Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:46:56 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18752
#KOTW18752
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, பிப்ரவரி 5, 2017
தமிழக முதல்வராகிறார் சசிகலா: அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராகவும் தேர்வு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2940 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து வி.கே.சசிகலா விரைவில் முதல்வர் ஆகிறார்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக வி.கே.சசிகலாவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதை அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் வழிமொழிந்தனர்.

முன்னதாக போயஸ் தோட்ட இல்லத்தில் முதல்வர் ஓபிஎஸ், சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது.

இந்த ஆலோசனையை அடுத்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கியது.

இதில் அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக வி.கே.சசிகலாவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதை அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் வழிமொழிந்தனர். இதைத் தொடர்ந்து விரைவில் தமிழக முதல்வராக வி.கே.சசிகலா பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல்:
தி இந்து


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:..தமிழன்டா.
posted by A.R.Refaye (Abudhabi) [05 February 2017]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45196

ஐயாக்கள் அமர்ந்த இருக்கையில் இனி ஆயாமா!!! மன்னர் குடியாக இனி மாற்றம் பெரும் மன்னார் குடி !!!

####தமிழன்டா #####

A.R.Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. சின்னம்மா CM ஆகிறார்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [05 February 2017]
IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 45197

தமிழக முதலமைச்சராகிறார் சசிகலா அவர்கள்! இதற்கு ஒட்டுமொத்த MLA -களும் ஆதரவு!.

எவ்வளவு காலம் தப்பிய துல்லியமான கணிப்பு. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் .இதுவரை செய்யாத சாதனையை ,அனைத்து MLA-க்களும் செய்து காட்டி இருக்கிறார்கள்!.

மறைந்த முதல்வர் அவர்கள் பலமுறை தற்காலிக முதல்வராக திரு.O.பன்னீர்செல்வத்தை நியமனம் செய்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான முடிவு,என்பதை இப்பொழுது அனைத்து MLA -க்களும் ஒருமனதாக வெளிப்படுத்தி காட்டி இருக்கிறார்கள்!

திருபன்னீரைவிடபலமடங்கு,அறிவிலும்,ஆற்றலிலும்,அடக்கத்திலும்,திறமையிலும்,நேர்த்தியிலும் நிதானத்திலும் அரசை ஆளுகின்ற ஒரே திறமை திருமதி சசிகலா அவர்களுக்கு இருக்கிறது என்பதை எந்த ஒரு MLA வும் அம்மாவின் காலத்தில் சொல்ல துணியவில்லை என்பதை துல்லியமாக எடுத்து காட்டிஇருப்பது தான் இன்றைய தேர்வு!

ஒவ்வொரு MLA -வின் மனதிலும் இவ்வளவுநாள் மண்டிக்கிடந்த ஒரு ஆதங்கம்,நம் சின்னமாவாகிய சசிகலா அவர்களை ஒரு MLA-வாகவோ, ஏன் ஒரு சிறு கட்சி பொறுப்பில் கூடபெரியம்மா வைக்கவில்லயே என்ற வெறியினால் வெகுண்டழுந்தவர்களின் வெற்றிப்பெருக்கின் முடிவுதான் இன்றைய முடிவு.. இம்முடிவானது இயற்கை எய்திய பெரியமாவிற்கு சமர்ப்பணமாகும்!

திரு பன்னீர் அவர்களே,ஏதோ அம்மாபோட்ட ஆறுதல் பதவியை பெற்று செயற்பணியில் சுழன்றுவந்த நீங்கள், இனிமேல் பேசாமல் மறைந்த அம்மாவின் புகழை பாடியபடியே உங்கள் பொழுதை கழிக்கவும்!

அம்மாவின் சரியான அணுகுமுறை தேர்வு இல்லாமல் அல்லோலமான தமிழகம்,இன்று அந்த அம்மாவிற்கே பாடம் புகட்டுவதுபோல் அனைத்து MLA க்களும் தேர்தெடுத்த அறியபெரிய தலைமையான சின்னம்மாவின் தலைமையில் இத்தமிழகம் தளிர்ந்தோங்கப்போகிறது,இங்கு தேனாறும், பாலாறும் பாய்ந்து வழியப்போகிறது.அதை அனுபவிக்க அனைத்து தமிழக மக்களும் தயாராக இருந்து கொள்ளுங்கள்!

இனி எந்த MLA வாவது,எங்கள் இதய தெய்வம் அம்மாவின் அடிச்சுவட்டை அணுவளவும் மாறாமல் ஆட்சி செயல்பாடுகள் தொடர்ந்து வருகிறது என்று சொல்ல வந்தால்,அவர்களை (மக்களாகிய) நீங்கள் பிடித்து என்ன கேட்பீர்களோ அதை உங்கள் நடுநிலை நற்சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்
posted by mackie noohuthambi (colombo) [05 February 2017]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45198

இந்த உலக வாழ்வில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை ஞானிகள் சொன்னார்கள் என்பதை விட இப்போதைய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக மக்களுக்கு சொல்லி இருக்கிறார்கள். ஜெயலலிதா பொது செயலாளராக இருந்தபோதும் முதல்வராக இருந்த போதும் அதிமுக உறுப்பினர்களும் சரி ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்களும் சரி பெரிய பெரிய பதாதைகளை வைக்கும்போது கட் அவுட் வைக்கும்போதும் அங்கே பெரியதாக ஒரு அடை மொழி இருக்கும் .

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிரந்தர பொது செயலாளர் - தமிழகத்தின் நிரந்தர முதல்வர். வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் - வாழ்த்தி வணங்குகிறோம்.

ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா.. என்பது முற்றிலுமாக மறக்கடிக்கப்பட்டு குலைக்க கும்பிடு போட்டு வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருந்தவர்களின் வேஷம் கலைந்து விட்டது. இருந்தாலும் மாற்றம் ஒன்றுதான் மாறாதது. நாம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் அல்லது மாற்றத்தை ஏற்றுக் கொள்ள தயாராக வேண்டும் .

ஆனாலும் சொத்து குவிப்பு வழக்கு வெளிநாட்டிலிருந்து கணக்கில் காட்டப்படாத பணங்கள் வந்த வழக்கு இவை எல்லாம் நிலுவையில் உள்ள நிலையில் தமிழக முதல்வராக பதவி ஏற்கும் சசிகலா அவர்கள் தன்னை யாரும் நிரந்தர பொது செயலாளர் நிரந்தர முதல்வர் என்று அழைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த நிலையும் மாறும் .

சின்னம்மா சின்னம்மா நீங்கள் வரவேண்டும் தமிழகத்தின் CM மா என்று கோஷமிட்டவர்களின் கனவு பலித்து விட்டது.

வருங்கால முதல்வருக்கு வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by VILACK SMA (Jeddah) [05 February 2017]
IP: 5.*.*.* | Comment Reference Number: 45199

கழுத்துக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்தும் , முதல்வராக பணியாற்றி மக்களுக்கு சேவையாற்ற வருகிறார் என்றால் இவருடைய மனோதைரியத்தை பாராட்டித்தான் ஆகவேண்டும் .

வாழ்த்துக்கள் சகோதரி .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved