Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:30:01 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18797
#KOTW18797
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், பிப்ரவரி 14, 2017
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள்: 4 ஆண்டுகள் சிறை; ரூ.10 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2002 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவ் ராய் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர்.

இரண்டு நீதிபதிகளுமே ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கினர். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கினர். கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். கர்நாடகா சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பு அப்படியே ஏற்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டு சிறை; ரூ.10 கோடி அபராதம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இன்று மாலைக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உடனடியாக ஆஜராக உத்தரவு:

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல் கிடைத்தவுடன் ஆஜராக வேண்டும் என கர்நாடக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் 48-ல் மூவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல் கிடைத்தவுடன் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு பின்னடைவு:

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக வந்துள்ளது. இதன் காரணமாக சசிகலாவின் முதல்வர் கனவு தகர்ந்தது. 4 ஆண்டு சிறைத் தண்டைனையில் ஏற்கனெவே அனுபவிக்கப்பட்ட சிறைத் தண்டனையைத் தவிர்த்து எஞ்சியுள்ள தண்டனைக் காலத்தை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தண்டனை உறுதியானதால் சசிகலா இன்னும் 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

வழக்கு கடந்து வந்த பாதை:

கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.66 கோடி சொத்துக் குவித்ததாக சுப்பிரமணியன் சுவாமி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். சென்னையில் நடைபெற்ற இவ்வழக்கு, திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் கோரிக்கையை ஏற்று கடந்த 2004-ம் ஆண்டு பெங்களூருவுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் ஆவணங்கள் மொழிபெயர்ப்பு, சாட்சி விசாரணை, குறுக்கு விசாரணை, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்கு மூலம், இறுதிவாதம் உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இறுதியில் 2014, செப்டம்பர் 27-ம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், சசிகலா உள்ளிட்டோருக்கு ரூ.10 கோடியும் அபராதம் விதித்து தீர்ப்பை வழங்கினார்.

இதையடுத்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதி குமாரசாமி 2015, மே 11-ம் தேதி ஜெயலலிதா,சசிகலா உள்ளிட்ட நால்வரையும் நிரபராதி என விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து கர்நாடக அரசு, சுப்பிரமணியன் சுவாமி மற்றும் அன்பழகன் தரப்பில் கடந்த ஆண்டு ஜூலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இன்று இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
தி இந்து


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...எச்சரிக்கை மணி ஓசை
posted by mackie noohuthambi (colombo) [14 February 2017]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45230

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே .

அந்த சுவருக்கும் கேட்கின்ற செவி இருக்கும் அந்த இருட்டுக்கு பார்க்கின்ற விழியிருக்கும்

தமிழ் கவிஞர்களின் வைர வரிகள். ஜெயலலிதா சசிகலா சுதாகரன் இளவரசி மட்டுமல்ல நாம் எல்லோரும் நம்மை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கண் திறக்கும் தீர்ப்பு இது.

மற்றவர்களை விடுங்கள். முஸ்லிம்களாகிய நமக்கு அருளப்பட்ட வேதம் அதில் சொல்லப்பட்டிருக்கும் சொத்து சுகம் பற்றிய விவரங்கள் அதை எப்படி அனுபவிக்க வேண்டும் யார் பொருளையும் அபகரிப்பது திருட்டுத்தனமாக தனதாக்கிக் கொள்வது. நல்ல வழியில் செலவு செய்யாமல் சேர்த்து வைப்பது இப்படி எத்தனையோ நல்வழிப்போதனைகள் நபிகள் நாயகம் அவர்களும் நபி தோழர்களும் வாழ்ந்து காட்டிய முன்மாதிரிகள் நம் முன்னே விரிந்து கிடக்கின்றன. நாம் நமதூரில் திரும்பும் இடமெல்லாம் ஹதீத் மஜ்லிஸ்கள், வருடா வருடம் நடக்கும் புகாரி ஷரீப் நிகழ்ச்சிகள் எல்லா இடங்களிலும் சொத்து குவிப்பு செய்திகள்பற்றி கடுமையான எச்சரிக்கைகள் நமக்கு எடுத்து ஓதப் படுகின்றன. அவற்றை எல்லாம் கேட்டு விட்டு புறம் தள்ளி விடுகிறோம். யார் யார் சொத்து யார் யார் வாரிசு என்ற பேதம் இல்லாமல் நமது மக்கள் ஒருவருக்கொருவர் உரிமை கோரி நீதி மன்றங்களை அணுகி தொடர்ந்து கொண்டே செல்லும் வழக்குகள் எத்தனை. அவை நிலுவையில் இருக்கும்போதே வாதி பிரதிவாதி வாழ்வே முடிந்து விடும் அவல நிலையை கண்கூடாக காண்கின்றோம்.

டீ குன்ஹா அல்லது இப்போது நீதிபதிகள் வழங்கியுள்ள தீர்ப்பு போல் இறைவனின் மறுமை நாள் தீர்ப்பு இருக்காது என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து நமது அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ள இந்த தீர்ப்பு நமக்கு ஒரு படிப்பினையாக இருக்கிறது..4 வருடங்கள் கழிந்தால் சிறையிலிருந்து மீண்டு விடலாம் இங்கு. ஆனால் மறுமையில் மீளவே முடியாத சிறையில் நீடூழி காலம் தங்க வேண்டி வந்து விடுமே.அல்லாஹ் நம் எல்லோரையும் இந்த இழி நிலையிலிருந்து இவ்வுலகிலும் காப்பாற்றுவானாக மறுமையிலும் காப்பாற்றுவானாக.இது ஒரு எச்சரிக்கை மணி ஓசை என்பதை நினைவில் கொள்வோமாக.இவர்கள் அரசியல்வாதிகள் அவர்களுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம். ஆனால் நமக்கோ உயிர் பிரச்சினை மான பிரச்சினை.வெளியில் தலைகாட்ட முடியாத பிரச்சினை. சிலரை தற்கொலைக்கு கூட தூண்டி விடும் செய்தி இது. மீண்டும் மீண்டும் அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பு தேடுவோம். நமது தவறுகளை திருத்திக் கொள்வோம். அல்லாஹ் நம்மை மன்னித்து நல்லருள் புரியவேண்டும் என்று வேண்டிக் கொள்வோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வசந்த காலைக்கதிரவன் உதயமாவானா?
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [15 February 2017]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45231

சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் முதல் சசிகலா மற்றும் இருவர்களையும் குற்றவாளிகள் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது!

இந்த நாட்டில் நீதி நீர்த்துவிடவில்லை,நெடிய காலங்களை எடுத்தாலும் அது நிச்சியம் நீதியை தந்துவிடும் என்பதற்கோர் சரித்திர சான்றே இந்த தீர்ப்பு!

இத்தீர்ப்பிலிருந்து தமிழகம் பல பாடங்களை பெற்றிருக்கிறது.

முதலாவது,பெங்களூரின் தீர்ப்பிலிருந்தே,நாம் உஷாராக இருந்திருக்க வேண்டும்.இருக்கவிடவில்லை இந்த அரசியல்வாதிகள், பணத்தால் பாமர மக்களையும், பக்தியால் பல சஞ்சல மனமுடையவர்கள் உள்ளத்திலும் ஒரு பரிதாபம் புதையுண்ட பெண்மணியாக "அம்மா"என்ற அடைமொழியின் "அனுதாபம்"அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்து வழிந்தோடியது!

தெய்வத்திற்கு ஒரு தனியொரு மனிதன் தண்டனை கொடுக்க முடியுமா?என்கின்ற கூப்பாடு திக்கெட்டும் இத்தமிழகத்தில் ஒலித்தோங்கியது!

இதற்குள்ளேயும்,நிதானமாகவும்,நடுநிலைமையாகவும் சிந்தித்து வாக்களித்த வெகு சிறப்பான வாக்காளர்களின் வெற்றிக்கிரீடம் இமியளவு இடைவெளியில் பிசகி பறிபோனது என்பதும் உலகறிந்த உண்மை!

இன்றைக்கு இந்த அளவிற்கு தமிழகம் சீரழிந்து நிற்கிறதே சிறிது சிந்தித்தீர்களா? இலை வெற்றிக்காக வரிந்து கட்டிய, வருங்காலத்தை கணிக்கத்தெரியாத அருமைமிகு ஏமாளியாகிய வாக்காளப்பெருமக்களே!

திரு கோவாலு அவர்கள், தன் அலுமாரியை நிறைத்து விட்டு,அறுசுவை "அல்வாவை"சுவைக்க கொடுத்து, அப்படியே துரோக கயிற்றால் சுருக்குப்போட்டு இழுத்துகவிழ்த்தபாடத்தைக்கூட,கவிழ்ந்தபின்னர்தானே உணர்கிறீர்கள் உத்தம அரசியல் கட்சி தலைவர்களே. அவரின் அந்த கபட நாடகத்தை அன்றே நீங்கள் அடையாளம் கண்டிருந்தால்,

இன்று அமைதியான,அழகான,எந்த அலைக்கழிப்பும், படபடப்பும் இல்லாத ஒரு ஆட்சி இளைய தலைமையில் தழைத்தோங்கி ஜொலித்துக் கொண்டிருக்குமே!

இனி எந்த பிரிவு பெரும்பான்மையை நிரூபித்தாலும்,எந்த நேரமும், எல்லாப்பேரமுமென்ற"கத்தி" தலைக்கு மேல் தொங்கிக்கொண்டுதான் இருக்கும்,

சில நாட்கள்,சில மாதங்கள்கூட இது தாங்காது என்று மருத்துவர்கள் கைவிட்ட கேன்சர் நோயாளிதான் இன்றைய தமிழக ஆட்சி நிலை!

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிற அல்லாஹ் ஒருவனே ஒரு நிலையான,நிம்மதியான,நசுக்கத்துடிக்கும் பாதகர்கள் பிடியிலுள்ள சமுதாயத்திற்குபாதுகாவலான ஆட்சியை கொடுத்தருள்வானாக ஆமீன்!

அந்த அருமையான நாளுக்குறிய காலைப்பொழுது விடியத்தான் போகிறது,வேதனைகள் விலகத்தான் போகிறது, உன்னதமான,வசந்தமான காலைக்கதிரவன் உதயமாகத்தான் போகிறான்! ஒருசிலகனப்பொழுது பொறுத்திருப்போம்.அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

வசந்தகால கதவு விரிய ஏங்கும்,
ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved