நோன்புப் பெருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் ஏழை மக்களுக்கான ஃபித்ரா உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி 23.06.2017. வெள்ளிக்கிழமையன்று, 19.30 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.லெப்பைத்தம்பி சாலையில் அமைந்துள்ள தமுமுக நகர கிளை அலுவலகத்தில் வினியோகிக்கப்பட்டது.
வர்த்தகர் அணி மாநில முன்னாள் பொருளாளர் எஸ்.எம்.ரஃபீ அஹ்மத் (எல்.கே.எஸ்.) தலைமை தாங்கி, வினியோகத்தைத் துவக்கி வைத்தார். எல்.கே.கே.லெப்பைத் தம்பி உள்ளிட்ட பிரமுகர்கள் - அரிசி, எண்ணெய், மைதா, தேங்காய் உள்ளிட்ட சமையல் பொருட்கள் அடங்கிய பொதிகளை, 380 ஏழைக் குடும்பத்தினருக்கு வழங்கினர்.
![](/newsimg/246201756867.jpg)
![](/newsimg/246201756988.jpg)
![](/newsimg/246201757011.jpg)
![](/newsimg/246201757023.jpg)
நகரப் பிரமுகர்களான எஸ்.இப்னு ஸஊத், தமுமுக, மமக, இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை (IPP) மாவட்ட - நகர நிர்வாகிகளான கே.முஹ்ஸின் முர்ஷித், ஜாஹிர் ஹுஸைன், ஐதுரூஸ் உள்ளிட்டோரும், வார்டு நிர்வாகிகளும் கலந்துகொண்டு, ஏழைகளுக்கு உணவுப் பொதிகளை வழங்கினர்.
தகவல் & படங்கள்:
ஐதுரூஸ்
|