Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:49:59 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19239
#KOTW19239
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மே 30, 2017
கடற்கரை சட்டவிரோத குருசடிக்கு அணுகுசாலை, ஆக்கிரமிப்பு, மக்கள் அமரும் பகுதியில் படகுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர், மாசு கட்டுப்பாட்டு வாரியம், மீன் வளத்துறைக்கு “நடப்பது என்ன?” கோரிக்கை! சட்டத்திற்குப் புறம்பாக பணிகள் தொடராது என அதிகாரிகள் வாக்குறுதி!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1848 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கடற்கரையில் சட்டவிரோத குருசடிக்கான அணுகு சாலை, ஆக்கிரமிப்பு நிலங்களில் குடிசைகள், பொதுமக்கள் அமரும் பகுதியில் புதிய படகுகள் உட்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் நேரில் மனு அளித்துள்ளது. சட்டத்திற்குப் புறம்பாக பணிகள் தொடராது என அதிகாரிகள் வாக்குறுதியளித்துள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-

காயல்பட்டினம் கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருசடிக்கான அணுகு சாலை, ஆக்கிரமிப்பு நிலங்களில் குடிசைகள், பொதுமக்கள் அமரும் பகுதியில் புதிய படகுகள் உட்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக நேற்று (29.05.2017. திங்கட்கிழமை) பல்வேறு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டது.





குருசடிக்கான அணுகு சாலை

காயல்பட்டினம் கடற்கரைப் பூங்காவிற்கு வடக்கே, சட்டத்திற்குப் புறம்பாக அணுகு சாலை அமைக்கும் பணி - கடந்த சில நாட்களாக நடந்து வந்தன. இது தொடர்பாக “நடப்பது என்ன?” குழுமம் சார்பாக கடந்த வாரம் - அனைத்துத் துறைகளுக்கும் மனு வழங்கப்பட்டது. மேலும் - மீன்வளத்துறை அதிகாரிகளை “நடப்பது என்ன?” குழுமம் தொடர்புகொண்டு பேசியதையடுத்து - இப்பணிகளை நிறுத்தி வைப்பதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறிருக்க, நேற்று (29.05.2017. திங்கட்கிழமை) காலை - தூத்துக்குடியில் உள்ள மாவட்ட ஆட்சியர், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், மீன்வளத்துறையின் இணை இயக்குநர், செயற்பொறியாளர் ஆகியோரிடம் – “நடப்பது என்ன?” குழுமம் விரிவான மனுவினை சமர்ப்பித்தது.

INTER TIDAL ZONE பகுதியில் CONCRETE சாலைகள் அமைப்பது தடை செய்யப்பட்ட பணி என்றும், சர்ச்சைக்குரிய குருசடிக்கு அணுகு சாலை அமைக்க எந்த முகாந்தரமும் இல்லை என்றும், மீன்பிடி இறங்கு தளத்திற்கு முறையான அனுமதியை TNSCZMA விடம் இருந்து பெறாமல் பணிகளை மேற்கொண்டதே தவறு என்பதும் அம்மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

“நடப்பது என்ன?” குழுமம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட இந்த மனு - அதிகாரிகளால், மீன்வளத்துறையின் பார்வைக்கு அனுப்பப்பட்டது.

தொடர்ந்து, இது தொடர்பாக - மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை - மீளவிட்டானில் உள்ள அவரது அலுவலகத்தில், “நடப்பது என்ன?” குழுமம் நேரில் சந்தித்து, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருசடி, அதற்கான அணுகு சாலை ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்தது. மேலும் - கள ஆய்வு செய்ய சுற்றுச்சூழல் பொறியாளரை - தமிழக அரசின் சுற்றுச்சூழல் இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளதும் அவருக்கு நினைவூட்டப்பட்டது.

மீன்வளத் துறைக்கு தான் உடனடியாக விளக்கம் கோரி அறிக்கை அனுப்புவதாகவும், ஒரு சில நாட்களில் நேரடியாக கள ஆய்வு செய்ய காயல்பட்டினம் வருவதாகவும் உறுதியளித்த அவர், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் - தன்னை நேரில் வந்து விளக்கமளிக்கக் கோரியிருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, “நடப்பது என்ன?” குழுமம் - மீன்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து, காயல்பட்டினம் கடற்கரையில் நடந்து வரும் பணிகள் ஏன் சட்டத்திற்கு விரோதமானவை என்பது குறித்து விளக்கியது. சட்டத்திற்குப் புறம்பாக எந்தப் பணிகளும் இனி தொடராது என மீன்வளத்துறை தரப்பிலிருந்து அப்போது உறுதியளிக்கப்பட்டது.

ஆக்கிரமிப்பு நிலங்களில் குடிசைகள்

காயல்பட்டினம் கடற்கரைக்கு வடக்கே - அண்ணாநகர், சிங்கித்துறை மற்றும் கொம்புத்துறை பகுதியில் - புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து, பல்வேறு குடிசைகள் சட்டத்திற்குப் புறம்பாக அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை அப்புறப்படுத்த மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக, அண்ணாநகர் எனக் கூறப்படும் பகுதியில் உள்ள மக்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, சுனாமி காலனியில் இடம் கொடுக்கப்பட்டு, அங்கு இடம் மாறாமல் பலர் - பழைய இடத்தையே ஆக்கிரமித்து வசித்து வருகின்றனர். CRZ விதிமுறைகள் படி - கடலின் உச்ச அலையில் இருந்து 200 மீட்டர் வரை குடித்தனங்களுக்கு அனுமதி இல்லை.

எனவே - சட்டத்திற்குப் புறம்பாக அமைக்கபப்ட்டுள்ள இந்த குடித்தனங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு வழங்கப்பட்டது.

“நடப்பது என்ன?” குழுமம் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட இந்த மனு - திருச்செந்தூர் கோட்டாட்சியருக்கு, மாவட்ட ஆட்சியக அலுவலர்களால் அனுப்பப்பட்டது.

பெண்கள் அமரும் பகுதிக்கு வடக்கே புதிய படகுகள்

காயல்பட்டினம் கடற்கரையின் பெண்கள் அமரும் பகுதியின் வடக்கே - கடந்த சில நாட்களாக ஏராளமான புதிய படகுகள் நிறுத்தி வைக்கபப்ட்டுள்ளன. வெளியூரிலிருந்து வந்துள்ளதாக அறியப்படும் இப்படகுகளின் சொந்தக்காரர்கள், அப்பகுதியில் குடிசைகள் அமைத்தும் வருகிறார்கள்.

நாளடைவில் இது புதிய குடியிருப்பாக உருவாகிவிட வாய்ப்புள்ளததால், அது தொடர்பான புகாரும் – “நடப்பது என்ன?” குழுமம் சார்பாக, மாவட்ட ஆட்சியரிடமும், மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட மனு - திருச்செந்தூர் கோட்டாட்சியரின் நடவடிக்கைக்கான அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இவண்,
நிர்வாகிகள்,
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம்.

[பதிவு: மே 29, 2017; 8:00 pm]


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [30 May 2017]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45586

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ் .....தங்களின் மிக துரிதமான இந்த நடவடிக்கையை ....வெகுவாகவே மனம் திறந்து பாராட்டுகிறேன் ....சூப்பர் ....சூப்பர் ....

தயவு செய்து ...“நடப்பது என்ன ....நிர்வாகத்தினர் இந்த விஷயத்தில் கவனத்தை சிதற விடாமல் ...நம் ஊர் மக்கள் நலனுக்காக விடாது முழுமையான முயற்சியில் ஒற்றுமையுடன் ஈடு பட்டு வருபடி என்னுடைய பர்ஸுனல் கோரிக்கை .....

இன்ஷா அல்லாஹ் “நடப்பது என்ன '' அமைப்பினர்களின் இந்த நல்ல முயற்சியை வல்ல இறைவன் வெற்றியாக்கி அருள்வானாகவும் ஆமீன் ....

தேவை பட்டால் .... நமது ஊர் மக்களை ஓன்று திரட்டி நாம் போராட்டத்தில் இறங்க வேண்டியது ....

அப்போது தான் நம் அரசாங்கத்தின் கவனம் நமது மக்கள் பக்கம் திரும்பும் ....

கால போக்கில் நமது ஊர் கடற்கரை நம் கையை விட்டு போய் விடும்போல தோணுகிறது ......போகாமல் இருப்பது தங்களை போன்ற நமது ஊரின் பொது நல அமைப்பிடம் தான் உள்ளது ...

அல்லாஹ் போது மாணவன் ...

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
ரியாத்
சவூதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved