Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:15:24 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18117
#KOTW18117
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுலை 22, 2016
நகராட்சி திருடர்களின் கூடாரமாக ஆக கூடாது: நடப்பது என்ன? குழும துண்டு பிரசுரம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3135 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தை மையமாக கொண்டு - பல்வேறு நகர் பணிகளை மேற்கொள்ள துவக்கப்பட்டுள்ள நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் - இன்று துண்டு பிரசுரம் ஒன்றினை - நகரினில் - ஜும்மா தொழுகைக்கு பின்பு வெளியிட்டுள்ளது.

இரு பக்கங்களை கொண்ட அந்த துண்டு பிரசுரத்தில், தனது பணிகள் குறித்த அறிமுகத்தையும், எதிர்வரும் நகராட்சி தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு செய்திகளையும் அந்த குழுமம் வெளியிட்டுள்ளது.

நகர்மன்ற தேர்தல் குறித்து அந்த குழுமத்தின் சார்பாக வெளியாகியுள்ள துண்டு பிரசுரம் -

அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள நகர்மன்ற தேர்தலில், நம் நகராட்சியின் 18 வார்டுகளுக்கும், நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கு தகுதியானவர் என நாம் கருதும் 18 நகர்மன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யவேண்டும் என்றும்,

நம் நகராட்சி - திருடர்களின் கூடாரம் என்றில்லாமல், காயல்பட்டினம் நகராட்சியின் கஜானா - அமானிதம் (இறைவன் தந்த பொறுப்பு) என்று எண்ணி, செயல்புரியும் கண்ணியவான்களின் கூடாரமாக மாற வேண்டும் என்றும்


கருத்து தெரிவித்துள்ளது.




Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Noormohamed Zakariya (Riyadh saudia) [22 July 2016]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44286

அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) பரக்காத்தஹூ நமது ஊர் உள்ளாச்சி தேர்தலூக்கு 18 வார்டில் போட்டி போடும் கவுன்சிலர்கள் +2 ஆவாது படித்து இருக்க வேண்டும்

பொது வாழ்க்கையில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றிக்க வேண்டும் பணக்கார முதலாளி களுக்கு கைகூலியாக போய் விட கூடாது நமது ஊர் பஞ்சாய்யாத்திர்கு சொந்த மான நிலங்களை மீட்டேத்து ஏழை எளிய மக்களுக்கு அரசாங்க ஒப்புதல் பெற்று கொடுக்கவும் .

நல்ல தோர் தலைவர் வர வேண்டும் ஊர் மக்களுக்கு கட்டு பட்ட. தலைவர் வர. வேண்டும். அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் கட்டு படுகிற தலைவர் & கவுன்சிலர் வருவதர்கு எல்லோர்களும் துஆ. செய் வோம் ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...தீதும் நன்றும் பிறர் தர வாரா
posted by mackie noohuthambi (kayalpatnam ) [23 July 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44290

நகராட்சி கொள்ளையர்கள் கூடாரமாக இருக்க வேண்டும் என்று யார்தான் விரும்புவார்கள். வாக்கு கேட்கும்போது நல்லவர்களாக தான் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தான் வருகிறார்கள். அதன் பிறகு ஆட்சிக்கு வந்தபிறகு அவர்கள் இஷ்டப்படிதான் ஆட்டி படைக்கிறார்கள்.

வாட்ஸுப் குழுமமும் யாரையோ குறி வைத்து பேசுவதாகவே தெரிகிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறும் உறுப்பினர்களை திருப்பி அழைத்துக் கொள்ளும் உரிமை மக்களுக்கு எப்போது வருகிறதோ, அரசியல் சட்டம் அதற்காக எப்போது திருத்தப் படுமோ அப்போதுதான் உண்மையான மக்களாட்சி நடக்கும் அதுவரை இப்படிப் பட்ட தகிடு தத்தங்கள் தொடரவே செய்யும்.

யார் நெற்றியிலாவது இவன் கெட்டவன் இவன் நல்லவன் என்று எழுதியா ஒட்டி இருக்கிறது. அல்லாஹ்வை சாட்சியாக வைத்து பேசுபவர்கள் எழுதுபவர்கள் இவர்களே சொன்னதுக்கு மாறாக செயல்படும்போது வேறு யாருக்கு இவர்கள் பயப்படப் போகிறார்கள். நாம் செய்வது சரிதானா என்று ஒவ்வொருவரும் நினைத்து அல்லாஹ்வின் கேள்வி கணக்குக்கு பயந்து நடந்தாலே போதும்.

லஞ்சம் ஊழல் எல்லாவற்றையும் ஒழிப்போம். வாக்குக்கு பணம் கொடுக்க வாங்க மாட்டோம் என்று சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கியவர்கள் டெபாசிட் தொகை இழந்தார்கள் ஒரு இடத்திலும் தங்கள் பாதங்களை பதிக்க முடியவில்லை. அதுவும் சுயநலத்தினால் ஏற்பட்ட கூட்டணிதான். தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பவர்களுடன் தான் கூட்டு என்று பேரம் பேசினார்கள். இப்போது தோற்றவுடன் கழன்று கொண்டார்கள்,,,ஊழலுக்கு எதிராக லஞ்சத்துக்கு எதிராக தொடர்ந்து ஒன்றிணைந்து போராட அவர்கள் தயாரில்லை.

இந்த நாடு அரசு எப்படியோ அப்படித்தான் குடி மக்களும் இருப்பார்கள். இந்த நாட்டை இனி திருத்தவே முடியாது...

ஊழலும் லஞ்சமும் நமது வீட்டிலுருந்துதான் ஆரம்பமாகிறது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [23 July 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44291

நாம் அறிந்த வரை நமது நகராட்சி இதுவரை சிறப்பாகவே செயல் பட்டுள்ளது.

நடக்கும் நகராட்சி மட்டுமே நான் பெரியவனா? அல்லது நீபெரியவனா? என்ற ஈகோ பிரட்சினையில் நடக்க வேண்டிய நல்ல காரியங்கள் தள்ளிப்போகிறது. இதுதான் அறியமுடியம் உண்மை!

தன்னிறைவு பெற்ற எவரும் தானாக பொதுநலத்திற்கு தன்னை அர்ப்பணிக்க வருவதில்லை. நாமே வற்புறுத்தி ஈடுபட வைத்தாலும் சுற்றியிருப்பவர்கள் சும்மா இருப்பதுமில்லை. இதற்கெல்லாம் மேல் பொதுநலம் பேசும் நானும் என் வேலையை முடிக்க குறுக்குவழியயே தேர்ந்தெடுக்கிறேன். இதை நான்மட்டுமல்ல இதை படிக்கும் கேட்கும் எவனும் மறுக்க முடியாது என்பதே நாடறிந்த உண்மை.

ஒரு குறுந்தொகை மட்டுமே மாதவருமானமாக பெற பல லகரங்களை செலவு செய்கிறார்கள் என்றால் யோசிக்கும் தன்மையை இறைவன் தரவில்லையா?

இம்முறை அமைத்தது போலல்லாமல் தலைவோரோ / தலைவியோ, மற்றும் உறுப்பினர்களோ தோளோடு தோள் கொடுத்து நடக்கும் கசப்புகளை ஊர்மக்களுக்காக மறந்து ஒன்றாக பொதுப்பணியாற்றினாலேயே ஊரில் நல்லது நடக்கும். வேற்றுமைகள் மறையும், நாம் கொடுக்கும் வரிப்பணம் நமக்கு உதவியாகும்.

இருப்பவன் வீட்டு வேலையும் நடக்கும் இல்லாதவன் வீட்டு வேலையும் நடக்கும் இதை மனதில் கொண்டு நாம் அனைவரும் ஒன்று பட்டு அனுபவ சாலிகளையும் ஊர்மக்களுக்காக ஒன்று பட்டு செயல் படுபவர்களையும் தேந்தெடுப்போம். இறைவன் அருள்புரிவான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. என்னதான் வழி ?
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [23 July 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44293

"நடப்பது என்ன" வாட்ஸப் குழுமம் நமதூருக்கு நன்மையான காரியங்களை கையிலெடுத்து செய்து வருகிறார்கள்! இதில் உள்ளூர் தொண்டுள்ளங்களும், அயல் நாடுகளில்வாழும் நல்லுள்ளங்களும் அடங்கும்!

அவர்களின் நன்மைகளின் பரிமாணம் படர்ந்து கொண்டே போகவேண்டும் என்கின்ற ஒரு நல்ல நோக்கத்தில்,நாசமாந்து கிடக்கும் நம் நகராட்சியை மீண்டும் நல்லதாக ஆக்கி , ஆக்கப்பூர்வமாகவும், ஊக்கப்பூர்வமாகவும் உயிர் கொடுக்க மாட்டோமா என்ற ஏக்கத்தின் வெளிப்பாட்டையே இந்த பிரசுரம் மூலமாக தெரிவித்து இருக்கினறார்கள்!

இது அந்த குழுமத்தின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, இந்த நகராட்சியால் நசிந்துபோன காயல் மக்களின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் இதில் அடங்கும்!

நாம் என்ன செய்யலாம் எதிர்காலத்தில் என்ற ஒரு வினா எல்லோர் உள்ளத்தலும் உயர்ந்து நிற்பதை உணரமுடிகிறது.

நாம் என்னசெய்தாலும் ஏகாதிபத்திய ஆளுமை வர்க்கம் எல்லா உரிமைகளையும் எந்த விலை கொடுத்தாலும் வாங்கி,எங்கள் விரல் நுனி ஆணைக்கு அணுவளவும் அசையாத தலையாட்டி பொம்மைகளாக ஆக்குவோம் என்கின்ற சபதத்தையும் செய்து காட்டியது மட்டுமல்ல இனியும் செய்ய தயாராக இருக்கின்ற இரும்பு வலிமை படைத்த இறுமாப்புடையவகள் முன் எறுப்புக்கொப்பான நம்முடைய வலிமையை வைத்துக்கொண்டு என்ன தான் செய்ய முடியும்!

சென்ற நகராட்சி பொறுப்பேற்று ஒருவாரத்திற்குள் நடந்த பொதுக்கூட்டத்தில் நான் எந்த தவற்றையோ, ஊழலையோ மனமறிந்து செய்யமாட்டேன் என்று மேஜை உடைய அடித்து, நம் மார்புகள் அதிர்ச்சியாகும் அளவிவிற்கு அலறியபடி ஆகாயம் இடிய சத்தம் போட்டு சத்தியம் செய்த அந்த சத்தியவான்கள் எத்தனை நாட்களில் காணாமல் போனார்கள்!

எங்கும் காணாமல் போகவில்லை, ஒரு பதுங்கு குழியில் பதுங்கி இருந்தார்கள் எல்லா வகை பாதுகாப்புகளையும் பெற்றுக்கொண்டு!

இதற்கு வழிதான் என்ன ?எனக்கு தெரிந்த ஒரு யோசனை.இது சரியா?தவறா?தீர்மானிப்பதை நடுநிலை நாயகர்களிடம் விட்டுவிடுகிறேன்!

அதாவது,ஒவ்வொரு வார்டிலும் அத்தனை வாக்காளர்களும் ஒரு காகிதத்தில் கீழ் கண்டவாறு வாசகத்தை அமைத்து எழுதவேண்டும்,

நீங்கள் உங்கள் கடமைகளை ஒழுங்கான முறைப்படி செய்யத்தவறி ,அதனால் நாங்கள் பாதிப்புக்குளாகும் பட்சத்தில் ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குப்பால்,பெரும்பான்மையினரின் முடிவின் படி உங்களை தகுதி நீக்கம் செய்ய எங்களுக்கு முழு உரிமை உண்டு.இந்த நிபந்தனைக்கு நான் முழு ஒப்புதல் அளிக்கிறேன்!

என்ற உறுதிமொழியை அத்தனை வேட்பாளர்களிடம் முதலிலேயே பெற்றுக்கொண்ட பிறகே நாம் வாக்களித்தால் என்ன என்பதே இந்த எளியோனின் கருத்தாகும்!

பரிசீலித்துதான் பார்ப்போமே,பயன் கிட்டினால் இது ஒரு முன் மாதிரியாக நம்மூருக்கு மட்டுமல்ல நம் தமிழ் நாட்டிற்கும் நன்மை பயக்கும் ஒரு வழிகாட்டியாகுமல்லவா?அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன் ! .

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved