Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:30:31 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18295
#KOTW18295
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், செப்டம்பர் 20, 2016
பாதுகாப்பான தமிழகத்திற்காக மிதிவண்டி பயணம்! காயல்பட்டினம் கடற்கரையில் பயணக் குழுவினருக்கு வரவேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2668 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பாதுகாப்பான தமிழகம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக சமூக ஆர்வலர்களால் மிதிவண்டிப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயல்பட்டினம் வந்த பயணக் குழுவினருக்கு, கடற்கரையில் பொதுமக்களால் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-

இயற்கை வளங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் மிதிவண்டியில் பயணிக்கும் குழுவினருக்கு காயல்பட்டினம் கடற்கரையில் 13/09/2016 செவ்வாய் மாலை 05:30 மணியளவில் ஊர்மக்கள் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

சென்னையை சேர்ந்த பாரதி கண்ணன், ரஞ்சித், மதுரையைச்சேர்ந்த பெருமாள், ஆகியோர், “பாதுகாப்பான தமிழகத்திற்கான மிதிவண்டி பயணம் – 2016” {Ride for Rights to Save Tamil Nadu – 2016} என்ற தலைப்பின் கீழ் மிதிவண்டியில் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.







தாம்பரம் நண்பர்கள் குழுவினர் சென்னையை மையமாக கொண்டு இயற்கை வாழ்வியல் , விவசாயத்திற்கான பல்முனை முன்னெடுப்புகளைச் செய்து வருகின்றனர். இக்குழுவில் தகவல் தொழில் நுட்பத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த இளைஞர்கள் ஊக்கத்துடன் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் வழக்கறிஞரான சென்னையைச் சார்ந்த பாரதி கண்ணன் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தன்னுடைய ஊடக பணியை உதறி விட்டு முழு நேரமாகவே தன்னுடைய வாழ்வை இயற்கை வாழ்வியல் பணிகளுக்காக அர்ப்பணித்தமை குறிப்பிடத்தக்கது.

மதுரையைச் சார்ந்த பொறியியல் பட்டதாரியான பெருமாள் இயற்கை விவசாயம் செய்து வருவதுடன் புவி வெப்பமயமாதல் குறித்த ஆய்வினையும் மேற்கொண்டுள்ளார்.

சென்னையைச் சார்ந்த ரஞ்சித், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதுடன் தாம்பரம் நண்பர்கள் குழுவினருடன் இணைந்து கூட்டு இயற்கை விவசாயத்திலும் ஈடுபட்டு வருகின்றார்.

கடந்த பிப்ரவரி ஆறாம் தேதி சென்னையில் தங்களது பரப்புரை பயணத்தை தொடங்கிய இப்பயணக்குழுவினர் மதுரையில் முதல் கட்ட பரப்புரையை நிறைவு செய்தனர். தொடர்ந்து ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் தொடங்கி கன்னியாகுமரியில் பரப்புரையை நிறைவு செய்தனர்.

பின்னர் அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடற்கரையோர மாவட்டங்களினூடாக பயணிக்கும் வழித்தடத்தில் 13/09/2016 செவ்வாய் மாலை 05:30 மணியளவில் காயல்பட்டினம் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். அங்கு பயணக்குழுவினருக்கு ஊர்மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

















சமூக செயற்பாட்டாளர்களான சாளை ஸலீம், சா.ஹ..ஷமீமுல் இஸ்லாம், மூ.நெ.அஹ்மத் ஸாஹிப், மீ.சா.முஹம்மத் ஸாலிஹ், ஹாஃபிழ் மு.மு.முஜாஹித் அலீ, ஒளிப்படக்கலைஞர் சுப்ஹான் பீர் முஹம்மது ஆகியோர் முன்னிலையில் எஸ்.டி..ஃபாரூக், நகர்மன்ற உறுப்பினர் ஷம்சுத்தீன், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் தலைவர் பாளையம் சதக்கத்துல்லாஹ் ஆகியோர் பயணக்குழுவினருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.



அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடையே பயணக்குழுவைச் சேர்ந்த பாரதி கண்ணன் தங்களின் பயண நோக்கம் குறித்து சிற்றுரையாற்றினார்.

பயணக்குழுவினர் தங்களின் இந்த பரப்புரை பயணம் முழுக்க

1.காசுக்கு குடிநீரை வாங்க மாட்டோம்

2. குளிர்பானம், சோப்பு, பற்பசை போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை பயன்படுத்த மாட்டோம்.

3. பாலித்தீன் பை போன்ற மக்காத குப்பைகளை ஏற்படுத்த மாட்டோம்.

4. பணம் கொடுத்து விடுதிகளில் தங்க மாட்டோம்.

5. உணவே மருந்தாக வாழ்ந்த நம்மை மருந்தே உணவாக வாழக் காரணமான ஆங்கில மருந்துகளைப் பயன்படுத்த மாட்டோம்.

என்ற உறுதி மொழியோடு பயணிப்பது குறிப்பிடத்தக்கது.

ஊர் மக்கள் அன்புடன் வழியனுப்பி வைக்க பயணக்குழுவினர் தூத்துக்குடி நோக்கி தங்கள் பரப்புரை பயணத்தை தொடர்ந்தனர்.


களத்தொகுப்பு, செய்தியாக்கம் & படங்கள்:
சாளை பஷீர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved