Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:08:42 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18901
#KOTW18901
Increase Font Size Decrease Font Size
வியாழன், மார்ச் 9, 2017
“பால்கனியில் நின்று கொண்டு தமிழக முதல்வராகிவிட சிலர் பகல் கனவு காண்கிறார்கள்!” திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில், திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2608 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

“பால்கனியில் நின்று கொண்டு தமிழக முதல்வராகிவிட சிலர் பகல் கனவு காண்கிறார்கள்!” என - காயல்பட்டினத்தில் நடைபெற்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில், திண்டுக்கல் ஐ.லியோனி பேசினார். விரிவான விபரம்:-

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் 64ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், முத்து தலைமையில் நடைபெற்றது.



திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், காயல்பட்டினம் நகர அவைத் தலைவர் கிதர் முகம்மது, மம்மி, முன்னாள் வார்டு கவுன்சிலர் சுகு, ஆறுமுகநேரி பேரூராட்சி முன்னாள் தலைவர் கல்யாணசுந்தரம், மாவட்ட பிரதிநிதிகள் காதர் சாகிப், கசாலி மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல்காதர் வரவேற்றுப் பேசினார்.

மாநில பேச்சாளர் உடன்குடி தனபால், உடந்தை மகாராஜன், பாலகிருஷ்ணன், முஸ்லிம் லீக் மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் ஆகியோர் பேசினர்.

திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில்,

கடந்த தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் எண்ணத்தில் மத்திய அரசு நிதியில் உருவான திட்டம்தான் காயல்பட்டினம் 2ஆவது பைப் லைன் திட்டம். தற்போது பாபநாசம் அணையில் 54 அடி அளவிற்கும், மணிமுத்தாறு அணையில் 48 அடிக்கும் தண்ணீர் இருந்தும் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, திருச்செந்தூர் பகுதிகளுக்கு உரிய குடிநீர் வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து எனது தலைமையில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்த பிறகு இப்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இனி இப்பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது! என்று கூறினார்.

கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-





தற்போதைய அ.தி.மு.க. ஆட்சி 2016இல் தொடங்கியது முதலே செயல்படாத அரசாகவே உள்ளது. ஜெயலலிதா இறப்பின் உண்மைகளை தமிழக அரசு மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று முதன்முதலில் சொன்னவர் ஸ்டாலின்தான். ஆனால் இந்த விஷயத்தில் திடீர் ஞானோதயம் பெற்றவராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளார். இப்போது டாக்டர்களை கொண்டுவந்து நாடகத்தை நடத்துகின்றனர். ஆனால் முன்னுக்குபின் முரண்பட்ட தகவல்களே கிளம்புகின்றன.





ஓர் அரசியல் தலைவர் இறந்து இத்தனை விமர்சனங்களுக்கு ஆளானது உலகத்திலேயே ஜெயலலிதாவாகத்தான் இருக்க முடியும். ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் பிரபல நடிகர்களைப் போல கம்பீரமாக வேடமிடுபவர்கள் பின் அதே வேடத்துடன் சம்பளம் கேட்டு கெஞ்சிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கும் ஜெயலலிதாவைப் போன்று வேடமிடும் சசிகலாவுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? பால்கனியில் நின்று கொண்டு தமிழக முதல்வர் ஆகிவிடலாம் என்று சிலர் பகல் கனவு கண்டு வருகின்றனர்.





அரசியல் தலைவர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். இயக்கத்தை கட்டிக்காக்கும் திறமை, போர்க்குணம், சிறந்த பேச்சாற்றல் கொண்டவராக அவர் மிளிர்கிறார். தமிழகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாகவும் உள்ளார். இன்னும் 6 மாத காலத்தில் தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பை ஏற்பார்.


இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியின்போது, காயல்பட்டினத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி எஸ்.என்.முஹம்மத் அலீ உள்ளிட்ட சிலர், அதிமுகவிலிருந்து விலகி, திமுகவில் இணைந்தனர்.





மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பூபதி,தூத்துக்குடி மாநகர பகுதி செயலாளர் கருணாகரன், நகர செயலாளர்கள் திருச்செந்தூர் மந்திரமூர்த்தி, ஆறுமுகநேரி ராஜசேகர், ஒன்றிய துணை செயலாளர் அமிர்தலிங்கம் உட்பட, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். எஸ்.ஏ.கே.ஜலீல் நன்றி கூறினார்.





















செய்தியாக்கம்:
ச.பார்த்திபன்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. முஸ்லிம்களுக்கு இவர்கள் என்ன செய்தார்கள் செய்வார்கள் .......
posted by mackie noohuthambi (colombo) [09 March 2017]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45338

முதல்வராக எம்ஜியார் ஜெயலலையிதா வாழ்ந்த வரை எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் இப்படி பிரிந்து நிற்பவர்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

சசிகலாவை பொது செயலாளராக பன்னீர்செல்வம் அவர்களே முன்மொழிந்தார். முதல்வராக பன்னீர்செல்வமும் பொது செயலாளராக சசிகலாவும் இருந்திருந்தால் இன்னும் நாலரை ஆண்டுகள் இவர்கள் ஆட்சி தொடர்ந்திருக்கும். மக்களும் திருப்தியோடு இருந்திருப்பார்கள். இரட்டை இலையும் அதன் தன்மையை இழந்திருக்காது.

ஆசை யாரை விட்டது. சசிகலா முதல்வராக ஆசைப் பட்டார்,தினகரனை இழுத்து கட்சியின் பிடியை தனதாக்கிக் கொள்ள நினைத்தார். சமயம் பார்த்து பன்னேர்செல்வம் போர்க் கோடி தூக்கினார்.

திமுகவும் இந்த நாடகத்தை முன்பு நடத்திக் காட்டி இருக்கிறார்கள். சம்பத் கண்ணதாசன் பிரிந்தது, எம்ஜியார் பிரிந்தது எல்லாமே நடந்துதான் இருக்கிறது. இப்போது திமுகவின் கையும் சற்று வலுவிழந்து இருக்கிறது.

எத்தனை ஸ்டாலின்கள் வந்தாலும் ஒரு கலைஞர் ஆக முடியாது. எத்தனை சசிகலா வந்தாலும் ஒரு ஜெயலலிதாவாக முடியாது. மக்கள் மத்தியில் இரண்டு பேருக்கும் ஒரு நீங்காத இடம் உண்டு.

எனவே அடுத்த பொது தேர்தல் வந்தால்தான் மக்களின் உண்மை நிலை விளங்கும். மந்திரத்தால் மாங்காய் காய்க்காது.

6 மாதத்தில் திமுக ஆட்சி வரும் என்பதெல்லாம் பேசுவதற்கு கைதட்டுவதற்கு ரசிப்பதற்கு அழகாக இருக்கலாம். ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இப்படி ஆரூடம் செல்ல மாட்டார்கள். ஜாதகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும் இதை பேச மாட்டார்கள். இறை நம்பிக்கை இல்லாதவர்கள் எதையும் பேசுவார்கள்.

முஸ்லிம்களை பொறுத்தவரை இறைவன் யாரை ஆட்சியில் அமர்த்த நினைக்கிறானோ அவனே நாடாள்வான். அடுத்த சில நாட்களில் அவன் வேறு யாரையும் நினைத்தால் எந்த காரணமும் விளக்கமும் இல்லாமல் ஆட்சி மாறி விடும். எனவே மக்கள் மன்றத்துக்கு வருவோம் உங்கள் வாக்குகளை எங்களுக்கு அளித்து எங்களை வெற்றி பெற செய்யுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நல்ல காரியங்களை செய்வோம் என்பதை மட்டும் சொல்லுங்கள்.

லியோனி அவர்கள் பட்டிமன்றங்கள் கேட்பதற்கு பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும். அரசியல் பேச்சுக்கள் ரசிக்காது முஸ்லிம்களை பொறுத்தவரை கருணாநிதியும் ஒன்றும் செய்து விடவில்லை, ஜெயலலிதாவும் ஒன்றும் செய்து விடவில்லை. கோவை சிறைச்சாலையில் இருக்கும் முஸ்லிம்களை விடுவிக்க அவர்கள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. பேரறிவாளன் போன்றவர்களை விடுவிப்பதில் உள்ள அக்கறை கூட முஸ்லிம்கள் விஷயத்தில் இல்லை என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

முஸ்லிம்களின் தோள்களில் ஏறி இவர்கள் இருவரும் திருவிழா பார்க்கிறார்கள். எங்கள் தோள்கள் வலிக்கின்றன. நீங்கள் உயர்ந்து நிற்பதை காட்டுவதற்காக எங்கள் தோள்களை பயன்படுத்துகிறீர்கள் என்பதாக எங்கிருந்தோ ஒரு குரல் வருகிறது. அதையும் காது கொடுத்துக் கேளுங்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved