கத்தர் நாட்டில் 25.06.2017. ஞாயிற்றுக்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.
அந்நாட்டின் தோஹா நகரிலுள்ள அபூபக்கர் மஸ்ஜித் பள்ளியில், அன்று அதிகாலை 05.00 மணியளவில் – ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து காயலர்களும் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி, குத்பா உரையிலும் கலந்துகொண்டனர்.
![](/newsimg/286201763050.jpg)
பின்னர் பள்ளி வளாகத்தில் காயலர்கள் பலரும் ஒன்றுகூடி, கட்டித்தழுவி, கைலாகு (முஸாஃபஹா) செய்து தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
![](/newsimg/286201763086.jpg)
![](/newsimg/286201763097.jpg)
![](/newsimg/286201763107.jpg)
பின்பு, Corniche, Parks, Souq, Waqif, Dukhan Beach Park உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்பச் சிற்றுலா சென்று, பொழுது போக்கினர்.
![](/newsimg/286201763118.jpg)
![](/newsimg/286201763132.jpg)
![](/newsimg/286201763142.jpg)
![](/newsimg/286201763151.jpg)
கத்தர் தோஹாவிலிருந்து...
தகவல் & படங்கள்:
A.H.முஹம்மத் ஸிராஜுத்தீன்
|