Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:46:53 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18226
#KOTW18226
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஆகஸ்ட் 29, 2016
நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் இனி கிடையாது!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2469 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நகராட்சி, பேரூராட்சி ேபான்ற உள்ளாட்சி அமைப்புகளிலும் தலைவர் பதவிக்கு இனி நேரடி தேர்தல் கிடையாது. அவற்றிலும் மாநகராட்சி மேயரைப் போல் கவுன்சிலர்களே தலைவரை தேர்வு செய்வார்கள். இதற்கான புதிய சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் பதவிக்கு, இது வரை மக்களால் ஓட்டு போட்டு தேர்வு செய்யும் வகையில் நேரடி தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் முறையை ரத்து செய்து, கவுன்சிலர்களால் தேர்வு செய்யும் வகையில் புதிய சட்டத்தை சமீபத்தில் தமிழக அரசு கொண்டு வந்தது.

இதைத் தொடர்ந்து, தற்போது நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கும் அதே போல் நேரடி தேர்தலை ரத்து செய்ய புதிய சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் வேலுமணி, ஒரு மசோதாவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:தற்போது, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் மன்றங்களுக்கு தேர்தல், கட்சி அடிப்படையில் நடத்தப்படுகின்றன. தலைவர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சில சூழ்நிலைகளில் தலைவர், மன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பையும் மன்ற உறுப்பினர்கள், தலைவரின் ஒத்துழைப்பையும் பெற முடிவதில்லை என்றும், அதன் மூலமாக தலைவர், மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதால் பொதுமக்களுக்கு பணிகளை செய்வதற்கான தீர்மானங்களை நிறைவேற்றுவதிலும், மன்றங்களின் நடவடிக்கைகளில் கருத்து ஒற்றுமை ஏற்படுவதற்கும் தடைகள் இருப்பதாக அரசுக்கு தெரிய வந்துள்ளது.

மாநகராட்சி மன்றங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை உணர்ந்து மன்ற உறுப்பினர்கள் தங்களுக்கிடையே இருந்து ஒருவரை மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுப்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு மாநகராட்சி சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மாநிலத்தில் அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் ஒரே சீரான தேர்தல் நடைமுறைகளை கொண்டிருக்கும் ெபாருட்டு, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்களையும் மன்ற உறுப்பினர்களால் அல்லது அவர்களுக்குள்ளே இருந்து நேரடியாக தேர்ந்தெடுப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் தலைவரை கவுன்சிலர்களே தேர்வு செய்வார்கள்.

தகவல்:
தமிழ் முரசு


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...உள்ளாட்சியில் நல்லாட்சி
posted by mackie noohuthambi (kayalpatnam ) [30 August 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44564

உள்ளாட்சியில் நல்லாட்சி என்று முழங்கிய கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நமது மண்ணின் மைந்தர் அபூபக்கர் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

சிலர் நாக்கு கரு நாக்கு அதுதான் பலித்து விட்டது என்பார்கள். சிலர் நாக்கில் விஷயமிருக்கிறது அதுதான் இப்படி நடக்கிறது என்பார்கள். சிலர் நாக்கில் விஷமிருக்கிறது அதுதான் இப்படி எல்லாம் பேசுகிறார் என்பார்கள். சிலர் கராமாத்துள்ள நல்லடியார்களின் து ஆ பரக்கத் இவருக்கிருக்கிறது என்பார்கள்.

ஆனால் இந்த செய்தியை படிப்பவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாகிறது. ஆட்சியில் யார் யார் அமர்கிறார்களோ அவர்கள் இஷ்டத்துக்கு இந்த விஷயத்தை அவர்களுக்கு சாதகமாக வளைத்துக் கொண்டு அதற்கு சட்ட அங்கீகாரம் வழங்குகிறார்கள். வானளாவிய அதிகாரம் படைத்த முதல்வர் சபாநாயகர் என்ற துணிச்சலில் இதை செய்கிறார்கள், முன்னாள் முதல்வர் கலைஞரும் சரி இந்நாள் முதல்வர் அம்மாவும் சரி இனி யாராவது 2021 புதியவர்கள் முதல்வராக வந்தால் அவர்களும் சரி இதையே செய்வார்கள். இந்த சட்டம் சரியா தவறா என்பதை பற்றி ஒட்டியும் வெட்டியும் விவாதம் செய்ய சட்டமன்றத்தில் எதிர்க்க கட்சிகளும் இல்லை. 98 உறுப்பினர்கள் கொண்ட ஒரு பெரிய வரலாறு காணாத எதிர்க்க கட்சிகளைக் கொண்ட சட்ட மன்றம் என்ற பெயர் மட்டும் இருக்கிறது.

ஆனால் நமதூரைப் பொறுத்தவரை நமதூருக்கு இது ஒரு நிம்மதி தரும் செய்தி என்றுதான் நினைக்க தோன்றுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் நகர்மன்றம் செயல்பட முடியாமல் இருந்தது. நகர்மன்ற தலைவரை எதிர்த்து நகர்மன்ற உறுப்பினர்களும் நகர் மன்ற உறுப்பினர்களை எதிர்த்து நகர்மன்ற தலைவரும் மாறி மாறி தங்கள் தரப்பு நியாயங்களை மக்களிடம் சொல்லி வருகிறார்கள். ஆனால் ஒன்றுபட்டு இந்த ஊரின் முன்னேற்றத்துக்காக என்ன செய்தீர்கள் என்று யாரும் கேட்டால் அதற்கு ஒரு விரலை காட்டி குற்றம் சாட்டுபவர்கள் தங்களுக்கு எதிராக தங்களின் மூன்று விரல்கள் தங்களையே குற்றம் சாட்டுவதை வசதியாக மறந்து விட்டார்கள்.

இப்போது ஒரு மாற்றம் கண்ணுக்கு தெரிகிறது. கட்சி அடிப்படையில் உறுப்பினர்களை தேர்வு செய்வதும் அந்த உறுப்பினர்கள் பெரும்பான்மையினர் நகர் மன்ற தலைவரை தேர்ந்தேடுப்பதும் நல்ல அணுகு முறைதான். ஆனால் நாம் நினைக்கும் நல்லவர்கள் கறை படாத கரத்துக்கு சொந்தக் காரர்களும் எல்லா கட்சியிலும் இருக்கவே செய்வார்கள்.கூடியவரை இளைஞர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

YOUTHS ARE NOT USELESS - THEY ARE USED LESS

இளைய தலைமுறையினரின் வேகம் முதிய தலைமுறையினரின் விவேகம் இரண்டும் கைகோர்த்து பயணிக்க வேண்டும். அப்போதுதான் நாம் கனவு காணும் உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற எண்ணம் நனவாகும்.வெறும் கோஷங்களால் அதை சாதிக்க முடியாது.

எனவே உள்ளாட்சியில் நல்லாட்சி அமைய இவர்கள் எல்லோரும் தக்வா என்ற இறை அச்சம் உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம். யாருடைய நெற்றியிலும் அந்த இலச்சினை ஓட்டப் படவில்லை. அது உள்ளம் சார்ந்த விஷயம் எனவே நாம் அல்லாஹ்விடமே திரும்ப வேண்டும். அவனிடமே இரு கரம் ஏந்தி பிரார்த்திக்க வேண்டும். நபிகள்நாயகம் அவர்கள் நமக்கு கற்று தந்த து ஆ வை அதிகம் அதிகம் ஓதி நமது வாக்குகளை செலுத்த வேண்டும்.

ALLAAHUMMA LAA THUSALLITH ALAINAA MANN LAA YAKHAAFUKA VA LAA YARHAMNA .....

நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவைகளாக அமையட்டும்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [30 August 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44566

இது யாருக்கு நல்லதோ இல்லையோ நமது நகர்மன்றத்திற்கு நல்லதே!

காரணம் நடக்கும் நகர்மன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுத்த தலையும் மக்களால் தேந்தெடுத்த உறுப்பினர்களும் நேர்கோட்டில் அரவணைத்து செல்லாததால் பாதிக்கப்பட்டது வரிகட்டிய பொதுமக்களாகிய நாமும் நமது வரிப்பணமும் தான்.

வரும் நகராட்சி நம் முன்னோர்கள் காட்டித்தந்த வழியில் பொதுசிந்தனையுடைய தலைவர் மற்றும் உறுப்பினர்களால், மக்களாகிய நமக்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் சிந்தனை உள்ளவர்களால் அமைய வல்லோன் அருள்புரிவானாக- ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved