Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:45:58 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18587
#KOTW18587
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 19, 2016
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும ஒருங்கிணைப்பில், எல்.கே.மேனிலைப்பள்ளியின் NCC மாணவர்கள் தூய்மை விழிப்புணர்வு முகாம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2579 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள், அங்கு தின்பண்டங்களை உட்கொண்ட பின், அவற்றின் கழிவுகளையும், காகிதக் கோப்பை உள்ளிட்ட கழிவுப் பொருட்களையும் இருந்த இடத்திலேயே போட்டுவிட்டு, மணற்பரப்பை அசுத்தப்படுத்திச் செல்வது வாடிக்கை.

இக்குறையைப் போக்கி, பொதுமக்களுக்கு தூய்மை விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், காயல்பட்டினம் நகராட்சியுடன் இணைந்து கடற்கரையில் “தூய்மை விழிப்புணர்வு முகாம்” நடத்துவதென அதன் நிர்வாகக் குழுவால் திட்டமிடப்பட்டு, கடற்கரையில் மக்கள் திரள் எதிர்பார்க்கப்படும் நாட்களில் முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில், 17.12.2016. சனிக்கிழமையன்றும், நேற்றும் (18.12.2016. ஞாயிற்றுக்கிழமை) கடற்கரையில் தூய்மை விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. முதல் நாள் முகாமில் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் ஆலோசகர்கள், அங்கத்தினர், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

நேற்று, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும ஒருங்கிணைப்பில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் தேசிய மாணவர் படைப் பிரிவின் தூய்மை விழிப்புணர்வு முகாம் கடற்கரையில் நடைபெற்றது.

துவக்கமாக, குழுமத்தினருடன் மாணவர்கள் தங்களை அறிமுகம் செய்துகொள்ள, கடற்கரையில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மை விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்து, தேசிய மாணவர் படை பயிற்றுனர் ‘ஆசிரியர்’ காமில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகி எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் - தேசிய மாணவர் படை வீரர்களுக்கு அறிவுரை வழங்கினர். தொடர்ந்து, வீரர்கள் அடையாள அணிவகுப்பு நடத்தி, முகாம் நடவடிக்கைகளைத் துவக்கினர்.







வீரர்களுள் ஒரு பிரிவினர், இருசக்கர - நாற்சக்கர வாகனங்களில் வந்தோரிடம் வாகனங்களை ஓரமாகவும், வரிசையாகவும் நிறுத்துமாறும், நுழைவாயிலை மறைத்து நிறுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவர்கள் அதற்கு ஒத்துழைப்பளித்தனர்.



ஒருபுறம் ஒலிபெருக்கி வழியே தூய்மை விழிப்புணர்வு அறிவுரைகள் பொதுமக்களுக்கு ஒலிபரப்பாகிக் கொண்டிருக்க, மறுபுறத்தில் தேசிய மாணவர் படையினர் - கடற்கரைக்கு வந்த பொதுமக்களுக்கு காகித உறைகளை வழங்கி, குப்பைகளை அவற்றில் சேகரித்து வைத்துக்கொண்டு, வீடு திரும்புகையில் கடற்கரை நுழைவாயிலில் காயல்பட்டினம் நகராட்சியால் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் அவற்றைப் போட்டுச் செல்லுமாறும், இனி வருங்காலங்களில் குப்பைகளுக்கென ஒரு காகிதப் பையைக் கொண்டு வருவதை வழமையாக்கிக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர்.







இதனால் மனமகிழ்ந்த சமூக ஆர்வலர்கள் பலர் தேசிய மாணவர் படையின் இளம் மாணவர்களை மனதார வாழ்த்தியதுடன், முழு ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறிச் சென்றனர்.









கடற்கரையின் உள்ளே ஆங்காங்கே அமர்ந்திருந்த பொதுமக்களிடையே - குறு ஒலிபெருக்கி மூலம் தேசிய மாணவர் படை வீரர்கள் விழிப்புணர்வு பரப்புரைகளைச் செய்தனர்.



19:30 மணியளவில் முகாமை நிறைவுபடுத்தும் வகையில், சிறப்பு அமர்வு நடைபெற்றது. “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் நிறைவுரையாற்றினார்.



முகாமில் சிறப்புற பங்காற்றியமைக்காக எல்.கே.மேனிலைப்பள்ளியின் தேசிய மாணவர் படையினருக்கும், அதற்கு அனுமதியளித்த - பள்ளியின் நிர்வாகிகள் - தலைமையாசிரியருக்கும், அழைத்து வந்து முழு ஒத்துழைப்பளித்த பயிற்றுநருக்கும், நன்றி கூறி தனதுரையைத் துவக்கி அவர், கடற்கரையில் பொதுமக்களுக்கு உள்ள உரிமைகளையும், கடமைகளையும், எதிர்பார்க்கப்படும் ஒத்துழைப்புகளையும் விளக்கிப் பேசியதுடன், இது தொடர்பாக “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், நகர்நலன் காக்க குழுமத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் இதர செயல்திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.



இனி வருங்காலங்களில் கடற்கரையில் மக்கள் திரள் எதிர்பார்க்கப்படும் பண்டிகை நாட்கள், தேவைப்படும்போது வார விடுமுறை நாட்களில் - குழுமத்தின் தூய்மை விழிப்புணர்வு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என அவர் குழுமத்தின் சார்பில் அறிவித்தார்.





தம் வேண்டுகோளை மதித்து, தமது குப்பைகளைப் பொறுப்புடன் காகிதப் பைகளில் இட்டு, குப்பைத் தொட்டியில் போட்டுச் சென்றமைக்காக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தினர் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தனர். கடற்கரை துப்புரவுப் பணிக்கு ஒத்துழைப்பு கோரி - அங்கிருந்த தின்பண்ட வணிகர்களிடமும் குழுவினர் வேண்டுகோள் வைத்து அவர் உரையை நிறைவு செய்தார். நிறைவில், அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கி உபசரிக்கப்பட்டது.



முகாம் ஏற்பாடுகளை, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் ஆலோசகர்களும், அங்கத்தினருமான - எஸ்.ஏ.முகைதீன், எஸ்.அப்துல் வாஹித், பீ.எம்.ஏ.ஸதக்கத்துல்லாஹ், எம்.ஏ.புகாரீ, ‘மெகா’ நூஹ், ஏ.எஸ்.புகாரீ, ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல், ஹாஃபிழ் எஃப்.ஷெய்க் ஸலாஹுத்தீன், ‘நெட்காம்’ புகாரீ, எஸ்.ஏ.முஹம்மத் நூஹ், சாளை நவாஸ், எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், அப்துல் அஜீஸ், எம்.எம்.முஜாஹித் அலீ, எம்.என்.அஹ்மத் ஸாஹிப் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.





“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திற்காக,
காயல்பட்டினத்திலிருந்து...
எஸ்.கே.ஸாலிஹ்
(செய்தி தொடர்பாளர்)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by VILACK SMA (Jeddah) [21 December 2016]
IP: 5.*.*.* | Comment Reference Number: 45008

தூய்மையான கடற்கரை ...... ஓரளவிற்கு நிறைவேறிக்கொண்டுதான் இருக்கிறது . இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் நூறு சதவீதம் தூய்மையான கடற்கரையாக மாறும் . நம்பிக்கை இருக்கிறது . செயல்படுத்துபவர்களுக்கு பாராட்டுக்கள் .

தூய்மையான காயல் எப்போது வரும் ?

தெருவில் குப்பை கொட்டுபவர்களையும் , குப்பை லாரி சென்றபின் குப்பையை வீசி எறிபவர்களையும் , நடுச்சாமத்தில் ஊர் உறங்கியபின் அடுத்தவன் வீட்டு வாசலில் குப்பையை வைப்பவர்களையும் நீங்கள் நேரில் சென்று எடுத்து சொல்லி , அப்படி வைக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் . தூய்மையான காயல் உருவாகும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved