Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:35:09 PM
செவ்வாய் | 16 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1720, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:47
மறைவு18:27மறைவு00:54
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18155
#KOTW18155
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஆகஸ்ட் 7, 2016
காயல்பட்டினத்தை அரசுப் பேருந்துகள் புறக்கணிப்பதைக் கண்டித்து “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் திருச்செந்தூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3376 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நிர்ணயிக்கப்பட்ட வழித்தடமான காயல்பட்டினத்தை அரசுப் பேருந்துகள் புறக்கணித்துவிட்டு, மாற்றுப்பாதையில் செல்வதைக் கண்டித்து “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் நடத்தப்பட்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், காயல்பட்டினம் அகநகர் & புறநகர் பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். விரிவான விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் வழித்தடத்தில் வந்து செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள் அதைப் புறக்கணித்து மாற்றுப் பாதையில் செல்வதைக் கண்டித்து, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டதன் அடிப்படையில், இதுவரை காணக்கிடைத்திராத பல பேருந்துகள் தற்போது காயல்பட்டினம் வழித்தடத்தில் வந்து செல்கின்றன.

என்றாலும், இன்றளவும் பல பேருந்துகள் காயல்பட்டினத்தைப் புறக்கணித்து மாற்றுப் பாதையில் செல்வதும் வாடிக்கையாகவே உள்ளது.

இதனைக் கண்டித்தும், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்குடனும், திருச்செந்தூர் - தியாகி பகத்சிங் பேருந்து நிலையம் அருகில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், 06.08.2016. சனிக்கிழமையன்று (இன்று) காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.















“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும தலைமை ஒருங்கிணைப்பாளர் பீ.எம்.ஏ.ஸதக்கத்துல்லாஹ் தலைமை தாங்கினார். அதன் நிர்வாகக் குழு உறுப்பினர்களான எம்.என்.அஹ்மத் ஸாஹிப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த, எம்.எம்.முஜாஹித் அலீ அறிமுக உரையாற்றினார்.







நிர்ணயிக்கப்பட்ட காயல்பட்டினம் வழித்தடத்தைப் புறக்கணித்துவிட்டு, மாற்றுப் பாதையில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதைக் கண்டித்தும், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு தர வலியுறுத்தியும் இவ்வார்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

எம்.ஏ.புகாரீ, அஹ்மத் சுலைமான், தர்மர், இல்யாஸ் உள்ளிட்டோர் முழக்க வாசகங்களை முன்மொழிய, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற காயலர்கள் அதை வழிமொழிந்தனர்.











“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகக் குழு உறுப்பினர் ஏ.எஸ்,புகாரீ நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.



இதற்குப் பிறகும் இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காவிடில், தமிழகம் தழுவிய அளவில் போராட்டத்தை விரிவுபடுத்தவும், தொடர்புடைய போக்குவரத்து அதிகாரிகள் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் போவதாக ஆர்ப்பாட்டத்தில் அறிவிக்கப்பட்டது.























































இந்த ஆர்ப்பாட்டத்தில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், துபை காயல் நல மன்றத் தலைவர் ஆடிட்டர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ, தாய்லாந்து காயல் நல மன்ற தலைவர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், அதன் செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ,

புதுப்பள்ளி ஜமாஅத் பொருளாளர் ஏ.எஸ்.அஷ்ரஃப், ஐக்கிய விளையாட்டு சங்க பொருளாளர் எம்.எல்.ஹாரூன் ரஷீத், அதன் செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ், குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இணைச் செயலாளர் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் நிர்வாகக் குழு உறுப்பினர் என்.டீ.பாதுல் அஸ்ஹப் ஜுமானீ, இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது,

காயல்பட்டினம் நல அறக்கட்டளை தலைவர் எஸ்.ஐ.அபூபக்கர், ஐ.ஐ.எம். நிர்வாகி எம்.ஏ.இஸ்ஸத்தீன், விஸ்டம் பப்ளிக் பள்ளி தலைவரும் - கே.எம்.டீ. மருத்துவமனை நிர்வாகியுமான டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளான முஹ்ஸின் முர்ஷித், ஐதுரூஸ்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர தலைவர் ஷம்சுத்தீன், அதன் நிர்வாகக் குழு உறுப்பினர் ரய்யான் ஷாஹுல் ஹமீத், அதிமுக நகர நிர்வாகிகளான இல்யாஸ், பீ.எஸ்.அப்துல் காதிர், முத்து முஹம்மத், திமுக நகர நிர்வாகிகளான எஸ்.ஏ.கே.ஜலீல், SDPI தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஷம்சுத்தீன், பாரதீய ஜனதா கட்சியின் நகர நிர்வாகி பண்டாரம், தர்மர், புரட்சி சங்கர், காயல்பட்டினம் நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை தலைவர் எம்.ஏ.ஷேக் ஆகியோர் உட்பட, காயல்பட்டினம் அகநகர், புறநகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



திருச்செந்தூர் காவல் ஆய்வாளர் ஆடிவேல் தலைமையில், துணை ஆய்வாளர் செ.பாஸ்கரன் உள்ளிட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளை, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகளான ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல், எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், சாளை நவாஸ், எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், எஸ்.கே.ஸாலிஹ், அதன் அங்கத்தினரான ஷாஹுல் ஹமீத் (மனிதநேய ஜனநாயகக் கட்சி), ஜஃபருல்லாஹ், எம்.ஏ.கே.முஹம்மத் இப்றாஹீம் ஸுஃபீ, எம்.ஏ.சி.முஹம்மத் முஜாஹித், எஸ்.ஏ.முஹ்யித்தீன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

முன்னதாக, காயல்பட்டினத்தில் பலர் தம் கடைகளை அடைத்துவிட்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதும், வேறு பலர் கடைகளில் மாற்றுப் பொறுப்பாளர்களைப் பணியமர்த்திவிட்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கவை.























“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [07 August 2016]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 44378

பாராட்டுக்கள்:-

ஊரின் நலனில் அக்கறை கொண்டு, பாடுபடும் நமது சமூக ஊடகக் குழுமம் சகோதரர்களுக்கம், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் அனைவர்களுக்கும்.

நன்றிகள் :-

பல வேலைப்பளுவிற்கு மத்தியில் சிரமங்களை பார்க்காமல் கலந்துகொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்.

ஆச்சரியம்:-

கலந்து கொண்டோர்களின் புகைப்படங்களைப் பார்க்கும் போது...!!!! அட...டா இவர்கள் எல்லாம் கலந்து கொண்டுள்ளார்களே. !!

இதில் பலர் நம் நாட்டில் பேருந்துக்களை பயன்படுத்திடாத உறவுகள்.

இவர்களுக்கு இந்த குறிக்கோள் கொண்ட ஆர்ப்பாட்டம் சம்பந்தம் இல்லாதது.! இருந்தும் இவர்கள் எல்லாம் கலந்து கொண்டுள்ளார்களே.. என்று..

ஒரே காரணம் ஊரின் நலன் ஓன்றே.

பூரிப்பு:-

தங்கள் நிறுவனங்களை பூட்டிவிட்டு ,இதில் கலந்துகொண்டுள்ள சகோதரர்களை, நினைத்து.

மனக்கசப்பு:-

இதில், முக்கிய நபர்களான மக்கள் பிரதிநிதிகள் ஆபிதா அம்மையார், சகோதரர் சம்சுதீன் அகியோரைத்தவிர மற்ற... மன்ற உறுப்பினர்களை காணாதது.

பிராத்தனை:-

வல்ல இறைவன் உங்களின் நல்ல முயற்சிகளை அங்கீகரித்து, மக்களுக்கு நன்மைகள் பல செய்து, நிம்மதியான வாழ்வைத் தந்தருள பிராத்திக்கிறேன்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [07 August 2016]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 44379

மாஷா அல்லாஹ்! எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே! நமதூர் மக்களின் பேருந்து பயண இன்னலை நீக்கவேண்டும் என்ற நெடிய நாள் கோரிக்கையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்தில்'நடப்பது என்ன" வாட்ஸப் குழுமத்தினரால் நடத்தப்பட்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்ப்பரித்து அலை அலையாய் செந்தூரில் சங்கமமாகிய மதிப்புயர் காயால் கண்மணிகளே !

சுட்டெரிக்கும் வெயில்கூட ஏதோ சுகம் தரும் சுவனம் போல் வெட்ட வெளியில் ஊர்மக்கள் நலனே எங்கள் நலன் என்று உங்கள் சொந்தவேலைகளையும்,வியாபாரங்களையும், வியாபார ஸ்தாபனங்களையும் இந்த நாளில் புறந்தள்ளிவிட்டு பக்கத்து ஊருக்கு பறந்து வந்து போராட்டத்தில் பங்கெடுத்த பண்புக்குறியவர்களே ,புண்ணியவர்களே உங்கள் அனைவர்களையும் ஆரத்தழுவ துடிக்கிறோம், அடக்க முடியா ஆனந்த கண்ணீரோடு உங்கள் கரங்களுக்கு கனிவான முத்தமிட மனம் அலைமோதி ஆர்ப்பரிக்கிறது, அரபகத்தில் அல்லாவா இருக்கிறோம் என்ன செய்வது!

உலக அமைப்பின்படி ஆயிரக்கணக்கான மையில்களுப்பால் அரேபியாவில் இருக்கிறோமேயல்லாது எங்களின் "ஆத்மா' என்றழைக்கும் அந்தரங்க இதயங்கள் உங்களோடுதான் இருந்தது,.ஒவ்வொரு நொடியும் உங்களை வாழ்த்திக் கொண்டும்,உங்களோடு வலம் வந்துகொண்டுமிருந்தது! உங்களின் உள்ளார்ந்த உணர்வுகளால் நீங்களும் உணர்ந்து இருப்பீர்கள்!`

உங்களின் இந்த புண்ணிய தொண்டின் மூலமாக வல்ல அல்லாஹ் நம்முடைய இலட்சியத்திற்குறிய வெற்றிக்கனியை விரைவில் தரத்தயாராகிவிட்டான்,அதை உளம்குளிர உண்டு மகிழத்தான் போகிறோம்!

அந்த போராட்ட புகைப்படத்தில்,ஆட்சிமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலோரைக்காணோம் ஊர்மக்களின் நலனே எங்கள் நலன் என்று முழக்கமிட்டு மார்தட்டிய அவர்களையும் அடையாளம் கண்டுகொள்ளுங்கள் காயல் பெருங்குடி மக்களே!

மக்களை மாக்கள் என்று எண்ணி மக்களுக்கு மகிமைமிக்க சேவை செய்ய காத்திருக்கிறோம் என்ற மயக்க வார்த்தைகளோடு மறுபடியும் பதவி பிச்சைகேட்டு கதவை தட்டவும் தயங்க மாட்டார்கள் ஒருசில உதவாக்கரை உள்நோக்கமுடையவர்கள் அவர்களையும் ஒதுக்கித்தள்ள தயங்க வேண்டாம்!

புரிந்து கொள்ளுங்கள் பண்பட்ட காயல்பதி மக்களே ,தியாக உணர்வுடன் புண்ணிய காரியங்களில் களப்பணி காணும் பெருந்தன்மையானவர்களே! பச்சோந்திதனத்துடன் இக்காயிலை சில ஏகாதிபத்திய எஜமானர்களின் காலடியில் விழ வைத்த சில வீணர்களும் வலம் வருவார்கள் அவர்களையும் அடையாளம் கண்டுகொள்ளுங்கள்!

மண்ணின் மைந்தன் நான் இம்மண்ணிற்காக நான் என்னையே அர்ப்பணிக்கிறேன் அதில் எந்த கொள்கையோ,கட்சியோ, அமைப்போ என்னை ஆடப்படுத்தாது என்று வீர வசனம் பேசிய அந்த அரசாங்க பொறுப்பு அங்கத்தினருக்கு கூட இந்த போராட்டம் ஒரு பித்தலாட்டமாக த்தெரிந்ததா?உங்கள் சொல்லுக்கும் ,செயலுக்குமுறிய வேறுபாட்டையும், மாறுபாட்டையும் அந்த மறை தந்த இறையோனிடமே விட்டுவிடுகிறோம்!

ஒரு சில வீணர்கள் விஷஉணர்வுடன் இந்த போராட்டம் ரத்து (கேன்சல்) ஆகிவிட்டது என்று தம்பட்டம் அடித்ததாக கேள்வி அவர்களை இழிவுடன் இனம் காட்டிவிட்டான் எல்லாம் வல்ல அல்லாஹ்!

நம்முடைய ஆர்பாட்டங்களை எல்லாம் வல்ல அல்லாஹ் அணுஅணுவாக அவதானித்துக் கொண்டிருக்கிறான் ஆர்பாட்டத்திற்காக உழைத்த அனைத்து அன்புள்ளங்களுக்கும், அதற்கு ஆதரவளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அந்த கிருபையாளன் வளமான,நலமான ,நன்மையான வாழ்வைக்கொடுத்து நம் நட்டங்களை நிறைவேற்றித் தந்தருள்வானாக ஆமீன்!

முடிவாகவும், மறுமுறையும் அனைத்து ஆர்ப்பாட்ட அன்புள்ளங்களுக்கு என் இதயம் மகிழும்,நெகிழும் நல்வாழ்த்துக்களை அவர்களின் பொற்பாதங்களில் காணிக்கையாக்குகிறேன்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நன்மை நடக்கட்டும்
posted by shahul hameed sak (malaysia) [07 August 2016]
IP: 113.*.*.* Malaysia | Comment Reference Number: 44380

அல்ஹம்துலில்லாஹ், என்னை நானே கிள்ளி பார்த்து கொண்டேன், நமதூர் புதுமையை நோக்கி நகர்கின்றது !? அல்லாஹ் நன்மையாக்கி வைப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...RED LETTER DAY
posted by mackie noohuthambi (kayalpatnam ) [07 August 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44381

சரித்திரத்தில் ஒரு முக்கிய நிகழ்வு நடக்கும் நாள் - வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வு நடக்கும் நாள் இவற்றை ஆங்கிலத்தில் RED LETTER DAY என்று சொல்வார்கள்.

6.8.2016 அப்படி காயல்பட்டின சரித்திரத்தில் ஒரு முக்கிய நாளாக பதிவு செய்யப் பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி ஆறரை கோடி இணையதளங்கள் இயங்கிவரும் நிலையில் கடந்த 6-8-1991 அன்று டிம் பெர்னெர்ஸ் லீ என்பவரால் உருவாக்கப்பட்ட WWW எனப்படும் ’world-wide-web’ இன்று தனது 25-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. என்பதை படித்த போது நமது நாட்டில் இணையதளங்களின் அசுர வளர்ச்சி நம்மை அதிர்ச்சி அடைய செய்கிறது. நமதூரில் அதன் தாக்கம் எப்படி பட்ட விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது என்பதையும் இன்றைய நிகழ்வு நமக்கு புரிய வைக்கிறது.

தொலைக்க காட்சி பெட்டி போன்று இருந்த கணினி மடிக்கணினியாக மாறி இப்போது கையடக்க தொலைபேசியில் எல்லாவற்றையும் பதிவிறக்கம் செய்ய முடியும் விரல் நுனியில் உலகில் நடக்கும் விஷயங்களை சொடுக்கி பார்த்துக் கொள்ளலாம் என்ற அளவுக்கு நாம் முன்னேறியுள்ளோம்.

WHAT IS UP ? என்ன நடக்கிறது என்பதுதான் இதன் தமிழ் அர்த்தம். அதுவே காலப் போக்கில் WHATSUPP என்று உரு மாறி இன்று நம் இளைஞர்கள் அதையே நடப்பது என்ன ? என்ற ஒரு குழுமமாக மாற்றி சாதனை படைத்துள்ளார். வாழ்த்துக்கள்.

நமதூர் பிரச்சினை இதில் கட்சி முஹல்லாஹ் பிரச்சினைகளை ஒதுக்கி தள்ளி விட்டு எல்லோருக்கும் நேற்று இன்று நாளை என்று ஒருநாளில்லாவிட்டால் ஒரு நாள் இந்த பேருந்து பிரச்சினை தலைவலியாகவே இருந்து வருகிறது என்பதை மனதில் கொண்டு களத்தில் எல்லோரும் நிற்பதை காண முடிந்தது.

கட்டுப்பாட்டுடனும் கடமை உணர்வுடனும் கண்ணியத்துடனும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தை கண்ட காவல் துறையினரே அசந்து போனார்கள் . தெய்வீக உணர்வு உள்ளவர்கள் சாத்வீக குணங்கள் உள்ளவர்கள் என்று போற்றப்படுபவர்கள்தான் நாம் என்பதை எல்லோரும் கண்கூடாக கண்டார்கள் .

வேறு ஊர்களில் ஆர்ப்பாட்டம் என்றாலே காவல் துறைக்கு அன்று உறக்கம் இருக்காது, பாதுகாப்புக்காக எல்லா முன்னேற்பாடுகளை செய்ய வேண்டி இருக்கும் ஆனால் இங்கே காவல் துறைக்கு என்ன உறுதிமொழி கொடுத்தார்களோ அதை நிறைவேற்றி காவல் துறைக்கு பொறுப்பான முதலமைச்சர் அவர்களையும் காயல்பட்டினம் மக்கள் மனம் குளிர செய்திருக்கிறார்கள். இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து செயல்படுத்திய ''என்ன நடக்கிறது'' வாட்ஸுப் குழுமத்துக்கு நமது பாராட்டுக்கள்.

அவர்கள் சிந்திய வியர்வைகளும் இதற்காக வியூகம் வகுத்து செயல்பட்ட விதமும் வீண் போகாது.ஊர் முழுவதும் சுற்றி திரிந்து நோட்டீஸ் கொடுத்தார்கள் ஜும்மா நாளில் பள்ளிவாசல்களில் அறிவிப்பு செய்ய ஏற்பாடு செய்தார்கள். எல்லா வீட்டுக் கதவுகளையும் இவர்கள் தட்டினார்கள் என்பதை விட எல்லோரது உணர்வுகளையும் உசுப்பி விட்டார்கள் என்பதுதான் உண்மை. ஊரிலிருந்து வருபவர்களுக்கு வாகன வசதியும் குடிப்பதற்கு தண்ணீர் வசதியும் மிக நேர்த்தியாக செய்திருந்தார்கள். அவர்கள் முயற்சி நிச்சயம் வெல்லும்.

கூடிய விரைவில் நடத்துனர்களும் ஓட்டுநர்களும் தங்கள் தவறுகளை திருத்திக் கொண்டு காயல்பட்டினம் வழியாக செல்ல வேண்டிய வாகனங்களை அந்த வழியே ஓட்டி செல்வார்கள் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்பட்டுள்ளது. நம்பிக்கைதானே வாழ்க்கை.

A SMALL STEP FORWARD , BUT A GREAT LEAP FOR MANKIND

நிலவில் முதலில் காலடி எடுத்து வைத்த ஆர்ம்ஸ்ட்ரோங் கூறிய வார்த்தைகள் இவை.இந்த குழுமத்தின் முயற்சிக்கும் பொருந்தும்.

வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by P.S.J.SHAIK ABDUL KADER (KAYAL PATNAM) [07 August 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44382

நடதேறிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழக அரசை எதிர்த்து போராடும் ஆர்ப்பாட்டம் அல்ல.

காயல்பட்டினத்தை புறக்கணிக்கும் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மெத்தனத்தனத்தை கண்டிக்க, நகரமக்களின் உரிமைகளை கேட்டு பெற்றிட , பேருந்து யார் வசதிக்காக, நகர மக்களை பயணிகளை பாதியிலே இறக்கிவிட செய்வதை கண்டிக்கும் விதம் , இந்த அரசு பெருத்து அலுவலர்வாசமும், ஆட்சியாளர் வாசமும் உண்மைநிலையை குறையை எடுத்து சொல்லவே இந்த ஆர்ப்பாட்டம்.

இந்த ஆர்ப்பாட்டத்தை நகரில் சிலர் கிண்டல், கேலி செய்வதோடு மற்றும்இன்றி பசாது படுத்தூர் செய்து வருகிறார்கள்.

நகர நலனில் அக்கறை கொண்டவர்கள் மற்றும்தான் கலந்து கொண்டார்கள். பொது வாழ்வில் - தன்ஆர்வம் கொண்ட சீமான்கள், அரசியலுக்கு அப்பால் நகர நலன்பேணி ஆர்ப்பாட்டம் வெற்றி நடை கண்டது. இந்த ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்க சிலர் வீண் வதந்திகளை பரவியது மக்களிடம் எடுபடவில்லை.

நல்லமுறையில் நடாத்திகாட்டிய வாட்ஸ்அப் சகோதரர்களை வாழ்த்தி, வரவேற்று மகிழ்கிறான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [09 August 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44393

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ் .....இவ்வளவு நம் மக்களின் ஓன்று கூடல் தலைகளா ......... என்று திகைத்து பார்க்கும் அளவுக்கு நமக்கு பெரும் மகிழ்சசியாகவே இருந்தது ......

இருப்பின் இன்னும் அதிகமாக நம் ஊர் மக்கள் இந்த தன்மை வாய்ந்த போராட்டத்தில் கலந்து இருப்பின் .....திருசந்தூர் மக்களும் நம் போராட்டத்தின் நியாத்தை உணர்ந்து இருப்பார்கள் ......

இந்த போராட்டத்தின் அங்கமாக நம் மரியாதைக்குரிய தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றது வெகுவாகவே பாராட்டத்துக்குரியது .....இன்ஷா அல்லாஹ் ....இதில் தக்க பலன் இருக்கும் .....

நம் சகோதரர் ஒருவர் குறிப்பிட்டது போல ...நம் ஊரின் நலனில் அக்கறை இலலாதவர்கள் + பஸ் போக்குவரத்தில் கொஞ்சமும் கஷட படாதவர்கள் தான் இந்த தன்மை வாய்ந்த போராட்டத்தை பற்றி தரக்குறைவாகவே >> WHATSAPP << போன்றவற்றில் பதிவு செய்து இருந்தார்கள் ......அந்த பதிவு என்னுடைய பார்வைக்கும் மிக துரிதமாகவே வந்தது .......அவர்களுக்கு நிதானமான தன்மை வாய்ந்த அவர்களின் மனதில் புரியும் வண்ணமாகவே பதிலை கொடுத்து கொண்டோம் ......

இது போன்ற ஒரு சிலரின் விமர்த்தனத்துக்கு எல்லாம் நம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் '' கண்டு கொள்ளாமல் “நடப்பது என்ன? அமைப்பு உறுப்பினர்கள் அவர்களின் ஊருக்கான இது போன்ற பல நல்ல செயல்களை தொடர்ந்து செய்து வர வேணும் ....

முக்கியமாக பாராட்ட பட கூடியது .... இந்த போராட்ட சமையத்தில் நமது ஊரில் கடையடைப்பு '' போன்று அல்லவா .. அனைவர்களும் '' மாஷா அல்லாஹ் ...தங்களின் கடைகளை அடைத்து ஒரு நாள் வியாபாரத்தை ..ஊர் மக்களுக்காக தியாகம் பண்ணியது நமக்கு பெருமையாகவே தான் உள்ளது .....

பொதுவாகவே அரசியல் கடசிகளின் போராட்ட சமையத்தில் தான் இது போன்று கடைகளை பூட்டி இருப்பார்கள் ....... தங்களின் நிழற் படத்தை பார்க்கும் போது .....வித்தியாசமான போராட்டத்தில் ,, வித்தியாசமான ஒரு கடையடைப்பு .. என்றே கூறலாம் .....

நமது ஊரின் பணம் படைத்து ..கார் ... வைத்து ...பஸ்ஸில் பயணிக்காதவர்கள் எல்லாம் ஓன்று கூடினார்கள் என்பதை >> நிழற்படத்தில் << பார்த்த போது நமக்கு மற்றற்ற மன மகிழ்சசியானது .....அல்ஹம்துலில்லாஹ் ....எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ......

இந்த ஒற்றுமை நம்மில் அனைத்து ஊர் பொது நல காரியங்களிலும் எப்போதும் இருக்க .... வல்ல நாயன் அருள் புரிவானாகவும் ஆமீன் .....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH சவூதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved