Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:41:00 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19462
#KOTW19462
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுலை 24, 2017
சிறுபான்மையினருக்கான அரசு கடனுதவிகள் குறித்து வழிபாட்டுத் தலங்களில் விளம்பரப்படுத்த, தமிழக சிறுபான்மை நலத்துறை செயலாளர் வேண்டுகோள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1897 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மத்திய – மாநில அரசுகள் சிறுபான்மையினருக்கு வழங்கும் கடனுதவிகள் குறித்து - மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் விளம்பரப்படுத்துமாறு, தமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-

தூத்துக்குடி மாவட்டத்தில் மாநில, மத்திய அரசுகள் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும்; சிறுபான்மை மக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் சிறுபான்மையினர் நலத்துறை (ம) இயக்குநர், டாம்கோ மேலாண்மை இயக்குநர் முனைவர்.மா.வள்ளலார்,இ.ஆ.ப., தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.என்.வெங்கடேஷ்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக சங்கு கூட்டத்தில் 21.07.2017. அன்று நடைபெற்றது.

கூட்டத்தில் முனைவர் மா.வள்ளலார்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:







மத்திய, மாநில அரசுகள் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களின் வாழ்வதாரத்தை உயர்த்;துகின்ற வகையில் கல்வி உதவித்தொகைகள், தொழில் துவங்குவதற்கான கடன் உதவிகள், தொழில் பயிற்சிகள் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

நமது மாவட்டத்தில் சிறுபான்மையின மக்கள் அதிகம் வசிக்கின்றனர். சிறுபான்மையின மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் பலன்களை, சிறுபான்மையினர்கள் பெற்று பயன்பெறுவதற்கு கிறிஸ்துவ தேவாலயங்களிலும், மசூதிகளிலும், அதிக அளவில் விளம்பர பதாகைகள் வைத்து விளம்பரப்படுத்தவேண்டும்.

சிறுபான்மையின சுய உதவி குழுக்களுக்கு குழு கடன்களாக ரூ.30 இலட்சம் வரை கடன் உதவிகள், 6 சதவீத குறைந்த வட்டியுடன் வழங்கப்பட்டு வருகிறது. தொழில் கடனாக 3 சதவீத குறைந்த வட்டியுடன் 5 வருடங்கள் வரை திரும்ப செலுத்துவதற்கு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. சிறுபான்மையின மக்கள் தொழில் துவங்குவதற்கு படித்த இளைஞர்கள், தொழில் முனைவோர்கள் உள்ளிட்டோருக்கு தேவையான தொழில் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு தேவையான தொழில் துவங்குவதற்கு கடன் உதவிகளும், குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது.

கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்காக போஸ்ட் மெட்ரிக் மற்றும் பிரிமெட்ரிக் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ஒருமுறை விண்ணப்பித்து பிரிமெட்ரிக் உதவித்தொகையை 10-ம் வகுப்பு வரை தொடர்ந்து வழங்கப்படும்.

10-ம் வகுப்பு முடிந்து 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற புதிதாக விண்ணப்பிக்க ஆதார் அட்டை, புகைப்படம், சாதி சான்றிதழ் கொண்டு விண்ணப்பிக்கவேண்டும்.

இக்கல்வி உதவித்தொகை 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு வாழ்க்கை தொழில்கள், ஐடிஐ, ஐடிசி, பாலிடெக்னிக், ஆசிரியர் பட்டயபயிற்சி, செவிலியர் பயிற்சி, இளங்கலை படிப்பு, முதுகலை படிப்பு, ஆராய்ச்சி படிப்பு, (தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தில் இடம்பெறாத பாடப்பிரிவுகள்) பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

11-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மொத்தம் ரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது. கல்வி பெறுவதற்காக நிபந்தனைகள் மாநிலத்தில் சிறுபான்மை மக்கள் தொகையின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு மதவாரியாக ஒதுக்கீடு மைய அரசால் நிர்ணயிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பிறப்பிடமாக கொண்டு இந்திய நாட்டில் பிற மாநிலத்தில் எந்த பள்ளியிலும் படித்தாலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். ஒரு குடும்பத்தை சோ;ந்த இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகையினை புதியதாகவும், புதுப்பித்து பெறவும்; www.scholerships.gov.in என்ற இணையதள முகவரிக்கு மட்டுமே விண்ணப்பக்கவேண்டும்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.என்.வெங்கடேஷ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:

மத்திய, மாநில அரசுகள் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களின் கல்வி வாய்ப்பினை அதிகரிக்கவும், பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளில் சம பங்கினை உறுதிசெய்யவும், சிறுபான்மையினர் வாழ்வினை மேம்படுத்தவும், டாம்கோ மூலம் கடன் வழங்குதல் 2017-18-ம் ஆண்டிற்கு சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை வழங்குதல், தூத்துக்குடி மாவட்டத்தில் 25 சதவீதம் சிறுபான்மையினர் வசிக்கும் கிராம பகுதிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் பல்நோக்கு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்துதல், மௌளானா ஆசாத் கல்வி அமைப்பின் மூலம் கல்வி கடன்கள், தொடர்பான திட்டங்கள் மற்றும் பாரத பிரதமர் அவர்களின் 15 புதிய அம்சங்கள் கொண்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மாவட்டங்களில் செயல்படுத்துவதை கண்காணிக்க மாநில அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் 10-ம் வகுப்பு படித்துவரும் பெண்களுக்கு உதவித்தொகை, 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, விபத்து உதவித்தொகை, தனிநபர் கடன் உதவிகள், சுய உதவி குழுக்களுக்கான சிறுகடன் உதவிகள், கல்வி கடன் உதவிகள், கறவை மாடு கடன் உதவி, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் வாங்க கடன் உதவிகள், சுயவேலைவாய்ப்பு மற்றும் எளியவர்களுக்கான கூலியுடன் கூடிய வேலைத்திட்டம், தொழில் நுட்ப பயிற்சியின் மூலம் திறனை மேம்படுத்துதல், சிறுபான்மையின மக்கள் வாழும் குடிசைப்பகுதிகளின் நிலையை மேம்படுத்துதல், மின்விளக்கு, தார்ச்சாலை, போக்குவரத்து உள்ள அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாணவ-மாணவிகள் கல்விக்கடனுக்கென பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது தொடர்பாக சிறப்பு முகாம்களும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. முத்ரா திட்டத்தின் கீழ் மாணவ-மாணவிகளுக்கு வணிக வங்கிகள் மூலம் ரூ.10 இலட்சத்திற்கு மேல் 3 சதவீத குறைந்த வட்டியுடன், வங்கி கடன் வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.என்.வெங்கடேஷ்,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.எஸ்.சரவணன்,இ.ஆ.ப., திட்ட இயக்குநர் (மாவட்டஊரக வளா;ச்சி முகமை) திரு.வே.பிச்சை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மை அலுவலர் திரு.சேகா;, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா; திரு.மூ.காளிமுத்து, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் அமைப்பு நிர்வாகிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved