ராஃ செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட படி, மாணவியருக்குத் தனித் தேர்வறை கோரி தமிழக அரசின் கல்வி சார்ந்த அனைத்துத் துறைகளுக்கும் முறைப்படி கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வரிசையில், இதுகுறித்து – தொடர்புடையோரிடம் முறையிட்டு கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில் அதன் செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது – சட்டமன்ற உறுப்பினரும் சிறப்பு விருந்தினருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கரிடம் கோரிக்கை மனுவை அளித்தார். தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, மீண்டும் மாணவியருக்குத் தனித் தேர்வறைகள் கிடைக்க ஆவன செய்வதாக இதன்போது சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.





இக்ராஃ கல்விச் சங்க பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான் நன்றியுரைக்குப் பின், துஆ - நாட்டுப்பண்ணுடன் பரிசளிப்பு விழா நிறைவுற்றது. இக்ராஃ கல்விச் சங்க செயற்குழு உறுப்பினரும் - கத்தர் காயல் நல மன்றத்தின் பிரதிநிதியுமான எஸ்.கே.ஸாலிஹ் போட்டி அறிமுகம் & பரிசளிப்பு விழா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.



ஏற்பாடு:

போட்டி & பரிசளிப்பு விழாவில் பார்வையாளர்களாக பலர் கலந்துகொண்டனர், ஏற்பாடுகளை, கத்தர் காயல் நல மன்றத் தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் தலைமையில் - இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில், இக்ராஃ கல்விச் சங்க பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான், அதன் நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத், கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் கத்தீபு மாமுனா லெப்பை, அதன் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் உள்ளிட்டோரடங்கிய குழுவினர் இணைந்து செய்திருந்தனர். ரிஹாம்ஸ் போட்டிக், ரஹீம்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், இதயா தேயிலை, மக்கீ ஆலிம் அறக்கட்டளை ஆகிய நிறுவனங்கள் இணை அனுசரணை அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கவை.





இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்களுள் உதவி:
K.M.T.சுலைமான்
(பொருளாளர் - இக்ராஃ கல்விச் சங்கம்)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...உங்களில் ஒருவன் நான் இரு கண்களை பேதம் ஏன் நானும் மாணவன்தான்,,,
posted by mackienoohuthambi (colombo) [12 October 2017]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45828

அருமையான பதிவு விளக்கங்கள். சென்ற ஆண்டு நான் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது எனக்கு ஒரு உற்சாகத்தை தந்தது. மாணவர்கள் ஆசிரியர்கள் உறவுகளை சொல்லும்போது ஒரு திரைப் பட பாடல் நினைவுக்கு வந்தது .அது நூற்றுக்கு நூறு என்ற திரைப் படம் ஆசிரியரும் மாணவர்களும் சுற்றுலா பயணம் செல்வார்கள் அப்போது ஆசிரியர் உற்சாக மிகுதியால் மாணவர்களுக்கிடையே ஒரு பாட்டுப் பாடுவார்...

''உங்களில் ஒருவன் நான் இரு கண்களில் பேதம் ஏன் நானும் மாணவன்தான்'..

நானும் என்னை ஒரு மாணவனாகவே நினைத்துக் கொண்டு இந்த நிகழ்ச்சிகளில் விடை அளிக்க முயன்றதும் அதற்கிடையில் சிலர் முந்திக் கொண்டு நான் சொல்ல இருந்த விடையையே சொல்லி பரிசுகளை தட்டிச் சென்றார்கள் சுவையான நிகழ்ச்சி.

இந்த விழாவில் மக்கி ஆலிம் அறக் கட்டளையினர் அனுசரணை செய்ததாக ஒரு தகவல் வந்துள்ளது.. அப்படி ஒரு அறக் கட்டளை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய கனவு ஆனால் மக்கி ஆலிம் குடும்பத்தினர் எல்லோரும் அதற்கு இசைவு தரவில்லை. எனவே அடியேன் தனியாகவே என்னால் முடிந்த சிறிய பரிசுகளை கொடுத்து எனக்கு ஒரு முகவரி தேடித் கொள்கிறேன் என்பதுதான்உண்மை.என்றாலும் கனவு மெய்ப்பட வேண்டும் என்று பாரதி பாடியதுபோல் எனது மக்களுடன் சேர்ந்து மக்கி ஆலிம் அறக்கட்டளை அமைக்க வேண்டும் என்ற அவா இருக்கவே செய்கிறது. இந்த நிகழ்ச்சி தொகுப்பை படிக்கும் எனது மக்கள் அதற்கு பச்சை கொடி காட்டுவார்கள் என்று நினைக்கிறேன்.

நிகழ்ச்சிகள் நேரலை செய்யப் பட்ட தகவல் இல்லையே....அடுத்து வரும் ஆண்டுகளில் அதை செய்ய இந்த விழாக் குழுவினர் முயற்சி செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். வெற்றி பெற்றவர்கள் வெற்றிக்கு முயற்சித்தவர்கள் எல்லோருக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved