Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:15:36 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18032
#KOTW18032
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுலை 3, 2016
ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 95-வது செயற்குழு மற்றும் 36-வது பொதுக்குழு கூட்டம் நோன்பு திறப்பு இப்தார் நிகழ்வாக நடந்தேறியது!
செய்திஒய்.எம்.சாலிஹ் (மக்கா)
இந்த பக்கம் 2496 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

செளதி அரேபியா-ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 95-வது செயற்குழு மற்றும் 36-வது பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை:-

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 95-வது செயற்குழு, மற்றும் 36-வது பொதுக்குழு கூட்டம் கடந்த 24.06.2016 ரமலான் பிறை 19 வெள்ளிக்கிழமை மாலை 07:00 மணியளவில் ஜித்தா – ஷரஃபிய்யாவில் அமைந்துள்ள சஹாரா உணவகத்தின் உள்ளரங்கில் வைத்து நடந்தேறியது.



இஃப்தார் நோன்பு துறப்பு:

காயலின் சுவைமிகு கறிகஞ்சி, பழங்கள் மற்றும் பொரியல்களுடன் இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் புனித ரமலான் நோன்பு திறந்து வல்லோன் இறைவனை போற்றி புகழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்தபட்டது. தொடர்ந்து மஃரிப் தொழுகையை எதிரில் உள்ள அல் அபீர் மருத்துவமனையில் உள்ள தொழும் இடத்தில் கூட்டாக நிறைவேற்றி வந்த பின்னர் தேநீர் பரிமாறப்பட்டு பிறகு கூட்டம் இனிதே ஆரம்பமானது.































இக்கூட்டதிற்கு மன்றத்தலைவர் சகோ.குளம்,எம்.ஏ.அஹமது முஹ்யித்தீன் தலைமை ஏற்று நடாத்த, சகோ. அல்ஹாபிழ் எஸ்.எம்.ஸல்மான் ஃபாரிஸ் கிராத் ஓதி துவக்க, வந்திருந்த அனைவரையும் சகோ. ஏ.எம்.செய்யது அஹமத் அகமகிழ வரவேற்க கூட்டம் ஆரம்பமானது.













தலைவர் உரை:

நம் மன்றத்தின் பல நல்ல நோக்கங்கள் இறையருளால் இனிதே நிறைவு பெற்று வருவதும், வழமையான உதவிகள் அல்லாது இன்னும் பல உதவிகளை நம் மன்றம் செய்து வருவதும், நம் மன்ற உறுப்பினர்கள் செலுத்தி வரும் சந்தா மற்றும் நன்கொடைகளை கொண்டு நம் ஊரில் தேவையுடயவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ வகைகளுக்கு வழங்கி வருகின்றோம்.





மேலும் இந்த புனிதமிகு ரமலானில் நம் மன்ற உறுப்பினர்கள் சதக்கா, ஜகாத் தர்மங்களை வழங்கிடுமாறும் அல்லாஹ் நமக்கு வழங்கிய ஒரு நல்ல வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்வோமாக என்றும் மன்றப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து விபரமாக எடுத்துச் சொன்னார் மன்றத்தலைவர் சகோ.குளம் எம்.ஏ.அஹ்மது முஹ்யித்தீன்.





மன்ற செயல்பாடுகள்:

கடந்த மாதம் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பேசப்பட்ட செய்திகள் மற்றும் மன்ற செயல்பாடுகள், தீர்மானங்கள் அதன் நிமித்தம் நடேந்தேறிய பணிகள் மேலும் சமீபத்தில் தாயகம் சென்றதில் ஷிபா மருத்துவ அமைப்பு மற்றும் இக்ரா கல்வி சங்கம் சென்றும் அதன் நிர்வாகிகளை சந்தித்ததும் இது சம்பந்தமான இதர தகவல்களை விபரமாக தெரிய தந்தும் மேலும் இன்று ஜும்மா தொழுகைக்கு பின் மன்றத்தின் முன்னால் ஆலோசகர் சகோ எஸ்.ஏ.எஸ்.சதக்கத்துல்லாஹ் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு அமைந்ததும் அது சமயம் மன்றம் சார்ந்த தகவல்களை பரிமாறி கொண்டதும் அவர்களும் இக்ரா மற்றும் ஷிபா அமைப்புகள் நல்லதோர் வளர்ச்சி பெறவும் நல்ல பல ஆலோசனைகளையும் வழங்கிய நடப்பினையும் மேலும் நம் காயல் நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களில் இறை பணியாற்றும் இமாம் மற்றும் முஅத்தின்களுக்கு இரு பெருநாள்கள்களின் சிறப்பு ஊக்க உதவியளிக்கும் திட்டத்திற்காக வேண்டி முன்னேற்பாடு செய்யவும் கருத்துக்களை பகிரவும் வேண்டி கடந்த இரு மாதத்திற்கு முன்னர் உலக அனைத்து காயல் நல மன்றங்களின் நிர்வாகிகளை ஒன்றிணைத்து தற்காலிகமாக உருவாக்கப்பட வாட்ஸ் அப் குழுமத்தில் பகிரப்பட்ட செய்திகளும் அதன் முழு விபரங்களையும் அனைவருக்கும் விளக்கமாக தெரியபடுத்தியதுடன் இந்த இமாம் முஅத்தின் அவர்களுக்கு நாம் கடந்த ஆண்டுகளில் உதவிய பொழுது அதனை அவர்களிடம் கையளிக்கப்பட்ட சமயம் அவர்கள் அனைவரும் மன நெகிழ்ச்சியுடன் பெற்றும் இதற்காக உதவிய, உழைத்த நல்லுள்ளங்களுக்கு நாயன் அல்லாஹ்விடம் நெஞ்சுருக பிரார்த்தித்த நல்ல செய்தியையும் மன்றச்செயலர் சகோ சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.





நிதி நிலை:

மருத்துவம் மற்றும் கல்விக்கான நிதி ஒதுக்கிடு, சந்தா மற்றும் நன்கொடைகளின் வரவு மற்றும் இருப்பு விபரங்களை அதன் தகவல்கள் அடங்கிய பட்டியல் அச்சிடப்பட்டும் எல்லோருக்கும் வழங்கப்பட்டது. மேலும் மன்றம் சார்ந்த பல செய்திகளையும் தெரிவித்தும் கொண்டார் பொருளாளர் சகோ. எம். எஸ். எல். முஹம்மது ஆதம்.





சிறப்பு விருந்தினர்களின் கருத்துரை:

புனித உம்ரா கடமையை நிறைவேற்ற புனித மக்கா வந்ததில் சிறப்பு விருந்தினராக ரியாத் காயல் நல மன்றத்தின் தலைவர் சகோ. ஏ.ஹச்.முஹம்மது நூஹு கலந்து கொண்டு, நல்ல பல கருத்துக்களை தந்து, நம் ஊருக்காக நாம் ஒன்று கூடி சேவை செய்வது ஒரு மகத்தான பணியாகும் அதனை நாம் எல்லோரும் இணைந்து தொடர்ந்து செய்வதால் வல்ல இறைவன் நமக்கு பல நன்மைகளை ஈருலகிலும் வழங்குவான் என்பதுடன் வழங்கியும் வருவதும் அவைகளை தங்களை போன்றவர்கள் நேரடியாக உணர்வதும் மேலும் உங்கள் ஜித்தா மன்றத்தின் கடந்த செயற்குழு கூட்டங்களில் உறுப்பினர்களின் கருத்து பரிமாற்றங்கள் மற்றும் கலந்துரையாடல்களில் மிக ஆரோக்கியமான அதுவும் அவசியமான தங்களது விருப்பம் போலவும் தாங்களும் விரும்புவதான உலக காயல் நலமன்றங்களின் கல்வி மற்றும் மருத்துவ கூட்டமைப்புகளான இக்ரா – ஷிபா இரண்டையும் ஒரே கூரையின் கீழ் ஒரே நிர்வாகத்தின் தலைமையில் கொண்டுவந்து அதன் செலவினங்களை வெகுவாக குறைக்க முயற்சிப்பதுடன் மேலும் இந்த அமைப்புகளை எந்த நோக்கத்திற்காக உருவாக்கிட பாடுபட்டமோ அதன் பலனை நாமும், பயனை மக்களும் முழுமையை பெற உதவியாக அமையும் இன்ஷா அல்லாஹ் என்ற கருத்தையும் இம்மன்றத்தில் பதிவு செய்து அமர்ந்தார்.





சிறப்பு அழைப்பாளராக மன்ற துணைத்தலைவர் சகோ.மருத்துவர் எம்.ஏ.முஹம்மது ஜியாதுவின் தந்தையும் ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் ஆலோசகருமான பொறியாளர் முஹம்மது அபூபக்கர் (லண்டன்) அவர்கள் கலந்து கொண்டும் தான் 80 –களில் ரியாதில் பணி புரிந்த போது நம் காயல் மக்கள் ஒன்று கூடும் வேலையில் அடிக்கடி பேசிக்கொள்வோம், நம் ஊர் ஏழை மக்களுக்காக நாம் எதாவது செய்ய வேண்டும் என்று அந்த ஆவலின் உந்துததில் காயல் நல மன்றம் என்ற ஒரு அமைப்பை சிறிதாக துவக்கினோம். அப்போதெல்லாம் எந்த தகவல் தொடர்பு சாதனமும் இல்லாத நேரத்தில் ஒருவருக்கொருவர் செய்திகளை கொண்டு சென்றும் அறிய வைத்து சிறிய அறையில் வைத்து கூட்டங்கள் நடத்துவோம். ஆனால் இப்போது பல வழிகளில் நாம் தகவல்களை பரிமாறிக்கொள்கிறோம். அதனால் பல கிளைகளாக இன்று உலக காயல் நல மன்றங்கள் உருவாகி இருக்கிறது. குறிப்பாக இந்த மன்றத்தினை உற்று நோக்கும் போது மாஷா அல்லாஹ் நல்ல பல சேவைகளை செய்து வருகிறீர்கள். அதற்கு காரணம் உங்களுக்குள் உள்ள நல்ல புரிந்துணர்வு மிக்க ஒற்றுமை. தனிப்பட்ட முறையில் நாம் இவ்வளவு பெரியதாக செய்ய முடியாது அல்லாஹ் நமக்கு வழங்கிய பரக்கத்தை கொண்டு தேவையுடயவர்களுக்கு உதவுவதால் நிச்சயமாக நாம் நல்ல நிலையில் இருப்போம்.







ஒரு அமைப்பு நல்ல நிலையில் செயல்பட வேண்டும் என்றால் ஒற்றுமையும் , ஒழுக்கம் நிறைந்து இருக்க வேண்டும். அது உங்களிடம் உள்ளது எனவே மென்மேலும் நம் மக்களுக்கு உதவிட உங்கள் அனைவருக்கும் தான் துவா செய்வதாயும் கடந்தகால கால நினைவுகளையும் அழகான கருத்துக்களை கூறியும் தனதுரையை நிறைவு செய்து அமர்ந்தார்கள்.





சகோ. காயல் முத்துவாப்பா அவர்கள் தனதுரையில், ஜித்தாவில் நான் இருந்த போது இது போன்ற ஒரு அமைப்பை துவக்கினோம். ஆனால் அதை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியாது போன சூழலில் அதை தொடர்ந்து நடத்திட முடியாமல் உடன் கலைத்து விட்டோம். ஆனால் இன்று உங்களைப்போன்ற இளைய தலைமுறையினால், பலவேலை பளுகளுக்கு மத்தியில் கடும் முயற்சியில் இந்த அமைப்பை உருவாக்கி தொடர்ந்து 13-வருடங்களாக இறையருளால் நல்லபடி கொண்டு செல்வதை பார்க்கும் போது மனதிற்கு மிக சந்தோசமாக இருக்கிறது என்று மன்ற உறுப்பினர் அனைவருக்கும் நல்ல துஆ செய்து நிறைவு செய்தார்.





மன்ற ஆலோசகர் சகோ முஹம்மது ஆதம் சுல்தான் அவர்கள் தனது வாழ்த்துரையில் இந்த மன்றம் ஆரம்பித்த நோக்கம் அதன் பிரகாரம் நல்லபடி செயல்பட்டு வருவதும் மனதிற்கு நிறைவை தருவதும் தானும் யான்புவிலிருந்து வந்து பல கூட்டங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றதும். இந்த நல மன்றம் இந்த அளவிற்கு நம் ஊர் சமுதாயத்திற்கு சேவைகளை செய்து வருவது உங்களுடைய முழு ஒத்துழைப்பால் தான் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.





இந்த புனிதமான ரமலான் மாதத்திலே உங்களின் நிதிகளை தந்து அல்லாஹ்வின் அருளை பெற்றிடுங்கள். அல்லாஹ் நம் யாவர்களையும் கொடிய நோயிலிருந்து பாதுகாத்து நலமுடன் வாழ செய்வானாக ஆமீன். அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன் என்று தனதுரையை சுருக்கமாக நிறைவு செய்து அமர்ந்தார். உலக காயல் நலமன்றங்களின் ஒத்துழைப்புடன் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட மருத்துவ கூட்டமைப்பான ஷிபா அறக்கட்டளையின் நடப்புகளை நல்லமுறையில் எம் மன்றத்தின் ஷிபா பிரதிநிதியும் அதன் செயற்குழு உறுப்பினருமான சகோ.சீனா எஸ்.ஹச்.மொஹ்தூம் முஹம்மது விளக்கமுடன் எடுத்துரைத்ததுடன் ஷிபா உருவாக காரணமான நோக்கங்களை முல்படுத்த வேண்டுமெனில் நாம் அனைவர்களும் ஒத்துழைக்க வேண்டும்.மேலும் எதிர்வரும் நோன்பு பெருநாள் கழித்து இன்ஷா அல்லாஹ் ஊரில் நடைபெற உள்ள செயற்குழு கூட்டத்தில் விடுமுறைக்கு ஊர் வருபவர்கள் வந்து தவறாமல் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாறி கொள்ளுங்கள். என்று கூறி அமர்ந்தார்.





மன்ற ஆலோசகர் சகோ. எம்.எம்.மூசா சாகிப் பணி நிமித்தமாக குறுகிய காலத்திற்கு மாற்றலாகி அமீரகம் செல்ல உள்ளதும் தான் பல நகரங்களில் பணிநிமித்தமாக சென்று இருந்தாலும் இந்த ஜித்தாவின் வாழ்க்கையுடன் இம்மன்றத்தில் தானும் இணைந்து செயலாற்றியதும் தனது மனதுக்கு பரம திருப்தியளிப்பதும் இருப்பினும் பிரிய மனமின்றி செல்ல வேண்டியதுள்ளது. ஆயினும் தான் எங்கிருந்தாலும் இன்ஷா அல்லாஹ் இம்மன்றத்துடன் இணைந்தே இருப்பேன். அவ்வப்போது நடைபெறும் கூட்டங்களில் வந்து கலந்து கொள்ள முயற்சி செய்வேன் இதே துடிப்புடன் நாம் என்றும் நம் ஊர் மக்களுக்காக நல்ல சேவை ஆற்றுவோம் என்று சுருக்கமாக தனதுரையை நிறைவு செய்தார்.

கொஞ்ச காலத்திற்கெனும் தங்களைவிட்டு பிரிந்து செல்ல இருக்கும் இவர்கள் இம்மன்றதிற்காக நீண்டகாலமாக தனனலமற்ற வகையில் செய்திட்ட சேவைகளை எல்லோரும் பாராட்டியும் இவர்களின் எல்லா காரியங்களும் இறையருளால் வெற்றிபெற வாழ்த்தி துவா செய்தார்கள்.

மருத்துவ நிதி உதவி:

“ஷிஃபா” மருத்துவ அறக்கட்டளை மூலம் மருத்துவ உதவி வேண்டிவந்த விண்ணப்பங்கள் அனைத்தும் வாசிக்கப்பட்டு மன்றத்துணைத்தலைவர் சகோ.மருத்துவர் எம்.ஏ.முஹம்மது ஜியாது மற்றும் மன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் கலந்து கொண்ட அனைவரின் முன்னிலையில் மார்பக புற்று நோய், தலையில் அறுவை சிகிச்சை, பக்கவாதம், வலிப்பு, தைராய்டு, அப்பன்டிக்ஸ், சிறு குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை, கண் அறுவை சிகிச்சை மற்றும் தொடர் மருத்துவம் என பலதரப்பட்ட பிணியால் பாதிக்கப்பட்டுள்ள பதினான்கு பயனாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்க முடிவு செய்து அவர்களின் பரிபூரண உடல் நலத்திற்கும் வல்ல இறைவனியிடம் பிரார்த்திக்கப்பட்டது.

பிரார்த்தனை:

புண்ணியமிகுந்த இந்த ரமலான் மாதத்தில் உயர்ந்த எண்ணத்தோடும் வல்லவனின் அருள்நாடியும் பல பணிகளுக்கு மத்தியில் நாமெல்லாம் இங்கு ஒன்று கூடியிருக்கிறோம்.நம்மை இங்கு ஒன்று கூட்டி உயர்வான நோக்கத்தில் சந்திக்க வைத்த வல்லோன் அல்லாஹ்வை போற்றி புகழும் இந்நேரத்தில் இச்சிறப்பான மாதத்தில் நம் மன்றத்தின் அனைத்து நற்பணிகளையும், நம்முடைய நல்லமல்களையும் வல்லவன் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளவும்; பிணியுற்றோர் சுகம் பெறவும், வறியோர்கள் வளம் பெறவும், நோய் நொடியற்ற ஊராக நம் நகரை தந்திடவும், இம்மையிலும் மறுமையிலும் அவனது அருளை பெற்றிடவும் நாம் ஏகன் இறையோனிடம் இருகரமேந்துவோம் என்று கூட்டத்தில் கலந்துகொண்டோர் அனைவரின் பிரார்த்தனையாக இருந்தது.

யான்பு சகோதரர்கள்:

யான்பு நகரிலிருந்து துணை செயலாளர் சகோ.கலவா எம்.ஏ.செய்யது இப்ராஹீம் தலைமையில் நம் காயல் சொந்தங்கள் வருகை தந்து செயற்குழுவில் கலந்து சிறப்பித்தார்கள். பெறப்பட்ட மனுக்களின் பரிசீலனை, அதற்கு முறைப்படி வழங்கும் உதவிகள், கருத்துபரிமாற்றங்கள் இவைகளை நேரடியாக கண்டு மன்ற உறுப்பினர்கள் தங்களது பங்களிப்பையும் தாரளம்மாக தானாக முன் வந்து தந்துதவினார்கள்.



நம் காயல் நகரில் உள்ள அனைத்து இறை இல்லங்களில் இறை பணியாற்றும் இமாம் மற்றும் முஅத்தின்களுக்கு தாய்லாந்து காயல் நல மன்ற வழிகாட்டல்படி அளிக்கப்படும் இரு பெருநாள்கள்களின் சிறப்பு ஊக்க உதவியில் நம் மன்றத்தின் பெரும் பங்களிப்பாக மன்ற உறுப்பினர்கள் மனமுவந்து தாராளமாக அளித்த பெரும் நிதியில் இருந்து இவ்வாண்டும் மன்றம் மூலம் வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டு உடனடியாக உள்ளூர் பிரதிநிதி சகோ ஹாஜி ஏ.எம்.இஸ்மாயில் நஜிப் அவர்கள்மூலம் ஊரில் கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

நம் மன்றத்தின் 96-ஆவது செயற்க்குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் அடுத்து ஆகஸ்ட் மாதம் மத்தியில் நடைபெறும் அதன் முழு விபரம் பின்னர் அறிய தரப்படும்.

நன்றி உரை:



இனிய இந்நிகழ்வில் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தவர்கள் மதீனா ,யான்பு மற்றும் மக்காவிலிருந்து வந்திருந்த உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மேலும் அனுசரணை வழங்கினோர்கள் யாவருக்கும் சகோ எம்.டபிள்யூ. ஹாமீத் ரிபாய் மனப்பூர்வமான நன்றிகளை கூறினார். சகோ எஸ்.எஸ். ஜாபர் சாதிக் பிரார்த்திக்க துஆ கஃப்பாராவுடன் இனிய இந்நிகழ்வு இறையருளால் இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.



இந்நிகழ்வின் இறுதி வரை கலந்து கொண்ட அனைவருக்கும் பரோட்டா , நெய்ச்சோருடன் கோழிக்கறி மற்றும் சம்பலுடன் சகர் நேர உணவிற்காக பொதியாக விநியோகிக்கப்பட்டது.

சகோ.குளம் எம்.ஏ.அஹ்மது முஹ்யித்தீன் மற்றும் சகோ. வேனா எஸ்.எஸ்.அஹமது சித்தீக் ஆகியோரின் முழு அனுசரணையில் நடந்தேறியது. இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை சகோ சட்னி எஸ்.ஏ.கே.முஹம்மது உமர் ஒலி , சகோ, எம்.எஸ்.முஹம்மது அபூபக்கர் சித்திக், சகோ அல்ஹாபில் பொறியாளர் எம்.ஐச்.முஹம்மது அலி மற்றும் சகோ பொறியாளர் தோல்ஷாப் எம்.எ.சி.முஹம்மது லெப்பை ஆகியோர் நல்லமுறையில் செய்திருந்தார்கள்.

தகவல்:
எஸ்.ஐச்.அப்துல் காதர்.
சட்னி, எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.

புகைப்படங்கள் :
சொளுக்கு, எஸ்.எம்.முஹம்மது உமர்.
சொளுக்கு, எஸ்.எம்.அஹ்மது லெப்பை.
காயல் நற்பணி மன்றம்,


ஜித்தா- சஊதி அரபிய்யா,
03.07.2016.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. உள்ள மகிழ்ச்சியால் உறைந்து போனேன்!.
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [03 July 2016]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 44197

ஜித்தா காயல் நலமன்றத்தின் செயற்குழு மற்றும் பொதுகுழு கூட்டம் மிகச்சசிறப்பாக நடைபெற்றது அதில் கலந்துகொண்ட பாக்கியவான்களில் நானும் ஒருவன்!

ஆமாம் இதை ஒரு பாக்கியமாகத்தான் நான் கருதுகிறேன், ஒரு இயக்கம், ஒரு அமைப்பு அது ஊருக்கு ஒரு நன்மை செய்கிறதென்றால், அந்த அமைப்பினர் அந்த நன்மை செய்யும் காரியத்தோடு முடித்துக்கொள்வார்கள்.இது யதார்த்தம்!

ஆனால் ஜித்தா நற்பணி மன்றத்தினர்கள் அந்த நற்பணிகளோடு மட்டும் நில்லாமல்,அந்த மன்றத்துடன் ஒன்றிணைந்து தங்கள் வாழ்க்கையின் செயல்பாடுகளையும்,அதோடு இணைத்து வாழ விரும்புகிறார்கள்,வாழ்ந்துகொண்டுமிருக்கிறார்கள்.அதற்கொரு உதாரணம்,

மன்ற ஆலோசகர் சகோதரர் மூஸா அவர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனம் துபாய்க்கு மாற்றலாகும் உத்தரவை வழங்கியது..உத்தரவை பெறப்பட்டு குடும்ப சகிதம் மாற்றலுக்குறிய எல்லா வேலைகளும் முடிந்த தருவாயில்,
நம் ஜித்தா மன்ற செயற்குழு,பொது குழு இருக்கிறதே அது கழித்து செல்லலாம் என்று தங்களுடைய விமான பயண சீட்டின் தேதியையும் மாற்றிவிட்டு மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டார் என்றால்,

தங்கள் சொந்த வாழ்க்கையோடு ஜித்தா நற்பணிமன்றத்தையும் எப்படி தங்கள் உள்ளத்தோடு பிண்ணி பிணைந்து புதைந்து வைத்துள்ளார்.அல் ஹம்திலில்லாஹ்! சகோரர் மூஸா மட்டுமல்ல மன்றத்தின் அத்துனை அன்புள்ளங்கள் மனதிலும் ஆழமாக பதிந்திருக்கின்ற உணர்வலைகள் ஆகும்!

அடுத்து,புனித திருமறை ஓதி இறைவணக்கத்தை நடாத்தும் நமதூர் அனைத்து இமாம்களுக்கும்,மற்றும் பள்ளியை பராமரிக்கும் முவத்தின்களுக்கும் வருடாவருடம் உதவும் புண்ணிய பணியின் பங்களிப்பில் ஜித்தா காயல் நலமன்றம் சென்ற வருடத்தை விட இந்த வருடம் அதிக உதவித்தொகை அளிக்கக்கூடிய ஒரு பேருதவி பெருந்தன்மையின் வேகத்தைப்பார்த்தேன் வியந்து நின்றேன்!

ஆமாம்,தலைவர் அறிவித்த உடனேயே ஒரு பத்து நிமிடத்தில் லட்சத்தையும் தாண்டிக்குவிந்த வசூலின் விறுவிறுப்பை பார்த்து உள்ள மகிழ்ச்சியால் உறைந்து போனேன்!

இப்படிப்பட்ட புண்ணிய காரியத்தை போட்டிப்போட்டுக்கொண்டு செய்யும் ஜித்தா காயல் நற்பணிமன்றம் வளமுடன் வாழ, வலிவுபெற்றுயுர வல்லோன் உதவி புரிவானாக ஆமீன்!

இம்மன்றம் மென்மேலும் மிகைத்தோங்க தங்களை அர்ப்பணம் செய்ய துடிக்கும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் வல்ல அல்லாஹ் அதற்குறிய நற்கூலியை புனித ரமலான் மாதத்தில் பொழிந்தருள்வானாக ஆமீன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அகமகிழ்வுடன்,
ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved