Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:48:26 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18689
#KOTW18689
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஐனவரி 19, 2017
RTO அலுவலகம் & “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் ஒருங்கிணைப்பில் சாலை பாதுகாப்பு வாரம் - 2017: ஜன. 18இல் இரு சக்கர வாகன ஹெல்மெட் பேரணி நடைபெற்றது!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2904 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் (RTO Office), காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் இணைந்து, 18.01.2017. புதன்கிழமையன்று - காயல்பட்டினம் நகர பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப் பேரணி, 18 வயது பூர்த்தியடைந்த பொதுமக்கள் தலைக்கவசத்துடன் பங்கேற்ற - இரு சக்கர வாகன ஹெல்மெட் பேரணி ஆகியவற்றை நடத்தின.

துவக்க நிகழ்ச்சி, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் (United Sports Club – USC) மைதானத்தில், மாலை 04.00 மணிக்கு நடைபெற்றது. “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பீ.எம்.ஏ.சதக்கத்துல்லாஹ் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகராட்சியின் முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், நகர பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.

“நடப்பது என்ன?” குழும நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.எம்.முஜாஹித் அலீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் அஹ்மத் ரம்ஸீ கிராஅத் ஓதினார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து - “நடப்பது என்ன?” குழும நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.என்.அஹ்மத் ஸாஹிப் வரவேற்புரையாற்றினார். குழுமத்தின் மக்கள் நல செயல்பாடுகளை விளக்கி - அதன் நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.கே.ஸாலிஹ் அறிமுகவுரையாற்றினார்.











வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள எல்.கே.லெப்பைத் தம்பி சாலை (கூலக்கடை பஜார்), முதன்மைச் சாலை (மெயின் ரோடு) ஆகிய இரு வீதிகளிலும்...

>>> நாற்சக்கர வாகனங்களை நிறுத்த நிரந்தரத் தடை விதித்தல்

>>> இரு சக்கர வாகனங்களை நிறுத்த நிரந்தர இடங்களை நிர்ணயித்தல்

>>> நகரில் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்க போக்குவரத்துக் காவலர்களை நிரந்தரமாக நியமித்தல்

>>> முதன்மைச் சாலை (மெயின் ரோடு), ஹாஜியப்பா தைக்கா பள்ளிவாசல் சந்திப்பில் – போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள ஆட்டோ ஸ்டாண்டை வேறு இடத்திற்கு மாற்றல்

ஆகிய கோரிக்கைகளை - காவல்துறையிடமும், வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடமும், காயல்பட்டினம் நகர பொதுமக்கள் சார்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அவற்றைப் பரிசீலித்து, வெகு விரைவில் காயல்பட்டினத்தில் முறைப்படியான வாகனப் போக்குவரத்திற்கும், வாகன நிறுத்தத்திற்கும் வழிவகை செய்யப்படும் என காவல்துறையால் தெரிவிக்கப்பட்டது.

திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல், அதன் மோட்டார் வாகன ஆய்வாளர் ஃபாத்திமா பர்வீன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் பாஸ்கரன், ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் சுந்தரநேசன், காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், எல்.கே.மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், சென்ட்ரல் மேனிலைப் பள்ளியின் ஆசிரியர் அப்துல் காதிர் கான், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ரப்பானீ ஆகியோர் - சாலை பாதுகாப்பை வலியுறுத்தி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் அறிவுரை வழங்கினர்.

















நன்றியுரைக்குப் பின், நாட்டுப் பண்ணுடன் மேடை நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. பின்னர், பேரணி துவங்கியது. திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன் கொடியசைத்து பேரணியைத் துவக்கி வைத்தார்.





































துவக்கமாக ஹெல்மெட் - தலைக்கவசம் அணிந்த பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களிலும், அவர்களைத் தொடர்ந்து அறிவிப்பு வாகனம், மாணவர்கள் நடைப் பேரணி, சாலை பாதுகாப்பு விதிமுறைகளை விளக்கும் வாகனம், பொதுமக்கள் நடைப் பேரணி, திருச்செந்தூர் வட்டாரப் போக்குவரத்துக் கழகத்திற்குட்பட்ட ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளின் வாகனங்கள், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (தமுமுக) மருத்துவ உதவி (ஆம்புலன்ஸ்) வாகனம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பயிற்சி வாகனம் ஆகியன பேரணியில் அடுத்தடுத்து வரிசையாக அணிவகுத்துச் சென்றனர்.

காயல்பட்டினம் மகாத்மா காந்தி நினைவு வளைவில் துவங்கி, தைக்கா பஜார், முதன்மைச் சாலை (மெயின் ரோடு), கே.டீ.எம். தெரு, பெரிய நெசவுத் தெரு, எல்.கே.லெப்பைத் தம்பி சாலை, கூலக்கடை பஜார், பேருந்து நிலையம் வழியாக பேரணி புறப்பட்ட இடத்திலேயே நிறைவுற்றது. பின்னர் அனைவருக்கும் குளிர்பானம் - சிற்றுண்டி வழங்கப்பட்டது.







பள்ளி மாணவர்கள் கலைந்து சென்றதும், இரு சக்கர வாகன ஹெல்மெட் பேரணியும், இதர வாகனப் பேரணிகளும் – ஆறுமுகநேரி வரை சென்று திரும்பின.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, திருச்செந்தூர் வட்டாரப் போக்குவரத்துக் கழக அலுவலர் தலைமையிலான குழுவினரும், காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும அங்கத்தினரும் இணைந்து செய்திருந்தனர்.

காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப் பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம், ஜூனியர் ரெட் க்ராஸ், ஸ்கவுட் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட மாணவர்களும், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் – சாலை பாதுகாப்பு விழிப்புணர்வூட்டும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கியவாறும், முழக்கங்களை முழங்கியும் - இப்பேரணியில் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50 பேர் இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட்டுடன் அணிவகுத்துச் சென்றதும், நூற்றுக்கணக்கான பொதுமக்களும், 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும் ஹெல்மெட் பேரணியைத் தொடர்ந்து நடைப் பேரணியாகச் சென்றதும் குறிப்பிடத்தக்கவை.

தகவல் & படங்கள்:
எஸ்.கே.ஸாலிஹ்
செய்தி தொடர்பாளர்
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அல்ஹம்துலில்லாஹ். மிக அருமையான நிகழ்வு....!
posted by S.K.Shameemul Islam (Chennai) [19 January 2017]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 45136

அல்ஹம்துலில்லாஹ். மிக அருமையான நிகழ்வு.

இதை ஏற்பாடு செய்வதற்காக உழைத்தவர்களுக்கும் அழைப்பில் கலந்துகொண்டவர்களுக்கும் அல்லாஹ் நிறைவான நற்கூலியை தருவானாக ஆமீன்.

இதில் கலந்துகொண்டவர்களும் இதனால் விழிப்புணர்வு பெற்றவர்களும் சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக கடைப்பிடித்து அதன் மூலம் விபத்தில்லா நகரமாக நமதூர் மாற்றம் பெற வல்ல அல்லாஹ் உதவி செய்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...அழகிய முன்மாதிரி,,,,,
posted by mackie noohuthambi (kayalpatnam ) [19 January 2017]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45139

சாலை பாதுகாப்பு வாரம் என்று ஒவ்வொரு வருடமும் நடக்கத்தான் செய்கிறது ஆனால் இந்த வருடம் நமதூரிலேயே அதை நடப்பதென்ன குழுமம் இனைந்து நடத்தியது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.

நமதூரில் சாலை பாதுகாப்புக்கான முழு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள்,

நமதூரின் இளைஞர்கள் கல்லூரி மாணவர்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு சந்நிதியிலும் நின்று தங்கள் இரு சக்கர வாகனங்களை அல்லது துவி சக்கர வண்டிகளை நிறுத்திக் கொண்டு அரட்டை அடித்துக் கொண்டு மற்றவர்கள் நடப்பதற்கு மற்ற வாகனங்கள் வருவதற்கு இடைஞ்சலாக பேசிக் கொண்டு நிற்பது வழக்கம். கொஞ்சம் விலகி ஓரமாக நின்று பேசுங்கள் என்று சொன்னால் முகத்தை சுளித்துக் கொள்வார்கள். இது காலம் காலமாக நடந்து வருகிறது. என் போன்றவர்களுக்கு அந்த கசப்பான அனுபவம் நிறையவே உண்டு.

நபிகள் நாயகம் அவர்களின் தோழர்கள் போருக்கு செல்லும்போது தங்கள் கூடாரங்களை வழி நெடுக அமைத்துக் கொண்டிருப்பார்கள். இதை கண்ணுற்ற நபிகள் நாயகம் அதை வன்மையாக கண்டித்தார்கள். போக்கு வாரத்துக்கு இடைஞ்சலாக இப்படி கூடாரம் அமைக்கக் கூடாது என்று கூறி அந்த வழக்கத்தை மாற்றிக் காட்டினார்கள். 1438 வருடங்களுக்கு முன்னே பெரிதாக என்ன சாலை இடைஞ்சல் இருந்திருக்க முடியும் TRAFFIC JAM என்று அந்த பாலைவனத்தில் அப்படி என்ன இருந்திருக்க முடியும். என்றாலும் பொது மக்கள் நடப்பதற்கு ஒரு சிறு தடையும் இருக்கக் கூடாது, அது ஒரு உரிமை மீறல் என்பதை அவர்கள் கூறி தோழர்களை நெறி படுத்தினார்கள்.

எனவே இந்த நாளோடு சாலை பாதுகாப்பு வாரம் என்றில்லாமல் இந்த மாதிரி நடு வீதியில் நின்று பேசிக் கொன்றிருப்பவர்களை பொது மக்களே நல்ல வார்த்தை கூறி நெறிப்படுத்தலாம். அது ஒரு சுன்னத்தான வழி முறையும் கூட


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
காலையில் சிறுமழை!  (21/1/2017) [Views - 1729; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved