Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:44:10 AM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18403
#KOTW18403
Increase Font Size Decrease Font Size
சனி, அக்டோபர் 29, 2016
காயல்பட்டினம் நகராட்சியுடன் இணைந்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கடற்கரையில் தூய்மை விழிப்புணர்வு முகாம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2860 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள், அங்கு தின்பண்டங்களை உட்கொண்ட பின், அவற்றின் கழிவுகளையும், காகிதக் கோப்பை உள்ளிட்ட கழிவுப் பொருட்களையும் இருந்த இடத்திலேயே போட்டுவிட்டு, மணற்பரப்பை அசுத்தப்படுத்திச் செல்வது வாடிக்கை.

இக்குறையைப் போக்கி, பொதுமக்களுக்கு தூய்மை விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், காயல்பட்டினம் நகராட்சியுடன் இணைந்து கடற்கரையில் “தூய்மை விழிப்புணர்வு முகாம்” நடத்துவதென அதன் நிர்வாகக் குழுவால் திட்டமிடப்பட்டது.

அதன்படி, நேற்று (28.10.2016. வெள்ளிக்கிழமை) 11.00 மணியளவில், காயல்பட்டினம் நகராட்சியின் மேலாளரும், ஆணையர் (பொறுப்பு) & சிறப்பு அதிகாரியுமான அருட்செல்வம், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் ஆகியோரைச் சந்தித்து, கோரிக்கை மனுவை அளித்து ஒத்துழைப்பு கோரினர்.



அவர்களை வரவேற்ற அதிகாரிகள், பொதுமக்களே முன்வந்து இதுபோன்ற விழிப்புணர்வு முகாம்களை நடத்துவது மிகுந்த வரவேற்பிற்குரியது என்றும், மனுவில் கோரியுள்ள படி - கடற்கரையில் இருக்கும் குப்பைத் தொட்டியைத் துப்புரவு செய்து வைப்பதாகவும். நகராட்சியின் சார்பிலும் இம்முகாமில் தாங்கள் வந்து பங்கேற்பதாகவும் கூறினர்.



திட்டமிட்ட படி, இன்று 16.30 மணி முதல் 19.30 மணி வரை கடற்கரையில் தூய்மை விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.









“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகளும் - அங்கத்தினருமான எஸ்.அப்துல் வாஹித், எம்.ஏ.புகாரீ (48), ஏ.எஸ்.புகாரீ, எஸ்.ஏ.முஹம்மத் நூஹ், சாளை நவாஸ், எம்.எம்.முஜாஹித் அலீ, எம்.என்.அஹ்மத் ஸாஹிப், எஸ்.கே.ஸாலிஹ், எம்.கே.ஜஃபருல்லாஹ், அஹ்மத் ஸுலைமான், ஸித்தீக், காழி அலாவுத்தீன் ஆகியோரும், காயல்பட்டினம் நகராட்சியின் துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லட்சுமியும், கடற்கரை நுழைவாயிலில் முகாமிட்டு, பொதுமக்களுக்கு காகிதப் பைகளை வழங்கி, கடற்கரையில் அவர்கள் மூலம் சேரும் குப்பைகளை அப்பைகளில் இட்டு, வீடு திரும்புகையில் - நுழைவாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லுமாறு - பல்வேறு பகுதிகளிலிருந்தும் கடற்கரைக்கு வருவோரை நோக்கி ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புக் கொடுத்துக்கொண்டே இருந்தனர்.



















19.00 மணியளவில் கடற்கரை உட்பகுதிக்குச் சென்ற குழுவினர், அங்கே அமர்ந்திருந்த பொதுமக்கள் - தம் வேண்டுகோளை மதித்து, தமது குப்பைகளைப் பொறுப்புடன் காகிதப் பைகளில் இட்டு, குப்பைத் தொட்டியில் போட்டுச் சென்றமைக்காக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் சார்பில் நன்றி தெரிவித்தனர். கடற்கரை துப்புரவுப் பணிக்கு ஒத்துழைப்பு கோரி - அங்கிருந்த தின்பண்ட வணிகர்களிடமும் குழுவினர் வேண்டுகோள் வைத்தனர்.

பொதுவாக பண்டிகை காலங்களில் கடற்கரைக்கு வரும் பெரும் மக்கள் திரள் காரணமாக, அதன் மணற்பரப்பு குப்பை மேடாகக் காட்சியளிப்பது வழமையாக இருக்க, இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடற்கரைக்கு வந்த பெருந்திரளான மக்கள், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தினருடனும், நகராட்சியுடனும் ஒத்துழைத்த காரணத்தால், நீண்ட நேரத்திற்குப் பின்பும் கூட மணற்பரப்பு குப்பைகளின்றி சுத்தமாகக் காட்சியளித்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முகாம் இன்னும் சில நாட்கள் நடத்தப்படும் என்று “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தினர் தெரிவித்துள்ளனர்.

“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திற்காக,
காயல்பட்டினத்திலிருந்து...
எஸ்.கே.ஸாலிஹ்
(செய்தி தொடர்பாளர்)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Fuad (Singapore ) [29 October 2016]
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 44845

அஸ்ஸலாமு அலைக்கும். நடப்பதென்ன குழுமத்தினருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

பொதுமக்களாகிய நமக்கும் அந்த பொறுப்புணர்வு வரவேண்டும். இது நமதூர், நமது கடற்கரை நாம் தான் சுத்தமாக வைக்கவேண்டும் என்ற உணர்வு வரவேண்டும். நாம் ஒவ்வொருவரும் இந்த பணியை செய்தால் நமது கடற்கரை குப்பையில்லா கடற்கரையாக மாறும். இன்ஷா அல்லாஹ். நாம் அனைவரும் உறுதி எடுப்போம்.

சிங்கப்பூரில் தெருவில் குப்பை அல்ல, சாப்பிட்டுவிட்டு கை துடைக்கும் tissue வை தெரியாமல் நான் போட்டதற்கு S $ 300/- அபராதம் காட்டினேன். மண்ணின் மைந்தன் தம்பி சாளை நவாஸுக்குத் தெரியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by M.I.மூசா நெய்னா (புரைதா - சவூதி அரேபியா ) [30 October 2016]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 44846

நடப்பது என்ன குழுமத்தின் இச்செயல் மிகவும் பாராட்டுதலுக்குரியது.

முதற்கட்டமாக மக்களுக்கு பைகளை வழங்கி மக்களுக்கு விழிப்புணர்வு அளித்தது நன்று.

சமீப காலமாக வெளியூரில் இருந்து மக்கள் அதுவும் பண்டிகை காலங்களில் அதிகமாக வருவதினால் கடற்கரை மணலின் இயற்கை தன்மை மாறுபட்டு மாசுபடுகிறது. எனவே இது போன்ற விழிப்புணர்வின் மூலம் மக்கள் தங்கள் நிலைமையை உணர்ந்து அவர்களே முடிந்த அளவு சுத்தம் செய்தால் மணலின் இயற்கை தன்மை மாறுபட வாய்ப்பு இல்லை.

நகராட்சியும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...தூய்மை இந்தியா
posted by mackie noohuthambi (kayalpatnam ) [30 October 2016]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 44847

பிரதமர் மோடி அவர்கள் தூய்மை இந்தியா திட்டத்துக்கு கோடி கோடியாக பணம் செலவழிக்க உத்தரவிட்டிருக்கிறார். வேடிக்கையான செய்தி.

தூய்மை உள்ளம் சார்ந்த விஷயம். பள்ளி வாசல் செல்லும் முஸ்லிம்களுக்கு இந்த தூய்மை இல்லாமல் உள்ளே அடி எடுத்து வைக்க முடியாது. அத்தகைய தூய்மைக்கு சிறப்பிடம் கொடுக்கும் முஸ்லிம்களாகிய நமக்கு இந்த தூய்மை பாடத்தை யார் படித்து தரவேண்டும். ஆனால் முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் அது சென்னை மும்பை கல்கத்தா ஜெய்ப்பூர் என்று எங்கு சென்றாலும் அங்கெல்ல்லாம் குப்பை கூளங்களோடும் அசுத்தங்களோடும்தான் வாழ்ந்து வருகிறோம்.

சிங்கப்பூர் மட்டுமில்லை இப்போது நமது அண்டை நாடான இலங்கையிலும் தூய்மை பணி சிறப்பாக நடக்கிறது. மக்கள்தான் காரணம். அவர்கள் தூமையை தங்கள் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். திருடுவது பிச்சை எடுப்பது எவ்வளவு கேவலமா அதே போல் சுத்தமில்லாமல் இருப்பதும் தெரு வழியில் குப்பைகளை கொட்டுவதையும் போடுவதையும் கேவலமாக நினைக்கிறார்கள். சிங்கப்பூரில் விமானம் ஏறிய ஒருவர் தன் கையில் இருந்த குப்பையை இந்தியாவில் இறங்கி வெளியே வந்து வீதியில் போட்டார் என்ற செய்திகள் எல்லாம் கற்பனை அல்ல உண்மை.

நமதூர் கடற்கரையை சுத்தமாக வைக்க காயல்பட்டினம் கடற்கரை உபயோகிப்போர் சங்கம் என்று ஒன்று ஆரம்பிக்கப் பட்டது. அபூ தாபி காயல்நலமன்றம் இதற்கென நிதி ஒதுக்கி அதற்கான ஆட்களையும் நியமித்து கொஞ்ச நாள் அந்த பணி நடந்தது. ஒரு நகர்மன்றம் தன் கையில் எடுத்து செய்ய வேண்டிய வேலையை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் தார்மீக பொறுப்பாக கையில் எடுத்து செய்வதை வரவேற்க வேண்டும். ஆனால் அதை கொச்சைப் படுத்தி அதையும் நிறுத்தி விட்டார்கள். இப்போது நடப்பதென்ன குழுவினர் அதை மேற்கொண்டிருக்கிறார்கள். பாராட்டுக்கள்.

ஆனால் இதை நகர்மன்றமே செய்வதற்கு அவர்களும் மற்றும் நாம் எல்லோரும் அழுத்தம் கொடுக்க வேண்டும். தனி அதிகாரி அவர்களும் இதை ஒரு தெய்வீக கடமையாக நினைத்து செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

CLEANLINESS IS NEXT TO GODLINESS


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. தூய்மை ஈமானின் ஒருபகுதி.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [30 October 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 44849

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

தூய்மை ஈமானின் ஒருபகுதி சுத்தத்தைப்பற்றி இஸ்லாம் சப்தமாகச்சொல்கிறது இருந்தபோதிலும் அஸ்த ஃஃபிருல்லாஹுல்அழீம் அந்தஈமானை நாம் நமதுஅறியாமையால் பறிகொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் நிதர்சன உண்மை.

நமதூர்க்கடற்கரைக்கு பெரும்பாலும் ஒருசிலவருடங்களாக சுற்றுப்புறத்தூர்மக்களும்வந்து கடற்காற்றை அனுபவித்து விளையாடியும் மகிழ்சசியோடு திரும்புகின்றனர் ஒருபக்கம் நன்மைமையென்றாலும் மறுபக்கம் சீர்கேடுகளும்,அசுத்தங்களும் சூழ்ந்துகொண்டுவிட்டன.

இதுபோன்றதவறுகளைத்தவிர்க்க நவீனக்கழிப்பிட வசதிசெய்துகொடுத்து இருபாலருக்கும் பிரச்சினையில்லாது ஒழுக்கநெறியோடுசெயல்பட ஆவணசெய்யவேண்டும் குறிப்பாகபெண்களுக்கு பலபிரச்சினைகளிருக்கும் குழந்தைகளுடனும்,மாலையில்வருகிறார்கள் இருட்டியபிறகும்கூட இருந்துவிட்டுச்செல்கிறார்கள் அப்பாடியானால் அந்த இருபாலர் இயற்கைத்தேவைகளை எப்படிநிவர்த்திசெய்வது?எனவே நவீன கட்டணக்கழிப்பறையாவது நகராட்சிசெய்துதரவேண்டும்.

கண்காணிப்புகளைவலுப்படுத்த முன்புபஞ்சயாத்தாக இருந்தபோது ஒருசிறிய அறைபோலிருந்து அங்கிருந்துமாலை வானொலி ஒலிபரப்புகளையும்,செய்திகளைகேட்கமுடிந்தது பலவருடங்களாக அந்த நிகழ்வுகளும்,மக்கள்,முதியவர்கள் அமர்வதற்கு ஒருவட்டவளாகமுமிருந்தது அவை அகற்றப்பட்டுவிட்டன.அவைமீண்டும் செயலுக்கொண்டுவந்து காவலர்களையும் நியமித்து சீர்செய்யவேண்டும்.

குறிப்பாக உணவுப்பண்டங்களை அங்கேயேவைத்து சமையல்,ஆயத்தம்செய்துகொடுப்பதினால்தான் பெரும்பாலும் நம்கடற்கரையின் வெள்ளைமணல் இருகருமையடைந்துவிட்டன இதைத்தவிர்க்க குறைந்தபட்சம் பாதுகாப்பாக மண்ணென்னையடுப்பை தள்ளுவண்டிகளில் வைத்துப்பயன்படுத்தவும்,குப்பைக்கழிவுகளைதப்பாமல் அதற்காக வைக்கப்பட்டிருக்கும் குப்பைத்தொட்டியில்தான் போடவேண்டுமென உத்தரவிடவேண்டும்.

நாம் மற்றவர்களின்பிழைப்பிற்கு தடைபோடவில்லை ஆனால் மாசுபடாமல்,சுகாதாரக்கேட்டிலிருந்தும்பாதுகாப்புவேண்டும் அதற்கு அந்தவியாபாரிகளுக்கு நகராட்சிமூலம் வாக்குறுதிபெற்று,அனுமதிபெற்ற அடையாளஅட்டைவழங்கப்படவேண்டும்.

மக்கிகாக்கா அவர்களின் கருத்துப்படி (நமதூர் கடற்கரையை சுத்தமாக வைக்க காயல்பட்டினம் கடற்கரை உபயோகிப்போர் சங்கம் என்று ஒன்று ஆரம்பிக்கப் பட்டது. அபூ தாபி காயல்நலமன்றம் இதற்கென நிதி ஒதுக்கி அதற்கான ஆட்களையும் நியமித்து கொஞ்ச நாள் அந்த பணி நடந்தது. ஒரு நகர்மன்றம் தன் கையில் எடுத்து செய்ய வேண்டிய வேலையை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் தார்மீக பொறுப்பாக கையில் எடுத்து செய்வதை வரவேற்க வேண்டும். ஆனால் அதை கொச்சைப் படுத்தி அதையும் நிறுத்தி விட்டார்கள். இப்போது நடப்பதென்ன குழுவினர் அதை மேற்கொண்டிருக்கிறார்கள். பாராட்டுக்கள்.)

கலங்கரைவிளக்கமென்ற ஒருதன்னார்வத்தொண்டு அமைப்புஒன்றும் செய்யபட்டுக்கொண்டிருக்கிறது அவைபோன்றஅமையப்புகளுக்கு ஊக்கம்கொடுக்கவேண்டும்

உங்களைப்போன்ற நல்லெண்ணம்கொண்ட அமைப்புகள் எந்தசலசலப்பிற்கும் கவலைப்படக்கூடாது

ஒரு உதாரணம் சொல்கிறேன் நீங்கள் sand paper அதாவது சீனித்தாளென்போமே அதுதான் அதைவைத்து ஒருதுருப்பிடித்த தகரத்தைத்தேய்த்தால் ஆரம்பத்தில் கீறல்கள்போல்தெரியும் நிறைவில் பளபளவெனஜொலிக்கும் அதைத்தான் நீங்கள்செய்துகொண்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் இறைவனும்,மக்களும் உங்கள்பக்கம் இன்ஷா அல்லாஹ் வல்ல இறைவன் உங்களைவெற்றியின்பக்கம் அழைத்துச்செல்வான் ஆமீன் வாழ்கநலவளமுடன் இறையருள் என்றென்றும் உங்களுக்குக்கிடைக்கும் ஆமீன்.

நமதுஊர்,நமதுக்கடல்,நம்கடற்கரை சுத்தமாக இருப்போம் சுகாதாரமாகவாழ்வோம் தூய்மை ஈமானின் ஒருபகுதி தூய்மை நமதுதாய்மையெனப்பேணுவோம் .

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved